25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முக்கிய அறிவிப்பு

Jun 26, 2026

அருள்மிகு அஞ்சல்நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி திருக்கோயில் பெத்தவநல்லூர், இராசபாளையம் .ஆனி தேரோட்ட பெருவிழா.

அருள்மிகு அஞ்சல்நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி திருக்கோயில் பெத்தவநல்லூர், இராசபாளையம் .ஆனி தேரோட்ட பெருவிழா, நிகழும் மங்களகரமான கொல்லம் 1201-ஆம் ஆண்டு பராபவ வருடம் ஆனி ஆனி மாதம் மாதம் 14  ஆம் நாள் (28-06-2026)ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு ,தேர்வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது. ஆகையால் அனைத்து பக்தர்களும் வருகை தந்து சிவனருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.அருள்மிகு பைரவர்அன்னதானம் நடைபெற உள்ளது.ஆகையால் அனைத்து பக்த கோடி மெய்யன்பர்களும் கலந்து கொண்டு இறைவனின் திருவருளை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Jun 24, 2026

மொஹரம் பண்டிகை: ஜூன் 26-ல் பொது விடுமுறை.

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 26-ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தேசிய வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், பொதுமக்கள் தங்களது பயணங்கள் மற்றும் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jun 24, 2026

போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28.

0 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக மருந்து வழங்கப்படும்.6, 10, 14 வாரங்களில் போலியோ தடுப்பூசி போட்டிருந்தாலும், இந்த 2 சொட்டு மருந்தை தவறாமல் குழந்தைகளுக்கு வழங்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Jun 19, 2026

எம்.எஸ். சுப்புலட்சுமி இசைப்பள்ளி உலக இசைநாள் விழா .

திருக்குறள் (பாடல் - ஆடல் - கொண்டாடல்)தமிழ்நாடு உலகிற்கு  தந்த அழியா அறப்பெட்டகம் திருக்குறள். செய்யக்கூடியவை, செய்யக்  கூடாதாவை என மானுடப்  பேரறம் அனைத்தையும் ஒண்ணே  முக்கால் அடிக்குள்வடித்துக் கொடுத்த மகத்தான கவிஞர் திருவள்ளுவர். உலக இசை நாளான  ஜூன் 21-ல் குறளைப் பாடி, குறளுக்கு ஆடி, குறளைக் கொண்டாடவுள்ளோம்.திருக்குறளைப் பாடுவோம் *திருக்குறளுக்கு ஆடுவோம் திருக்குறளைக் கொண்டாடுவோம்வான்சிறப்பு, கல்வி, அறிவுடைமை, அன்புடைமை, புகழ் எனும் 5 அதிகாரங்களைக் குழந்தைகள் பாடி ஆடிக் கொண்டாடுகிறார்கள்.சிறப்புரை பேராசியர் மு. இராமச்சந்திரன்பொருள்: எல்லோரும் கொண்டாடுவோம்இராஜபாளையம் நகரின் கலைஞர்கள், கவிஞர்கள், பிரமுகர்கள் வாழ்த்துரைக்கின்றார்கள்.நாள் - 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை நேரம் - மாலை 5.30 மணி இடம் - இராசி மஹால், சங்கரன்கோவில் சாலை, இராஜபாளையம்

Jun 13, 2026

இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் 26வது நிகழ்ச்சி. ஐந்தாவது ஆண்டு துவக்க விழா.

26வது நிகழ்ச்சி... ஐந்தாவது ஆண்டு துவக்க விழாஇராஜபாளையம் நகைச்சுவை மன்றம்  ,சிரித்து வாழ வேண்டும்.பெருமையுடன் வழங்கும் சிரிப்பு வெடிகள்.நாள் : 14.06.2026 ஞாயிற்றுக்கிழமைநேரம்: மாலை 5.00 மணிஇடம் : ஆனந்தா கார்டன், தென்காசி ரோடு, இராஜபாளையம்.முனைவர் .சிவ. சதீஷ்குமார் - தலைப்பு சிரித்துப் பழகு!சிரிப்பே அழகு!திருச்சி. பேராசிரியர் , சா. நீலகண்டன்- தலைப்பு வாங்க சிரிக்கலாம்!வயசை குறைக்கலாம்!அனைவரும் வருக. அனுமதி இலவசம்.தவறாது கலந்து கொண்டு சிரிப்பு மழையில் நனையுங்கள்...,

Jun 01, 2026

INTEC: இந்தியாவின்முன்னணி சர்வதேச தொழில்துறை வர்த்தகக் கண்காட்சி மீண்டும் துவங்குகிறது!

