25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஆரோக்கியம்

Aug 04, 2024

மன அழுத்தத்தைக் குறைக்கும் பனங்கற்கண்டு

 பனங்கற்கண்டில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது, இது எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு அவசியம். பால் புரதம் மற்றும் வைட்டமின்D ஆகியவற்றின் நல்ல மூலமாகும், பனங்கற்கண்டில் இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன. பால் வைட்டமின்A மற்றும்C ஆகியவற்றின் நல்ல மூலமாகும், இவை தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராட உதவும் ஆக்ஸிஜனேற்றிகளாகும்.பனங்கற்கண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை சரும சேதத்தை ஏற்படுத்தும் தீவிர மூலக்கூறுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. பால் வைட்டமின்E இன் நல்ல மூலமாகும், இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும், வயதான தோற்றத்தைக் குறைக்கவும் உதவும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும்.பனங்கற்கண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்தை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பால் ப்ரோபயாட்டிக்ஸின் நல்ல மூலமாகும், பனங்கற்கண்டில் மக்னீசியம் உள்ளது, இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், தளர்வு உணர்வை ஊக்குவிக்கவும் உதவும் ஒரு தாதுவாகும். பால் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்தின் நல்ல மூலமாகும், இது செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, இது மகிழ்ச்சியுடன் தொடர்புடைய ஒரு நரம்பியக்கடத்தி ஆகும்.நீரிழிவு நோய் அல்லது பிற மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் பனங்கற்கண்டு பால் குடிப்பதற்கு முன் தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். அதிகப்படியான பனங்கற்கண்டு சாப்பிடுவது பல் சிதைவு மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.வெள்ளை சர்க்கரை உடல்நலத்திற்கு தீங்கு என்று கூறப்படும் நிலையில் அதற்கு மாற்றாக பனங்கற்கண்டு எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.     

Aug 02, 2024

ஆஸ்துமா அவதியைத் தடுக்க  விரைவில் சிகிச்சை பெற வேண்டும்

எந்த அளவிற்கு விரைவில் சிகிச்சை பெறுகிறார்களோ, அந்த அளவுக்கு ஆஸ்துமா விரைவில் குணமடையும்.தூக்க மாத்திரை, அவில் போன்ற அலர்ஜி மாத்திரை, நாடித்துடிப்பை மிகுதிப்படுத்தும் மருந்து, (உ.ம். அட்டிரினிலின்), உயர் ரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கும் மாத்திரை (உ.ம். புரோபரனலால்) • மூச்சுத் திணறல் வரும்போது தவிர்க்க வேண்டிய மருந்துகள்சளி இறுகாமலிருக்க நிறைய திரவ உணவினை வாய் மூலமோ, ஊசி மூலமோ உட்கொள்ள வேண்டும்.சுயமாக மருந்து, மாத்திரை உட்கொள்வது கூடாது.புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் விடவும்அலர்ஜி, ஆஸ்துமாவைத் தூண்டும் உணவுப் பொருட்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும்மூச்சுத் திணறல், இருமல் (பக்கவாட்டு விலா எலும்பு வலி), காய்ச்சல் ஆகியவை தள்ளிப்போடாமல் மருத்துவரை அணுகவும். வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதைத் தவிர்க்கவும். உதாரணம்: பூனை, நாய், புறா, கிளிதூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியா க அப்புறப்படுத்தவும்.படுக்கை, மெத்தை, தலையணை ஆகியவற்றில் ஆஸ்துமாவை உண்டாக்கும் பூச்சிகள் குடியேற வாய்ப்பு இருப்பதால் அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்படும் போது பயப் படக்கூடாதுவீட்டு உபயோக ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கத் தயங்கக்கூடாது. ஆக்சிஜன் சிலிண்டர் உபயோகப்படுத்தும் போது புகைப்பிடிக்ககூடாது, வெடித்துவிடும்.தனிமை தவிர்க்கப்பட வேண்டும்மன அழுத்தம் வராமல் இருக்க மருத்துவமும் பயிற்சியும் தேவைமார்பு ,பிசியோதெரபி தேவைப்படும்போது அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் (உள்ளிருக்கும் சளியை  வெளிக்கொணர) சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது.

