25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஆரோக்கியம்

May 22, 2024

பலாப்பழ கொட்டைகள்

பலாப்பழங்களை போலவே பலாக்கொட்டைகளிலும் நிறையமருத்துவ நன்மைகள்ஒளிந்து கொண்டிருக்கின்றன. பலாக்கொட்டை. பழங்களை நாம்விரும்பி சாப்பிடும்அளவுக்கு, அந்தபழங்களின் விதைகளைநாம் சாப்பிடுவதில்லை.துத்தநாகம், வைட்டமின்கள், நார்ச்சத்துஎன ஏகப்பட்டவிஷயங்கள் இந்தபலாக்கொட்டையில் உள்ளன.. இதனால் உங்கள்திசுக்களுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்புசக்தியையும் வழங்குகிறது.முக்கியமாக நிறையபுரோட்டீன் உள்ளது..தசைகளை வலுவாக்கஇந்த கொட்டைகளிலுள்ளபுரதங்கள் உதவுகின்றன.100 கிராம் பலாக் கொட்டைகளில், ஒரு கிராமுக்கு குறைவாகவே கொழுப்புச்சத்துக்களும், 38 கிராம் கார்போவும் இடம்பெற்றுள்ளன... இந்த பலாக் கொட்டைகளை நன்றாக காயவைத்து, பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். செரிமான கோளாறு ஏற்படும்போதெல்லாம் இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.ஆக்ஸிஜனேற்ற பண்புகள் பலாக்கொட்டைகளிலுள்ளதால், வயதான தோற்றம், சரும சுருக்கங்களுக்கு எதிராக போரிட செய்கிறது.இரும்பு சத்து நிறைந்துள்ளதால், பெண்களை அனீமியா அண்டுவதில்லை.. நார்ச்சத்து நிறைந்துள்ள பலாப்பழ கொட்டைகள், மலச்சிக்கலை தீர்க்கின்றன.. வைட்டமின் A இந்த பலாப்பழ கொட்டைகளில் நிறைந்திருப்பதால், கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது.கண்புரை, மாகுலர் சிதைவு போன்ற கண்தொந்தரவுகளிலிருந்தும்தடுக்கிறது.மாலைக்கண்நோய்களும்தடுக்கப்படுகின்றன.பலாக்கொட்டையில் குழம்பு, கூட்டு, பொரியல்என எதுவேண்டுமானாலும் செய்யலாம்.ஆவியில் அவித்தும்சாப்பிடலாம்.நெருப்பில்சுட்டும் சாப்பிடலாம்.கேரளாவில் இந்தகொட்டைகளை நன்றாகஅரைத்து மாவாக்கி,அல்வா, லட்டு,புட்டு இப்படியெல்லாம்செய்வார்களாம். ஆனால்,பலாக்கொட்டைகளை சமைக்கும்போது, தேங்காய், சர்க்கரை, நெய்போன்றவற்றை அளவுடன்பயன்படுத்த வேண்டும்.

May 21, 2024

உடல் எடையை குறைக்க உதவும் மக்கானா கீர்

பாலில் செய்யப்படும் இனிப்பு வகைகளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நம்மில் பலரும் இது போன்ற இனிப்பு வகைகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடுமோ என்று பயப்படுவார்கள்.  வீட்டில் சமைத்து சாப்பிடும் இனிப்பு வகைகளில் ஆரோக்கியம் அதிகம் நிறைந்துள்ளது. இந்த வரிசையில் உடல் எடையை குறைக்க உதவும் தாமரை விதைகள் என்று கூறப்படும் மக்கானாவை வைத்து சுவையான ஆரோக்கியம் நிறைந்த மக்கானா கீர் செய்வது எப்படி ?தேவையான பொருட்கள்:2 கப் மக்கானா, 1 லிட்டர் காய்ச்சிய பால்,1/4 கப் சர்க்கரை,  1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பாதாம், டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய முந்திரி,1 டேபிள் ஸ்பூன் திராட்சை, ½ டீஸ்பூன் ஏலக்காய் தூள்,  2 டேபிள் ஸ்பூன் நெய். செய்வது எப்படி?முதலில் அடுப்பில் ஒரு சிறிய கடாய் வைத்து ,ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கி கொள்ள வேண்டும். நெய் சூடானதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும். முந்திரி மற்றும் பாதாம் சிறிது பொன்னிறமானதும் இதில் 1 டேபிள் ஸ்பூன் திராட்சையை சேர்த்து கிளறி விட வேண்டும். இதற்க்கு பிறகு கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில்2 கப் மக்கானாவை குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது நாம் வறுத்து வைத்துள்ள மக்கானா ஒன்றரை கப் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.இப்போது ஒரு கடாய் வைத்து மீதமுள்ள மக்கானாவை பால் ஊற்றி குறைந்தது ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு இதில் அரைத்து வைத்துள்ள மக்கானாவை சேர்த்து நன்கு கிளறி விடவும். இதற்கு பிறகு சீரான பதத்திற்கு வந்தவுடன் நாம் நெய்யில் வறுத்து வைத்த முந்திரி திராட்சை மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும். இதற்கு பிறகு தேவையான அளவு சர்க்கரை மற்றும் பச்சை ஏலக்காய் சேர்த்து சுமார் மூன்று நிமிடங்கள் சமைத்து அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான மக்கானா கீர் தயார்.