தொழில்துறையில் பெரும் வரவேற்பைப் பெற்ற INTEC வர்த்தகக் கண்காட்சி, தற்போது தனது வெற்றிகரமான21-வது பதிப்பைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. உற்பத்தி, பொறியியல் மற்றும் தானியங்குமயமாக்கல் (Automation) ஆகிய துறைகளின் சமீபத்திய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் இக்கண்காட்சிமுக்கியப் பங்கு வகிக்கிறது.கடந்து வந்த சாதனைப் பாதை (கடந்த 20 பதிப்புகள்):1,00,000+ வணிகப் பார்வையாளர்கள் (Business Visitors)600+ கண்காட்சியாளர்கள் மற்றும் 1,100+அரங்குகள்200-க்கும் மேற்பட்ட தயாரிப்புப்பிரிவுகள்3,000 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகப் பரிவர்த்தனைகள்இந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்:உலகளாவிய பங்கேற்பு: ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தின் ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்அங்கீகாரம் மற்றும் உலகெங்கிலும் உள்ள 20-க்கும் மேற்பட்ட நாடுகளின்அபார பங்கேற்பு.பிரமாண்ட வடிவமைப்பு: மொத்தம் 7 கண்காட்சி அரங்குகளில், 200-க்கும் மேற்பட்ட பல்வேறு தயாரிப்புப்பிரிவுகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.வணிக வாய்ப்புகள்: புதிய வர்த்தகத் தொடர்புகளுக்கான வணிகப் பொருத்தம் (Business Matchmaking) மற்றும் நிபுணர்களின்மாநாட்டு அமர்வுகள் (Conference Sessions).நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரைஅனுமதிச் சீட்டு: RS.150/- (பொதுப் பார்வையாளர்களுக்கு)குறிப்பு: உற்பத்தி மற்றும் பொறியியல் துறையில் உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்குஎடுத்துச் செல்ல, இந்த சர்வதேசக் கண்காட்சியைத் தவறவிடாதீர்கள்!

May 27, 2026

ஜூன் 1 முதல் பெண்களுக்கு அரசுப்-பேருந்துகளில் இலவச பயணம்!

ஜூன் 1 முதல் மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. குறுகிய மற்றும் நீண்ட தூர அரசு பேருந்துகளிலும், இந்த சலுகை வழங்கப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கு இலவச பேருந்து பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் காலத்தில்பாஜக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த திட்டத்தின் நோக்கம் பெண்களின்  பயணச் செலவை குறைக்க.பெண்களின் சுயசார்பு மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்த.கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு எளிதான பயணம்.பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தை  உறுதி செய்ய.எங்கே எங்கே பயன்படும்?மாநில அரசு பேருந்துகள் (நகர்ப்புற, புறநகர் மற்றும் நீண்ட தூர சேவைகள்)பெண்கள் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம்!

May 26, 2026

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

எந்த அரசு துறையாக இருந்தாலும் உங்களிடம் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால் கூட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்.புகார் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

May 25, 2026

காலாவதியான ஹெல்மெட்டை அணியாதீர்கள் .

ஹெல்மெட் அணிவது ஒரு உறுதியான பாதுகாப்பு, ஆனால் ஒரு பெரிய தவறு உயிருக்கே ஆபத்தாக முடியும். காலாவதியான ஹெல்மெட்டை அணியாதீர்கள்! அதன் உள்ளே இருக்கும் முக்கியமான EPS Foam, 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் மிகவும் கடினமாகிவிடும். அதன்பிறகு, அது அதிர்வுகளைத் தாங்கும் திறனை இழந்துவிடும். பழைய ஹெல்மெட்டை அணிவது என்பது, உங்கள் தலையில் ஒரு பலவீனமான பிளாஸ்டிக் பெட்டியை அணிவதைப் போன்றது!

May 25, 2026

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION.

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் அதிரடி அறிவிப்பு 2026!ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (நேர்காணல் இல்லாத பதவிகள்)நேர்முகத் தேர்வு இல்லை! நேரடி நியமனம்!விளம்பர எண் 734,அறிவிப்பு எண் 04/2026,தேதி 20.05.2026ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (நேர்காணல் இல்லாத பதவிகள்)பணிகளுக்கு நேரடி ஆட் சேர்புக்கான ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.www.tnpsc.gov.inஆன்லைனில் விண்ணப்பிக்கவும்முக்கிய தேதிகள்அறிவிப்பு வெளியான தேதி -20.05.2026விண்ணப்பிக்க தொடங்கும் தேதி - 27.05.2026விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் நேரம் - 25.06.2026, 11.59pmவிண்ணப்ப திருத்தம் செய்யும் காலம்- 29.06.2026,12.01AM முதல் 01.07.2026, 11.59 PM வரை

1 2 3 4 5 6 7 8 9 10 ... 26 27

AD's



More News