Aug 01, 2024

கிராம்பு சாப்பிடுவதால் உடலில் நடக்கும் ஆரோக்கிய நன்மைகள்

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கிராம்பு பழங்காலத்தில் இருந்தே மசாலா பொருளாகவும், மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகை, உலகம் முழுவதும் தற்போது காணப்படுகிறது. கிராம்புகளில் யூஜினோல், காரியோஃபிலின் மற்றும் அசிட்டைல் யூஜினோல் போன்ற பல சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி தொற்றுகளுக்கு எதிராக போராட உதவுகின்றன .கிராம்புகளில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் மற்றும் அழள்சி எதிர்ப்பு பண்புகள், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. இது வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வயிறு வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. கிராம்புகளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி, தசைவ வலி மற்றும் பல் வலி போன்ற வலிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும். வாய் மற்றும் பற்களில் பாதிப்பு இருப்பவர்கள் தினசரி மூன்று கிராம்பு சாப்பிடுவதால் அவை விரைவில் குணமடையும். இது பல் துளைகள், ஈறுநோய் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற வாய் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.  கிராம்புகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், இதய நோய் அபாயம் குறைகிறது. சில ஆய்வுகளில், கிராம்பு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என கண்டறியப்பட்டுள்ளன. இது நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.தினசரி 3 கிராம்பு சாப்பிடுவதால் உடலில் , பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகின்றன. 

May 31, 2024

உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யும் தாளிசபத்திரி இலைகள்.

மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற சுவாச தொந்தரவுகள் இருந்தால், கற்பூரவல்லி எனப்படும் ஓமவள்ளி இலைகளை மருந்தாக பயன்படுத்துவோம் அல்லது கருந்துளசி, நொச்சி இலைகளை பயன்படுத்துவோம். அதுபோலவே, தாளிசபத்திரியும் பயன்படுகிறது.தாளிசாதி என்றும் இதனை சொல்வார்கள்.சளி, மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, நீர்க்கோவை, தலைபாரம் மட்டுமல்ல, எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் கட்டுக்குள் கொண்டு வரும் தன்மை, இந்த மரத்தின் இலைகளுக்கு உண்டு. இந்த தாளிசபத்திரி மரமானது, பச்சை நிறத்தில் நீளமாக வளரக்கூடியது.. மோனோடெர்பீன்கள், பிளேவனாய்டுகள், பைஃப்ளேவனாய்டு, கிளைகோசைடுகள், பைட்ரோ ஸ்டீரால்கள், அமினோ அமிலங்கள், சபோனின்கள், டானின்கள், ஆல்கலாயிடுகள், ட்ரைடர்பெனாய்டுகள் போன்ற சத்துக்கள் இந்த மரத்தின் இலைகளில் நிறைந்துள்ளது.முக்கியமாக, பேக்லடாக்சால் என்ற வேதிப்பொருள் இலைகளில் இருப்பதால், மருந்தாக உதவுகிறது.நுரையீரலிலுள்ள மொத்த கபமும் வெளியேறிவிடும். இந்த இலையில் கஷாயம் போல வைத்து குடிக்கலாம்.சளிக்கு மட்டுமல்ல, பயங்கர நோயான புற்றுநோயையும் இந்த இலைகள், வேதிப்பொருளாக பயன்படுகிறதாம். புற்றுக்கட்டிகளை கரைக்கும் சக்தி இதற்கு உண்டுதாளிசபத்திரி இலைகளை காயவைத்து தூள் போல தயார் செய்து வைத்து கொண்டால், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற தொந்தரவுகளுக்கு பயன்படுத்தலாம்.வெறுமனே இந்த இலைகளை பறித்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.. அல்லது குளிக்கும் வெந்நீரிலும் பயன்படுத்தலாம்.. இதனால், தலைவலி, தலைபாரம் நீங்கிவிடும். மிளகு: தாளிசபத்திரி, மிளகு, சுக்கு, அரிசி, திப்பிலி, கற்கண்டு போன்றவற்றுடன் சேர்த்து, சூரணம் போல தயார் செய்து, கடைகளில் விற்கிறார்கள்.தாளிசாதி வடகம், தாளிசாதி சூரணம் என்ற பெயரில் இது விற்பனை செய்யப்படுகிறது.கட்டுக்கடங்காத சளி, இருமலுக்கு இந்த பவுடரை பயன்படுத்துவார்கள்.. எப்பேர்ப்பட்ட ஜூரத்தையும் இது போக்கிவிடும். சுவாச உறுப்புகள் பலப்படுத்தவும், இந்த சூரணம் பேருதவி புரிகிறது.. சிலர் இந்த பொடியில் பற்களை தேய்க்க பயன்படுத்துவார்கள். இதனால் பல்வலியும் சரியாகி, ஈறுகள் பலம் பெறும்.மூச்சு திணறல் பிரச்சனை இருப்பவர்கள், இந்த தாளிசாதி சூரணம் எடுத்துகொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதேபோல, உடல் சோர்வு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இந்த சூரணத்தை சாப்பிட்டால், பலமும், சுறுசுறுப்பும் கிடைக்கும். காது பகுதியில் ஏற்படும் இரைச்சல் வந்தாலோ அல்லது மூக்கிலிருந்து நீர் வடிந்தாலோ, அதற்கும் இந்த சூரணம் உதவுகிறது.. வயிறு எரிச்சல், பசி இல்லாத உணர்வு, அஜீரணம், வயிற்றுப்புண்களை இந்த சூரணம் சரிசெய்கிறது.மஞ்சள் காமாலை பிரச்சனை உள்ளவர்களுக்கும், இந்த தாளசபத்திரி சூரணம் கை கொடுக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை இந்த மூலிகை சூரணம் தடுத்து நிறுத்தும். ஆனாலும், சித்த மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று இதனை மருந்தாக எடுத்து கொள்ளலாம். 