May 20, 2024

சமையலுக்கு சிறந்த எண்ணெய் எது..?

இந்திய சமையல் அறைகளில் எண்ணெய் இன்றியமையாத ஒன்று. பெரும்பாலான இந்திய உணவு பொருட்களுக்கு எண்ணெய் தான் மூலப்பொருள். இவ்வாறு ஏராளமான மக்கள் பயன்படுத்தும் எண்ணெய்களில் எந்த எண்ணெய் சிறந்தது என பலருக்கும் குழப்பமாக இருக்கிறது.இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், எண்ணெய்களில் சிறந்தது ஆலிவ் எண்ணெய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள்நிறைந்துள்ளன.இது கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், வகை2 நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது. இதுமட்டுமன்றி இது மூளைக்கும் நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. ஆலிவ் எண்ணெயில் லுடீன் நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது.ஆலிவ் எண்ணெயில் ஆல்பாலினோலெனிக் அமிலம் உள்ளது. அது இதயத்திற்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. வீக்கம், வாதம் ஆகிவற்றை சரிசெய்யவும் இது உதவுமாம்.இது தவிர எள் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும் நல்லது என கூறப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, எள் எண்ணெயில் ஆக்ஸிஜினேற்ற மற்றும் அழர்ச்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன என கூறப்படுகிறது.

May 19, 2024

மணத்தக்காளிக் கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவை

மணத்தக்காளிக் கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படக்கூடியது. கசப்புத்தன்மை கொண்டது  மணத்தக்காளிக் கீரை.சருமத்தில் ஏற்படும் பிரச்னைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த கீரைகளுள் கீரையும் ஒன்று. குளிர்ச்சியை சுபாவமாகக்கொண்ட மணத்தக்காளிக் கீரை வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியதுமணத்தக்காளிக் கீரையின் காய், பச்சை மணியைப் போல  இருக்கின்ற படியால் மணித்தக்காளி என்று அழைப்பார்கள். ஆகமிளகுபோல இருப்பதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார்கள். வறண்ட இடத்திலும் விளையும் மணத்தக்காளிக் கீரை, நீருள்ள இடங்களிலும் ஏராளமாய் செழித்து வளரும். வெள்ளை நிறத்தில் மருபூக்கள் பூக்கும். . இது பொதுவாக குப்பைகள் இருக்கும் இடத்தில் வளர கூடியது.மணத்தக்காளிக் கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவையே. இதில் அதிகளவு புரதம், மாவுச்சத்து, தாதுப்உப்புக்கள் நிறைந்துள்ளன. மணத்தக்காளிக் கீரையைப் பருப்பு சேர்த்து கூட்டு, பொரியல், குழம்பு வைக்கலாம்.மணத்தக்காளிக் கீரையினை சாறெடுத்து வாயிலிட்டு சிறிது நேரம், தொண்டையில் வைத்து, கொப்புளித் துவந்தால் வாய்ப்புண் ஆறும். கூடவே வாய் துர்நாற்றமும் நீங்கும்.மணத்தக்காளிக் கீரையின் சாறை எடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் பருகிவந்தால் வயிற்றுப்புண் சீக்கிரம் ஆறிவிடும். குறைந்தது பத்து நாட்களாவது பருக வேண்டும்.இதய பல வீனம் கொண்டவர்கள் வாரம் மூன்று முறை இந்த மணத்தக்காளிக் கீரையுடன் இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு கலந்து சமையல் செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாகும்.உடல் வலி தீரும். களைப்பை அகற்றும். உடலிலுள்ளநச்சுநீரை வெளியேற்றும். வாந்தியைப் போக்கும். இக்காயை வற்றலாக்கி வறுத்து உண்ணலாம் .காது வலியைப் போக்கும். வயிற்றுப் பொருமலை தணிக்கும். காய்ச்சலைப்போக்கும்.கருப்பப்பைக்கு வலிமை தரும்.பிரசவத்தை எளிமையாக்க உதவுகிறது.மலச்சிக்கலைப் போக்கும்.மணத்தக்காளிக் கீரையின் வேர், மூலிகை மருந்துகள் தயாரிக்க பெரும் பங்காற்றுகிறது.பொதுவாய் மணத்தக்காளிக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டுப் வந்தால், உடல் நலம் பெறுகிறது. ரத்தம் சுத்தமாகி முகம் வசீகரமாகிறது. மணத்தக்காளிக் கீரை சிறந்த மருத்துவ உணவாக நமக்கு பயன்படுகிறது. எனவே மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி பயன்படுத்துங்கள்.

