25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Mar 28, 2026

ரயில் டிக்கெட் ரத்தில் அதிரடி மாற்றம்.

"கடைசி 8 மணி நேரத்தில் டிக்கெட் ரத்து செய்தால் கட்டணம் திருப்பி வழங்கப்படாது. 24 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் 50% பணம் திருப்பி வழங்கப்படும் 72 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் 25% பணம் பிடிக்கப்படும் 72 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்தால் முழு கட்டணம் வழங்கப்படும் புதிய நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும்" -இந்தியன் ரயில்வே

Mar 28, 2026

தென்காசி-மதுரை - திண்டுக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு புதிய ரயில் தொடக்கம். 16363/16364 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி.

16363/16364 எர்ணாகுளம் - வேளாங்கண்ணிவாராந்திர விரைவு ரயில் எர்ணாகுளத்தில் |ஒவ்வொரு புதன் கிழமையும், வேளாங்கண்ணியில் இருந்து,ஒவ்வொரு வியாழன் கிழமையும் மார்ச் 18 முதல் எர்ணாகுளத்தில் இருந்து இயக்கம்.நிறுத்தங்கள்: கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கண்ணூர், மாவேலிக்கரை, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தாங்கோட்டா, கொல்லம் குண்டாரா, கொட்டாரக்கரா அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் சங்கரன்கோவில்,இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, , திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்.

Mar 28, 2026

கச்சா எண்ணெய் இல்லை என்றால் உலகின் இயக்கம் நின்று விடும் என்ற அளவுக்கு அதன் தாக்கம் உள்ளது.

கச்சா எண்ணெய் என்பது பூமியின் குறிப்பிட்ட ஆழத்தில் உள்ள பாறைகளில் இயற்கையாக கிடைக்கும் திரவ எரிபொருள் ஆகும். இதில் இருந்துதான் பெட் ரோல், டீசல் போன்றவை பிரித்து எடுக்கப்படுகின்றன. அதாவது, சுத்திகரிப்பு நிலையங்களில் 400 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பிரித்து எடுக்கும் நடைமுறையை செய்கிறார்கள். அதன் மூலம் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை கிடைக்கின்றன . பெட்ரோல்ல ட்ரோல், டீசல், எரிவாயுவை தரும் கச்சா எண்ணெய் இல்லை என்றால் உலகின் இயக்கம் நின்று விடும் என்ற அளவுக்கு அதன் தாக்கம் உள்ளதுஇதில் இருந்துரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக், பாலிமர், நைலான், சோப்பு என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோலிய துணை பொருட்கள் தயாராகின்றன. வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதன பொருட்களின் தயாரிப்பில் கூட பெட்ரோலிய பொருட்கள் கலந்துள்ளன. உலகின் பல்வேறு தொழில்கள் கச்சா எண்ணெயை நம்பி இருக்கின்றன .வெனிசுலா, ரஷியா போன்ற நாடுகளில் கச்சா எண்ணெய் வளம் அதிகம் உள்ளது. இதே போல் மத்தியகிழக்கு வளைகுடா நாடுகளிலும் கச்சா எண்ணெய் வளம் அதிகமாக உள்ளது. ஈரான்நாட்டில் முதல் வணிக எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பக்ரைன்உள்பட குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் போன்றவற்றில் பெருமளவு எண்ணெய் உற்பத்தி தொடங்கியது. இந்த நாடுகள் இன்றைக்கு உலகின் மிகப்பெரிய எண் ணெய் ஏற்றுமதி நாடுகளாக உள்ளன. 

Mar 27, 2026

பெண் பிள்ளைகள் கவனத்திற்கு ..

சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவிடக் கூடாது. சொந்த விவரங்களை யாரிடமும் பகிர கூடாது. தெரியாத நபர்களிடம் முகவரி எல்லாம் சொல்லக்கூடாது.. எந்த பிரச்சனையாக இருந்தாலும் வீட்ல சொல்லாமல் இருக்க கூடாது. யாரையும் நம்பி தனியே போக கூடாது.

