விவசாய விலை நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தும் வனவிலங்குகள்
இராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர்,வத்திராயிருப்பு,, சேத்தூர் ,தேவதானம், மேற்குதொடர்ச்சிமலைவனப்பகுதிகளில் யானை, காட்டுப்பன்றி, மிளா, காட்டு எருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய விலை நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகின்றன.
வனத்தை ஒட்டி உள்ள நிலங்களில் தென்னை, மா, பலா, வாழை உள்ளிட்டவைகளை சமீப காலமாக காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்து 50 ஆண்டுகள் பலன் தந்த பலா மரங்கள் முதல் தென்னை மரங்களை உடைத்தும் குருத்துகளை பிடுங்கியும் சேதப்படுத்தி வருகின்றன. இது குறித்து அரசுக்கு இழப்பீடு வழங்க விண்ணப்பித்தால் அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர்..
கூட்டமாக சேதப்படுத்தும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டவும் காட்டுப்பன்றிகள், மான்களை கட்டுப்படுத்தி விளை நிலங்களை பாதுகாக்க ஒவ்வொரு குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் கலெக்டரிடம் முறையிடுகின்றனர். இவற்றுக்கு தீர்வாக வேளாண் துறை மூலம் ,மானிய விலையில் வேலி அமைக்க ஒதுக்கீடு செய்வதுடன், வனவிலங்குகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்கி வேலி அமைக்க ஒப்புதல் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.
0
Leave a Reply