தேவையான பொருட்கள்:பீட்ரூட் - 2,கடலை மாவு–1 கப்,அரிசி மாவு- கால் கப்,ஓமம்- 1 தேக்கரண்டி,மிளகு துாள்,எண்ணெய், உப்பு- தேவையான அளவு.செய்முறை:பீட்ரூட்டை வேக வைத்து, துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.அதனுடன் மிளகு, ஓமம், அரிசி மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை அச்சில் போட்டு பிழிந்து, பொரித்து எடுக்கவும்.ஆரோக்கியமான, மொறுமொறுப்பான பீட்ரூட் முறுக்கு தயார். நொறுக்கு தீனியாக குழந்தைகள்மட்டுமின்றி, பெரியவர்களும் சுவைத்து சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்:அரிசி மாவு - 2 கப்,பொட்டுக்கடலை மாவு (வறுத்த பொட்டுக்கடலை) - 1/4 கப்,பூண்டு - 10-12 பற்கள்,தனி மிளகாய் தூள் - 1 முதல் 1.5 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப),வெண்ணெய் / சூடான எண்ணெய் - 1-2 மேசைக்கரண்டி,சீரகம் / எள் - 1 தேக்கரண்டி,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,செய்முறை:பூண்டு பற்களை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துஅந்த விழுதை வடிகட்டி பூண்டு சாறு எடுத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுபொட்டுக்கடலை மாவுமிளகாய் தூள்சீரகம்உப்புவெண்ணெய் மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துமுறுக்கு மாவு பதத்திற்கு (மென்மையாகஅதே சமயம் கையில் ஒட்டாமல்) பிசைந்து கொள்ளவும்.முறுக்கு அச்சில் (விருப்பமான அச்சு) மாவை போட்டுசூடான எண்ணெயில் வட்ட வடிவில் அல்லது சிறியபூண்டு முறுக்குகளாக பிழிந்து விடவும்.மிதமான தீயில் வைத்துமுறுக்கின் சலசலப்பு சத்தம் அடங்கும் வரை இருபுறமும் திருப்பி பொன்னிறமாகபொரித்து எடுக்கவும். பூண்டு விழுதை நேரடியாக சேர்த்தால் முறுக்கு பிழியும் அச்சு அடைத்துக் கொள்ளும்.எனவே சாறு பிழிந்து பயன்படுத்துவது சிறந்தது.
தேவையான பொருட்கள் -அரிசி ஒரு கப், வெந்தயக்கீரை 3 கட்டு, வெங்காயம் 1. தக்காளி 2,இஞ்சி, பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் கால்டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 1 டேபிள் ஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், பட்டை 1 துண்டு,லவங்கம் 1 துண்டு, உப்பு தேவைக்கு.செய்முறை:அரிசியைச் சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு சிறிதளவு உப்பு சேர்த்துஉதிர் உதிராக வேக வைத்தெடுங்கள். கீரையைச் சுத்தம் செய்து நறுக்குங்கள். வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யை ஒன்றாகச் சேர்த்து சூடாக்கி பட்டை,லவங்கம், சீரகம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து ,பச்சை வாடைபோக வதக்குங்கள். பிறகு கீரை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, வெங்காயம், சிறிதளவு உப்பு,மஞ்சள் தூள், சேர்த்து வெங்காயம் வதங்கும்வரை வதக்கி, பிறகு தக்காளி, மிளகாய்தூள் சேர்த்துவதக்குங்கள். பிறகு சாதம், உப்பு சேர்த்து கிளறி ,குக்கரில் நேரடியாக கொட்டி, மிகமிகக் குறைந்ததீயில் பதினைந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். வெந்தயக் கீரை சாதம் தயார்.தயிர் பச்சடி, உருளைக் கிழங்கு பொரியல், அப்பளம் போன்றவற்றுடன் சாப்பிட அபாரமாகஇருக்கும்.
