25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 26, 2026

“நான் பெரிதும் போற்றும் ஒரு நிறுவனம்…”: UPI-யின் தாக்கம் மற்றும் தன்னிறைவு AI குறித்து ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு புகழாரம்!

இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) மற்றும் அதன் ஒருங்கிணைந்த கட்டண முறைமை (UPI) ஆகியவை இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான ஸ்ரீதர் வேம்பு பெரிதும் பாராட்டியுள்ளார். மேலும், தான் "மிகவும் போற்றும்" நிறுவனங்களில் NPCI-யும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.“இன்னோவேட்டர்ஸ் பிளேகிரவுண்ட் பாட்காஸ்ட்” (Innovators Playground Podcast) தொடரின் ஒரு பகுதியாக, NPCI தலைமை நிர்வாக அதிகாரி (CEO) திலீப் ஆஸ்பே உடன் ஸ்ரீதர் வேம்பு கலந்துரையாடினார். இது குறித்து தனது 'X' தளத்தில் பதிவிட்டுள்ள வேம்பு, "நான் UPI-ஐப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், NPCI உருவாக்கியுள்ள அளவையும் அதன் பிரம்மாண்ட தாக்கத்தையும் வியந்து நோக்குவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.தற்சார்பு செயற்கை நுண்ணறிவு (Sovereign AI): மேற்கத்திய நாடுகளின் AI மாதிரிகளை முழுமையாகச் சார்ந்திருக்காமல், இந்தியத் தேவைகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தற்சார்பு செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதன் அவசியத்தை இந்த விவாதம் வலியுறுத்தியது. தற்போதைய AI புரட்சியை எதிர்கொள்ள, ஜோஹோ நிறுவனம் தற்போது "இரண்டு இணை முயற்சிகளில்" (Twin Initiatives) ஈடுபட்டு வருவதாக ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்துள்ளார்.ஆற்றல் திறன்மிக்க உள்கட்டமைப்பு (Energy Efficiency): செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் செயல்பாட்டிற்கு அதிக ஆற்றல் (Power) தேவைப்படுகிறது. ஜோஹோவின் கிராமப்புற தொழில்நுட்ப மையமாக விளங்கும் தமிழ்நாட்டின் தென்காசி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில், AI தொழில்நுட்பத்திற்கான ஆற்றல் நுகர்வைக் குறைப்பதற்கான முயற்சிகள் குறித்து வேம்பு விவரித்தார்.கிராமப்புறத் திறமையும், பொருளாதார வளர்ச்சியும்: முக்கிய பெருநகரங்களைத் தாண்டி, கிராமப்புற இந்தியாவும் எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சியில் எவ்வாறு முக்கியப் பங்காற்ற முடியும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது "நமது பொருளாதார வளத்திற்கு இன்றியமையாதது" என்று திலீப் ஆஸ்பே குறிப்பிட்டார்.ஒரே நோக்கம் - இரு வேறு தளங்கள்: மக்கள் அளவில் மிகக் குறைந்த செலவில் UPI-ஐ சாத்தியமாக்கிய NPCI-ன் அணுகுமுறைக்கும், இந்திய மற்றும் உலகளாவிய தேவைகளுக்கான மென்பொருட்களைத் தயாரிக்கும் Zoho-வின் நீண்டகால சுயநிதி (Bootstrapped) மாதிரிக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை இந்த பாட்காஸ்ட் வெளிப்படுத்தியது. மலிவு விலை, உலகளாவிய தரம் மற்றும் உள்ளூர் பயன்பாடு ஆகியவற்றிற்கு இவ்விரு நிறுவனங்களும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.

