25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சமையல்

Feb 07, 2026

பார்லி பாயசம்

தேவையான பொருட்கள்:பார்லி -1 கப்பாசிப்பருப்பு -1 கப்பால்-1 கப்வெல்லம் -கால் கப்முந்திரி, திராட்சை, தண்ணீர்,தேவையான அளவுஏலக்காய்த்துாள், சுக்குப்பொடி- சிறிதளவுசெய்முறை:பார்லியை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த பார்லியுடன், பாசிப்பருப்பை சேர்த்துகுக்கரில் நன்கு வேக வைக்கவும். அதில், சிறிது பால் மற்றும் வெல்லம் சேர்த்து, வெல்லம்கரையும் வரை கிளறவும்.வெல்லம் கரைந்ததும், சிறிது ஏலக்காய்த்துாள் மற்றும் சுக்குப்பொடி தூவி, இறுதியாக நெய்யில்வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து, சூடாக பரிமாறலாம். பிரிஜ்ஜில் குளிர வைத்தும்சாப்பிடலாம்.

Feb 07, 2026

உளுந்து ஜாமூன்

தேவையான பொருட்கள்:உளுந்தம் பருப்பு 250 கிராம்பால் பவுடர் 200 கிராம்ஏலக்காய் 6நெய்-100 கிராம்எண்ணெய் 400ரோஸ் எசன்ஸ் தேவையான அளவு.செய்முறை:உளுந்தம் பருப்பை நன்கு ஊற வைத்து, நீரை வடிகட்டிய பின், மிக்ஸியில் வெண்ணைய போல்அரைத்து கொள்ளவும். அத்துடன் நெய், பால் பவுடர் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டையாகஉருட்டி கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உருண்டைகளை வேகவிட்டு எடுத்து, ஆறவைக்கவும். பின், தேவையான அளவு ரோஸ் எசன்ஸை சேர்த்து சர்க்கரை பாகுதயாரிக்கவும்.பாகு சற்று ஆறியதும், அதில் உருண்டைகளை போட்டு, மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, சுவையான உளுந்து ஜாமூன் தயார்.பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர்.

Feb 07, 2026

பச்சை பட்டாணி பூரி

தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - 1.5 கப்பச்சை பட்டாணி - 1 கப்இஞ்சி - 1 இன்ச்பச்சை மிளகாய் - 2சீரகம் - 1/2 தேக்கரண்டிகொத்தமல்லி இலைகள் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் - பொரிக்கசெய்முறை:பச்சை பட்டாணி, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் ஆகியவற்றைமிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த பட்டாணி விழுது, உப்பு,கொத்தமல்லி இலைகள் சேர்த்து பிசையவும். தேவைப்பட்டால் சிறிதளவுதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 15-20 நிமிடம் ஊறவைக்கவும்.மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சற்றே தடிமனான வட்டங்களாகஇட்டுக்கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, இட்டு வைத்த பூரியை போட்டு இருபுறமும்பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். கூடுதல் சுவைக்கு சோம்பு, கசூரி மேத்தி அல்லது சீரகப் பொடி சேர்க்கலாம்.காரம் தேவைக்கேற்ப பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். இந்த பூரியை உருளைக்கிழங்கு மசாலா அல்லது சட்னியுடன் பரிமாறலாம்.

Feb 07, 2026

மரவள்ளிக்கிழங்கு லட்டு.

தேவையான பொருட்கள்:மரவள்ளிக்கிழங்கு -500 கிராம்வெல்லம் - 300 கிராம்உடைத்த முந்திரி, திராட்சை.தேங்காய் துருவல்,ஏலக்காய், தண்ணீர் - தேவையான அளவுஉப்பு -சிறிதளவு.செய்முறை:மரவள்ளிக் கிழங்கை தோல் சீவி, ஆவியில் நன்கு வேகவைத்து, மசித்து வைத்துக் கொள்ளவும்.வெல்லத்தில் தண்ணீர் ஊற்றி, பாகாக காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.மசித்த மரவள்ளிக்கிழங்கு சூடாக இருக்கும் போதே, அத்துடன் வெல்லப்பாகு, தேங்காய்துருவல், முந்திரி, ஏலக்காய், திராட்சை, சிறிதளவு உப்பு சேர்த்து,நன்கு பிசைந்து உருண்டைபிடிக்கவும்.சுவையான, மரவள்ளிக்கிழங்கு லட்டு தயார். சிற்றுண்டிக்கு ஏற்றது. சாப்பிட சுவையாகஇருக்கும்.

