25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 06, 2024

தூத்சாகர் அருவி என்ற ‘பாற்கடல்

தூத்சாகர் அருவி கோவாவில் சாங்கியும் மாவட்டத்தில் உள்ள பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது. இந்த அருவி கோவாவின் தலைநகரான பனாஜியிலிருந்து60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழும் அருவி நான்கு அடுக்கு நீர்வீழ்ச்சியாக விழுவது காண்போரை மெய்மறக்க வைக்கக்கூடிய அழகை உடையதாகும்.‘பாற்கடல்’ என்று அழைக்கப்படும் தூத்சாகர் அருவியானது மண்டோவி ஆற்றிலிருந்து உருவாகிறது. இந்தியாவிலுள்ள உயரமான அருவிகளுள் தூத்சாகரும் ஒன்றாகும். இந்த அருவி310 மீட்டர் உயரமும்30 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இது இந்தியாவில்5ஆவது உயரமான அருவியாக உள்ளது. உலகில் உயர்ந்த அருவிகளின் பட்டியலில்227ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மழைக்காலங்களில் இந்த அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் அருவியின் அடிவாரத்தில் குளிக்கலாம்.தூத்சாகர் அருவியை சுற்றுலாப்பயணிகள் வருடம் முழுவதும் சுற்றிப்பார்க்க செல்லலாம். மழைக் காலங்களில் மட்டும் இந்த அருவி முடப்பட்டிருக்கும். அருவியில் நீர்பெருக்கு அதிகமாக இருக்கும் என்பதே காரணமாகும்.சாலைவழியாக நேராக தூத்சாகர் அருவியை அடைய முடியாது. கொல்லத்திலிருந்து தூத்சாகர் அருவிக்கு ஜீப் சபாரி மூலமாக பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயம் வழியாகவே செல்ல முடியும். இவ்வழியே செல்லும் இரண்டு ரயில்கள் இங்கே நிறுத்தப்படுகிறது. அமராவதி எக்ஸ்பிரஸில் இருந்து அருவியை காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழியாக ரயில் கடந்து செல்லும்போது,அருவியை காண சில வினாடிகளே கிடைக்குமென்றாலும், அருவியின் பிரம்மாண்டம் நம்மை அதிசயிக்க வைக்கிறது.                                                                                                                                

Jul 05, 2024

2வது வகுப்பு ரயில் டிக்கெட் மூலம் முதல் வகுப்பில் பயணிக்கலாம்.

பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர்ரயில் பயணத்தை விரும்பும் நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது.. காரணம் குறைந்த செலவில் மிக நீண்ட தூரம் பயணிக்க ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதன் காரணமாக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர்.சில சலுகைகள் குறித்து பலருக்கும் தெரியாது. இந்திய ரயில்வே விதிகளின்படி, ஒரு பயணி எந்த வகுப்பிற்கு டிக்கெட் வாங்குகிறாரோ அந்த வகுப்பின் பெட்டியில் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால் பல பயணிகளுக்கு தெரியாத ஒரு சலுகை உள்ளது. அதாவது குறைந்த கட்டண டிக்கெட் எடுத்த பயணிகளும் முதல் வகுப்பில் பயணம் செய்யலாம் என்பதுதான். இவ்வாறு நீங்கள் செய்யும்போது டிக்கெட் பரிசோதகர் உங்களை ரயிலில் இருந்து இறங்க சொல்லவோ, அபராதம் விதிக்கவோ முடியாது. ஆனால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன. இந்தியாவில் தினமும் சராசரியாக1.85 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இதில் ஏசி, ஸ்லீப்பர், பொது வகுப்பு பட்டியல் என அனைத்தும் அடங்கும். ஏசி வகுப்பு பெட்டியில் பெண் பயணி ஒருவர் தனியாக பயணம் செய்கிறார். அவரது உதவியாளர் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது ஏசி பெட்டியில் தனியாக பயணிக்கும் பெண் பயணிக்கு துணையாக இரண்டாவது வகுப்பில் பயணிக்கும் பெண் பயணி ஏசி பெட்டியில் பயணிக்க அனுமதிக்கப்படுவார். அதன்படி இரவு 8 மணி முதல் காலை8 மணி வரை ஏசி பெட்டியில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் பெண் பயணிகளுக்கு உதவியாளர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை உள்ளது. ஆண் உதவியாளர்களுக்கு இது பொருந்தாது.

