திருமணமான பெண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை!
திருமணமான மகள்களுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை உண்டு. அரசுப் பணியில்இருந்த பெற்றோர்மரணமடைந்தால், கருணை அடிப்படையிலான வாரிசு வேலை பெற திருமணமானமகள்களுக்கும் முழு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மகனுக்குத் திருமணமாகி இருந்தாலும் அவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆனால்மகளுக்குத் திருமணமானால் வேறுகுடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறி வேலை மறுப்பதுபாலின பாகுபாடு என்றும், கருணை வேலை வழங்குவதில் திருமண நிலை அல்ல, தகுதிமற்றும் நிதி தேவை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
0
Leave a Reply