May 29, 2024

70 வயதிலும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க நெல்லிக்காய்வெள்ளரி ஜூஸ்

உடலில் நீர்ச்சத்துக்கள் குறையும்போதுதான் நோய்கள் உண்டாகும்.சருமம் பொலிவிழக்கும். இளமையிலே முதுமை தோற்றம் ஏற்படும். கடுமையானமுடி உதிர்வு பிரச்னைகள் உருவாகும். மலச்சிக்கல்பிரச்னை அதிகமாகும். ரத்தம் சுத்தமாக குறையும்.நெல்லிக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன் தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும். இளநரை பிரச்னையை சரிசெய்யும். முதுநரையை தள்ளிப்போடும். இதில் உள்ள வெள்ளரி நமது உடலில் உள்ள நீர்ச்சத்தை அதிகரிக்கும்.ரத்தத்தை சுத்தம் செய்யும். நமது உடலில் புதிய ரத்தம் ஊறத்துவங்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும். கல்லீரல், மண்ணீரலில் உள்ள கழிவை வெளியேற்றும். உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும். மலச்சிக்கல் பிரச்னைகளையும் சரிசெய்யும்.இதற்கு பயன்படுத்தப்படும்பொருட்களில், அதிகளவில் வைட்டமின் ஏ, சி, பி, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட எண்ணற்றவைட்டமின்களும், மினரல்களும் உள்ளது. . தேவையானபொருட்கள் நெல்லிக்காய்-2, வெள்ளரி அரை, இஞ்சி அரை இன்ச்(அல்சர் உள்ளவர்கள் இஞ்சியை தவிர்த்துவிடலாம்), மல்லித்தழை – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, புதினா- சிறிதளவு, எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன் (அல்சர் உள்ளவர்கள் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்)நாம் அன்றாட உணவில் இதில் சேர்த்துள்ள 3 இலைகளையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்.செய்முறைஎலுமிச்சை சாறு தவிர மற்ற பொருட்களை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.அதில் எலுமிச்சை சாறு கலந்துவிடவேண்டும். இதை அப்படியேவும் பருகலாம் அல்லது இதில் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்தும் பருகலாம்.இந்த சாறில் மிளகை சேர்த்து சாப்பிடும்போது இதன் மருத்துவ பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும். மிளகு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இளநரையும் மறையும். எனவே வாரத்தில் ஒரு நாள் உணவில் மிளகை இதுபோல் பொடி செய்து சேர்த்துக்கொள்ளவேண்டும்.காலையில் வெறும் வயிற்றில் இதை பருகவேண்டும். வாரத்தில் இரண்டு முறை குடித்தால் போதும். சருமம் பளபளப்பாகும். ரத்தம் சுத்திகரிப்பாகும். உடல் சுறுசுறுப்பாகும். கல்லீரல்லில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். நீர்ச்சத்து கிடைக்கும். உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்குநல்ல பலன் தரும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. 

