25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Aug 01, 2026

மாணவர்களுக்கு இலவச பேருந்துப் பயணம்: குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம்

கல்வியை அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாக்கவும்,குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு, சீருடைஅணிந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில்இலவசமாகப் பயணம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்ல தினமும் நீண்ட தூரம் பயணம்செய்யும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, போக்குவரத்து செலவுஆண்டுக்கு கணிசமான தொகையாக உயர்கிறது. இந்தச் செலவுகல்விக்கு தடையாக அமையக் கூடாது என்பதே அரசின் நோக்கமாகும்.மலிவான மற்றும் நம்பகமான போக்குவரத்து வசதி மாணவர்களின்வருகையை அதிகரிக்கவும், பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக்குறைக்கவும், இடைநிற்றல் இன்றி மாணவர்கள் தங்கள் கல்வியைத்தொடரவும் இந்தத் திட்டம் உதவும் என கல்வியாளர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.கல்விக்கான ஆதரவு என்பது வகுப்பறைகள் மற்றும்பாடப்புத்தகங்களுடன் மட்டுப்படுவதில்லை; மாணவர்கள் தினமும்பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் கல்வி நிலையங்களை அடையவழிவகுப்பதும் அதில் முக்கியப் பங்காகும்.மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதன்மூலம், ஆயிரக்கணக்கான மாணவர்களும் அவர்களது குடும்பங்களும்நேரடியாகப் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aug 01, 2026

இந்தியாவின் முதல் AI ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகம் திறப்பு.

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்தசெங்குத்து பல்கலைக்கழக வளாகமான VELS-இன் திருவான்மியூர்வளாகத்தை ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும்தலைமை விஞ்ஞானி பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக கூட்டாட்சி தேசிய மன்ற உறுப்பினர்அகமது மிர் ஹாஷிம் கூரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். VELSநிறுவனர்-வேந்தர் டாக்டர் இஷாரி கே. கணேஷ், துணைத் தலைவர்டாக்டர் பிரீதா கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் தொழில்துறைசார்ந்த கற்றலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில்,இன்டெல், டிசிஎஸ் அயன், மைக்ரோசாப்ட், ஆரக்கிள் உள்ளிட்டநிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் விமானப் பயிற்சிப் பள்ளிஅமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதுடன்,ஜோஹோ நிறுவனத்துடனும் AI மற்றும் ஆராய்ச்சி துறைகளில்விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என VELS அறிவித்தது.மாணவர்களுடன் கலந்துரையாடிய ஸ்ரீதர் வேம்பு, உள்நாட்டுதொழில்நுட்ப வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சியில் கவனம்செலுத்தி, இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில்பங்களிக்குமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.

Aug 01, 2026

பள்ளிகள், இனி சனிக்கிழமை விடுமுறை:

 இனி சனிக்கிழமை விடுமுறை: தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என அறிவிப்பு.வேலை நாட்கள் குறைப்பு: இதன் மூலம் மொத்த பள்ளி வேலை நாட்கள் 220 நாட்களிலிருந்து 210 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

Aug 01, 2026

ஜியோ VS ஏர்டெல் மொபைல் கட்டண உயர்வு.

ஜியோ VS ஏர்டெல்: ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்களது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 15% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளன.காரணம்: 5G தொலைத்தொடர்பு முதலீட்டை மீட்கவும், லாபத்தை அதிகரிக்கவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

Aug 01, 2026

PM-JAY ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்.விண்ணப்பிக்கும் முறை: அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் அல்லது pmjay.gov.in இணையதளத்தில் குடும்ப அட்டை (Ration Card) மற்றும் அடையாள ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 10 - 15 நாட்களில் 'கோல்டன் கார்டு' வழங்கப்படும்.

Aug 01, 2026

உலக இடம்பெயர்வு அறிக்கை 2026.

வெளிநாடுகளில் வாழும் மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்குப் பணம் அனுப்புவதில் இந்தியா 137 பில்லியன் டாலர்களுடன் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது.2010 முதல் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் இந்தியா, 100 பில்லியன் டாலர் இலக்கைக் கடந்த ஒரே நாடாகும். இதில் மெக்சிகோ 2-வது இடத்தில் உள்ளது. உலகிலேயே அதிக பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நாடாக அமெரிக்கா நீடிக்கிறது.

Jul 31, 2026

கோவையில் L&T-யின் எலக்ட்ரானிக்ஸ் ஹப்.

தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் ₹5,000 கோடி முதலீடு செய்ய L&T திட்டமிட்டுள்ளது. கோவையில் 40 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் புதிய உற்பத்தி வளாகத்தின் மூலம் சுமார் 5,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jul 31, 2026

தமிழரின் மனிதநேய வரலாறு: 'பாலம்' கல்யாணசுந்தரம்.

திருநெல்வேலியில் பிறந்த நூலகர் 'பாலம்' கல்யாணசுந்தரம், தன் வாழ்நாள் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சொத்துக்களை ஏழை குழந்தைகளின் கல்விக்காகத் தானமாக வழங்கியுள்ளார்.அமெரிக்காவின் 'Man of the Millennium' விருதுடன் கிடைத்த ரூ.30 கோடி பரிசுத் தொகையையும் ஏழைகளுக்கே வழங்கிய இவருக்கு, இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

Jul 31, 2026

விண்வெளிச் செய்தி (SpaceX சாட்டிலைட்).

SpaceX நிறுவனம் 2026-ம் ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 50 ராக்கெட்டுகளை ஏவி சாதனை படைத்துள்ளது.ஏப்ரலில் ஏவப்பட்ட 50-வது ராக்கெட் மூலம் 25 ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டன. இதன் மூலம் விண்வெளியில் உள்ள மொத்த ஸ்டார்லிங்க் சாட்டிலைட்களின் எண்ணிக்கை 10,300-ஐ நெருங்கியுள்ளது.

Jul 30, 2026

மதுரை விமான நிலையம்... புதிய உயரத்திற்கு பறக்கிறது!

மதுரை சர்வதேச விமான நிலையம் வேகமாக விரிவாக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 2,000 பயணிகள் பயணிக்கும் வசதி, 10,000 சதுர மீட்டர் கூடுதல் பரப்பு, புதிய Parking Bay, பயணிகள் பாலம் மற்றும் 2 புதிய Baggage Carousels உள்ளிட்ட வசதிகள் உருவாகின்றன. இந்த மேம்பாடு தென் தமிழகத்தின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்திற்கு புதிய வளர்ச்சிப் பாதையை உருவாக்கும்.

1 2 ... 15 16 17 18 19 20 21 ... 136 137

AD's



More News