தேவையான பொருட்கள்:துாதுவளை -1 கப்,கறிவேப்பிலை -கால் கப்,துருவிய தேங்காய் - கால் கப்,சின்ன வெங்காயம் – 15,உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு -தலா 1 மேஜைக்கரண்டி, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு -தேவையான அளவு ,உப்பு, புளி, எண்ணெய், தண்ணீர் - சிறிதளவு.செய்முறை:பாத்திரத்தில் எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், துண்டாக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், துாதுவளை, கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும். கலவை ஆறிய பின் புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.சுவைமிக்க,'துாதுவளை கறிவேப்பிலை துவையல்!' தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சளி, இருமலை விரட்டி ஆரோக்கியம் தரும்.
தேவையான பொருட்கள் :-தேங்காய்பல் அரை கப், வத்தல்4, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, புளி சிறிதளவு ,வறுத்த அப்பளம் அல்லது வடகம் 1 கப்(நொறுக்கியது), எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்.செய்முறை - ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தேங்காய் பல்லை நன்றாக வறுத்து பின் வத்தல், கருவேப்பிலை ,பெருங்காயம், புளி சேர்த்து வதக்கி, பின் உப்பு சிறிதளவு சேர்க்கவும். ஆறிய பின் மிக்ஸியில் நைஸாக அரைத்து, நொறுக்கிய அப்பளம் சேர்த்து துவையல் பதத்திற்கு அரைத்து எடுக்கவும். அப்பளம் துவையல் ரெடி.
தேவையான பொருட்கள் :- சுண்டைக்காய்1 சிறிய கப்(200 கிராம்), வத்தல்5, நெய் அல்லது கடலை எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், பல்லாரி அரை கப் பொடியாக நறுக்கியது. கருவேப்பிலை சிறிதளவு, புளி தேவையான அளவு, பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவைக்கேற்ப.செய்முறை :- சுண்டைக்காயை கல்லில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும். மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு இடித்த சுண்டைக்காயை வறுக்கவும்.17 நிமிடங்கள் மீடியம் பிளேமில் வைத்து வதக்கி தனியாக வைக்கவும், கடலை பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, வத்தல், சீரகம் அரை டீஸ்பூன் போட்டு, பொடியாக நறுக்கிய பல்லாரி ,கருவேப்பிலை, பெருங்காயம், புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் சுண்டைக்காய் சேர்த்து நைஸாக அரைக்கவும். ருசியான சுண்டைக்காய் துவையல், சாதம், இட்லி, தோசைக்கு, சைட்டிஷ்.
தேவையான பொருட்கள் -முள்ளங்கி1 மீடியம் சைஸ், வத்தல்3, கருவேப்பிலை சிறிதளவு, சின்னவெங்காயம்10, பெருங்காயப் பொடி சிறிதளவு, பூண்டு 5 பல், தேங்காய் துருவல் சிறிதளவு, புளி தேவையான அளவு, கடலை பருப்பு2 டீஸ்பூன், உளுந்து1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.செய்முறை -முதலில் வாணலியில்1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடலைபருப்பு, உளுந்து சிவக்க வறுத்து, பின் வத்தல், கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, பெருங்காயம், புளி தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும். பின் முள்ளங்கியை தோல் சீவி பொடியாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு 5 முதல் 6 நிமிடங்கள் வதக்கி, பின் சிறிதளவு தண்ணீர் விட்டு முள்ளங்கியை வேகவிட்டு வெந்தவுடன் ஆறவைத்து அரைத்த விழுதுடன் சேர்த்து நைஸாக அரைக்கவும், முள்ளங்கி துவையல் ரெடி.