May 17, 2024

சர்க்கரை நோயை கட்டுக்குள்வைத்திருக்க உதவும், இயற்கையான உணவுகள்

கசப்பு நிறைந்தஇலைகள், சிலவகைநோய்களுக்கு அருமருந்தாகின்றன..குறிப்பாக, ரத்தத்தில்இன்சுலின் அளவைகட்டுப்படுத்தவும் இதுபோன்றகசப்பு இலைகள்உதவுகின்றன..உதாரணத்துக்குமுருங்கைக்கீரை, வேப்பிலை, கறிவேப்பிலை, அகத்திக்கீரையைசொல்லலாம். இதில், மாவிலையையும் சேர்த்துகொள்ளலாம். வெறும்வயிற்றில் நான்கைந்துஇலைகளை மென்றுவிழுங்குவது, ரத்தத்தில்சர்க்கரையின் அளவைசீராக வைத்திருக்கஉதவுகிறதாம்..அமிர்தவல்லிஇலையை . டீ போலதயாரித்து குடிக்கலாம்,அல்லது ஜூஸ்தயாரித்தும் குடிக்கலாம்அல்லது கறிவேப்பிலையைபோல, இந்தஇலையையும் கழுவி, மென்று சாப்பிடலாம்.ரத்தத்தில் உள்ளஇன்சுலின் அளவைகட்டுப்படுத்த இந்தஇலையும் உதவுகிறது. இந்த அமிர்தவல்லிஇலையை பவுடராக்கி, ஒரு கிளாஸ்தண்ணீரில், ஒருஸ்பூன் கலந்துஇரவு தூங்கும்முன்பு ஊறவைத்துவிடவேண்டும். மறுநாள்காலை எழுந்ததுமேகுடித்து வந்தால்நீரிழிவு நோய்கட்டுக்குள் இருக்கும். ஆனால், இதுபோன்றுஉள்ளுக்குள் மருந்தாகஎடுத்து கொள்ளும்போதுடாக்டர்களின் ஆலோசனையைபெறுவது கட்டாயமாகும்.நாவல் கொட்டைகளும்நீரிழிவு நோயாளிகளுக்குமிகச்சிறந்த மருந்தாகின்றன..நாவல் கொட்டையைதூள் செய்து, சாப்பிட்டு வருபவர்களைபரிசோதனை செய்ததில்அவர்களது சர்க்கரைஅளவும், சிறுநீரில்வெளியேறிய சர்க்கரைஅளவும் குறைந்திருந்ததாம். நாவல் பழத்தின்கொட்டைகளை,7 நாட்கள்நிழலில் காயவைத்து, அதை இரண்டாகஉடைத்து வெயிலில்காய விடவேண்டும்.. இந்தகொட்டைக்குள் காணப்படும்பச்சை நிறம்முழுமையாக காயவேண்டும். இந்தகொட்டைகளை மிக்ஸியில்அரைத்து, சலித்துகொள்ள வேண்டும். இதில், தினமும்2 வேளை, ஒருடீஸ்பூன் அளவுவெந்நீரில் கலந்துகுடித்து வந்தால், ஒரு மாதத்தில்சர்க்கரையின் அளவுகட்டுக்குள் வந்துவிடும். நாவல் கொட்டைபவுடரை, மருத்துவரின்முறையான ஆலோசனையைபெற்று சாப்பிட்டு, பயனடையலாம்.சர்க்கரையை கட்டுக்குள்வைத்திருக்க, கருஞ்சீரகவிதைகளும் உதவுகின்றன.. இதற்கு முக்கியகாரணம், இந்தவிதையிலுள்ள தைமோகுயினன்என்ற பொருள்தான்.. எனவே, ரத்தத்தில்சர்க்கரையின் அளவுஅதிகரித்துவிட்டால், எதிர்ப்புசக்தி நிறைந்தஇந்த கருஞ்சீரகத்தைபயன்படுத்தலாம்.. இந்தகருஞ்சீரகத்தை அரைத்து, ஒரு டம்ளர்தண்ணீரில், கால்டீஸ்பூன் அளவுகலந்து சாப்பிட்டுவந்தாலும், ரத்தசர்க்கரை அளவுகட்டுக்குள் வரும்.. ஆனால், சர்க்கரைஅளவு கட்டுக்குள்இருப்பவர்கள், கருஞ்சீரகத்தைதொடர்ந்து எடுத்துகொள்ள கூடாது. இதனால், ரத்தத்தில்சர்க்கரை அளவுகுறைந்துவிடும். எனவே, மருத்துவர்களின் ஆலோசனையைபெற்றே இதனைபயன்படுத்த வேண்டும்.

