அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புச் சம்பவம்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இந்தியர்களை குறிவைத்து சிலர் இனவெறி முழக்கங்களை எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதுடன், இந்திய தேசியக் கொடியை அவமதித்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி, "அமெரிக்காவில் எந்த சமூகத்தினருக்கும் எதிரான வெறுப்புக்கும் இடமில்லை. இந்தியர்களுக்கு எதிரான இதுபோன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply