கோடீஸ்வரி ரூ.4 கோடி மதிப்புள்ள சொகுசு காரில் வீட்டு வேலைக்கு வருகிறார்.
சீனாவில் வசிக்கும் வயதான பெண்மணி ஒருவர், சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள சொகுசு காரில் வந்து வீடுகளில் பாத்திரம் கழுவும் வேலையைச் செய்வது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
"நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். வீட்டில் சும்மா இருப்பதை விரும்பவில்லை. சுறுசுறுப்பாகவும், பயனுள்ள வகையிலும் நேரத்தை செலவிடவே இந்த வேலையை விருப்பத்துடன் செய்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார். பணம் மட்டுமல்ல, மனநிறைவும் வாழ்க்கையின் முக்கிய அங்கம் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
0
Leave a Reply