May 16, 2024

மூளைக்குள் கட்டி (Brain Tumor) நோய் வருவதைத் தடுக்க.....

உடலின் மற்ற பாகங்களில் வரும் நோய்களை விட மூளைக்குள் ஏதாவது பிரச்னை என்றால் அதைக் குணப்படுத்துவது ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. மூளைக்குள் கட்டி(BrainTumor) என்ற அபாயகரமான நோய் வருவதைத் தடுக்க நாம் உண்ண வேண்டிய உணவுகள் . ஒரு நோய் வந்த பின் அதைக் குணப்படுத்துவதை விட, அது வராமல் தடுப்பதே நலம் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கிய ஸ்ட்ரா பெரி, ப்ளூ பெரி, ராஸ் பெரி, பிளாக் பெரி போன்ற பெரி வகைப் பழங்கள்.லைக்கோபீன் என்றொரு கூட்டுப்பொருள் தக்காளியில் மிக அதிகம் உள்ளது. இது உடலில் கட்டிகளும் கேன்சரும் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.காலிஃபிளவர், புரோக்கோலி, பிரஸ்ஸல் ஸ்பிரௌட் போன்ற க்ரூஸிஃபெரஸ் காய்கறிகள் உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியம் காக்க மிக அதிக அளவில் உதவி புரிபவை.மூளை ஆரோக்கியத்தை அதிகளவு மேம்படுத்தவும், ஒட்டுமொத்த உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும் உதவக் கூடியது மஞ்சள் என்ற மசாலாப் பொருள்.பீன்ஸ் காயானது உடலில் கட்டிகளும் கேன்சரும் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளதோடு, ஏற்கெனவே கேன்சர் நோயாளியாயிருந்து குணமான ஒருவருக்கு மீண்டும் அந்நோய்த் தாக்குதல் வராமலிருக்கவும் பாதுகாப்பளிக்கிறது.பாதாம், வால் நட், பிஸ்தா போன்ற தாவர விதைக் கொட்டைகள் மூளையில் கேன்சர் கட்டிகள் உருவாகும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தக்கூடியவை. மேலும் மூளையில் உண்டாகும் வேறு எந்தவிதமான கோளாறுகளுக்கும் தீர்வு அளிக்கும் வல்லமையும் கொண்டவை . மூளை உள்பட, உடலின் எந்த பகுதியிலும் உற்பத்தியாகும் கேன்சர் செல்களை முற்றிலும் அழிக்கக்கூடிய சக்தி பூண்டில் உள்ள அல்லிசின் (Allicin) என்ற பொருளுக்கு உண்டு.மூளைக்குள் கேன்சர் செல் வளர்வதைத் தடுத்து நிறுத்தி அவற்றை அழிக்கக்கூடிய வல்லமை கொண்டது ஃபிளாக்ஸ் விதைகள் (Flax seeds).மூளைக்குள் கட்டி(BrainTumor) நோய் வருவதைத் தடுக்க உணவுகளைத் தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் உணவுடன் சேர்த்து உட்கொண்டு நம் மூளை மற்றும் உடலின் ஆரோக்கியம் காப்போம்.