Feb 07, 2026

.ஓட்ஸ் பொங்கல்.

.தேவையான பொருட்கள்:ஓட்ஸ் - 1 கப், சிறுபருப்பு - 1 கப், சீரகம் -1 டீஸ்பூன், மிளகு -1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன்,கறிவேப்பிலை -6செய்முறை:ஒட்சை ஒரு பாத்திரத்தில் வாசனை வரும் வரை வறுக்கவும். ஒரு கப் சிறு பருப்பை 2 டம்ளர்தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.வேகவைத்த பருப்பை ஒட்சுடன் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இதை 3 இல் இருந்து 5நிமிடம் வரை ஓரளவு கெட்டி பதம் வரும் வரை கிளறவும்.ஒரு பாத்திரத்தில் நெய்யுடன் மிளகு, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.அதனுடன் சிறிது முந்திரிப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.தாளித்த மிளகு, சீரகத்தை ஓட்சில் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இப்போது சுவையான,சத்தான ஓட்ஸ் பொங்கல் தயார்.

Feb 07, 2026

பேரீச்சம் பழ அல்வா.

தேவையான பொருட்கள்:விதை நீக்கியபேரீச்சம் பழம்- 300 கிராம் இஞ்சி- 100 _)கிராம் சர்க்கரை- 250 கிராம் முந்திரி- 50 கிராம் ஏலக்காய்- 5நெய்- 50 கிராம் தண்ணீர்-தேவையான அளவு.செய்முறை:இஞ்சியை தோல் நீக்கி சீவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் நைசாகஅரைத்து சாறு எடுக்கவும். அதில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, பேரீச்சம் பழங்களைசிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு, அரை மணி நேரம் ஊற விடவும். ஊறிய பிறகு அந்த கலவையை, மறுபடியும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் .வாயகன்ற கடாயை அடுப்பில் வைத்து, கலவையில் சர்க்கரை சேர்த்து மிதமானசூட்டில் கிளறவும். முக்கால் பதத்தில் இருக்கும் போது பொடித்த ஏலக்காய்,முந்திரி,நெய் சேர்த்து கிளறவும். கலவை, அல்வா பதத்திற்கு வந்ததும், தட்டில் கொட்டிஆறவிடவும். சுவையான, 'பேரீச்சம்பழ அல்வா' தயார். 

Jan 31, 2026

மக்கா சோள தோசை.

தேவையான பொருட்கள் -  2 கப் காய்ந்த மக்கா சோளம், 2கப் பச்சரிசி,1 கப் இட்லி அரிசி,1 கப் உளுந்து,2 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு,1 டீஸ்பூன் வெந்தயம்,தேவைக்கு உப்பு, தேவைக்குஎண்ணெய் அல்லது நெய்.செய்முறை -முதலில் மக்காசோளத்தை2-3 முறை நன்கு கழுவி,பிறகு அதை முழுகும் அளவு தண்ணீரில்7-8மணி நேரம். ஊற விடவும். அதேபோல் இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக களைந்து தண்ணி விட்டு 4 மணி நேரம் ஊற விடவும்.மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரிசி மற்றும் சோளத்தை, தனி தனியாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மாவும் நன்கு கலந்து விட்டு தேவையான உப்பு சேர்த்து 6-8 மணி நேரம் புளிக்க வைக்கவும்..ஸ்டவ்வில் தோசை தவாவை வைத்து நன்கு சூடான பிறகு மாவை எடுத்து மெல்லிசான தோசையாக பரத்தி விடவும்.ஒரு பக்கம் வெந்த பிறகு திருப்பி விட்டு சுற்றும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பொன் நிறமானதும் எடுத்து விடவும்.. அருமையான மொறு மொறு மக்கா சோள தோசை தயார்..தோசை மிக கிறிஸ்பியா வர ஒரு பக்கம் மட்டும் போட்டு எடுக்கவும்.

Jan 31, 2026

தானிய தோசை.

