25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


குறு சிறு தொழில்களுக்கான கடன் வழங்கும் முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குறு சிறு தொழில்களுக்கான கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு அரசு, சமச்சீரான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை குறிக்கோளாகக் கொண்டு மக்கள் நலத்திட்டத்திங்களை முனைப்புடன் செயல்படுத்திவருகிறது. அவ்வகையில், சுயவேலைவாய்ப்பினை ஊக்குவிப்பதற்காக அரசின் உத்திரவாதத்துடன் கூடிய மானியக் கடனுதவி திட்டங்களை எளிமைபடுத்தி எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் வருகிற 23.02.2024 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் “மானியத்துடன் கூடிய கடன் வசதி முகாமினை” மாவட்ட தொழில் மையம் மூலமாக சிறப்பாக நடத்த உத்தேசித்துள்ளது.
அதன்படி, விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருகிற 23.02.2024 அன்று காலை 10.00 மணியளவில் மானியத்துடன் கூடிய கடன் வசதி முகாமானது மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், அனைத்து பொதுத்துறை/தனியார் துறை வங்கிகளின் மண்டல மேலாளர்கள், வங்கி கிளை மேலாளர்கள மற்றும் மானிய கடனுதவி திட்டத்தினை நடைமுறைபடுத்திவரும் மாவட்ட தொழில் மையம் மற்றும் இதர பல்வகை கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகிய அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து அனைத்து துறை மானிய கடனுதவி திட்டங்களின் வரையறைகளை எடுத்துரைத்து அன்றைய தினமே கடன் தொகை விடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளன.
புதிதாக கடனுதவி கோரி விண்ணப்பிக்க உள்ளவர்களும், ஏற்கனவே விண்ணப்பித்து கடன் விடுவிப்பு ஆணையினை எதிர்நோக்கியுள்ள நபர்களும் மேற்கண்ட கடன் உதவி இயக்க முகாம் நடைபெறும் நாளான 23.02.2024 அன்றே கடனுதவி பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சுயதொழில் தொடங்கிட மானியக் கடனுதவி கோரி ஏற்கனவே விண்ணப்பித்த அனைத்து தரப்பினரும் தொழிற் கடன் வேண்டி புதிதாக விண்ணப்பிக்க உள்ள நபர்களும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு உடனடியாக பயன்பெறலாம்.மேலும், கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில்; மையம், பொது மேலாளர்அவர்களை நேரிலோ அல்லது 9080078933 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன்,  I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News