தேவையான பொருட்கள் -200 கிராம் பாசிப்பருப்பு,5டேபிள்ஸ்பூன் நெய்,10 முந்திரிப் பருப்பு,1/2 மூடி துருவிய தேங்காய்,100 கிராம் சக்கரை,தேவையான அளவு உப்பு,தேவையான அளவுதண்ணீர். செய்முறை -முதலில் 200 கிராம் பாசிப்பருப்பை நாம் மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும்.மூன்று மணி நேரம் கழித்து தண்ணீர் முழுவதையும் நன்றாக வடித்து விட்டு வெறும் பருப்பை மட்டும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு நாம் இட்லி ஊற்றுவது போல் இட்லி சட்டியில் அரைத்த பாசிப்பருப்பு மாவை இட்லி போல் ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.இட்லி வெந்ததும் அதனை தனியாக எடுத்து ஒரு ப்ளேட்டில் வைத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும் இட்லி ஆறியதும் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி பல்ஸ் மோடில் வைத்து இட்லி துண்டுகளை தூளாக உதிர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கடாயில் 5 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து அதனுடன் 10 முந்திரி பருப்புகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதனுடன் அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து தேங்காய் நெய்யில் நன்றாக வதங்கும் வரை வதக்க வேண்டும்.பிறகு நாம் உதிர்த்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு இட்லி துருவலை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி, பிறகு அதனுடன் 100 கிராம் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.இனிப்பை இன்னும் தூக்கி கொடுப்பதற்காக ஒரு பின்ச் அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு, ஒரு5 நிமிடம் வரை சிம்மில் அடுப்பை வைத்து கிளறி விட வேண்டும். மிகவும் ருசியான ஆரோக்கியமான சத்துக்கள் மிகவும் அதிகமாக இருக்கும் பாசிப்பருப்பு புட்டு தயார் வாங்க சாப்பிடலாம்.பொதுவாகவே பருப்பு வகைகளில் சத்துக்கள் மிகவும் அதிகமாக இருக்கும்... புரோட்டீன் சத்துக்கள் அதிகம் நிறைந்த பாசிப்பருப்பில் நாம் மிகவும் சுவையான இனிப்பு புட்டு செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்-1 கப் தினை புட்டு மாவு,1/4 கப் துருவிய தேங்காய்,2 சிட்டிகை உப்பு,வெண்ணெய் - சிறிதளவு , தேவையான அளவு வெந்நீர்செய்முறை -தினை புட்டு மாவில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.இதில் வெண்ணெய் சேர்த்து ஈரப்பதம் பருவம் வரை பிசைந்து கொள்ளவும். இந்த மாவை மூடி போட்டு 5 நிமிடம் வைக்கவும்.புட்டுக் குழாயில் துருவிய தேங்காய் கொஞ்சம் போட்டு, அதற்கு மேல் புட்டு மாவை சேர்க்கவும்அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவியது, இவ்வாறு மாற்றி குழாய் நிரம்பும் வரை சேர்க்கவும். இதனை மூடி போட்டு சூடான புட்டுக் குழாயில் வைத்து நன்கு ஆவி வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.இது ஆரோக்கியமான திணை புட்டுடன் நெய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்-½கப் வரகு அரிசி,அரை கப் பயத்தம் பருப்பு,1கப் பொடித்த வெல்லம்,1தேக்கரண்டி ஏலக்காய் பொடி,4 தேக்கரண்டி அதி மதுரம் பொடி,½ தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி.½தேக்கரண்டி குங்குமப்பூ,1கப் டெசிகெடெட் ஸ்வீடன்ட் தேங்காய் துருவல்,. ¼கப் உருகிய வெண்ணை, 20 முந்திரி ,1/4கப் உலர்ந்த திராட்சை,சிட்டிகை உப்புசெய்முறை -குங்குமப்பூவை ஒரு சின்ன கிண்ணத்தில் மேஜைகரண்டி சூடான நீரில் கரைக்கவும்.மிதமான நெருப்பில் ஒரு சாஸ்பெனில் 1 மேஜை கரண்டி உருகிய வெண்ணையில் முந்திரி திராட்சை வறுக்கவும். திராட்சை உப்பும், முந்திரி பொன் சிவக்கும். வறுத்ததை தனியே எடுத்து வைக்கவும்.மிதமான நெருப்பில் ஒரு சாஸ்பெனில் தேங்காய் துருவலை பொன்னிறமாக வதக்கவும்.மிதமான நெருப்பில் ஒரு சாஸ்பெனில் வரகு, ப பருப்பு வாசனை வரும் வரை வறுக்கவும். பின் ஒரு கிண்ணத்தில்3 கப் கொதிக்கும் பாலில் 30 நிமிடங்கள் ஊற வைக்க பின் பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.மிதமான நெருப்பில் வாணலியில்½ கப் நீருடன் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். உப்பு சேர்க்க. கிளறிக்கொண்டே இருக்க, கெட்டி பாகு பதம் வேண்டும். ½ தேக்கரண்டி சிரப் நீரில் போட்டு டெஸ்ட் செய்கவும். சுருண்டு வந்தால் பாகு தயார். நெருப்பை சிம்மர் ஆக்கவும்.வேகவைத்த வரகு, பயத்தம் பருப்பு கலவையை உதிர்த்து சிறிது சிறிதாக பாகில் சேர்த்து கிளற.. புட்டு மணல் மணலாக இருக்கும். குங்குமப்பூ, வறுத்த தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறவும். ஜாதிக்காய், அதிமதுரம் துருவி கிளறவும்.மீதி வெண்ணை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். வரகரிசி புட்டு தயார்.
