25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


மழையை அறிவிக்கும் புன்னை மரம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மழையை அறிவிக்கும் புன்னை மரம்

மண்ணுக்கும் மனிதனுக்கும் நன்மைகள் செய்ய இயற்கை மரங்கள்.இன்றைக்கு, நகர விரிவாக்கம் சாலை உருவாக்கம் என்ற பெயரில் மரங்கள் வீழ்த்தப்படுகின்றன. இதனால், பல வகை மரங்கள் அழியும் நிலையில் உள்ளன.கடலோர பகுதிகளில் எங்கும் காணப்படும் புன்னை மரம் பொதுவாக அனைத்து வகை மண்ணிலும் வளரும். கடும் கோடையிலும் இதன் இலைகள் பசுமையாக கண்களுக்கு குளிர்ச்சி தரும். கோடையில் புன்னை மர நிழலில் அம ரும்போது புன்னை மரக் காற்றில் கலந்துள்ள அதிக அளவிலான பிராணவாயு சுவாசத்தை சீராக்கி மன அழுத்தத்தை போக்கி புத்துணர்வு பெற வைக்கும் என்கிறார்கள்

தாவரவியலாளர்கள். புன்னை இலைகள் சளி, தலைவலி, கண் சூடு, வயிற்று வலி மற்றும் தோல் வியாதிகளை போக்கும் மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. புன்னை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் புங்க எண்ணெய் முற்காலத்தில் மக்கள் விளக்கு எரிக்க பயன்படுத்தினர். புன்னை மரத்தில் மலர்கள், அதிக அளவில் பூத்துக்குலுங்கினால் அந்தப் பகுதியில் நிச்சயம் மழைப்பொழிவு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறி யுள்ளனர்.

புயலுக்கு சாயாத, பூச்சி அரிக்காத உறுதி தன்மை புன்னை மரங்களுக்கு உண்டு என்பதால் கப்பல் கட்டவும் புன்னை மரங்கள் பயன்பட்டன. பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதி, புன்னை மரங்களின் வனமாக இருந்ததால், அந்த ஊர் புன்னைநல்லூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News