May 10, 2024

கொடியில் படரும் வெற்றிலை பூப்பது, காய்ப்பது, கனிவது என்று எதுவும் இல்லாத வெறும் இலைதான்

வெறும் இலையிலேயே அவ்வளவு மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன..வெற்றிலையை ஆற்றுப்படுகையில் வியாபார ரீதியாக அதிகம் பயிரிடுகிறார்கள். கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர மணத்துடன் சிறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றிலை ஆகும். வெற்றிலைக்கு நல்ல மணமும் காரமும் உண்டு. இது கொடி பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. வெற்றிலை சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தை தூண்டும், நாடி நரம்பை வளமாக்கும், வாய்நாற்றம் போக்கும், வெற்றிலைச் சாறு சிறுநீரை பெருக்குவதற்குப் பயன்படுகிறது. வெற்றிலை சாற்றுடன் நீர் கலந்த பாலையும் தேவையான அளவு கலந்து பருகி வர சிறுநீர் நன்கு பிரியும்.கம்மாறு வெற்றிலை சாறு15 மில்லிஅளவு வெந்நீரில் கலந்து கொடுக்க வயிறுஉப்புசம், மந்தம், ஜன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம், வயிற்று வலி ஆகியவை குணமாகும்.வெற்றிலையில் சிறிதுஆமணக்கு எண்ணெய் தடவி லேசாகவாட்டி இரவில் தூங்கும்போது கட்டிகளின் மேல்வைத்து கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ்வெளிப்படும்.சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுகு சூரணத்துடன் வெற்றிலைச் சாறு, தேன்கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.வெற்றிலைச் சாறுநான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். வெற்றிலைகள் இரண்டைகிள்ளி தேங்காய் எண்ணெயில் போட்டுகாய்ச்சி இறக்கி ஆறிய பின்இரண்டு சொட்டு எண்ணெய் காதில்விட காதில் சீழ் வடிதல்குணமாகும்.வெற்றிலை சாற்றைமூக்கில் விட, விடாமல் மூக்கில் வழியும் சளி குணமாகும்.வெற்றிலையின் வேரைசிறிதளவு எடுத்து வாயிலிட்டு மென்றுவர குரல் வளம் உண்டாகும். எனவே, இசைக்கலைஞர்கள் இதனைஅதிகம் பயன்படுத்துகிறார்கள்.நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச் சாறும்இஞ்சிச் சாறும் சம அளவுகலந்து அருந்தி வர நன்மைஏற்படும்.அஜீரணத்தைப்  போக்கிபசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகுசேர்த்து கஷாயம் செய்து குடித்து வரலாம்.வெற்றிலை, துளசி, கற்பூரவல்லி இவை மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு சுத்தம் செய்து சுடுதண்ணீரில்போட்டுகொதிக்கவைக்கவும்.பின்னர் மூன்றையும் எடுத்து நன்றாக சாறு பிழிந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க நெஞ்சு சளி அப்படியே கரைந்து விடும். பெரியவர்களும் சற்று அளவு அதிகமாக அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.ஒரு வெள்ளைப் பூண்டு பல்,5 வெற்றிலை காம்புகள் அதே அளவு2 சிட்டிகை திப்பிலி மூன்றையும் அரைத்து உள்ளுக்கு காலை, மாலை கொடுக்க குழந்தைக்கு சளி குறையும்.இரண்டு வெற்றிலையை நசித்து சாறெடுத்து சிறிதளவு கஸ்தூரி கலந்து காலை ஒரு வேளை மட்டும் உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தையின் வாந்தி நின்று விடும்.வெற்றிலையை அரைத்து கீழ்வாத வலிகளுக்கும் வீக்கம் முதலியவற்றுக்கும் வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து பத்து மாத குழந்தைகளுக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.காரமுள்ள கருப்பு வெற்றிலை பத்து எடுத்து நைசாக அரைத்து காலை, மாலை சருமத்தில் இரண்டு நாள் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் அரிப்பு நீங்கும்.கஸ்தூரி சிறிதளவு ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட்டு வர இதய வலி குணமாகும்.இரண்டு வெற்றிலையை வாங்கி வாயில் அதக்கி வைத்துக்கொண்டு சாரத்தை விழுங்கிக்கொண்டே இருக்க எப்பொழுது பிரயாணம் செய்தாலும் வாந்தி வராது.

