25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இளம் பசுமை ஆர்வலர்” எனும் சிறப்பு சுற்றுச்சூழல் முகாமில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதியும் சுற்றுச்சூழல் ஆர்வமும் உடைய ஆசிரிய பயிற்றுநர்கள் விண்ணப்பிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இளம் பசுமை ஆர்வலர்” எனும் சிறப்பு சுற்றுச்சூழல் முகாமில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதியும் சுற்றுச்சூழல் ஆர்வமும் உடைய ஆசிரிய பயிற்றுநர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட நிர்வாகம், விருதுநகர் மற்றும் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்புகள் இணைந்து, சுற்றுச்சூழல் கல்வி காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு, பல்லுயிரியம்/உயிரின பன்மயம் பற்றி புரிந்து கொள்ளுதல் போன்றவை தொடர்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு நாள் முகாம் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .

"இளம் பசுமை ஆர்வலர்" எனும் இச்சிறப்பு சுற்றுச்சூழல் முகாமில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதியும் சுற்றுச்சூழல் ஆர்வமும் உடைய ஆசிரிய பயிற்றுநர்கள் தேவை. சுற்றுச்சூழல் அறிவியல், வாழ்வியல் கல்வி, வனவியல் கல்வி, வனவிலங்கு தொடர்புடைய ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், தன்னார்வ பயிற்றுவிக்கும் ஆர்வம் உடையவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

அரசு / அரசு சாரா துறைகளில் பணிபுரிபவர்கள் ஆராய்ச்சி படிப்பு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 2024-25 கல்வியாண்டில் ஏறக்குறைய 30 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இருகட்டமாக முதலில் பயிற்சி வழங்கப்படும். இராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 88383-49353 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் தகுதியானவர்கள் பதிவு செய்ய  80729 18467 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News