Jul 05, 2024

சமையல் எண்ணெயில் விமானம்

பிரிட்டனின் விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம் நுாறு சதவீதம் நிலையான விமான எரிபொருளில்(எஸ்.ஏ.எப்.,) இயங்கும் விமானத்தை தயாரித்துள்ளது. எஸ்.ஏ.எப்., எரிபொருள் என்பது காய்கறி கழிவு, சமைக்கப்பட்ட எண்ணெய் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருள். தற்போது இந்த விமானத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து இதன் முதல் பயணம்  நவ.28ல் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் செல்ல உள்ளது. வழக்கமான எரிபொருளில் இயங்கும் விமானம் வெளியிடும் கார்பன் அளவில் 70 சதவீதத்தை இந்த விமானம் குறைக்கிறது.

Jul 04, 2024

தனிமையான தீவு " 'டிரிஸ்ட்ன் டா குன்கா'

தெற்கு அட்லாண்டிக் கடலில் 'டிரிஸ்ட்ன் டா குன்கா' தீவு உள்ளது. இது ஒரு எரிமலை தீவு. மூன்று பகுதியாக உள்ள இத்தீவு கூட்டத்தில் ஒன்றில் மட்டும் சிறிய அளவில் (250 பேர்) மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பிரிட்டனை சேர்ந்தவர்கள். 'இத் தீவு உலகில் எளிதில் தொடர்புகொள்ள முடியாத  'தனிமை தீவு' என   அழைக்கப்படுகிறது. இது தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் இருந்து  2787 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. பரப்பளவு 98 சதுர கி.மீ. இதை சமீபத்தில் நாசாவின் 'லேண்ட்சாட் 9' செயற்கைக்கோள் படம் பிடித்து வெளியிட்டது.

Jul 04, 2024

வீட்டில் கரப்பான், பல்லி தொல்லையா?