May 09, 2024

லிவருக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் 

 கல்லீரல்.உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பி த்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் உறுப்பு .உப்பில் சோடியம் உள்ளது. அளவிற்கு அதிக உப்பை உண்பதால் உடலில் கூடுதல் நீர் தேங்கி, கல்லீரலில் வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.மைதா தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் என எதுவுல் இல்லாதது இது கல்லீரலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.சோடாவில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை கல்லீரலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.வலி நிவாரணிகள் கல்லீரலில் மிகவும் மோசமான விளைவையும் ஏற்படுத்துகின்றன. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளும் தவறை செய்யாதீர்கள்.துரித உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றில் அஜினோமோட்டோ பயன்படுகிறது.இதனால், உங்கள் கல்லீரலின் செயல் திறன் பலவீனமடைகிறது.சர்க்கரை கல்லீரலை அதிக அளவில் சேதப்படுத்தும். சர்க்கரை ஆல்கஹாலை போலவே கல்லீரலை சேதப்படுத்தும்.தினமும் ஆல்கஹால் அருந்தினால், அது கல்லீரலை சேதப்படுத்தும். இதனால் ரத்த வாந்தி, மஞ்சள் காமாலை, புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும்

May 08, 2024

ரோஜா குல்கந்து நன்மைகள்

ரோஜாமலரிலிருந்துதயாரிக்கப்படும்மருத்துவகுணமிக்கஉணவுப்பொருள்தான்குல்கந்து.மணம்தரும்பொருளாகஉணவுப்பதார்த்தங்களில்சேர்த்துசமைப்பதால்சுவையோடுஆரோக்கியமும்மேம்படுகிறது. இதில்அரோமேட்டிக்வோலடைல்ஆயில், டானிக்ஆசிட், காலிக்ஆசிட்போன்றவைஅடங்கியுள்ளன.ரோஜா குல்கந்து துவர்ப்பு சுவையுள்ளதால் இரத்தக் குழாய்க்கும், இதயத்திற்கும் கல்லீரலுக்கும் வலிமையூட்டும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.வயிற்றின் செரிமான அமிலங்களின் சமநிலையை சீர் செய்கிறது. செரிமானம் சீரான முறையில் நடைபெற உதவுகிறது. பசியைத் தூண்டி குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. வயதானவர்களின் வாய்வுத் தொல்லையை போக்குகிறது. குல்கந்தை வெந்நீருடன் அருந்த மலம் இறுகி மலச்சிக்கல் உண்டாகி இருப்பதை போக்குகிறது.வெந்நீருடன் கர்ப்பிணிகள் இதை சாப்பிட, வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் சரியாகும். வெப்பத்தினால் ஏற்படும் பலவீனம், சோர்வையும் இது போக்குகிறது. இது சிறுநீரகக் கடுப்பை குணமாக்கும். நன்னாரி சர்பத்துடன் குல்கந்து சேர்த்து கலந்து அருந்த உடல் வலிமையாகும். உடல் அரிப்பு மற்றும் வெப்ப நோய்களை இது விரட்டுகிறது.கொப்புளங்கள், நாப்கின் பயன்பாட்டால் வரும் புண்கள், சரும அரிப்பு போன்றவற்றிற்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. ரோஜா குல்கந்து பருகும் பானங்கள் மற்றும் உணவுகளில் நறுமணப் பொருளாக சேர்க்கப்படுகிறது. இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள் இதில் நிறைந்துள்ளன.அரிப்பு மற்றும் வெப்ப கொப்பளங்களுக்கு அவிபத்திகர சூரணம் என்ற ஆயுர்வேத மருந்துடன் குல்கந்து சேர்த்து சாப்பிட, நல்ல நிவாரணம் கிடைக்கும். குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி சரும பளபளப்பைத் தருகிறது.வியர்வையால் உண்டாகும் வாடையைப் போக்குகிறது. உடல் உஷ்ணம் உள்ள ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படும். அவர்கள் குல்கந்தை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் பெருகி ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும்.பலவிதங்களில் பயன்படும் குல்கந்தை உட்கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்வோம்பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் கிடைக்கப்பெற்ற ரோஜா இதழ்கள்200 கிராம், பெரிய கற்கண்டு100 கிராம் மற்றும் தேன் இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக இடித்து காற்று புகாத டப்பாவில் வைக்கவும். இதனை பெரியவர்கள் 2 டீஸ்பூன் அளவு, சிறியவர்கள் 1 டீஸ்பூன் அளவும் சாப்பிடலாம்

