25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முக்கிய அறிவிப்பு

Feb 20, 2026

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் இராஜபாளையம் மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் .

மாசி மாதம் 09ம் தேதி முதல் மாசி மாதம் 18ம் தேதி வரை (21.02.2026 02.03.2026)இராஜபாளையம் நகரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் எனது தந்தையாரின் தாத்தா ஸ்ரீ பி.ஏ. சின்னையராஜா அவர்களால் மணல் மேட்டில் கேட்ட மணி சப்தத்தைக் கொண்டு தோண்டி எடுக்கும் போது கிடைத்த திருக்கோவிலாகும். புராதனமும், பாரம்பரியமும் மிக்க இத்திருக்கோவிலை எனது தாத்தா பெருந்தகை ஸ்ரீ பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த தெய்வ பொக்கிஷமாகக் கருதி பரம்பரை அறங்காவலராக இருந்து பல திருப்பணிகள் செய்து மகிழ்ந்தார்கள். அவரைத் தொடர்ந்து எனது தகப்பனார் "குருபக்தமணி" ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்கள் 1977,2001 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இராஜகோபுரமும், கொடிமரமும், அருள்மிகு ஐயப்பன் திருகோவிலும் ஸ்தாபித்து ஸ்வாமீ, அம்பாளுக்கு தங்ககவசமும் நூதன வசந்த மண்டபம் போன்ற பல்வேறு திருப்பணிகள் செய்து மூன்று முறை கும்பாபிஷேகம் செய்து மகிழ்ந்தார்கள். மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் ,இத்திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆஸ்திக மஹாஜனங்கள் அனைவரும் இத்திருவிழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ மீனாக்ஷி ஸமேத சுந்தரேச்வரர் திருவருளுக்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Feb 20, 2026

SRI RAO BAHADUR A.K.D.DHARMARAJA MIDDLE SCHOOL NO.1 ANNUAL DAY CELEBRATION

SRI RAO BAHADUR A.K.D.DHARMARAJA MIDDLE SCHOOL NO.1 (The first school for girls in Rajapalaiyam) ANNUAL DAY CELEBRATION On Saturday, 21" February 2026 at 5.00 P.MVenue : Sri Rao Bahadur A.K.D Dharmaraja Middle School No.1 , 173, Big Bazaar Street, Rajapalaiyam.  ProgrammePrayer : Our StudentsWelcome Address -Sri. A.K.D.KRISHNAMA RAJU BE CorrespondentPresentation of Annual Report - Thirumathi. D.LALITHAMBIGAI MA, B.Ed.Headmistress-Incharge ,Introduction about the Chief Guest and Special GuestChief Guest's Address: Thirumathi. S. SELVI M.A., M.Ed., Block Educational Officer, Rajapalaiyam.Special Guest's Address: Dr. K. SANGLI VIKRAM KUMAR B.V.Sc & A.H., M.V.Sc., PGDSAD., PGCVH.,Chief Veterinary Doctor - The Animalia Veterinary HospitalFelicitation of Guests ,Prize DistributionCultural Programmes : Our StudentsVote of ThanksSelvi S. SUKΑΙΝΑ School Pupil LeaderNational Anthem : Our Students 

Feb 13, 2026

ஸ்ரீமதி P.A.C.R.சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி, இராஜபாளையம். 76-வது ஆண்டு விழா அழைப்பிதழ்.