தேவையான பொருட்கள் நச்சு கொட்டை கீரை 15 இலைகள்,பெரிய வெங்காயம் 1,பூண்டு 8 பல்,மிளகுத்தூள் 1 டீஸ்பூன்,எண்ணெய 1 டேபிள் ஸ்பூன்,உப்பு தேவைக்குசெய்முறை:கீரையைச் சுத்தம் செய்து, நடு நரம்பை நீக்கிவிட்டு, மிகவும் பொடியாக நறுக்குங்கள். பூண்டு,வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயம், பூண்டு,சிறிதளவு உப்பு சேர்த்து வதக்குங்கள். பின்னர் கீரை, உப்பு சேர்த்து, சிறு தீயில், மூடி போட்டுநன்கு வேகும்வரை வதக்குங்கள். கடைசியில் மிளகுத்தூள் தூவி கிளறி இறக்குங்கள்.சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இந்தப் பொரியலை, அரைக் கீரையிலும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்- சோம்புக் கீரை 1 கட்டு, கடலைமாவு 2கப், பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கியது தலா 1டேபிள் ஸ்பூன், மல்லித்தழை சிறிதளவு, புதினா 1 கைப்பிடி, சமையல் சோடா கால் டீஸ்பூன்,உப்பு, எண்ணெய் தேவைக்கு. செய்முறை:-கீரை மல்லி, புதினா ஆகியவற்றைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்குங்கள். அதனுடன் கடலைமாவு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சமையல் சோடா. ஒரு கரண்டி அளவுக்கு சூடான எண்ணெய்ஆகியவற்றைச் சேர்த்து தேவையான தண்ணீர் தெளித்து போண்டா மாவு பதத்திற்குபிசையுங்கள். சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள்.வித்தியாசமான வாசனையோடு,சுவையிலும் ஜமாய்க்கும்.
தேவையான பொருட்கள் வல்லாரைக் கீரை 1 கப், சின்னவெங்காயம் 1 கப், பூண்டு 8 பல், தக்காளி 3, புளி நெல்லிக்காய்அளவு, உப்பு தேவைக்கு, கடுகு 1 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 6, எண்ணெய் 2டேபிள் ஸ்பூன். செய்முறை:கீரையைச் சுத்தம் செய்து ,வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து தாளித்து,மிளகாய் சேர்த்து, சிவக்க வறுத்தெடுங்கள். பிறகு வெங்காயம் ,பூண்டு சேர்த்து வதக்கி, பிறகுகீரை சேர்த்து வதக்குங்கள். கடைசியில் புளி, உப்பு சேர்த்து கிளறி இறக்கி, ஆறியதும் நைஸாகஅரைத்தெடுங்கள்.இட்லி, தோசை, சாதத்துக்கு சேர்த்துக் கொண்டால் சுவை கூட்டும்.
தேவையான பொருட்கள்- புளிச்ச கீரை1 கட்டு, உருளைக்கிழங்கு 3, வெங்காயம் 1,தக்காளி 2, இஞ்சி பூண்டு விழுது 1டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 2, மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, பட்டை 1,எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன். செய்முறை:கீரையைச் சுத்தம் செய்து நறுக்குங்கள். கிழங்கை தோல் நீக்கி, சிறு சிறு சதுரத் துண்டுகளாகநறுக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கிவெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு கிழங்கை சேர்த்துக் கிளறி,ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றுங்கள். அதன் மேல் கீரையைப் பரவலாகத் தூவி, மூடி வையுங்கள்.தீ மிதமாக இருக்க வேண்டும். பத்து நிமிடத்திற்குப் பிறகு கீரையை மட்டும் மேலாக எடுத்துகடைந்து, மீண்டும் அதை கிழங்குக் கலவையில் சேருங்கள். எண்ணெயைக் காயவைத்துபட்டை, சீரகம் தாளித்து கீரைக் கலவையில் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். சாதம்சப்பாத்தியுடன் பரிமாறுங்கள். இதே மசாலாவை புளிச்ச கீரைக்குப் பதிலாக அரைக்கீரைசேர்த்தும் செய்யலாம்.