வெயில் காலம் தொடங்கியதால் நம் வீட்டில் பூச்சிகள் தொல்லை அதிகரிக்கும். இதுவரை வெளியில் காணாத கரப்பான் முதல் பல்லி போன்றபூச்சிகள்நமதுவீட்டைஆக்ரமித்துகொள்ளும்..உங்கள்வீட்டில் பல்லிகள் அதிகம்இருக்கிறதா, அப்படியெனில் முட்டைஓடுகளை உபயோகிக்கலாம். பல்லிகள் வரும் இடங்களில் ஜன்னல்கள்ஓரமாக வைத்தால் அந்த வாசனைக்கே வராது. முக்கியமானடிப்ஸ் என்னவென்றால் முட்டைஓடை வாரம் ஒருமுறைமாற்றி விடுங்கள். அதனால்கெட்ட வாடைகளில் இருந்துதப்பிக்கலாம்மார்க்கெட்டில்இந்த கரப்பான் பூச்சிகளைவிரட்ட நிறைந்த மருந்துகள்விற்க படுகின்றன. ஆனால் இவை ஏதும் நமது உடலுக்குநல்லவை இல்லை. அதனால்இந்த வீட்டு பொருட்களைவைத்து இந்த பூச்சிகளைவிரட்டுங்கள் இதனால் வீட்டுக்கும்சுகாதாரத்துக்கு எந்த கேடும்விளையாது.வெங்காயதோல்கள் மற்றும் பூண்டுதோல்கள் இவற்றை ஜன்னல்கதவுகள், ஓட்டை இருக்கும்இடங்களில் வைப்பதால் அதில் இருந்து வெளியேறும்வாசனை பல்லிகளை விரட்டும். மேலும்வேறு எந்த பூச்சிகளும்வீட்டுக்குள் அண்டாது.நாப்தலின்அல்லது பாச்சா உருண்டைகள்இவற்றை வீட்டில் வைப்பதால்பூச்சிகள் எளிதில் வருவதில்லை. மேலும்துர்நாற்றம் வீசும் இடங்களில்இடுவதால் மேற்கொண்டு எந்த வடையும் வராமல்இருக்கும். வீடும் சுத்தமானஉணர்வை கொடுக்கும். முக்கியமாக குழந்தைகள்நடமாடும் பகுதிகளில் இருந்துஇவற்றை தள்ளி வைப்பதுநல்லது.பெப்பர்ஸ்பிரே இருந்தால் அவற்றைபூச்சிகள், பல்லிகள் மேல் தெளித்துவிடுங்கள். அப்படி செய்வதால்அவற்றின் தோல் மேல் எரிச்சல் ஏற்பட்டுஅவை தலை தெறிக்கஓடிவிடும். பேப்பர் ஸ்ப்ரேஇல்லை என்றால் சுலபமாகசெய்துவிடுங்கள், பெப்பரை தூளாக்கிகொஞ்சம் நீருடன் கலந்துஸ்ப்ரே பாட்டில்களில் அடைத்து வைத்துஉபயோகிக்கலாம்.கிராம்புஇதை எலும்பிச்சை பழத்தில்குத்தி வைத்தால் கொசுக்கள், சிறிய பூச்சிகள் எளிதில்வீட்டிற்குள் வராது. மேலும்கிராம்புகளை கரப்பான் கண்ணில்படும் இடங்களில் போட்டுவைப்பதால் அந்த வாசனைக்கேபூச்சிகள் ஓடிவிடும்.

Jul 03, 2024

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தில் ரயில்வே அதிவேக சோதனையை நடத்துகிறது

