மூளை சிப் தொழில்நுட்பத்தில் சீனாவின் புதிய சாதனை
மூளை-கணினி இணைப்பு (BCI) தொழில்நுட்பத்தில் சீனா முக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைகளை இயக்க உதவும். உலகின் முதல் வணிகரீதியான 'NEO' மூளை சிப் தொழில்நுட்பத்திற்கு அந்நாடு ஒப்புதல் வழங்கியுள்ளது. மூளையின் திசுக்களை பாதிக்காமல் பொருத்தப்படும் இந்த சிப், மனித எண்ணங்களைப் புரிந்து அதற்கேற்ப சிக்னல்களை அனுப்பும் திறன் கொண்டது. இதன் மூலம் ரோபோடிக் கையுறைகள் செயல்பட்டு, நோயாளிகள் மீண்டும் தங்களது கை அசைவுகளை கட்டுப்படுத்த உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
0
Leave a Reply