தேவையான பொருட்கள் -முள்ளங்கி கீரை 12 இலைகள், கடலைப் பருப்பு 1கப்,சோம்பு அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3,உப்பு தேவைக்கு, கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்..செய்முறை:-கீரையின் நடு நரம்பை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்குங்கள். கடலைப் பருப்பை ஒரு மணி நேரம்ஊறவைத்து சோம்பு, மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். எண்ணெயைச் சூடாக்கி,கடுகு, உளுந்து தாளித்து கீரை சேர்த்துக் கிளறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து மூடிவையுங்கள். வெந்ததும், பருப்புக் கலவையைச் சேர்த்து உதிர் உதிராக வரும் வரை கிளறிஇறக்குங்கள்.பொதுவாக முள்ளங்கி கீரை சிறிது கசப்பாக இருக்கும். ஆனால், இந்த முறையில்செய்யும்போது சிறிது கூட கசப்பு இருக்காது என்பது ஸ்பெஷல்.சாதத்துக்கு பெஸ்ட் சைடு டிஷ்.இதே உசிலியை பொன்னாங்கண்ணி கீரை, அரைக்கீரையிலும்செய்யலாம்.
தேவையான பொருட்கள்:கோவக்காய் - 250g (நன்கு கழுவி, நீளவாக்கில் நறுக்கியது)வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)கடுகு, உளுத்தம் பருப்பு - தலா -1/2 தேக்கரண்டிகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டிதனி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப)தனியா தூள் - 1/2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டிஎண்ணெய், உப்பு - தேவையான அளவுசெய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துதாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.நறுக்கிய கோவக்காயை சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்.மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.தண்ணீரை தெளிக்காமல், மூடி போட்டு குறைவான தீயில் 10-15 நிமிடம் வேகவைக்கவும்.அடிக்கடி கிளறி விடவும், இல்லையெனில் அடிப்பிடித்துவிடும்.காய் நன்றாக வெந்து, மொறுமொறுப்பாக வந்ததும், தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.கோவக்காயை மிகவும் மெலிதாக நறுக்கினால் பொரியல் சீக்கிரம் வெந்து, வறுவல் போலமொறு மொறுப்பாக இருக்கும். தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு இது சிறந்த காம்பினேஷன்.
தேவையான பொருட்கள்சுரைக்காய்: 1 (சிறியது, தோல் சீவி, பொடியாக நறுக்கியது - சுமார் 2-3 கோப்பை)பெரிய வெங்காயம்: 1 (பொடியாக நறுக்கியது)பச்சை மிளகாய்: 2-3 (இரண்டாக கீறியது)துருவிய தேங்காய்: 2-3 டேபிள் ஸ்பூன்வறுத்த வேர்க்கடலை:1/4 கோப்பை (கொரகொரப்பாக அரைத்தது அல்லது முழுதாக)கடுகு: 1/2 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு: 1 டீஸ்பூன்சீரகம்: 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை: ஒரு கொத்துமஞ்சள் தூள்: 1/4 டீஸ்பூன்எண்ணெய்: 2-3 டேபிள் ஸ்பூன்உப்பு: தேவையான அளவுசெய்முறைவாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துதாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி போல் ஆகும் வரைவதக்கவும்.நறுக்கிய சுரைக்காய், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்றாகக் கிளறவும்.சுரைக்காயில் நீர் சத்து அதிகமாக இருக்கும், எனவே சிறிதளவு தண்ணீர் தெளித்து, மூடி வைத்து மிதமானதீயில் 5-7 நிமிடம் வேகவைக்கவும்.சுரைக்காய் நன்கு வெந்ததும், துருவிய தேங்காய் மற்றும் வறுத்த வேர்க்கடலை தூவி கிளறி, 1 நிமிடம்கழித்து அடுப்பை அணைக்கவும்.சுரைக்காயில் தண்ணீர் இருப்பதால், அதிகமாக தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டாம்.வறுத்த வேர்க்கடலை பொரியலுக்கு நல்ல சுவை மற்றும் மொறுமொறுப்பைத் தரும்.