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தில் வெற்றிகரமான அதிவேக சோதனை மூலம் இந்திய ரயில்வே ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இது ரியாசி-பாரமுல்லா வழித்தடத்தில் இரயில் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. சோதனையானது 46 கிமீ மின்மயமாக்கப்பட்ட பகுதியை உள்ளடக்கியது, இதில் ஒன்பது சுரங்கங்கள் அடங்கும், இது தொழில்நுட்ப முன்னேற்றங்களை நிரூபிக்கிறது. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் காஷ்மீரை தேசிய ரயில் நெட்வொர்க்குகளுடன் ஒருங்கிணைத்து, இணைப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.ஜம்மு காஷ்மீரில் உள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தில் அதிவேக CRS இன் வெற்றிகரமான சோதனை ஓட்டத்துடன் இந்திய ரயில்வே வெள்ளிக்கிழமை மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சோதனை ஓட்டமானது காஷ்மீரில் உள்ள ரியாசி-பாரமுல்லா வழித்தடத்தில் இரயில் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.முன்னதாக,  முதல் சோதனை ஓட்டத்தை நடத்திய பிறகு, ரயில்வே அமைச்சகம் கூறியது: "புதிதாக கட்டப்பட்ட செனாப் பாலத்தை ரயில்வே வாரியம், வடக்கு ரயில்வே மற்றும் கொங்கன் ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் விரிவான ஆய்வுக்குப் பிறகு, ஒரு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ராம்பன் மாவட்டத்தில் உள்ள சங்கல்தான் மற்றும் ரியாசி இடையே 40 கிமீ வேகத்தில் 46-கிமீ நீளமுள்ள மின்மயமாக்கப்பட்ட பாதைப் பிரிவு." வழித்தடத்தில் உள்ள முக்கிய நிலையங்கள் - ரியாசி, பக்கல், துக்கா மற்றும் சவ்லாகோட் - ஜம்மு & காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. "இந்தப் பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன், ROCS (ரிஜிட் ஓவர்ஹெட் கண்டக்டர் சிஸ்டம்) 25 kV இல் முதல் முறையாக ரயில்வேயில் செயல்படுத்தப்பட்டுள்ளது" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிப்ரவரி 20, 2024 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டம், 48.1-கிமீ பனிஹால்-சங்கல்தான் பகுதியை உள்ளடக்கியது. 118 கிமீ காசிகுண்ட்-பாரமுல்லா பகுதியை உள்ளடக்கிய திட்டத்தின் முதல் கட்டம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தின் கீழ் அக்டோபர் 2009 இல் தொடங்கியது. அடுத்தடுத்த கட்டங்களில் ஜூன் 2013 இல் 18 கிமீ பனிஹால்-காசிகுண்ட் பகுதியும், ஜூலை 2014 இல் 25 கிமீ உதம்பூர்-கத்ரா பகுதியும் அடங்கும். முன்னதாக பிப்ரவரி 2024 இல், பனிஹால்-கத்ரா பிரிவில் பனிஹால் முதல் காரி வரை ராம்பனில் உள்ள சங்கல்தான் வரையிலான முதல் மின்சார ரயில் சோதனை ஓட்டம் தோராயமாக 40 கிமீ பாதை மற்றும் சுரங்கப்பாதைகளை உள்ளடக்கியது. "தொடர் சோதனைகளைத் தொடர்ந்து, இந்த பாலம் அனைத்து ரயில் சேவைகளையும் எளிதாக்கும், காஷ்மீர் பள்ளத்தாக்கை ஜம்மு மற்றும் பரந்த இந்திய நெட்வொர்க்குடன் தடையின்றி ஒருங்கிணைக்க ஒரு நினைவுச்சின்ன பாய்ச்சல்" என்று அமைச்சகம் எடுத்துரைத்தது. இது மக்கள் மற்றும் பொருட்களின் எளிதான இயக்கத்தை எளிதாக்குவதன் மூலம் சமூக ஒருங்கிணைப்பை வளர்க்கும், அதன் மூலம் கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் சுற்றுலா மற்றும் வர்த்தகம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது" என்று அது மேலும் கூறியது.ஜம்மு காஷ்மீருக்கு நம்பகமான போக்குவரத்து மாற்றை வழங்கும் நோக்கில், யுஎஸ்பிஆர்எல் திட்டத்தின் கீழ், காஷ்மீர் பள்ளத்தாக்கை தேசிய ரயில் நெட்வொர்க்குடன் இணைக்கும் வகையில், உதம்பூரிலிருந்து பாரமுல்லா வரையிலான 272-கிமீ ரயில் பாதையை இந்திய ரயில்வே நிறைவேற்றியுள்ளது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, USBRL திட்டம் 2002 இல் 'தேசிய திட்டம்' என அறிவிக்கப்பட்டது, 38 சுரங்கப்பாதைகள் 119 கிமீ நீளத்தை உள்ளடக்கியது. மிக நீளமான, T-49 சுரங்கப்பாதை, 12.75 கிமீ நீளம் கொண்டது, இது நாட்டின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதையாகும்.இந்த திட்டத்தில் 927 பாலங்கள் 13 கிமீ நீளம் கொண்டவை, இதில் 1315 மீ நீளம் கொண்ட சின்னமான செனாப் பாலம், 467 மீ வளைவு நீளம் மற்றும் 359 மீ உயரத்தில் ஆற்றுப்படுகைக்கு மேல் உள்ளது - இது ஈபிள் கோபுரத்தை விட உயரமானது மற்றும் பாராட்டப்பட்டது. உலகின் மிக உயரமான வளைவு ரயில் பாலம்.