Mar 27, 2026

தற்காலிகமாக தாம்பரத்திலிருந்து இயக்கும் தேதி நீட்டிப்பு! நெல்லை & பொதிகை, சோழன் அதி விரைவு ரயில் .

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும்பராமரிப்பு பணிகள் காரணமாக, சோழன், பொதிகை & நெல்லை ரயில்கள் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் அறிவிப்பு மேலும் நீட்டிப்பு. / 22675 சென்னை எழும்பூர்-திருச்சி சோழன் விரைவு ரயில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 5 வரை 135 நிமிடம் கால தாமதமாக காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். 12632 நெல்லை - தாம்பரம் நெல்லை அதிவிரைவு ரயில் மார்ச் 16 முதல் ஏப். 5ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே செல்லும். / 12661 தாம்பரம்-செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மார்ச் 17 முதல் ஏப்.6ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயங்கும் .

Mar 26, 2026

உன்னை alert-ஆக வைத்திருக்க,உயிரை காப்பாற்ற......

1.காலை எழுந்தவுடனே தலைசுற்றினால், உட்கார்ந்து தண்ணீர் குடிக்கவும் இது உடல் தரும் முதல் எச்சரிக்கை.2.தனியாக நடக்கும் போது, ஹெட்போன் சத்தத்தை குறைவாக வைக்கவும் சூழலைக் கேட்க முடிய வேண்டும்.3.யாராவது பின்தொடர்கிறார்கள் என்று தோன்றினால், வீட்டிற்குப் போகாதே -நேராக மக்கள் இருக்கும் இடத்துக்குச் செல்..4 மூக்கில் இரத்தம் வந்தால், பின்னோக்கு சாயாதே - முன் சாய்ந்து இரத்தத்தை வெளியே விடு. 5.இரவில் பாதுகாப்பாக இல்லை என்று தோன்றினால், யாரையாவது call செய்து பேசிக்கொண்டு நட.-இது அபாயங்களை தடுக்கவும் உன்னைalert-ஆக வைத்திருக்கவும் உதவும்.

Mar 26, 2026

கண்களின் மொழி.

கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது. கண்கள்*இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.  கண்கள்* மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது. "கண்கள்* கீழே பார்த்தால் அடிபணிகிறது. கண்கள்" விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது. ஆசைப்படுகிறது. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது. கண்கள்கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது. கண்கள் படபடத்தால் விரும்புகிறது. வெட்கப்படுகிறது. கண்கள் மூக்கைப் பார்த்தால் கோபப்படுகிறது.

Mar 25, 2026

ரூ.900 கோடி நிறுவனத்தை உருவாக்கிய 23 வயது பெண், அஞ்சலி சர்தானா.

புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனம் ஒன்று. தொடங்கப்பட்ட ஒரே ஆண்டுக்குள் ரூ.900 கோடி மதிப்பை எட்டியுள்ளது.இதைத் தொடங்கியவர், அஞ்சலி சர்தானா என்ற 23 வயது இளம்பெண்.இவரது ப்ரோண்டோ நிறுவனம், கர்நாடக மாநிலம் பெங்களூருவை தளமாகக்கொண்டது.பயிற்சிபெற்றவீட்டுப்பணியாளர்களையும், பயனர்ளர்களையும்இணைக்கும்இந்நிறுவனம், புதிதாக 230 கோடி நிதி திரட்டியுள்ளது., தொடங்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் ரூ.922 கோடி மதிப்பை எட்டி யுள்ளது.இந்த நிறுவன செயலியின் மூலம், வீட்டைத் துடைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், சமையலறை மற்றும் குளியலறை சுத்தம் செய்தல், துணி துவைத்தல் மற்றும் பிற வீட்டு வேலைகளுக்கு பணியாளர்களை முன்பதிவு செய்யலாம்.தற்போது இந்த செயலி, டெல்லி தலைநகரப் பகுதி, சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத்,உள்ளிட்ட பெருநகரங்களில் பயன்பாட்டில் உள்ளது. அஞ்சலி சர்தானா, கடந்த 2024-ம் ஆண்டில்அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் இளநிலை உயிரியல் பட்டம் பெற்றார்."ஒன்பது மாதங்களுக்கு முன்னர், டெல்லி அருகே குருகிராமில் உள்ள எங்கள் மையத்தில் செயல்பட்டோம். எங்களிடம் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவை கிடைப்பதை உறுதி செய்ய உழைத்துக் கொண்டிருந்தோம். சில நாட்கள் நாங்கள் தரையிலும் படுத்து உறங்கி யிருக்கிறோம்.அப்போது நாளொன்றுக்கு சுமார் 170 முன்பதிவுகள் வரும். இப்போது ஒரு நாளைக்கு 18 ஆயிரத்துக்கும் அதிகமான முன்பதிவுகளை பெறுகிறோம்.எங்களிடம், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ப்பணிப் புள்ள, மகிழ்ச்சியான பணியாளர்கள் உள்ளனர். கடந்த 3 மாதத்தில் மட்டும் நாங்கள் 300 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளோம்" என்று அசாதாரணசாதனை படைத்த பெருமையுடன் கூறுகிறார்,அஞ்சலி சர்தானா.

