25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Sep 01, 2026

AI தரவு மையங்களில் அதிகரிக்கும் முதலீடுகள்.

AI பயன்பாடுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய தரவு மையங்களை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.OpenAI, அமெரிக்காவின் ஓஹியோவில் 10 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு மையத்தை உருவாக்குவதற்காக SoftBank நிறுவனத்தின் SB Energy உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு Nvidia-வின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது.இந்தியாவிலும் தரவு மைய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. HCLTech நிறுவனம் தரவு மையங்களில் ரூ.3,500 கோடி முதலீடு செய்யும் திட்டங்களை அறிவித்துள்ளது. அதேபோல், 1 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு மையப் பிரிவை உருவாக்க TCS நிறுவனம் 7 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sep 01, 2026

குழந்தைகளுக்கு அளவோடு கொடுக்க வேண்டிய உணவுகள்!

குழந்தைகளுக்கு அளவோடு கொடுக்க வேண்டிய உணவுகள்!குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக கீழ்க்கண்ட உணவுகளை அடிக்கடி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.அதிக சாக்லேட் குளிர்பானங்கள் பிரெஞ்ச் ஃப்ரைஸ் பர்கர் உள்ளிட்ட ஃபாஸ்ட் ஃபுட் மிட்டாய்கள் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் க்ரீம் கேக் செயற்கை பழச்சாறு பானங்கள் பாக்கெட் ஸ்நாக்ஸ் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள் அதற்குப் பதிலாக பழங்கள், காய்கறிகள், முட்டை, பருப்பு வகைகள் மற்றும் வீட்டில் தயாரித்த சத்தான உணவுகளை வழங்குவது சிறந்தது.

Sep 01, 2026

இந்திய விஞ்ஞானிக்கு சர்வதேச அங்கீகாரம்!

இந்தியாவின் புகழ்பெற்ற இயற்பியலாளர் பேராசிரியர் தீபக் தாருக்கு 2026ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க Dirac Medal வழங்கப்பட்டுள்ளது.Statistical Mechanics எனப்படும் புள்ளியியல் இயற்பியல் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. Theoretical Physics துறையில் மிக உயர்ந்த மதிப்பைப் பெற்ற விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் Dirac Medal, உலகின் தலைசிறந்த இயற்பியலாளர்களுடன் தொடர்புடையது.74 வயதான பேராசிரியர் தீபக் தார், இயற்பியல் துறையில் பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் வழங்கப்பட்டுள்ளது.

Aug 31, 2026

இந்தியாவின் வளர்ச்சிக்கு புகழாரம்- ஸ்ரீதர் வேம்பு.

“கடந்த 10 ஆண்டுகளில் செமிகண்டக்டர் உற்பத்தி முதல் விண்வெளித்துறை வரை நடந்துள்ள சாதனைகள் வியக்கத்தக்கது.ஒரு காலத்தில் கடக்கவே முடியாதவை என்று தோன்றிய தடைகள் இன்று தகர்க்கப்பட்டுள்ளன.தொலைநோக்குப் பார்வையும், உறுதியும் கொண்ட ஒரு தலைவரைத் தேர்வு செய்ததால் இது சாத்தியமானது.”— ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு.

Aug 31, 2026

ஒட்டகத்தின் கண்ணீரில் கொடிய பாம்பு விஷத்தை முறிக்கும் ஆன்டிபாடிகளா?

ஒட்டகத்தின் கண்ணீரில் உள்ள சில ஆன்டிபாடிகள் பல்வேறு கொடிய பாம்பு விஷங்களுக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டிருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.துபாய் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மையங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில், ஒட்டகத்தில் காணப்படும் சிறப்பு வகை ஆன்டிபாடிகள் 26 வகையான கொடிய பாம்பு விஷங்களுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இத்தகைய சிறிய ஆன்டிபாடி வடிவங்கள் 'நானோபாடிகள்' (Nanobodies) என அழைக்கப்படுகின்றன.இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால், சில நானோபாடிகள் அதிக வெப்பநிலையையும் தாங்கக்கூடியவை என்பதால், எதிர்காலத்தில் பாம்பு விஷ எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கும் ஆராய்ச்சியில் அவை முக்கியத்துவம் பெறக்கூடும்.குறிப்பு: பாம்பு கடித்தால் இதை எந்த வகையிலும் சிகிச்சையாகப் பயன்படுத்தக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, உரிய antivenom சிகிச்சையைப் பெற வேண்டும்.

Aug 31, 2026

இந்தியாவில் பறக்கும் கார்: இளம் கண்டுபிடிப்பாளரின் முயற்சி .

உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் ரவி டம்டா, ‘Hapida Sky Private Limited’ நிறுவனத்தின் மூலம் ‘HAPIDA SKYNEX’ என்ற மின்சாரத்தில் இயங்கும் ஒற்றை இருக்கை பறக்கும் வாகனத்தின் முதற்கட்ட சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ட்ரோன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த முழுமையான மின்சார வாகனம், மலைப்பகுதிகளில் நீண்ட நேரம் சாலைப் பயணம் செய்ய வேண்டிய நிலையை குறைத்து, பயண நேரத்தை 10 முதல் 15 நிமிடங்களாகக் குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது

Aug 29, 2026

வெங்கடேஷ் ஐயர் – கிரிக்கெட்டுடன் கல்வியிலும் சாதனை!

கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமல்ல, கல்வியிலும் சாதனை படைத்த வீரர்களில் ஒருவராக வெங்கடேஷ் ஐயர் குறிப்பிடப்படுகிறார்.வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், CA இடைநிலைத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து நிதித் துறையில் MBA பட்டமும் பெற்றுள்ளார்.மேலும், ரூ.15 லட்சம் மதிப்பிலான டெலாய்ட் நிறுவன வேலைவாய்ப்பை நிராகரித்ததாகவும், மத்திய அரசு வருமான வரித்துறையில் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது நிதித் துறையில் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.கிரிக்கெட், கல்வி, தொழில் என பல துறைகளில் ஆர்வத்துடன் பயணிக்கும் வெங்கடேஷ் ஐயரின் முயற்சி பாராட்டுக்குரியது.

Aug 29, 2026

மதுவை கட்டுப்படுத்த கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு!

நாகப்பட்டினம் விழுந்தமாவடி.மது மற்றும் போதைப் பழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி மீனவக் கிராம மக்கள் ஊர்க் கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளனர்.இதன்படி, திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்துவது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், திருமணமானவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சினை ஏற்படுத்தினாலும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விதிமீறல் குறித்து ஆதாரத்துடன் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.இது அரசு விதித்த சட்டம் அல்ல. கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் சமூக நலனைப் பாதுகாக்க மக்கள் தாங்களாக முன்வந்து மேற்கொண்டுள்ள சமூகக் கட்டுப்பாட்டு முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.சமூக நலனுக்காக ஒன்றிணைந்த விழுந்தமாவடி கிராம மக்களின் முயற்சி பாராட்டுக்குரியது!

Aug 29, 2026

மும்பையில் களைகட்டிய ஜோஹோ எண்டர்பிரைஸ் உச்சி மாநாடு!

21 st  AUGUST 2026 மும்பையில் நடைபெற்ற ஜோஹோ எண்டர்பிரைஸ் உச்சி மாநாட்டின் 3வது பதிப்பு தொழில்துறை வட்டாரத்தில் கவனம் பெற்றது.வங்கி, வாகனத் துறை, உற்பத்தித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் CIO-க்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தலைவர்கள் இதில் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் குறித்து கலந்துரையாடினர்.ஜோஹோவின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, செயற்கை நுண்ணறிவு முகவர்கள் தொடர்பான தனது நேரடி அனுபவங்கள் மற்றும் அவதானிப்புகளுடன் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து, FYNDNA நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான சி.என். ராம், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு நிறுவனங்கள் செயல்படுவதற்கும், போட்டியில் முன்னிலையில் இருப்பதற்கும் டிஜிட்டல் உருமாற்றம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசினார்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தொழில்துறை குழு விவாதங்களில் பழைய மென்பொருள் கட்டமைப்புகள், செயற்கை நுண்ணறிவு ஆளுகை மற்றும் தொழில்நுட்ப முதலீடுகளின் மதிப்பை அடையும் காலம் உள்ளிட்ட முக்கிய தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.நிறைவாக, ஆனந்த் நெர்குணம் தலைமையிலான ‘நிறுவனங்களுக்கான ஜோஹோ’ அமர்வில், இந்திய நிறுவனங்களுடன் ஜோஹோ மேற்கொண்டு வரும் ஒத்துழைப்புகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.நிறுவனத் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தலைவர்கள் ஒன்றுகூடி, புதிய சிந்தனைகளையும் பார்வைகளையும் பகிர்ந்துகொண்ட முக்கியமான நிகழ்வாக இந்த மாநாடு அமைந்தது.

Aug 29, 2026

வாகனங்களில் V2V வசதி: அடுத்தாண்டு முதல் கட்டாயம்?

சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், வாகனங்கள் ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக்கொள்ளும் Vehicle-to-Vehicle (V2V) தொழில்நுட்பத்தை அடுத்தாண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வாகனங்களில் V2V வசதி அடுத்தாண்டு முதல் கட்டாயமாகிறது.!சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் வாகனங்கள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்ளும் 'வி 2 வி வசதியை அடுத்தாண்டு முதல் கட்டாயமாக்க திட்டம்.V2V மூலம் ஒரு வாகனம் சாலையில் செல்லும் போது அருகில் உள்ள மற்ற வாகனங்களுடன் தானாகவே தகவல்களை பரிமாறிக்கொள்ளும்.V2V மூலம் அருகில் உள்ள வாகனத்தின் வேகம், அது எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பது குறித்து ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும்.சிம் கார்டு இல்லாமல் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் v2v கருவிகள் 75.905 GHZ அலைவரிசையில் இயங்கும்.வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் வி 2 வி திட்டத்திற்கான வரைவு விதிகள் குறித்து வாதுமக்களிடம் மத்திய அரசு கருத்து கேட்பு கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்!

1 2 3 4 5 6 7 8 9 10 ... 136 137

AD's



More News