Jul 02, 2024

குழந்தைகளின் நடத்தையை மாற்றும் செல்போன்கள்

குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவ தால் உடல் மற்றும் மனநல பாதிப்பு உருவாகி வருகிறதுஎன்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் ஓடியாடி விளையாடி உடல் நலனை மேம்படுத்தும் விஷயத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விடுவதால் உடற்பயிற்சி இன்றி குழந்தைகள் உடல் பருமன் அதிகரித்து, பின்னர் சிறுவயதிலேயே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உருவாகலாம்.செல்போனில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளுக்கு தூக்கம் கெட்டு அவர்கள் பகல் நேரத்தில் கூட ஒருவித தூக்க கலக் கத்திலேயே இருக்கும் உணர்வுடன் காணப்படுகிறார்கள்.நீண்ட கால தூக்கமின்மை, குழப்ப மனப்பான்மை, பதற்றம், எந்த வேலையும் செய்ய முடியாத சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் செல்போன் மூலம் தங்கள் வயதுக்கு பொருத்தமற்ற நண்பர்கள் அல்லது குழுவில் பகிர்ந்து கொள்ளும் பொருத்தமற்ற செய்திகள், ஆபாச படங்கள் அல்லது உரையாடல்களை காணும் போது அவர்கள் சிறு வயதிலேயே ஆபாசங்களை நோக்கி நகரும் அபாயம் இருக்கிறது. இது உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி நடத்தை மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள். இது தவிர, தொடர்ந்து செல்போன் பயன்ப டுத்துவதால் கை விரல் எலும்பு, கழுத்து எலும்பு தேய்மானம், பிரச்சினை கண்களில் வறட்சி மற்றும் பார்வைத்திறன் குறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. செல்போன் களை நீண்ட நேரம் பயன்படுத்தி இரவில் தாமதமாக உறங்க செல்பவர்களுக்கு நோய் எதிர்ப்புதிறன் குறைவு, சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஸ்டான்போர்ட் பல்க லைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.இங்கிலாந்தில் உள்ள 74 ஆயிரம் பேரிடம் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது   குழந்தைகள்முதல்பெரியவர்கள்வரை FREEFIRE என்றMOBILEPHONE விளையாட்,டினைகோடைவிடுமுறைநாட்களில் விளையாடுகின்றனர் இதனால் இரவு தூங்கும் போது கூட  விளையாட்,டினை பத்தி புலம்புகின்றனர். இது பெற்றோர்கள் மத்தியில் பெறும் மன வருத்தமும், கொஞ்சம் பயத்தினையும் உண்டாக்குகின்றது 

Jul 02, 2024

“A2B  அடையாறு ஆனந்த பவன் ஊட்டச் சத்தில் புரட்சி" ஒரு தட்டுக்கு ரூ.500க்கு டாக்டர்கள் தயாரித்த இட்லியை அறிமுகப்படுத்தியுள்ளது.,

அடையாறு ஆனந்த பவன்  உணவகத்தில் ரூ. 500 மதிப்புள்ள இட்லி வழங்கப்படுகிறது: RS 500/- இட்லிகள் அவுரிநெல்லிகள், தோல் இல்லாமல் ஊறவைத்த பாதாம், ஆலிவ் எண்ணெய், குங்குமப்பூ, வெண்ணெய் கறி மற்றும் சில நறுக்கப்பட்ட கொத்தமல்லி உள்ளிட்ட பஞ்சுபோன்றகச்சிதமானஇட்லி.""உங்கள்நல்வாழ்வைமேம்படுத்துவதற்காகமிகவும்கவனமாகவடிவமைக்கப்பட்டுள்ளது" என்று ஒரு செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளதுஆலிவ்எண்ணெய்,அவுரிநெல்லிகள், ஆளிவிதைகள், பாதாம், ஷிடேக் காளான் சாறு மற்றும் அஸ்வகந்தா போன்ற பொருட்களால் செய்யப்பட்ட இட்லி, "72 பயோமார்க்ஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் ஊட்டச்சத்துக்களின் சக்தி மையமாக உள்ளது, உட்புறத்தில் இருந்து உகந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.புதிய வைட்டமின் நிறைந்தது. நீரிழிவு நோய்க்கு ஏற்றது மற்றும் "சமச்சீர் இரத்த சர்க்கரை அளவுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று அது மேலும் கூறியது. "கொட்டை எண்ணெய்கள் இல்லை: ஒரு ஆரோக்கியமான மாற்று, அழற்சி நட்டு எண்ணெய்கள் இல்லாதது.", இது எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமானதாக அமைகிறது. "குழந்தைகள் முதல் தாத்தா பாட்டி வரை அனைவருக்கும் ஊட்டமளிக்கும். 

