2036ஆம் ஆண்டுக்குள் உலகில் பணத்திற்கான தேவையே இல்லாமல் போய்விடும் என அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் கருத்து!AI மற்றும் ரோபோக்கள் மனிதர்களை விட அதிகமான பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்கும். எதற்கும் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகி, பணத்தின் அவசியமும் மதிப்பும் குறைந்துவிடும் என எலான் மஸ்க் .
உலகின் புகழ்பெற்ற உயரமான கட்டிடங்களில் ஒன்றான Burj Khalifa பற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.ஒரே நாளில் 2 Sunset பார்க்க முடியுமா?Burj Khalifa-வின் உயரம் காரணமாக, தரைத்தளத்தில் சூரியன் மறைவதைப் பார்த்த பிறகும், கட்டிடத்தின் மிக உயரமான தளங்களில் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க முடியும். மேகங்களுக்கு மேலே இருப்பவர்கள்!Burj Khalifa-வின் உச்சிப் பகுதிகள் சில நேரங்களில் கீழே இருக்கும் மேகங்கள் மற்றும் மழைப்பொழிவை விட உயரமாக இருக்கும்.அதனால், கீழே மழை பெய்துகொண்டிருக்கும்போது கூட மேல்தளங்களில் இருக்கும் ஒருவர் அதே மழையை அனுபவிக்காமல் இருக்கலாம். ஜன்னல்களைச் சுத்தம் செய்ய மாதங்கள் ஆகும்!Burj Khalifa-வில் ஆயிரக்கணக்கான கண்ணாடி பேனல்கள் உள்ளன. அவற்றை சுத்தம் செய்வது மிகப்பெரிய பராமரிப்புப் பணியாகும்.கட்டிடத்தின் வெளிப்புற கண்ணாடிகளை முழுமையாகச் சுத்தம் செய்யும் பணிக்கு பல மாதங்கள் ஆகும்.உலகின் உயரமான கட்டிடத்தை பராமரிப்பது எவ்வளவு சவாலானது என்பதற்கே இது ஒரு சிறந்த உதாரணம்!
சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற 2026 உலக ரோபோ மாநாடு, எதிர்கால தொழில்நுட்பத்தின் புதிய முகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.ஆகஸ்ட் 19 முதல் 23 வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, சுமார் 3,000 ரோபோ தயாரிப்புகளை காட்சிப்படுத்தின.மனித உருவ ரோபோக்கள், தொழிற்சாலை ரோபோக்கள், சேவை ரோபோக்கள், மருத்துவம் மற்றும் அவசரகாலப் பயன்பாட்டுக்கான ரோபோக்கள் என பல்வேறு தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றன. மாநாட்டில் 311 புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மனிதர்களுடன் இயல்பாக தொடர்புகொள்ளும் வகையில் உருவாக்கப்படும் Humanoid ரோபோக்கள் தற்போது சீனாவின் ரோபோ தொழில்துறையில் முக்கிய கவனம் பெற்றுள்ளன.வாடிக்கையாளர் சேவை, தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், மருத்துவம் மற்றும் முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் இத்தகைய ரோபோக்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் வேகமெடுத்து வருகின்றன.ரோபோக்களின் வளர்ச்சி இனி திரைப்படங்களில் மட்டுமல்ல... நம் அன்றாட வாழ்க்கையிலும் முக்கிய இடம் பெறப்போகிறது!
'செயற்கை சூரியன்' திட்டத்திற்காக உலகின் மிகப்பெரிய& சக்திவாய்ந்த சூப்பர் கன்டக்டிங் இணைவு காந்தத்தை வெற்றிகரமாக சோதித்தது சீனா!. இந்த காந்தம் 582 மெட்ரிக் டன் எடை கொண்டதாகும்.2030க்குள் அணுக்கரு இணைவு (Nuclear fusion) மூலம் மின்சாரம் தயாரிக்கும் சீனாவின் திட்டத்தில் முன்னேற்றம்.
1988 முதல் UAE-யில் வசித்து வரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பேக்கரி ஊழியர் ரெய்னால்டோ ஹெர்போசோ மற்றும் அவரது 10 நண்பர்கள், 15 ஆண்டுகளாக BigTicket வாங்கி வந்த நிலையில், இறுதியாகDh20 மில்லியன் பரிசை வென்றுள்ளனர். இந்த தொகை 10 பேருக்கும் சமமாகப் பகிரப்படும்.
உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளுக்கான'HenleyPassportIndex தரவரிசையில்' சிங்கப்பூர் பாஸ்போர்ட் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் முன்விசா (Advance Visa) இன்றி 192 நாடுகளுக்கு சுலபமாகப் பயணம் செய்யலாம்.
துபாய்க்கான புதிய இந்திய துணைத் தூதராக டாக்டர் எம்மாடி விஷ்ணு வர்தன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.அமீரக வெளியுறவு அமைச்சகத்திடம் தனது நற்சான்றிதழ்களைச் சமர்ப்பித்தவுடன், அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை பயன்படுத்த நேபாளம் அனுமதி அளித்துள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை வேறு நாட்டில் இருந்து கொண்டு வர அனுமதி இல்லை. இந்தியாவில் இருந்து வருபவர்கள மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
Etihad Rail பயணிகளுக்காக 'RailtoRoad' என்ற புதிய கார் வாடகை சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் ரயில் நிலையத்திலிருந்தே காரை வாடகைக்கு எடுத்து, பயணத்தின் இறுதி இலக்கை எளிதாக அடைய முடியும். இந்த சேவை, Thrifty Car Rental UAE மற்றும் EtihadRail இடையிலான5 ஆண்டு கூட்டாண்மையின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ளது.
தனது துணைவி ஷிவோன் ஜிலிஸ் பாதி இந்திய வம்சாவளி என்பதால், தங்களின் மகனுக்கு நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக “ஸ்ட்ரைடர் சேகர்” என எலான் மாஸ்க் பெயரிட்டுள்ளார்.