P.A.சின்னைய ராஜா ஞாபகார்த்த மேல்நிலைப்பள்ளி, P.A.C.R. அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,T.A.K.M.ராமம்மாள் துவக்கப்பள்ளி, ஸ்ரீமதி P.A.C.R.சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி, இராஜபாளையம்.76-வது ஆண்டு விழா அழைப்பிதழ்நமது,பள்ளிகளின் எழுபத்து ஆறாவது ஆண்டு விழா 14.02.2026 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு P.A.C.R. அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு.Dr.N.O. சுகபுத்ரா I.A.S. அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கவும்,திருமதி. Dr. ராஷ்யா சுகபுத்ரா அவர்கள் பரிசுகள் வழங்கவும் அன்புடன் இசைந்துள்ளார்கள். தாங்கள் விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். நிகழ்ச்சி நிரல் - 14.02.2026 சனிக்கிழமை மாலை 6-00 மணிகடவுள் வாழ்த்து.வரவேற்புரை உயர்திரு. P.R. வெங்கட்ராம ராஜா மேனேஜிங் டிரஸ்டிஆண்டறிக்கை வாசித்தல்விழாத் தலைவரை : திரு. R.கிரிதரன் அறிமுகம் செய்தல் COOதலைவர் உரை : உயர்திரு.Dr.N.O. சுகபுத்ரா I.A.S. விருதுநகர் மாவட்ட ஆட்சியர்பரிசு வழங்குதல்: திருமதி. Dr.ராஷ்யா சுகபுத்ராநன்றி நவிலல் : தலைமையாசிரியர் P.A.C.M. மேலநிலைப்பள்ளி, கலை நிகழ்ச்சிகள் ,தேசிய கீதம் . 

Feb 07, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா

திருவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை, பெங்களூரூவை சார்ந்த எனேபில் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி ஆகியவை இணைந்து விருதுநகர் மாவட்டம் வத்ராப் ஒன்றியம் கான்சாபுரம் கிராமத்தில் உள்ள நூலக வளாகத்தில் வைத்து  மாற்றுத்திறனாளிகளை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான 10 நாட்கள் பயிற்சியை அளித்தது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோருக்கு தேவையான திறன்கள், பண்புகள் மற்றும் தொழில் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள், விலை நிர்ணயம் செய்தல், சந்தை படுத்துதல், மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் தடைகள் மற்றும் சவால்களை, எதிர்கொள்ளும் விதம், தன்னம்பிக்கை வளர்த்தல், நிதி மேலாண்மை போன்ற பல கருத்துகள் வழங்கப்பட்டது.  நிறைவு விழாவுக்கு சைமா அறக்கட்டளையில் இயக்குனர் ராஜகோபால் அவர்கள் தலைமை வகித்தார். கள ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஒருங்கிணைப்பு செய்தார்.   இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 35 மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கினார்.  மேலும் மாற்றுத்திறனாளிகள் தயாரித்த பின்னாயில், சோப்பாயில், வாசிங் ஆயில், வாசிங் பவுடர், ஊத்துபத்தி, தலைவலி தைலம், சாம்பூராணி, கண்திஷ்டி அகர்பத்தி மற்றும் குளியல் சோப்பு ஆகிய பொருள்களை கண்காட்சியாக வைத்திருந்தார்கள். மேலும் இந்த நிகழ்வில் பயிற்றுனர்கள் சுவேதா, எனேபில் இந்தியா திட்ட அலுவலர் சுப்புராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில்  தலைவர் சின்னத்தம்பி,ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கம் செயலாளர் முத்துவேல் ராஜா, கான்சாபுரம் சமூக ஆர்வலர் ராஜ்குமார், சொசைட்டி பாண்டியன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விருதுநகர் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன பயிற்றுனர்கள் பாத்திமா, கணேசன் மற்றும் ரூபப்ரியா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தார்கள்.

Feb 07, 2026

டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போவது – அரசின் உடனடி தலையீடு அவசியம் : Child Alert Alliance (CAA) வலியுறுத்தல்.