May 26, 2026

"ஒவ்வொரு மனிதனும் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்த வாய்ப்புள்ள ஒரு உலகத்தைக் காண விரும்புகிறேன்." — அசிம் பிரேம்ஜி

விப்ரோ (Wipro) நிறுவனத்தின் நிறுவனரான அசிம் ஹாஷிம் பிரேம்ஜி, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையை மாற்றியமைத்ததோடு மட்டுமல்லாமல், தனது செல்வத்தை அறப்பணிகளுக்கு அர்ப்பணித்த மாபெரும் கொடையாளர் ஆவார். ஒரு சிறிய சமையல் எண்ணெய் நிறுவனத்தை உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவானாக மாற்றிய அவரது பயணம் நேர்மை, தொலைநோக்கு மற்றும் எளிமைக்கு ஒரு சிறந்த சான்றாகும்.வெற்றி என்பது வெறும் வணிகம் அல்லது செல்வம் சார்ந்தது மட்டுமல்ல; அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதே உண்மையான வெற்றி என்பதை அவரது வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.தொடக்கமும் வளர்ச்சியும்: 1945-ல் மும்பையில் பிறந்த இவர், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பயின்றார். 1966-ல் தனது தந்தையின் திடீர் மறைவுக்குப் பிறகு, 21 வயதில் குடும்பத் தொழிலான ‘வெஸ்டர்ன் இந்தியன் வெஜிடபிள் ப்ராடக்ட்ஸ்’ (சமையல் எண்ணெய் வணிகம்) பொறுப்பை ஏற்றார்.விப்ரோவின் உதயம்: வணிகத்தை மென்பொருள் மற்றும் வன்பொருள் துறைகளுக்கும் விரிவுபடுத்தி, 1982-ல் அதற்கு 'விப்ரோ' (Wipro) எனப் பெயர் சூட்டினார்.சமூகப் பங்களிப்பு: 'அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை' மூலம் இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தனது செல்வத்தின் கணிசமான பகுதியைத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி, உலகின் மிகத் தாராளமான கொடையாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.குடும்பம் மற்றும் எளிமை: எழுத்தாளர் யாஸ்மீன் பிரேம்ஜியை மணந்த இவருக்கு, ரிஷாத் மற்றும் தாரிக் என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்போது ரிஷாத் பிரேம்ஜி விப்ரோவின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். அளவற்ற செல்வம் இருந்தபோதிலும், அசிம் பிரேம்ஜி தனது எளிமையான வாழ்க்கை முறைக்காகப் பெரிதும் மதிக்கப்படுகிறார்.அசிம் பிரேம்ஜியின் உன்னத தத்துவத்தைப் பின்பற்றுவதற்கு நாம் கோடீஸ்வரராக இருக்க வேண்டிய அவசியமில்லை. நமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை.உங்கள் ஆற்றலைக் கண்டறியுங்கள்: உங்களின் தனித்துவமான திறன்கள், ஆற்றல்கள் மற்றும் ஆர்வங்களைப் பற்றிச் சிந்தித்து, உங்களால் சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என்பதை உணருங்கள்.தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்: எப்போதும் வசதியான வட்டத்திற்குள் (Comfort Zone) முடங்கிவிடாமல், புதிய சவால்களை எதிர்கொண்டு அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.சுயநலமின்றிச் சிந்தியுங்கள்: உங்களது பணி, திறமை மற்றும் அன்றாடச் செயல்பாடுகள் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு எவ்வாறு ஒரு சிறந்த சூழலை உருவாக்க உதவும் என்று யோசியுங்கள்.நேர்மையைக் கடைப்பிடியுங்கள்: கடினமான சூழ்நிலையிலும் அறநெறி சார்ந்த தேர்வுகளையே மேற்கொள்ளுங்கள். நம்பிக்கையும் நேர்மையுமே வெற்றிக்கான வலுவான அடித்தளம்.கைமாறு செய்யுங்கள்: மற்றவர்கள் தங்கள் இலக்குகளை அடைய உங்களால் இயன்ற வழிகாட்டுதலையோ அல்லது ஊக்கத்தையோ வழங்குங்கள்.இறுதிச் சிந்தனை: "மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் நாம் மிகவும் சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் இருக்க வேண்டும். பொருந்தி வாழ, ஒருவர் உலகத்துடன் சேர்ந்து பரிணமிக்க வேண்டும்." உங்களது உடனடி வட்டத்தைத் தாண்டி, அனைவரும் செழித்து வாழ வாய்ப்புள்ள ஒரு உலகை உருவாக்க இன்றே உங்களது பங்களிப்பைத் தொடங்குங்கள்!

