தேவையான பொருட்கள்-எலுமிச்சைப்பழம்- 1,இஞ்சி -1 துண்டு, புதினாஇலை -6,நன்னாரிசர்பத்-4ஸ்பூன்கள்,உப்பு -1பின்ச்,எலுமிச்சைதோல்- சின்னதுண்டு.செய்முறை -முதலில்எலுமிச்சைசாறு,நன்னாரி சர்பத், இஞ்சி மட்டும் மிக்ஸியில் ஒரு சுத்து அரைக்கவும்.பின் புதினா இலை,1 பின்ச் உப்பு,சின்ன எலுமிச்சைதோல், சேர்த்து மீண்டும் ஒரு சுத்து அரைக்கவும்.பின் வடிகட்டி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.பிரிஜ்ஜில் வைத்து,பருகலாம்.இல்லை ஐஸ் cube சேர்த்தும் பருகலாம்..இஞ்சி, எலுமிச்சைதோல்,புதினா சேர்த்து அரைப்பதால் நல்ல ருசி , மணமும் உண்டு..உடம்புக்கும் நல்லது.புதினா, இஞ்சி,லெமன் ஜுஸ் ரெடி.
தேவையான பொருட்கள் -2 ஆப்பிள், 3 மாதுளை, 100ml பால் (விரும்பினால் சேர்க்க),100ml தண்ணீர், தேவையான அளவு சர்க்கரை.செய்முறை- .ஆப்பிள் தோல் நீக்கி, நறுக்கி, மாதுளை முத்துக்களை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.மாதுளையின் உட்புற தோல் வயிறு புண் நீக்கும். ஆதலால்,சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்..மிக்சி ஜாரில் ஆப்பிள் மாதுளை மற்றும் பால் சேர்க்கவும்.பின் மைய அரைக்கவும்.இதனுடன்,1/2கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும்.பின் சர்க்கரை/தேன் சேர்த்துபரிமாறலாம்.சுவையான ஆரோக்கியமான ஜுஸ் ரெடி.ஆப்பிள் மட்டும் சேர்த்து ஜுஸ் செய்வதை விட,மாதுளையும் சேர்த்து ஜுஸ் செய்யும் போதுசுவையாகவும்,மாதுளையின் துவர்ப்பும் தெரியது.குழந்தைகள் விரும்பி சுவைப்பர்.
தேவையான பொருட்கள்:வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்கடலை மாவு - 4 தேக்கரண்டிமிளகாய் துாள், அரிசி மாவு, கரம் மசாலாத்துாள் - தலா 1 மேஜைகரண்டிஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:கொண்டைக் கடலையை இரண்டு மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். பின், கடலையில் உள்ள தண்ணீரை வடிக்கவும்.அகலமான பாத்திரத்தில், வேக வைத்த கடலையுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், கரம்மசாலாத்துாள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக கடலையை போட்டு பொரித்து எடுக்கவும்.புரதம், இரும்பு சத்து, நார்சத்து நிறைந்த கொண்டைக்கடலை மசால் ப்ரை தயார். குழந்தைகள் விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள்:கத்தரிக்காய் - 1/4 கிலோ,புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,தனியா - 2 டீஸ்பூன்,காய்ந்த மிளகாய்- 2,கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்,தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்,துவரம்பருப்பு - ஒரு சிறிய கப்,மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,பெருங்காயத்தூள் - சிறிதளவு,கடுகு -1 டீஸ்பூன்,உளுந்தம்பருப்பு - ½ டீஸ்பூன்,எண்ணெய் -2 டீஸ்பூன்,உப்பு - தேவையான அளவு.செய்முறை:கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்து அரைக்கவும்.துவரம்பருப்பை வேகவைக்கவும். கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் தூள்,உப்பு,புளிக்கரைசல்சேர்த்துவேகவிடவும்.இதனுடன், அரைத்துவைத்த பொடி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு,உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.இந்த கத்தரிக்காய் ரசவாங்கியை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்:பூண்டு - 10 முதல் 12 பல்,துருவிய தேங்காய் -1கப்,காய்ந்த மிளகாய் - 5 முதல் 7,காய்ந்த மிளகாய் -1கப்,கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்,உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்,உளுத்தம்பருப்பு -1 ஸ்பூன்,சீரகம் - 1/2 ஸ்பூன்,உப்பு - தேவைக்கேற்ப,எண்ணெய் - 1 ஸ்பூன்,கருவேப்பிலை - சிறிதளவு,செய்முறை:கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.காய்ந்த மிளகாய், சீரகம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.பூண்டு சேர்த்து லேசா வறுக்கவும். (பச்சை வாசனை போகும் வரை).கடைசியாக தேங்காய் சேர்த்து நன்றாக காய வறுக்கவும்.. (தேங்காய்ல ஈரம் இருக்கக் கூடாது -இது முக்கியம்)முழுக்க குளிர்ந்ததும், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.டிப்ஸ்:தேங்காய் நன்றாக வறுத்தா 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.கொஞ்சம் புளி சேர்த்தா super taste. காரம் அதிகமா வேண்டும்னா மிளகாய் கூடச்சேர்க்கலாம்.