தேசிய தலைநகரான டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக காவல்துறையின் அதிகாரப்பூர்வ தரவுகள் வெளிப்படுத்துகின்றன.2026 ஆம் ஆண்டின் ஜனவரி 1 முதல் 15 வரை, டெல்லியில் மொத்தம் 807 பேர் காணாமல் போனதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஒரு நாளைக்கு சராசரியாக 54 வழக்குகள் என்ற அதிர்ச்சிகரமான எண்ணிக்கையாகும்.இந்த 807 பேரில்,509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள்,298 பேர் ஆண்கள் ஆகும்.குறிப்பாக, குழந்தைகள் தொடர்பான தரவுகள் இன்னும் தீவிர அச்சத்தை ஏற்படுத்துகின்றன.இந்தக் காலகட்டத்தில்,191 பேர் சிறார்கள்,இவர்களில் 146 பேர் சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.தினமும் சராசரியாக 13 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.2025 ஆம் ஆண்டின் நிலவரம்-2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை, டெல்லியில்24,508 பேர் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது.இதில் 14,870 பேர் (60%) பெண்கள்,9,638 பேர் ஆண்கள்.காவல்துறையினர் 15,421 பேரை மீட்டுள்ளனர்,ஆனால் 9,087 வழக்குகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.மேலும், 2016 முதல் 2026 வரை உள்ள தசாப்த தரவுகள்,ஒவ்வொரு ஆண்டும் காணாமல் போகும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை தெளிவாக காட்டுகின்றன.பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்இந்த புள்ளிவிவரங்கள் வெறும் எண்கள் அல்ல.இவை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான மிகப்பெரிய சமூக நெருக்கடியை சுட்டிக்காட்டுகின்றன.தேசிய தலைநகரிலேயே இந்நிலைமை என்றால், நாட்டின் பிற பகுதிகளின் நிலை குறித்து தீவிர கவலை எழுகிறது.Child Alert Alliance (CAA) – கோரிக்கைபெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பது அரசின் அரசியலமைப்பு கடமை.இந்தப் பிரச்சினையை அரசு இனியும் அலட்சியப்படுத்தாமல், உடனடியாக செயல்பட வேண்டும்.Child Alert Alliance (CAA), தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி,அரசிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:காணாமல் போனோர் வழக்குகளுக்கு விரைவு மற்றும் சிறப்பு விசாரணை அமைப்புகள்பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான வலுவான கொள்கை நடவடிக்கைகள்காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சமூகத்தின் ஒற்றுமையான ஒருங்கிணைந்த செயல்பாடுபெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாத எந்த சமூகமும் முன்னேற முடியாது.அரசு இதை உணர்ந்து, உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என Child Alert Alliance வலியுறுத்துகிறது.Child Alert Alliance (CAA)Tamil Nadu & Puducherry

Feb 06, 2026

மண்னை நேசித்த மாண்பாளர்கள் நினைவு விழா.

மேலவளவு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தும்மண்னை நேசித்த மாண்பாளர்கள் நினைவு விழாஇடம் : மேலவளவு, நாள்:07.02.2026 சனிக்கிழமை, நேரம் : காலை 9.00 மணிவரவேற்புரை,தலைமை, வாழ்த்துரை,கலை நிகழ்ச்சிசிறப்பு விருந்தினர்கள் - பேராசிரியர், D.நரசிம்மன் சென்னை கிறிஸ்தவக்கல்லூரி, தாவிரவியல் துறைதிரு. Lt Col சத்தியமூர்த்தி ஓய்வு இந்திய இராணுவம்,திரு. S.குறிஞ்சி குமரன் பங்ஸ்டன் எதிர்ப்பு குழு தலைவர்,திரு. பேராசிரியர் S.தினகரன் (ஓய்வு) துறைத்தலைவர் விலங்கியல் துறை மதுரா கல்லூரி,திரு. N.அப்துல் ரஹ்மான் வையை திண்டுக்கல்,நன்றியுரைநிகழ்ச்சியை வாழ்த்தும் : சென்னை கிறிஸ்துவ கல்லூரி தாவரவியல் துறை நண்பர்கள்.தொடர்புக்கு : 97892 42192

Feb 04, 2026

ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்திர ப்ரதிஷ்டா டிரஸ்ட் , 5 நாள் ஆன்மீக சிறப்புச் சொற்பொழிவு

ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்திர ப்ரதிஷ்டா டிரஸ்ட் .பி.ஏ.சி.ராமசாமிராஜா சாலை, இராஜபாளையம்.5 நாள் ஆன்மீக சிறப்புச் சொற்பொழிவு 05.02.2026 முதல் 10.02.2026 தினசரி மாலை 6:30 - 07:45 - "ஸ்ரீமத் பகவத்கீதை"06.02.2026 முதல் 10.02.2026 தினசரி மாலை  10:00 - 11:00 - ''கடோபநிஷத்''இடம் : ஸ்ரீமதி P.S.K ருக்மணி அம்மாள் அரங்கம் (காந்தி கலைமன்ற வளாகம்)இராஜபாளையம். 

Feb 02, 2026

ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா அவர்களின் 110-வது பிறந்த நாள் விழா.

ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா அவர்களின் 110-வது பிறந்த நாள் விழா, திருமிகு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள் (ராம்கோ குரூப் சேர்மன்)முன்னிலையில் ஆன்மீகச் சொற்பொழிவு , ஸ்ரீ உ.வே. ஸ்ரீநிதி ஸ்வாமிகள் அக்காரகனி அவர்கள்  ,02-02-2026 & 03-02-2026 திங்கள் & செவ்வாய்க்கிழமை தினமும் மாலை 6-30 மணிக்கு நடைபெறும்.இடம் : ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா மண்டபம், பழையபாளையம், இராஜபாளையம்தலைப்பு'இடந்ததும் அளந்ததும்"(வராஹ, வாமன சரித்திரம் )(02.02.2026, திங்கட்கிழமை) ''பிளந்ததும் வகிர்ந்ததும்''(நரஸிம்ஹ வைபவம்) (03.02.2026, செவ்வாய்க்கிழமை)அனைவரும் கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை கேட்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறோம்.பிறந்தநாள் விழாக் குழுவினர் இராஜபாளையம். 

Jan 31, 2026

FIFTY-SIXTH SCHOOL YEAR ANNUAL DAY.

CHINMAYA VIDYALAYA P.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL AND CHINMAYA VIDYALAYASRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL RAJAPALAYAMFIFTY-SIXTH SCHOOL YEAR ANNUAL DAYat 5.00 p.m. on Saturday, 31st January 2026, at the School Campus, Ilanthope. Rajapalayam. 

Jan 30, 2026

ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இராஜபாளையம் ஆண்டு விழா.

ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி .இராஜபாளையம் ஆண்டு விழா எமது பள்ளியின் ஆண்டுவிழா 31.01.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் A.K.D. தர்மராஜா பெண்கள் கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது.இறைவணக்கம் :  மாணவர்கள்வரவேற்புரை : திரு. A.K.D. கிருஷ்ணம ராஜீ, B.E. தாளாளர்ஆண்டறிக்கை : திரு. K. சரவணன்,M.A., M.Sc., M.Phil., B.Ed., Ph.D., தலைமையாசிரியர்,SRB.A.K.D.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளிதலைவர் உரை & : பரிசு வழங்குதல் - Dr. P. பாலசுப்பிரமணியம், M.Sc., M.Phil, Ph.D. M.C.A.D.Sc.காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தின் அறிவியல் பள்ளியின் டீன் மற்றும் கணிதத்துறை மூத்த பேராசிரியர், காந்திகிராமம்.வாழ்த்துரை : முன்னாள் மாணவர் -திரு. R பிரதீப் குமார், Bachelor of cryptology  இளங்கலை பட்டம் பெற்றவர். சுபேதார் மேஜர் (ஓய்வு), இந்திய ராணுவம். மேலாளர், பீமா ஜூவல்லரி, ராஜபாளையம்.கலை நிகழ்ச்சிகள் : மாணவர்கள்நன்றி நவிலல்:  N., செந்தில் குமார் .BSc., M.A., M.Ed., பட்டதாரி ஆசிரியர், SRB.A.K.D.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.நாட்டுப்பண் : மாணவர்கள்

1 2 3 4 5 6 7 8 9 10 ... 26 27

AD's



More News