May 26, 2026

EPF அக்கவுண்ட் வைத்து இருப்பவர்கள் முதலில் இதை பண்ணுங்க.

EPFO வழங்கும் EPF திட்டத்தில் 2025-26 நிதியாண்டிற்கு 8.25% வட்டி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த வட்டி EPF தொகைக்கு மட்டுமே பொருந்தும்; EPS ஓய்வூதியப் பகுதிக்கு வட்டி கிடையாது. ஊழியரின் சம்பளத்தில் இருந்து 12% PF ஆக பிடிக்கப்படுகின்றது, இதில்நிறுவனத்தின்பங்களிப்பில்ஒருபகுதிEPFக்கும்மற்றொன்று EPSக்கும்செல்கிறது. PF இருப்பை EPFO போர்டல் அல்லது UMANG ஆப் மூலம் ஆன்லைனில் எளிதாக பார்க்கலாம்.

May 26, 2026

வீடுகளுக்கான புதிய மின் கட்டணம்.

500 யூனிட் வரை 1 முதல் 200 யூனிட் -கட்டணம் இல்லை 201 முதல் 400 யூனிட் - யூனிட்டுக்கு ரூ.4.70 401 முதல் 500 யூனிட் - யூனிட்டுக்கு ரூ.6.30 500 யூனிட்டுக்கு மேல் 1 முதல் 100 யூனிட் கட்டணம் இல்லை 101 முதல் 400 யூனிட் - யூனிட்டுக்கு ரூ.4.70 401 முதல் 500 யூனிட் - யூனிட்டுக்க ரூ.6.30 501 முதல் 600 யூனிட் - யூனிட்டுக்கு ரூ.8.40 601 முதல் 800 யூனிட் - யூனிட்டுக்கு ரூ.9.45 801 முதல் 1000 யூனிட் - யூனிட்டுக்கு ரூ.10.50 1000 யூனிட்டுக்கு மேல் - யூனிட்டுக்கு ரூ.11.55

May 26, 2026

RSBY திட்டம் - ஏழை குடும்பங்களுக்கு பணமில்லா மருத்துவ வசதி.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி வழங்கும் நோக்கில் மத்திய அரசு ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பிமா யோஜனா (RSBY) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 5 நபர்கள் சேரலாம். ஆண்டுக்கு ரூ.30,000 வரை மருத்துவச் செலவு வழங்கப்படும். ரூ.30 மட்டுமே செலுத்தி அருகிலுள்ள சேவை மையங்களில் பதிவு செய்யலாம். அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை பெற முடியும்..

May 26, 2026

முதன்முறையாக இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ!

டெல்லியில் நடைபெறவுள்ள குவாட் (Quad) அமைப்பின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ முதன்முறையாக இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.முக்கிய நோக்கங்கள்:இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துதல்.இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துதல்.தற்போதைய உலக அரசியல் சூழலில், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை ,அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, இவரின் இந்தப் பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

May 25, 2026

அர்ஜென்டினா."மோடி என்ற மாமனிதனுக்கு எங்கள் பரிசு" என்று 50,000டன் LPG அனுப்பியது .

LPG விநியோக தடை ஏற்பட்ட நிலையில், அர்ஜென்டினா 50,000 டன் LPGயை இந்தியாவிற்கு வழங்கி உள்ளது. இது மோடி என்ற  மாமனிதனுக்காக எங்கள் பரிசு  என்றும் கூறி இருக்கிறது.இது இந்தியாவின் பெருமை  மட்டுமல்ல, மோடியின் மீது உலக நாடுகள் கொண்டுள்ள மதிப்பை, மரியாதையை காட்டுகிறது.