Jul 01, 2024

.ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் சம்பளம், வீடு முதல் மின்சாரம் வரை வேறு சலுகைகள் என்ன எல்லாம் கிடைக்கும்

நமது நாட்டில் ஐஏஎஸ்மற்றும் ஐபிஎஸ்உள்ளிட்ட உயர்பதவிகளில் இருப்போருக்குச் சம்பளம் எவ்வளவு கிடைக்கும்என்ற கேள்விபலருக்கும் இருக்கும்.. நமது நாட்டின்யுபிஎஸ்சி தேர்வுமுடிவுகள் சமீபத்தில்வெளியானது. இதில்மொத்தம்1016 பேர்தேர்ச்சி பெற்றுள்ளநிலையில், அதில்ஆதித்ய ஸ்ரீவஸ்தவாஎன்பவர் முதல்இடத்தை பிடித்துள்ளார்.அவர்களில்664 பேர்ஆண்கள் மற்றும்352 பெண்கள் ஆவர்.நம்மில் பலருக்கும்இதுபோன்ற ஐஏஎஸ்மற்றும் ஐபிஎஸ்அதிகாரிகளுக்கு எந்தளவுக்குஊதியம் இருக்கும்என்ற சந்தேகம்இருக்கும். ஐஏஎஸ்உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான ஊதியகட்டமைப்பை7ஆவதுமத்திய ஊதியக்குழு மறுசீரமைத்துள்ளது.இதில் பே கிரேட் முறைக்குப்பதிலாக பே லெவல்கள் முறைமுன்மொழியப்பட்டுள்ளன. சீனியாரிட்டிமற்றும் ஒருவர்இருக்கும் பதவியின்அடிப்படையில் ஊதியத்தில்மாற்றங்கள் வரும்.. அடிப்படையில் ஒருஐஏஎஸ் அதிகாரியின்சம்பளம் மாதம்ரூ.56,100ஆகஉள்ளது. சர்வீஸ்அதிகரிக்கும் போதுஅவர்களின் உயர்பதவிகளுக்குச் செல்வார்கள்.அப்போது அவர்களின்அடிப்படை ஊதியம், அலவுன்ஸ் அதிகரிக்கும்..ஐஏஎஸ் அதிகாரிஒருவரால் அதிகபட்சம்இந்திய கேபினட்செயலாளர் பொறுப்புவரை செல்லமுடியும். அப்போதுஅவர்களுக்கு ரூ.2.5 லட்சம் வரைசம்பளம் கிடைக்கும்.ஐஏஎஸ்அதிகாரிகள் சப்டிவிஷனல் மாஜிஸ்திரேட்உள்ளிட்ட லெவல்10 பதவிகளில் இருந்தேதங்கள் கேரியரைதொடங்குவார்கள். அவர்கள்மெல்லப் பதவிஉயர்வைப் பெற்றுஅதிகபட்சம் லெவல்18இல் இருக்கும்கேபினட் செயலர்பதவிக்கு வரலாம். லெவல்10இல்இருக்கும் ஒருஐஏஎஸ் அதிகாரியின்அடிப்படை ஊதியம்மாதம் ரூ.56,100இல் தொடங்குகிறது.