25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சமையல்

Aug 30, 2025

பலாப்பழ பாயாசம்.

 தேவையான பொருட்கள்-ஜவ்வரிசி 1கப், நல்ல பலாப்பழம்- 5 சுளைகள்,வெல்ல பாகு அரை கப், ஏலக்காய்தூள் அரைஸ்பூன் ,தேங்காய்- அரைமூடி,முந்திரிபருப்பு- 8,கிஸ்மிஸ்பழம் 15,நெய்-6 ஸ்பூன் செய்முறை -முதலில் தேவையானவற்றை ரெடி பண்ணிக் கொள்ளவும்..பலா சுளைகளைக் கட்பண்ணிக் கொள்ளுங்கள்.வெல்லப்பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளுங்கள்..ஜவ்வரிசியை குக்கரில் தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளுங்கள். தேங்காய்பால் மூன்றுபால் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். முதல் பாலைவிடவும்.பலா பழத்தைச்சேர்க்கவும்.பின் இரண்டாம்பால் சேர்க்கவும்.வெல்லப்பாகு சேர்த்து மூன்றாம்பால் சேர்க்கவும்.தேங்காய் சிறிதளவு கட் பண்ணிக்கொள்ளவும்.வாணலியில்2ஸ்பூன்நெய்விட்டு, முந்திரி,திராட்சை, கட் பண்ணிய தேங்காய் சேர்த்து வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.மீதி நெய்யை பாயாசத்தில் சேர்க்கவும்.சுவையான மணமான பலாப்பழப் பாயாசம் ரெடி.

Aug 30, 2025

கேரட் பாயாசம்.

தேவையான பொருட்கள் -கேரட்  5,நெய் தேவையான அளவு,முந்திரி தேவையான அளவு, உலர் திராட்சை தேவையான அளவு,தேங்காய் சிறிது அளவு, வெல்லம் தேவையான அளவு,பால்_1கப்,ஏலக்காய் தூள் சிறிதளவுசெய்முறை -கேரட்டை துருவி நெய்யில் வதக்கி ஆறவைத்து,அரைத்துக் கொள்ளவும்.முந்திரி உலர் திராட்சை நறுக்கிய தேங்காய் ஓரு கை ஆகியவற்றை நெய்யில் வறுத்து கொள்ளவும்.அதனுடன் ஒரு டம்லர் தண்ணீர் ,வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். தேவைபட்டால் தண்ணீர் மீண்டும் ஒரு டம்ளர் சேர்க்கவும்.நன்கு கொதித்தவுடன் கேரட் அரைத்த கலவையை சேர்க்கவும். அதனுடன்1 கப் பால் சேர்க்கவும்.சேர்த்து கொதித்தவுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும். இப்போது நெய் சேர்த்து கிளறவும்.  சுவையான கேரட் பாயாசம் ரெடி.

Aug 30, 2025

டிரை ஃப்ரூட் பாயாசம்.

தேவையான பொருட்கள்-1/4 லிட்டர் பசும்பால்,2 துண்டு பட்டை,2 ஏலக்காய்,2 கிராம்பு,20 மி.லி நெய் ,100 கிராம் சர்க்கரை,3 டேபிள்ஸ்பூன் மில்க்மெய்டு, தேங்காய் பால் அரைப்பதற்கு - 100 கிராம் கொப்பரை தேங்காய்,2 டீஸ்பூன் கசகசா,முந்திரி பேஸ்ட் செய்வதற்கு -20 கிராம் பாதாம்,20 கிராம் முந்திரி ,1 அக்ரூட் செய்முறை ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து ,அதில் பாதாம் மற்றும் கொப்பரை தேங்காய் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.இப்போது ஒரு மிக்ஸியில் கொப்பரை தேங்காய் மற்றும் கசகசாவை சேர்த்து அரைத்து, அதை பால் எடுத்துக் கொள்ளவும் .மூன்று முறை அரைத்து பால் எடுத்து வடிகட்டி கொள்ளவும்.இப்போது மிக்ஸியில் பாதாம் ,முந்திரி, ஒரு அக்ரூட், சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது சூடான பிறகு ,அதில் நெய் சேர்த்து அதனுடன்  பட்டை, கிராம்பு ,ஏலக்காய் ,சேர்த்து அதனுடன் காய்ச்சிய பசும்பாலை சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.கொதித்த பசும்பாலுடன் அரைத்து வைத்து தேங்காய் பால் மற்றும் பாதாம் முந்திரி பேஸ்ட்டையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.சர்க்கரை மற்றும் மில்க் மேடு சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வைக்கவும்.இப்போது பாயாசம் ரெடி.