தேவையான பொருட்கள்:ராகி, கம்பு, கோதுமை,வரகு, கறுப்பு உளுந்து - தலா 100 கிராம் கொள்ளு, கருப்பு கொண்டைக்கடலை - தலா 50 கிராம் வெந்தயம் -1 teaspoonஉப்பு, எண்ணெய், தண்ணீர்-  தேவையான அளவு.செய்முறை:கருப்பு கொண்டைக்கடலை, ராகி, கம்பு, கோதுமை, வரகு, கொள்ளு, உளுந்து, வெந்தயத்தை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். பின் தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். உப்பு சேர்த்து மூன்று மணி நேரம் புளிக்க விடவும். தோசைக்கல் சூடானதும் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி தோசையாக்கவும்., 'தானிய தோசை!' தயார். சட்னியுடன் சாப்பிடலாம்.காலை உணவுக்கு ஏற்றது.

Jan 31, 2026

அவல் தோசை.

தேவையான பொருட்கள்:அரிசி - இரண்டரை கப்,உளுந்தம் பருப்பு -1 கப்,அவல் - கால் கப்,சீரகம் - 2 தேக்கரண்டி,உப்பு, எண்ணெய் தேவையான அளவு.செய்முறை:அரிசி, உளுந்தம் பருப்பை ஐந்து மணி நேரமும், அவலை45 நிமிடமும், தனித்தனியாக ஊற வைக்கவும். இரவே அனைத்தையும், தோசை ஊற்றும் பதத்திற்கு மாவாக அரைத்து, எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.பிறகு, மாவில் உப்பு சேர்த்து, தோசை ஊற்றி, கார சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகள்  விரும்பி உண்பர்.

Jan 31, 2026

முளைகட்டிய பயறு அடை

தேவையான பொருட்கள்- அடை மாவு செய்ய 2 கப் முளைகட்டிய பயறு வகைகள் ,1 கப் இட்லி அரிசி,1கப்பச்சரிசி,3/4 கப் உளுந்து,சிறிதுகறிவேப்பிலை,4 வரமிளகாய்,10 பல் பூண்டு,2 ஸ்பூன் சீரகம்,1 ஸ்பூன் சோம்பு,2 துண்டு இஞ்சி,1 மூடி தேங்காய் துருவல்,தேவையான அளவுகல் உப்பு.அடை வார்க்க:4 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கவும். 2 பச்சை மிளகாய்,சிறிது கொத்தமல்லி தழை,2 கேரட் துருவியது, சிறிது எண்ணெய்.செய்முறை  - பச்சை பயறு,வெள்ளை தட்டபயறு,சிகப்பு தட்டப்பயறு, கொள்ளு,கருப்பு சுண்டல், மொச்சை பருப்பு, சிவப்பு ராஜ்மா ஆகியவற்றை ஒரே அளவாக எடுத்து எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் .பின் கழுவி தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் கட்டி வெயில் படுமாறு வைக்கவும். 12 மணி நேரம் கழித்து பார்த்தால் முளைத்து இருக்கும். இதை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளவும். அரிசி உளுந்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் .பின் கழுவி கூட முளைகட்டிய பயறு வகைகள் சேர்த்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அடை மாவு பாதி அரைப் பட்டதும் ,சோம்பு, சீரகம் ,வரமிளகாய், கறிவேப்பிலை ,பூண்டு ,இஞ்சி சேர்த்து(தேங்காய் தவிர) அரைக்கவும். பின் ஓரளவிற்கு நைசானதும் தேங்காய் துருவல் சேர்த்து கல் உப்பு சேர்த்து ஒரு முறை அரைத்து எடுக்கவும் .பின் வெங்காயம் பச்சை மிளகாயை துருவிய கேரட் ஐ சிறிது எண்ணெய் விட்டு வதக்கி இதனுடன் சேர்த்து கொள்ளவும்.இந்த மாவை அரை மணி நேரம் வரை ஊறவிடவும். பின் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றவும் .மிகவும் லேசாக தேய்க்க கூடாது. மெல்லிய தீயில் வைத்து இரண்டு புறமும் எண்ணெய் விட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான முளைகட்டிய பயறு அடை ரெடி.

1 2 ... 13 14 15 16 17 18 19 ... 70 71

AD's



More News