பொதுவாக ஒருவர்தங்கள் கேரியரின்முதல் நான்குவருடங்கள் இந்தபே லெவலில்இருப்பார்கள். அதற்குஅடுத்துக் கூடுதல்மாவட்ட மாஜிஸ்திரேட்உள்ளிட்ட லெவல்11,,13 பதவிகளில் இருப்போருக்குஅடிப்படை ஊதியம்ரூ.67,700இல்தொடங்கும்.. இதில்அவர்கள் அதிகபட்சம்1,18,500 ரூபாய் வரைஊதியம் கிடைக்கும். அடுத்த கட்டமாகக்கூடுதல் மாவட்டமாஜிஸ்திரேட் உள்ளிட்டபதவிகளைக் கொண்டலெவல்14,,15இல்இருப்போருக்கு அடிப்படைஊதியம் ரூ.1,44,200இல் இருந்துதொடங்குகிறது. இதில்முதன்மைச் செயலாளர்மற்றும் கூடுதல்செயலாளர் போன்றலெவல்15இல்இருப்போருக்கு ரூ.1,82,200 அடிப்படை ஊதியமாகக்கிடைக்கும். அடுத்துக் கூடுதல் தலைமைச்செயலாளர் உள்ளிட்டபதவிகளைக் கொண்டலெவல்16இல்அடிப்படை ஊதியமாகரூ.2,05,400 கிடைக்கிறது.தலைமைச் செயலாளர்உள்ளிட்ட உச்சபட்சபதவிகளைக் கொண்டலெவல்17 மற்றும்18இல் ஒருவருக்குரூ.2,25,000 மற்றும்ரூ.2,50,000 வரைஊதியமாகக் கிடைக்கும்.ஒரு ஐஏஎஸ்அதிகாரிக்கு வீட்டில்காவலர்களும்,2 தனிப்பட்டகாவலர்கள் என மொத்தம்5 பேர்பாதுகாப்பிற்கு வழங்கப்படுவார்கள்..அவர்களின் உயிருக்குஅச்சுறுத்தல் இருந்தால்ஸ்பெஷல் டாஸ்க்போர்ஸ் பணிஅமர்த்தப்படுவார்கள். மேலும்அவர்களின் பதவி, ஊதியம் மற்றும்சீனியாரிட்டி அடிப்படையில்பங்களாக்கள் ஒதுக்கப்படும்.அதில் சிலகுறிப்பிட்ட ஊழியர்களையும்பணி அமர்த்திக்கொள்ளலாம்.ஐஏஎஸ் அதிகாரிஅதிகாரப்பூர்வ பயணமாகச்சென்றாலும் சரிதனிப்பட்ட பயணமாகச்சென்றாலும் சரிஅவர்கள் வெளியூர்களில்அரசு குடியிருப்புகள் அல்லது விருந்தினர் மாளிகைகளைஇலவசமாகப் பயன்படுத்தலாம்.அதிகாரப்பூர்வ இல்லத்தில்அவர்கள் மின்சாரகட்டணத்தைச் செலுத்தத்தேவையில்லை. மேலும், அதிகாரப்பூர்வ பணிகளுக்குப்பயன்படுத்த கார்களும்வழங்கப்படும்.