May 28, 2024

நுரையீரல் தொற்றிலிருந்து பாதுகாக்க…

நுரையீரலுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியவைகளில் மிக முக்கியமானது, சளி, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, புற்றுநோய், குறட்டையினால் வரும் மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று நோய்கள் போன்றவைகளாகும்.சர்க்கரை நோய், இதயநோய், உடல்பருமன், சிறுநீரகம், கல்லீரல் செயல்பாடு குறைதல் இவைகளாலும், நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படும்.அடிக்கடி இருமல் வந்தால் அலட்சியப்படுத்தக்கூடாது. நாள்பட்ட சளித்தொல்லையாக இருந்தாலும், அதையும் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது.மூச்சு திணறலுடன் நெஞ்சுவலி ஏற்பட்டு, இருமலுடன் ரத்தம் வந்துவிடும். எனவே, 15 நாட்களுக்குமேல், இருமல் இருந்தாலே கவனமாக இருக்க வேண்டும். எலும்புகளிலும், தோல் பட்டைகளிலும் அதிக வலி ஏற்படுவது, திடீரென குரலில் மாற்றம் தென்படுவது இந்த அறிகுறியிருந்தால், காசநோய், ஆஸ்துமாவின் தாக்கம் அதிகமாகிவிட்டது என்றே அர்த்தம். இதுபோன்ற பிரச்சனை இருந்தால், கைவைத்தியம், பாட்டி வைத்தியம் என்றிருக்காமல், உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும்.நுரையீரலில் தொற்றுக்கள் ஏற்படாதவாறு, கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். இதற்கு நடைபயிற்சி, உடற்பயிற்சிகள் அவசியம்., நுரையீரலுக்கு பலம்தரக்கூடிய உணவுகளை சாப்பிடலாம். சமையலில், நிறைய இஞ்சி - பூண்டு உள்ளவாறு பார்த்து கொள்ள வேண்டும். இதனால், தொற்றுகள், நச்சுக்கள் அழிக்கப்படுவதுடன, நுரையீரல் புற்றுநோயும் எளிதில் அண்டாது. சுவாசப்பாதையும் சீராகும்.ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப்பழங்களையும், காய்கறிகளையும் உணவில் சேர்க்க வேண்டும். கொய்யா, கிவி, எலுமிச்சை, சாத்துக்குடி, மாதுளை, பைன் ஆப்பிள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் போன்றவற்றை நிறைய சேர்த்து கொள்ளலாம். அதேபோல, கீரை, முட்டைக்கோஸ், டர்னிப் கீரைகள், ப்ரோக்கோலி, இயற்கையான வைட்டமின் K ஆதாரங்களாகும்.பீட்டாகரோட்டின், வைட்டமின் A நிறைந்த கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம். ஒமேகா 3 சத்துள்ள உணவுகளை நிறைய சாப்பிட வேண்டும்.மீன்கள், பாதாம், வெள்ளரி விதைகளிலும், ஒமேகா 3 சத்து உள்ளதால், தினமும் இவைகளில் தினம் ஒன்றையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.நுரையீரல் வலியிருந்தால், இஞ்சியில் டீ தயாரித்து குடிக்கலாம்.இஞ்சியில் அதிகளவு புரோஸ்டாலான்டின் உள்ளதால், வீக்கத்தால் ஏற்படும் வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். மார்பு சம்பந்தமாக ஏற்படும் அனைத்து நோய்களையும் இது தடுக்கும். இஞ்சியை தண்ணீரில் அரைமணிநேரம் ஊறவைத்து, அதற்குபிறகு, டீ தயாரித்து குடிக்க வேண்டும்.துளசியும் நுரையீரல் வலிக்கும் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. இதிலிருக்கும் காக்ஸ்- 2 வீக்கத்தை குறைக்கும் பண்பை பெற்றுள்ளதால், துளசியை பச்சையாகவோ அல்லது காயவைத்தோ, டீ தயாரித்தோ தினமும் குடிக்கலாம்.  

