தனிமைக்கு துணை: சீனாவில் புதிய வணிகம்.
சீனாவில் தனிமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு துணையாக நபர்களை வாடகைக்கு எடுக்கும் புதிய தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது சுமார் 7.4 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த சந்தை, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உணவகங்களுக்கு செல்வது, சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வது அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற தருணங்களில் தனிமையை தவிர்க்க பலர் பணம் கொடுத்து நண்பர்களை வாடகைக்கு அமர்த்துகின்றனர். சமூக வாழ்க்கையின் புதிய போக்காக இந்த சேவை உருவெடுத்து வருகிறது.
0
Leave a Reply