Jun 29, 2024

விமான நிலையங்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை டிஜி யாத்ரா

 விமானங்களின் பயணிக்கும் பயணிகளின் ஒவ்வொரு அடையாளத்தினையும் சேமித்து வைக்க புதிய டிஜி யாத்ராதிட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம். முதல் கட்டமாக பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் நடைமுறைப்படுத்தியது..டிஜி யாத்ரா” என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இத்திட்டத்தில் தங்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், மற்றும் அடையாள அட்டைகளில் ஒன்றினை சமர்பித்து டிஜி யாத்ராவின் அடையாள அட்டையை பயணிகள் வாங்கிக் கொள்ள வேண்டும்.டிக்கெட் புக் செய்யப்படும் போதே டிஜி யாத்ரா ஐடி க்ரியேட் செய்யப்படும். விமானத்தில் பயணிப்பதற்கு முன்பாக பயணிகளின் கையில் தரப்படும். விமான நிலையங்களில் வைக்கப்பட இருக்கும் பயோமெட்ரிக் சிஸ்டத்தில் தங்களின் முக அடையாளத்தினை பயணிகள் ஒரு முறை பதிவு செய்வது அவசியமாகிறது. அப்படி ஒரு முறை பதிவு செய்யப்பட்ட பின்பு பயணியின் ஃப்ரோபைலில் அது பாதுகாக்கப்படும்.இதில் பதிவு செய்து கொண்ட ஒரு பயணி இ - கேட் வழியாக டிக்கெட்டினை ஸ்கேன் செய்து கொள்ளலாம். அப்படி செய்யும் போது PNR மற்றும் பயணியின் முக அடையாளம் என இரண்டையும் சேர்த்து ஒரு டோக்கனை ஜெனரேட் செய்யும் என்று இத்திட்டம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. முதலில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி டெல்லி, வாரணாசி, பெங்களூருவில் டிஜி யாத்ரா சேவை ஆரம்பிக்கப்பட்டது. பின்பு 2023 ஆம் ஆண்டு மும்பை, அக மதாபாத், கொச்சி, லக்னோ, ஜெய்ப்பூர், கௌஹாத்தியில் சேவை தொடங்கியது. இச் சேவையில் தற்போது விஜயவாடா, புனே, ஹைதராபாத் , கல்கத்தா, சென்னையில் 31 மார்ச் 2024 லிருந்து டிஜி யாத்ரா சேவை தொடங்கியுள்ளது . டிஜியாத்ரா சேவை ஆறு ஆண்டுகளுக்குமுன்புஇந்தியாவில்அறிமுகப்படுத்தப்பட்டது. தற்சமயம், இது விரிவாக்கத்திற்கு உட்பட்டுள்ளது மற்றும் நாடு முழுவதும் உள்ள பல விமான நிலையங்கள் இந்த முறையை செயல்படுத்தியுள்ளன.AAI அதிகாரி கூறும்போது, ​​“அவர்கள் தங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்ய உள்ளிட வேண்டும், அதன் பிறகு, பயணத்திற்கு முன் அவர்களின் விமான விவரங்களை உள்ளிட வேண்டும். அவர்களும் தாங்களாகவே படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். பயணிகள் விமான நிலையத்தை அடைந்ததும், செயலி மூலம் உருவாக்கப்பட்ட QR குறியீடு மின்-வாயிலில் காட்டப்பட வேண்டும், மேலும் அங்குள்ள கேமரா அவர்களின் புகைப்படத்தை எடுக்கும். அதேபோல், பாதுகாப்பு சோதனை மற்றும் போர்டிங் முன், அவர்கள் முகத்தை ஸ்கேன் செய்த பிறகு எளிதாக. டிஜியாத்ரா பயணிகளுக்கு தனி இ-கேட் இருக்கும்."பயணிகளை கட்டாயப்படுத்த மாட்டோம். அவர்கள் வசதியாக இருப்பதாகக் கருதி, அதைப் பயன்படுத்த விரும்பினால், அவர்கள் அவ்வாறு செய்யலாம், டிஜியாத்ரா அமைப்பு என்றால் என்ன?DigiYtra வசதிக்கு, நுழைவு மற்றும் பாதுகாப்புச் சோதனைப் பகுதிகளில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நேரத்தைக் குறைக்கும் நோக்கில், அமைப்பில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.கைமுறைசெக்இன்களைவிடவேகமாகவிமானத்தில்ஏறும்முன்தேவையானநடைமுறைகளைமுடிக்கஇதுஅவர்களுக்குஉதவுகிறது.கணினியைப் பயன்படுத்த, தனிநபர்கள் முதலில் DigiYatra செயலியில் பதிவிறக்கம் செய்துபதிவுசெய்யவேண்டும்.தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களில் சேவையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறி பலர் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். “நாங்கள் பயணிகளை கட்டாயப்படுத்த மாட்டோம். அவர்கள் வசதியாக இருப்பதாகக் கருதி, அதைப் பயன்படுத்த விரும்பினால், அவர்கள் அவ்வாறு செய்யலாம்.

1 2 ... 14 15 16 17 18 19 20 ... 47 48

AD's



More News