25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


முக்கிய அறிவிப்பு

May 18, 2026

ஆதார் துறையில் 252 காலியிடங்கள் மே 20 வரை விண்ணப்பிக்கலாம்.

மாநில வாரியாக ஆதார் துறையில் ஆப்ரேட்டர்,சூப்பர்வைசர் உள்ளிட்டமொத்தம் 252 காலியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன. 10வது, 12வது, ஐடிஐ அல்லது டிப்ளமோ கல்வித் தகுதி பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் 20.05.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

May 16, 2026

முதலமைச்சர் விஜய்அவர்களின் அதிரடி உத்தரவு!

தமிழக சாலைகளில் இனி விபத்துகளே இருக்கக்கூடாது என்பதில் நமது புதிய அரசு உறுதியாக உள்ளது.அதன் ஒரு பகுதியாக, 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஒட்டினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:₹25,000 அபராதம்:மைனர்கள் வண்டி ஓட்டினால் வாகன உரிமையாளருக்கு (பெற்றோருக்கு) உடனடியாக ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.3 ஆண்டு சிறை:விதியை மீறும் பெற்றோர்களுக்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.RC ரத்து:அந்த வாகனத்தின் பதிவு சான்றிதழ் (RC Book) ரத்து செய்யப்படும்.25 வயது வரை தடை:சட்டத்தை மீறிய அந்த சிறுவர் சிறுமிக்கு 21 வயது ஆகும் வரை, டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படாது. மக்களுக்கு ஒரு வேண்டுகோள்:தம் பிள்ளைகளின் கையில் பைக் சாவியைத் தருவது, அவர்களின் உயிர்க்கே ஆபத்தாக முடியலாம். சட்டத்தை மதிப்போம், உயிர்களைக் காப்போம்!"பாதுகாப்பான பயணம் - பாதுகாப்பான எதிர்காலம்.,விதிகளை மீறாதீர்கள் ,உயிரை காப்பற்றுங்கள்.

May 15, 2026

பாளையக் கலை

படைப்பாற்றல் கொண்டாட்டத்துடன் சங்கமிக்கும் இடம்பாளையக் கலைஉணவு திருவிழா மற்றும் கைவினை பொருட்களுக்கான நிகழ்ச்சிமே 15, 16, 17, நிகழ்ச்சி நடைபெறும் இடம்விஆர் கொண்டாட்ட அரங்கம்1/1,ஞானசம்பந்தர் தெரு, போஸ் பூங்கா எதிரில், முடங்கியார் சாலை, ராஜபாளையம் 626117. தொடர்பு கொள்ளவும்7358945753. 

May 15, 2026

*விரைவு செய்தி*பொறியியல் படிப்பை இலவசமாகப் படிக்க...

12 ஆம் வகுப்பு தேர்வில் 85% [Maths Physics Chemistry] மதிப்பெண் பெற்ற  எந்த மாணவரும் பாண்டிச்சேரியில் உள்ள அரியூர் வெங்கடேஸ்வரா கல்லூரியில் பொறியியல் படிப்பை இலவசமாகப் படிக்கலாம். தயவு செய்து பகிரவும். ஏழை மாணவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் இது உதவலாம். மேலும் விவரங்களுக்கு ஸ்ரீ தேவநாராயணன், உதவிப் பதிவாளர் (ஓய்வு), பாண்டிச்சேரி பல்கலைக்கழகம். கைபேசி எண் : +91 *70105 53544* யாருக்காவது உபயோகமாக இருக்கும் என்பதால் அனைவருக்கும் பகிரவும்.

May 04, 2026

மக்களே தேர்தல் ரிசல்ட் பார்க்கணுமா.

தமிழகம் உட்பட 5 மாநில வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தேர்தல் ஆணையத்தின் results.eci.gov.இந் என்ற  இணையதளத்திலும் ‘ECINET' என்ற போன் செயலியிலும் தெரிந்துகொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

Apr 28, 2026

அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் பொங்கல் திருவிழா.

பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொதுபண்டு இராஜபாளையம்,அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் பொங்கல் திருவிழா ,நிகழும் மங்களகரமான 1201-ம் ஆண்டு பராபவ வருஷம் சித்திரை மாதம் 15-ம் தேதி (28.04.2026) செவ்வாய்க்கிழமை இரவு 6-00 மணி அளவில் மின் விளக்குகளால்அலங்கரிக்கப்பட்ட தட்டுச்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளியாகி, அருள் ஜோதிவடிவமாய் அமர்ந்து, நாதஸ்வரம், மேளவாத்தியங்கள், கிளாரினெட் கச்சேரி, வான வேடிக்கைகளுடன் புறப்பட்டு அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் சுவாமி முக்கியவீதிவழியாக அருள் ஜோதி சொரூபசக்தியாய் மக்களுக்கு காட்சி கொடுத்து நகர்வலம்வந்து பழையபாளையம் (முனிசிபல் குடிநீர் தண்ணீர் தொட்டி) வடபக்கம்அமைந்துள்ள பழையபாளையம் ராஜூக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்தாலம்மன்கோவிலுக்கு வழக்கம் போல் வந்தடையும். அவ்வமயம் பக்தகோடிகள் அனைவரும் தவறாதுபொங்கல் விழா வைபவங்களில் கலந்து கொண்டு சிறப்புவித்து அம்மன் அருள்பெற வேண்டுகிறோம்.அன்று இரவு 7 மணி முதல் இரவு 12 மணி வரை மம்சாபுரம் S. தனலட்சுமி வில்லிசை குழுவினரின் ''வில்லிசைக் கச்சேரி" அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் மைதானத்தில் வைத்து நடைபெறும். இப்படிக்கு,தலைவர்.பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொது பண்டுஅருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் திருவிழாக் கமிட்டியார். 

Apr 23, 2026

ஓட்டு போட்டதும் உடனே வெளியே வராதீங்க..

ஓட்டு போட்டு முடித்த பிறகு, திரையில் உங்கள் ஓட்டு பதிவு செய்யப்பட்ட சின்னம் சில விநாடிகள் காட்டப்படும்.   நீங்கள் தேர்வு செய்த சின்னம்தானா என்று கவனமாக பார்த்து உறுதி செய்து கொண்டு வாருங்கள் . இது உங்கள் உரிமை மட்டுமல்ல... உங்கள் பொறுப்பும் கூட.. "ஒரு ஒட்டு... ஒரு எதிர்காலம்.

Apr 22, 2026

ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் இராஜபாளையம் நகர் தொழில் தந்தை பெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா அவர்களின் 132 வது பிறந்தநாள் உத்சவம்.

ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் இராஜபாளையம் நகர் தொழில் தந்தை,பெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா அவர்களின் 132 வது பிறந்தநாள் உத்சவம்.24.04.2026 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில் ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரால் கீர்த்தனாஞ்சலியும், அதனைத் தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.காலை 7.30 மணி அளவில் இராஜபாளையம் அருள்மிகு சொக்கர் கோவிலில் ஸ்தாபகர் அவர்களின் திருஉருவப்படத்திற்கும், ஜோதிக்கும் பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் ஜோதியினை ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, மத்தியசேனை, சங்கரலிங்காபுரம் வழியாக தொடர் ஓட்டத்தின் மூலம் ராமசாமி ராஜா நகருக்கு (துலுக்கப்பட்டி ) 'ராம்கோ சிமெண்ட்ஸ் ஊழியர்கள் எடுத்துச்செல்வார்கள்.காலை 7.45 மணிக்கு தென்காசி சாலையில் உள்ள அமரர் ஸ்ரீ பி.ஏ.சி. ராமசாமி ராஜா அவர்களின் திருஉருவச்சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு அங்கு பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 24-04-2026 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ ரித்விக் ராஜா அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி,இடம் : திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ P.A.C.ராமசாமி ராஜா அரங்கம், இராஜபாளையம். 

Apr 21, 2026

தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை.

தற்போது புதிய மோசடி தொடங்கியுள்ளது.யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது Google Pay- க்கு  பணத்தை அனுப்புகிறார், மேலும் உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் இருந்ததாக உங்களுக்குத் தெரிவிக்க உங்களை அழைக்கிறார். மேலும் பணத்தை அவர்களின் எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும். எனவே, யாராவது உங்கள் கணக்கில் தவறாகப் பணம் பெற்றிருந்தால், அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இந்த மோசடி இப்போதுதான் தொடங்கியுள்ளது. என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Apr 18, 2026

ஏப்ரல்1 முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு.

30 அலகுகளுக்குகீழ்,4.3 சதவீதத்தினாலும்,30 முதல் 60 அலகுகளுக்கு 6.9 சதவீதத்தினாலும்,61 முதல் 90 அலகுகளுக்கு 6.9 வீதத்தினாலும்,91 முதல் 180 அலகுகளுக்கு கீழ் 7.2 வீதத்தினாலும், 180 அலகுகளுக்கு மேல் 25 சதவீதத்தினாலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 25 26

AD's



More News