May 25, 2026

வியட்நாமின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான 'வின்ஃபாஸ்ட்' (VinFast), தனது 'கிரீன் எஸ்.எம்' (Green SM) டாக்ஸி சேவையை இந்தியாவில் தொடங்குகிறது.

 வியட்நாமின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான 'வின்ஃபாஸ்ட்' (VinFast), தனது 'கிரீன் எஸ்.எம்' (Green SM) டாக்ஸி சேவையை இந்தியாவில் தொடங்கி., இதற்காக சுமார் 10,000 மின்சார வாகனங்களை  (Limo Green MPV 5 VF5 SUV) களமிறக்கத்திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, நொய்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தனதுசெயல்பாட்டைத் தொடங்கியுள்ள நிறுவனம், ஓட்டுநர்களுக்கு மாதம் ₹35,000 முதல் ₹40,000 வரை ஊதியம் வழங்கி வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்து வருகிறது. ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக, கிலோமீட்டருக்கு வெறும் ₹8 கட்டணத்தில் அதிநவீன மின்சார டாக்ஸி சேவையை வழங்க வின்ஃபாஸ்ட் தயாராகி வருவது இந்திய வாகனச் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

May 25, 2026

உங்கள் விமான பயணத்தில்.. "Connecting Flight -ஐ தவறவிட்டாலும்.. ஒரு பைசா செலவில்லாமல் மீண்டும் பயணிப்பது எப்படி?

உங்கள் விமான பயணத்தில் என்றாவது ஒருநாள்.ஏதோ ஒரு சூழலில் உங்கள் "Connecting Flight"-ஐ தவறவிட்டால், அப்போது இந்த தகவல் உங்களுக்கு உதவலாம். விமானப் பயணத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் பயணம் முழுவதற்கும் ஒரே டிக்கெட் (Single Ticket/PNR) வைத்திருந்தால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அதாவது, நீங்கள் கிளம்பும் ஊரிலிருந்து சென்று சேரும் இடம் வரை ஒரே PNR-ல் பதிவு செய்திருந்தால், இடையில் விமானம் தவறினாலும் அதற்கான முழு பொறுப்பையும் அந்த விமான நிறுவனமே ஏற்றுக் கொள்ளும். அப்படிஒரே PNR-ல் பதிவு செய்த டிக்கெட்டில் உங்கள் Connecting Flight-ஐ நீங்கள் தவறவிட்டால், அந்த குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் Customer Service Desk-ல் இது குறித்த  விவரங்களைச் சொல்லுங்கள். அவர்கள் உடனடியாக அடுத்ததாக எந்த விமானம் உங்கள் ஊருக்குச் செல்கிறதோ, அதில் உங்களுக்கு இலவசமாக சீட் புக் செய்து தருவார்கள். அடுத்த விமானம் வர சில மணிநேரங்கள் ஆகும் என்றால், உங்களுக்குத் தேவையான சாப்பாடு மற்றும் Vouchers அவர்களே தருவார்கள்.

May 25, 2026

ப்ளூடூத் ஏர்பாட்ஸ்நீண்ட நேரம் புளூடூத்  அலைகள் இருப்பது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கலாம்.

ஒயர்டு இயர் போன்களை விட ப்ளூடூத் ஏர்பாட்கள் 150 மடங்கு அதிக கதிர்வீச்சை வெளியிடுகின்றன. மூளைக்கு மிக அருகில் நீண்ட நேரம் புளூடூத் அலைகள் இருப்பது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கலாம். பாதுகாப்பிற்கு ஒயர்டு (Wired) இயர்போன்களைப் பயன்படுத்துவதே சிறந்தது!

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 103 104

AD's



More News