May 27, 2024

உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள்  தரும் கிராம்பு

மசாலா பொருட்களில் கிராம்புக்கு தனி இடம் உண்டு. இது உணவுகளில் தனித்துவமான சுவையை சேர்கிறது. உணவுக்கு வாசனை மற்றும் சுவையை கூட்டுவதை தாண்டி கிராம்பு பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் அமைகிறது.கிராம்பு மரத்தின் உலர்ந்த பூக்களில் இருந்து பெறப்படும் கிராம்புகள் ஊட்டச்சத்து மதிப்பு நிறைந்த ஒரு மசாலா பொருளாகும். சரிவிகித உணவின் ஒரு பகுதியாக மிதமான அளவு கிராம்பை சாப்பிட்டு வர நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. எனினும் தினமும் கிராம்பை அதிக அளவில் சாப்பிடுவதால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படலாம். கிராம்பு முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அற்புதமான மூலமாக அமைகிறது. கிராம்பில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸிற்கு எதிராக நமது உடலை பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்புகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகிறது. வாய்வழி ஆரோக்கிய பலன்களுக்கு கிராம்பு பெயர் போனது. கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு பற்சொத்தை மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. ஒரு சில வாய்வழி சிகிச்சைகள் மற்றும் ப்ராடக்டுகளில் கிராம்பு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. கிராம்புகள் பாரம்பரியமாக செரிமானத்தை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி, இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கிராம்புகள் சாப்பிடுவதால் வாயு மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கிராம்புகள் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒரு சில ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன. இது ரத்த குளுக்கோஸ் அளவுகளை சீராக்கி இன்சுலின் உணர்திறனை ஊக்குவிக்கிறது.கிராம்புகளில் எக்கச்சக்கமான ஆன்டிஆக்சிடன்ட்கள் இருப்பதால் அது ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்பில் வலி நிவாரண பண்புகளும் உள்ளது. மிதமான அளவுகளில் கிராம்பு சாப்பிடுவது பெரும்பாலான நபர்களுக்கு பாதுகாப்பாக கருதப்பட்டாலும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் பக்க விளைவுகள் உண்டாகும். கிராம்பு எண்ணெயை அதிகப்படியாக பருகும் பொழுது அதனால் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படலாம். எனவே கிராம்பு எண்ணெயை அதிக அளவில் சாப்பிட கூடாது. கிராம்பு பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடும். மேலும் ஒரு சில நபர்களில் கிராம்புகள் அலர்ஜி வினைகளை கூட உண்டாக்கலாம். கிராம்பு சாப்பிட்டதால் உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏதேனும் மருத்துவ நிலையினால் பாதிக்கப்பட்டிருந்தால் கிராம்பு எடுத்துக் கொள்ளும் முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம்.

May 26, 2024

ரத்தசோகையை விரட்டியடிக்கும்பீட்ரூட் ஜூஸ்

தேவையான பொருட்கள்-   பீட்ரூட் 1 (தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவேண்டும். பீட்ரூட்டில் செலினியம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், சோடியம், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது. பீட்ரூடை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது சருமத்துக்கு பொலிவைத்தரும். வெயிலால் ஏற்படும் கருமையைப் போக்கும். குடலில் உள்ள நச்சுக்களை கரைத்து வெளியேற்றும்) இஞ்சி – சிறிய துண்டு (பச்சை வாசத்தை போக்கி, சுவையைத்தரும்) எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்(இனிப்புக்கு வெல்லம் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கூட சேர்த்துக்கொள்ளலாம். பீட்ரூட்டே இனிப்பு சுவையானதுதான். எனவே இது தேவையில்லை. ஆனால் அதன் பச்சை சுவை விரும்பாதவர்கள் இதை சேர்த்துக்கொள்ளலாம்.செய்முறை - அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். இதை அப்படியே பருகவேண்டும். தேவைப்பட்டால் ஜஸ் க்யூப்கள் சேர்த்து பருகலாம். எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.சாறு வடித்தபின் மிஞ்சும் சக்கையை உங்கள் முகம் உடலில் சருமத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்துகொள்வதால் சருமம் பொலிவு பெறுகிறது. அதை ஜஸ் ட்ரேயில் சேர்த்து ஐஸ் கட்டிகளாகவும் மாற்றிக்கொள்ளலாம். அதையும் வைத்து மசாஜ் செய்யலாம்.வயோதிகத்தால் ஏற்படும் பார்வை குறைபாடு மற்றும் ஞாபக மறதி ஆகியவற்றைப்போக்கும். சருமம் பொலிவு பெறும். செரிமானக் கோளாறுகள், அல்சர் மற்றும் வயிறு தொடர்பான அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வாகும். உடலில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றும்.