Aug 30, 2025

வரகு பாயாசம்.

தேவையான பொருட்கள் -1 கப் வரகரிசி, 2 கப்பால், தேவைக்குதண்ணீர், அரைகப்சர்க்கரை, தேவைக்குமுந்திரி, திராட்சை, பாதாம் ஏலக்காய், 2ஸ்பூன்நெய்செய்முறை - வரகு அரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.பின் குக்கரில் தேவையான தண்ணீர்ஊற்றி  நன்றாகவேக வைக்கவும்.வேகவைத்த வரகரிசியை வேறுபாத்திரத்தில்மாற்றிபின், சர்க்கரை2ஸ்பூன் கேரமல்பண்ணிசேர்க்கவும்.பின்தேவையானபால் மீதி சர்க்கரையைச்சேர்க்கவும்.நெய்1ஸ்பூன்சேர்க்கவும்.பின் ஏலக்காய் பொடிசேர்க்கவும்.நெய்யில்முந்திரி, திராட்சை,வறுத்துசேர்க்கவும்.பாதாம் முந்திரி,திராட்சைவைத்து அலங்கரிக்கவும்.வரகு பாயாசம்ரெடி.கேரமல்சேர்ப்பதால்வித்தியாசமான ருசியைக்கொடுக்கும்.சுவையான வரகு பாயாசம் சுவைத்து மகிழுங்கள்.

Aug 30, 2025

கஸ்டர்டு சேமியா பாயாசம் .

 தேவையான பொருட்கள்-500மிலி பால், 2 டேபிள்ஸ்பூன்கஸ்டர்டு பவுடர்,1/2 கப்சர்க்கரை, 1/4 கப்சேமியா, 1/2 டீ ஸ்பூன் நெய், பாதாம், முந்திரி – சிறிதளவுசெய்முறை-ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, அது சூடானதும் சேமியாவை சேர்த்து நன்கு கிளறவும் சேமியா பொன்னிறம் ஆனதும் தனியாக எடுத்து வைக்கவும்.ஒரு பவுலில் கஸ்டர்ட் பவுடர் பால் சிறிதளவு சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதித்து வந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். பிறகு வறுத்த சேமியாவை பாலில் சேர்த்து கலந்து விடவும்.சேமியா வெந்ததும் கஸ்டர்ட் மிக்ஸை சேர்த்து கைவிடாமல் கிளறி விடவும். லேசாக கெட்டியாக வரும் போது இறக்கவும். கடைசியாக அதன் மேல் பாதாம் முந்திரி துண்டுகளுடன் அலங்கரித்து பரிமாறவும்.

Aug 30, 2025

பஞ்சாபி பாஸ்தா பாயசம்.

தேவையான பொருட்கள்:-பாஸ்தா - 1 கப்பால் - 3 கப் சர்க்கரை -100 கிராம்நெய், தேங்காய் - சிறிதளவுஏலக்காய் பொடி, முந்திரி, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:-பாஸ்தாவை தண்ணீரில் வேகவைக்கவும், பாலில் சர்க்கரை கலந்து பாத்திரத்தில் கொதிக்க விடவும். நன்றாக அரைத்த தேங்காய், முந்திரி பருப்பு விழுதை அதில் சேர்க்கவும். பின், வேக வைத்த பாஸ்தாவை போட்டு கொதிக்க விடவும். ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி கலந்து இறக்கவும்.சுவை மிக்க, 'பஞ்சாபி பாஸ்தா பாயசம்!' தயார், 

Aug 23, 2025

கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை .

 தேவையான பொருட்கள் - 2 கப் கோதுமை ரவை, 1/4 கப் கடலை பருப்பு,1/2 கப் தேங்காய் துருவல்2-பச்சை மிளகாய் 4-வரமிளகாய்,1 துண்டு பொடியாக  நறுக்கின இஞ்சி, 1ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,2 ஸ்பூன் எண்ணெய், 1ஸ்பூன் நெய், கருவேப்பிலை,உப்புசெய்முறை - ஸ்டவ்வில் வெறும் வாணலி வைத்து மிதமான சூட்டில் கோதுமை ரவையை வாசம் வரும்வரை வறுக்கவும். கடலை பருப்பை முழுகும். அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடத்துக்கு பிறகு தண்ணி வடிகட்டி வரமிளகாய் சேர்த்து வடைக்கு அரைப்பதுபோல் அரைக்கவும்.ஸ்டவ்வில் கடாய் வைத்து 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி ,கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம். வறுக்கவும்.அத்துடன் பொடியாக நறுக்கின இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி பிறகு 3-4 கப் தண்ணி ஊற்றி உப்பு சேர்க்கவும்.அத்துடன் அரைத்து வைத்திருக்கும் கடலை பருப்பு, மற்றும் தேங்காய் துருவல், நெய் சேர்த்து ,நன்கு கொதிக்க விட்டு வறுத்த கோதுமை ரவை சேர்த்து மிதமான சூட்டில் மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும்.நன்கு வெந்ததும் ஆறவிட்டு சின்ன கொழுக்கட்டைகளாக செய்து இட்லி தட்டில் எடுத்து வைத்து 7 நிமிடம் ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.வித்தியாசமான சுவையுடன் கூடிய கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை தயார்... தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடவும்.கோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை மிகவும் வித்தியாசமான ருசியில் சுவையாக இருந்தது.