தேவையான பொருட்கள்-1 கப் கிழங்கு புட்டு மாவு,1/4 கப் தேங்காய்,3/4 கப் சர்க்கரை பாகு,தேவைக்குஉப்புசெய்முறை -மரவள்ளி கிழங்கை நன்கு காயவைத்து இடித்து பொடி செய்துகொள்ளவேண்டும்.அதில் உப்பு, சர்க்கரை பாகு கலந்து, புட்டு மாவு பாதத்திற்கு கொண்டு வரவேண்டும்.ஒரு சிரட்டை எடுத்து அதில் ஓட்டை போட்டு சில் வைக்க வேண்டும் பின்னர் தேங்காய் மாவு தேங்காய் போட்டு நிரப்பி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்சுவையான சத்தான மரவள்ளி கிழங்கு புட்டு தயார்.
தேவையான பொருட்கள்-1 கப் கவுணி அரிசி மாவு,3/4 கப்நாட்டு சக்கரை,1/2 கப் தேங்காய். ,2 டேபிள்ஸ்பூன் நெய்,. 8-10 முந்திரி, 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்,ஒரு சிட்டிகை உப்பு.செய்முறை -(கருப்பு கவுணி அரிசியை2 மணி நேரம் தண்ணீரில் ஊற விட்டு ஈரம் போக காய வைத்து ஸ்டவ்வில் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்து ஆற விட்டு பொடித்த மாவு) ஒரு பவுலில் அரிசி மாவு சேர்த்து உப்பு மற்றும் வெந்நீர் விட்டு தெளித்து நன்கு பிசைந்துக்கவும். கையில் பிடித்தால் பிடிக்க வரணும், விடும்போது உதிர்ந்துந்துடனும் இதுதான் பக்குவம்.ஸ்டவ்வில் கரண்டி வைத்து நெய் ஊற்றி முந்திரி, தேங்காய் சேர்த்து வறுத்து எடுத்துக்கவும்.ஸ்டவ்வில் இட்லி பாத்திரம் வைத்து சூடானதும், இடியாப்ப தட்டில் பிசைநது வைத்திருக்கும் மாவை எடுத்து வைத்து,15 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைத்து ஆவியில் வேக விடவும்.அதன் பிறகு சூடு மாவை எடுத்து வேறொரு பாத்திரத்தில் போட்டு சூடு ஆறினதும், அத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கலந்துக்கவும்.அத்துடன் நாட்டுச்சக்கரை சேர்த்து நன்கு கலந்து, நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்.கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விட்டால் அருமையான ருசியில் ஆரோக்கியமான கருப்பு கவுணி அரிசி வெல்ல புட்டு தயார்.சிறு தானியங்களில் மிக மிக மருத்துவ குணம் நிறைந்த கருப்பு கவுணி.இதில் நிறைய புரதம், பைபர் மற்றும் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது.கான்சர் நோய் வராமலும் தடுக்கிறது.
தேவையான பொருட்கள்:-உளுந்தம் பருப்பு - 1 கப் ,பொடித்த வெல்லம்- 1 கப்,தேங்காய் துருவல் - 1 கப்,உப்பு, தண்ணீர் -தேவையான அளவு.செய்முறை:-உளுந்தை வறுத்து பொடியாக்கவும், இதில் உப்பு போட்டு, தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்தில் பிசையவும். பின், ஆவியில் வேகவைத்து வெல்லம், தேங்காய் சேர்க்கவும்சத்துகள் நிறைந்த, 'உளுந்து புட்டு' தயார், அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.