May 05, 2024

வெங்காயத் தண்ணீரை நாம் குடிக்கும்போதுகிடைக்கும்ஆரோக்கியநன்மைகள்!

அன்றாட உணவில் உபயோகித்து வரும் வெங்காயத்தில் உடலுக்குத் தேவையான வைட்டமின்C, வைட்டமின்B6, பொட்டாசியம், ஃபொலேட் போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி அந்தத் தண்ணீரை நாம் குடிக்கும்போது, மேலே கூறிய அனைத்து ஊட்டச் சத்துக்களாலும் செறிவூட்டப்பட்ட ஒரு நல்ல ஆரோக்கிய பானம் . இந்த பானத்தை அருந்துவதால்  பல நன்மைகள்உடலுக்குக் கிடைக்கும் .ஆனியனில் குர்செடின்(Quercetin) போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடம்பிலுள்ள ஃபிரிரேடிகல்களின் அளவை சமநிலைப்படுத்தி ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவுகின்றன. இதிலுள்ள வைட்டமின்C சத்தானது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உடல் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராட முடிகிறது. உடலிலுள்ள நோய்களையும் விரைவில் குணமடையச் செய்ய முடிகிறது..ஆனியன் வாட்டர் சளி, இருமல் போன்ற நோய்களை குணப்படுத்தவும் செய்யும். இதை உணவுக்கு மணமூட்டவும், சூப், சாலட், ஸ்டூ மற்றும் மரினேட் செய்வதற்கும் உபயோகிக்கலாம்.ஆனியனை சமைக்காமல் உட்கொண்டால் அது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொழுப்பின் அளவை சமநிலைப்படுத்தவும் உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியம் வலுப்பெறும்.ஆனியனில் பிரிபயோட்டிக் ஃபைபர் சத்து உள்ளது. இது ஜீரண மண்டல உறுப்புகளில் வாழும் நன்மை தரும் பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவி புரிந்து செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது.ஆனியன் வாட்டர் அருந்துவது தினசரி குடிக்க வேண்டிய நீரின் அளவு சமநிலைப்படவும், உடலை நீரேற்றத்துடன் வைக்கவும் உதவும். ஆனியன் குறைந்த அளவு கலோரி கொண்டது. இதை உணவில் சேர்ப்பதால் கலோரி அளவு அதிகரிக்காமல் உணவுக்கு சுவை கூட்ட முடியும். சர்க்கரை சேர்த்த பானங்களுக்குப் பதிலாக ஆனியன் வாட்டர் குடித்தால் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும்.ஆனியன் வாட்டர் சரும ஆரோக்கியம் காக்கவும் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் வயதான தோற்றம் தருவதைத் தடுக்கவும்,  அப்பழுக்கற்ற சுத்தமான மேனி வண்ணம் பெறவும் உதவி செய்கின்றன.

1 2 ... 25 26 27 28 29 30 31 32 33 34

AD's



More News