Mar 25, 2026

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

கடந்த சில மாதங்களாகவேAI தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக காணப்படுகிறது. விஞ்ஞான தொழில்நுட்பத்தின் புதிய பரிணாம வளர்ச்சியாகAI பார்க்கப்படுகிறது.. இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டுவதற்குAI தொழில்நுட்பத்தை பலரும் பயன்படுத்துகிறார்கள். இதை வைத்து இறந்தவர்களை கூட அவர்கள் பேசுவது போல காட்ட முடியும் என்பதால் பல துறைகளிலும் இதை பயன்படுத்துகிறார்கள்..ஒருபக்கம் சாப்ட்வேர் துறையில்Coding எழுதுவதற்கும் கூடAIRobot களை வல்லுனர்கள்பயன்படுத்துகிறார்கள். இனி வரும் காலத்தில்AIதவிர்த்து விட்டு மனிதன் வாழவே முடியாது என்கிற நிலை உருவாகும் என சொல்லலாம். அதோடுAI வந்துவிட்டதால் மனிதர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும் எனவும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது..இந்நிலையில்தான், அதானி குழுமம் AI துறையில் முதலீடு செய்ய முன் வந்திருக்கிறது. இந்தியாவில் Hypersacale AI Centre-களை அமைக்க சுமார் 9 லட்சம் கோடி மதிப்பிலான மெகா முதலீட்டு திட்டத்தை அதானி குழுமம் அறிவித்திருக்கிறது. டெல்லி AI Impact மாநாட்டை ஒட்டி அதானி குழுமம்இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.மேலும், 2035ம் ஆண்டுகளுக்குள் இதை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்திருக்கிறது.. இது தவிர சுமார் 13 லட்சம் கோடி மதிப்பில் கம்ப்யூட்டர் சர்வர்கள் உற்பத்தி மற்றும் கிளவுட் சேவைகளில் முதலீடு செய்யவுள்ளதாகவும் அதானி குழுமம் அறிவித்திருக்கிறது.

Mar 25, 2026

போர் பதட்டத்தில் தனது உயிரை பணயம் வைத்து ,169 இந்தியர்களை பத்திரமாக அழைத்து வந்த, 23 வயதான விமானி தீபிகா அதானா.

போர் பதட்டத்தில் தனது உயிரை பணயம் வைத்து ,169 இந்தியர்களை பத்திரமாக அழைத்து வந்த, 23 வயதான விமானி தீபிகா அதானா.iஅம்மா நான் போய் வருகிறேன் திரும்பி வருவேன் என்று தெரியவில்லை,, என்று கூறி போர் பதட்டத்தில்,,! தனது உயிரை பணயம் வைத்து 169 இந்தியர்களை பத்திரமாக அழைத்து வந்த,! 23 வயதான விமானி தீபிகா அதானா,,

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 82 83

AD's



More News