May 23, 2024

கல்லீரல் பாதிப்பு

நமதுஉடலின் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல். இதுகழிவுகளை வெளியேற்றவும், உணவை ஜீரணிக்கவும், ரத்தம் உறைவதற்கு உதவும் புரதங்களின் உற்பத்தியையும் செய்வதுடன் ஹார்மோன்களை சீர் செய்வது போன்ற பல வகையான வேலைகளை செய்கிறது. எனவேஇதயம், நுரையீரல், சிறுநீரகம்போன்ற உறுப்புகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை கல்லீரலுக்கும் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் உடலில் ஏற்படும்90 சதவீதநோய்களுக்கு கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகள் தான் காரணமாகின்றன.உடலில் டீடாக்ஸ் பேக்டரியாக செயல்படும் கல்லீரல்,உடலின் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நமது செரிமான அமைப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை பெறவேண்டியது அவசியம். இல்லையெனில் கல்லீரல் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகள்கல்லீரலில் பிரச்சனை ஏற்படுமாயின் நச்சுக்கள் சரியாக வெளியேறாமல் வயிறு பெருத்து காணப்படுவதுடன் வயிற்றுப் பகுதியில் வீக்கமும் ஏற்படும். பாதங்கள் வீங்குதல், பாதங்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது போன்றவை தோன்றும்.செரிமானத்தில் கல்லீரல் முக்கிய பங்கு வகிப்பதால், அது செயல்படாமல் இருக்கும்போது வயிற்றுப்போக்கு உண்டாகும்.தோல் அரிப்பு, கை கால்கள் வீங்குவது போன்றவை உண்டாகும்.கவனமின்மை, நினைவாற்றல் இழப்புபசியின்மை எடை இழப்பு, வயிற்று வலி, குமட்டல் போன்றவை ஏற்படும்.கல்லீரல் நன்றாக இயங்க சாப்பிட வேண்டியவை:நெல்லிக்காய், இஞ்சி, பீட்ரூட், மஞ்சள், திராட்சை , வால்நட் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.தினமும் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் ஹெப்பாடிட்டிஸ்‌ பி மற்றும் சிஆகியவற்றிற்கு காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது.கல்லீரல் நோய்க்கு பப்பாளி பழம் சிறந்த மருந்தாகும். பப்பாளி பழத்துடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து ஜூஸாக பருக நல்ல பலன் கிடைக்கும்.கீரை சூப், கேரட் ஜூஸ் பருகலாம்.அதிமதுரப் பொடியை டீத்தூளுடன் கலந்து, டீ தயாரித்து பருக சிறந்தது. சில கல்லீரல் நோய்களுக்கு அதிமதுரம் சிறந்த ஆயுர்வேத மருந்தாகும்.கல்லீரல் சுத்தமாக, ஆப்பிள் சீடர் வினிகரை தினம் இருமுறை ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் அளவில் கலந்து பருகுவது நல்லது.முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு, ப்ராக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் உள்ள சல்ஃபர் என்சைம் உற்பத்தியை அதிகரித்து உடலின் நச்சுக்களை நீக்க உதவுகிறது.ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் கல்லீரல் நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் குணப்படுத்த முடியும். எனவேகல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிந்தால் தகுந்த மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. 

May 23, 2024

லவங்கப்பட்டை தேன் கலந்த நீர்

1 கப் வெதுவெதுப்பான நீர்,1தேக்கரண்டி தேன் மற்றும்1/2 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள்ஒரு கப் தண்ணீரை சூடாக இருக்கும் வரை சூடாக்கவும், ஆனால் கொதிக்க வேண்டாம். ஒரு தேக்கரண்டி தேன் முழுவதுமாக கரையும் வரை கலக்கவும்தேன் தண்ணீரில் அரை தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும்.இலவங்கப்பட்டை சமமாக கரையும் வரை நன்கு கலக்கவும். பின்னர் அதைப் பருகவும்.இந்த இரண்டுமே தனித்தனியாக ஆரோக்கிய நன்மைகள் கொண்டது..இலவங்கப்பட்டையின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன் இணைந்த தேனின் தொண்டை புண் மற்றும் இருமலைப் போக்க தேன் இலவங்கப்பட்டை தண்ணீரை ஒரு சிறந்த தீர்வாகஆக்குகிறது.தேன் மற்றும் இலவங்கப்பட்டையின் கலவையானது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், தொடர்ந்து உட்கொள்ளும் போது இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.தேன் மற்றும் இலவங்கப்பட்டை இரண்டும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன, இது வீக்கத்தைக் குறைக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது, இது நீரிழிவு அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இதை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும் பசியைக் குறைப்பதன் மூலமும் எடை இழப்புக்கு உதவும்.தேன் இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிப்பது செரிமானநொதிகளின் சுரப்பைஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறதுமற்றும் இரைப்பை குடல் அசௌகரியத்தை நீக்குகிறது.தேன் மற்றும் இலவங்கப்பட்டை இரண்டும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளன, அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

1 2 ... 24 25 26 27 28 29 30 ... 33 34

AD's



More News