Aug 23, 2025

குதிரை வாலி பிடி கொழுக்கட்டை.

தேவையான பொருட்கள் - குதிரைவாலி அரிசி 1 கப்,கேரட் துருவல் 2 டீஸ்பூன்,பச்சை மிளகாய் 2எண்ணெய், கடுகு, பெருங்காயம் சிறிதளவு,தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை தேவையான அளவு.செய்முறை - வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். பின் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதில் குதிரைவாலி அரிசி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்தபின் ஆறவிட்டு சிறு உருண்டைகளாக பிடித்து, ஆவியில் வேக வைக்கவும்.சத்துள்ள,'குதிரை வாலி பிடி கொழுக்கட்டை!' தயார். புதினா சட்னி, சாம்பாருடன் தொட்டு சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.

Aug 23, 2025

.சாமை பிடி கொழுக்கட்டை .

தேவையான பொருட்கள் - இரண்டு கப் சாமை அரிசி,அரை கப் தேங்காய் துருவல்,ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு,ஒரு டீஸ்பூன் கடுகு,ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு,அரை டீஸ்பூன் சீரகம்,ஒரு டேபிள்ஸ்பூன் கல் உப்பு,நான்கு பச்சை மிளகாய்,1பெரிய துண்டு இஞ்சி துருவியது,நான்கு கப் தண்ணீர்,இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்செய்முறை - முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சாமை அரிசியை நன்கு அலசி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.இப்பொழுது ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கடலை பருப்பு சேர்த்து சீரகமும் சேர்த்து வறுத்து இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து கடைசியாக தேங்காய் துருவலும் சேர்த்து வதக்கவும்.நான்கு கப் தண்ணீர் சேர்த்து, உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்த உடன் ,ஊறவைத்த சாமை அரிசியை சேர்த்து 10 நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து மூடி விடவும்.அது நன்கு வெந்து இருக்கும்.இப்பொழுது இட்லி பானையில் வேகவைக்கும் தட்டில் ,பிடி கொழுக்கட்டை உருண்டைகளாக பிடித்து 10 நிமிடம் வேக வைக்கவும்.சுவையான சாமை அரிசி பிடி கொழுக்கட்டை தயார்.இதற்கு தேங்காய் சட்னி அல்லது கார சட்னி ஏதுவாக இருக்கும். 

Aug 23, 2025

சிகப்பு அவல் கார கொழுக்கட்டை.

தேவையானவை -  ஒரு கப் சிகப்பு அவல்,உப்பு தேவையான அளவு,எண்ணை தேவையான அளவு,1 பெரிய வெங்காயம்,2 பச்சைமிளகாய்,ஒரு டீஸ்பூன்கடுகு,அரை டீஸ்பூன்சீரகம்,ஒரு டீஸ்பூன்கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன்உளுத்தம்பருப்பு,இஞ்சி சிறிய துண்டு,கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சிறிதளவு,அரை மூடிதுருவிய தேங்காய்செய்முறைசிகப்பு அவல் கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான உணவு.சிகப்பு அவலை சுத்தம் செய்து கழுவிய பின் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ,இஞ்சி, இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், கருவேப்பிலை ,வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ,இவற்றை தாளித்து கொள்ளவும். இதனுடன் துருவிய தேங்காய் சற்று வதக்கி கொள்ளவும்.அவலை நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும் .தாளிப்பை மற்றும் உப்பு சேர்த்து, வடித்த அவலுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.தாளித்துச் சேர்த்த அவலை கொழுக்கட்டையாக பிடித்து ,இட்லி பானையில் வைத்து10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.10 நிமிடத்திற்கு பிறகு சிவப்பு அவல் கார கொழுக்கட்டை எடுத்துப் பரிமாறவும்.

1 2 ... 23 24 25 26 27 28 29 ... 66 67

AD's



More News