25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவினை முன்னிட்டு சுவாமி,வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குகாட்சி அளித்தார்.தொடர்ந்து மூலவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.தொடர்ந்து நேற்று மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற் றது. நாளை தேரோட்ட நிகழ்ச்சி நடக் கின்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

ராஜபாளையம் செவல்பட்டி தெருவில் உள்ள ராஜகணபதி பாலமுருகன் கோவில், மொட்டமலை பாலதண்டா யுதபாணி கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. வத்திராயிருப்பு காசி விசுவநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், விரு துநகர் அருகே எல்லிங்கநாயக்கன் பட்டி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆமத்தூர் திருச்செந்திலாண்டவர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக - நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News