தேவையான பொருட்கள்:கேரட் - அரை கிலோ,சர்க்கரை - கால் கிலோ,பால் - அரை லிட்டர்,வறுத்த முந்திரி, கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - தலா 10,தேங்காய் துருவல்,கோதுமை மாவு - தலா 2 தேக்கரண்டி,நெய் - 2 ஸ்பூன்.செய்முறை:குக்கரில் பேரீச்சம் பழம், கேரட் துருவலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் மசிய அரைக்கவும்.பால்கோவா பதத்திற்கு பாலை சுண்ட காய்ச்சவும். நெய் விட்டு கோதுமை மாவை பொன்னிறமாக வறுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சிறிதுதண்ணீர் விட்டு, சர்க்கரை சேர்க்கவும். பாகு பதத்திற்கு வரும் போது கேரட் விழுது, பால்,கோதுமை மாவு சேர்த்து, அடிபிடிக்காமல் கெட்டியாக கேசரி பதம் வரும் வரை கிளறவும்.அதில், வறுத்த முந்திரியை துாவி இறக்கினால், சத்து நிறைந்த, கேரட் கேசரி தயார்.மாலை சிற்றுண்டியாக குழந்தைகள் விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள் -1 புடலங்காய்,1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்,ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்,1/4 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் ,உப்பு தேவையான அளவு.எண்ணெய் பொரிப்பதற்கு. செய்முறை -புடலங்காயை கழுவி வைத்துக்கொள்ளவும். பின்னர் காயின் ஓரங்களை வெட்டி விட்டு மையப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.அதை ரிங் ரிங் ஆக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.நறுக்கும் போது உதிரும் சதைப்பகுதியை விட்டுவிட்டு மற்ற புடலங்காய் ரிங்ஸ்களை எடுத்து வைக்கவும்.ஒரு பௌலில் அரிசிமாவு, கடலை மாவு, காஷ்மீர் +மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள், உப்பு,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும். அதில் நறுக்கிய ரிங்ஸ்சை சேர்த்து பிரட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தயாராக வைத்துள்ள ரிங்ஸ்சை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.இப்போது மிகவும் சுவையான ஒரு வித்தியாசமான புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி தயார். இந்த சுவையான புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜியை அனைவரும் ஈவ்னிங் பைட்ஸ் ஆக செய்து சுவைக்கவும்.
தேவையான பொருட்கள் - 1/4 கிலோ - கருணைக்கிழங்கு,3டேபிள் ஸ்பூன் ஆயில்,1/4ஸ்பூன் கடுகு,1/4ஸ்பூன் உளுந்து,1வெங்காயம் ,1கொத்து கருவேப்பிலை,1/4ஸ்பூன் மஞ்சள் தூள்,1ஸ்பூன் மிளகாய் தூள்,3டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்,உப்பு.செய்முறை - கருணைக்கிழங்கின் தோலை நீக்கி விட்டு மண் இல்லாமல் நன்றாக கழுவிக் கொள்ளவும்.பின்னர் கேரட் துருவதை போல் துருவிக் கொள்ளவும்.பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் துருவிய கருணைக்கிழங்கை சேர்த்து கை விடாமல் 2நிமிடம் வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிழங்கு முருவலாக வரும் வரை கிளறவும்.பின் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.கிழங்கை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.இல்லை எனில் அடி பிடிக்கும், மிகவும் குறைந்த தீயில் சமைக்கவும். தண்ணீர் சேர்க்க கூடாது.சுவை அருமையாக இருக்கும். கிழங்கு சற்று பழைய கிழங்காக இருக்க வேண்டும்.எண்ணெயில் வறுப்பதால் அரிப்பு இருக்காது.
தேவையான பொருட்கள்:காய்ந்த மிளகாய் (சிவப்பு) - 10-15 (விதைகளை நீக்கினால் காரம் குறையும்)பூண்டு - 4-5 பற்கள்,வினிகர் (Vinegar) - 2 மேசைக்கரண்டி,சர்க்கரை - 1 தேக்கரண்டி,உப்பு - தேவையான அளவு,தண்ணீர் - அரைக்கத் தேவையான அளவு,செய்முறை: காய்ந்த மிளகாயை 15-20 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.ஊறிய மிளகாய், பூண்டு, சர்க்கரை, உப்பு, வினிகர் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்த விழுதை ஒரு கடாயில் ஊற்றி, மிதமான தீயில் 5 நிமிடம் கிளறி, சாஸ் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.ஆறிய பிறகு, சுத்தமான காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரைகெடாது. பச்சை மிளகாய் சாஸ் செய்ய, காய்ந்த மிளகாய்க்கு பதிலாக பச்சை மிளகாயைப் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:வேகவைத்த முட்டைகள் - 5,எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,நறுக்கிய வெங்காயம்- சிறிது,இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்,மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,பச்சை மிளகாய்- 3,மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்,சர்க்கரை - அரை டீஸ்பூன்,கெட்டியான புளிக்கரைசல் - 1 ஸ்பூன்,உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை:வேக வைத்த முட்டைகளின் ஓட்டை எடுத்து விட்டு முள்கரண்டியால் முட்டைகளின் மீது குத்தி விடவும்.ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, இஞ்சி, பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், புளிக் கரைசல், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.அரை கப் கொதிநீரை ஊற்றி, சர்க்கரை, மஞ்சள் தூள் சேர்க்கவும். குழம்பில் முட்டைகளை மெதுவாக போடவும்.நன்றாக கெட்டிப்படும் வரை குறைந்த தணலில் வைக்கவும். ருசியான சில்லி முட்டை தயார்.