பொழியும் மழையானது மலை உச்சிகளில் இருந்து சுனைகளாகி ஓடைகளாக உருமாறி ஓடைகள் ஒன்றிணைந்து பின் அருவிகளாக வீழ்ந்து ஆறுகளாகப் பயணம் செய்து ஆங்காங்கே அணைகளாக நின்று கால்வாய் வழியோடி குளங்கள் கண்மாய்களை நிரப்பிப் பின் ஆழியில் கலக்கின்றன. இந்த நீர் சுழற்சியில் நிலத்தடியிலும் நீர் சென்றடைகிறது. அதில் நன்னீரும் உண்டு. உப்பு நீரும் உண்டு. இவ்வாறாக வளர்ந்து முன்னேறிய நகரங்களில் கிராமங்களில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மூலம் பருகுவதற்கான நன்னீர் - நிலத்தடி குழாய்கள் மூலம் வீடுகளை வந்து அடைகின்றன. இன்னும் பல இடங்களில் வறட்சி நிலவும் இடங்களில் /காலங்களில் மக்கள் ஆர். ஓ நீரைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளது. பெரும் தொழில் நிறுவனங்கள் முதல் பேரடுக்கு மாடிக் கட்டிடங்கள் வரை ஆர். ஓ நீர்க் குடுவைகளை நம்பி இருக்கும் சூழல் உள்ளது.பல வீடுகளிலும் தங்களது சமையலறையில் ஆர். ஓ சாதனம் பொருத்தப்பட்டு அதில் இருந்து வரும் நீரைப் பருகும் சூழலும் உள்ளது. குடிப்பதற்கு ஒவ்வாத கார்ப்புச் சுவையில் உப்பு கலந்து இருக்கும் நீரை யாரும் அருந்துவதில்லை. இரண்டாவது அம்சம்- சுத்தமானதாக இருக்க வேண்டும். இந்த சுத்தத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று கண்ணால் காணும் சுத்தம். மற்றொன்று நுண்ணியிரிகளில்லாத சுத்தம் கண்ணால் காணும் போது தண்ணீரானது கலங்கல் இல்லாமல் எந்த மண் சேறு இல்லாமல் நிறமேதுமற்று இருக்க வேண்டும். மேலும் அவற்றுள் கலந்திருக்கும் அமிழ்த்தப்பட்டுள்ள மொத்த திடப்பொருட்களின் அளவுகள் ( TOTAL DISSOLVED SOLIDS)குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாக இதைTDS என்று இனி அழைப்போம். இந்தTDS இல்- உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கனிமங்களான கேட்மியம், அஸ்பெஸ்டாஸ், ஈயம், இரும்பு போன்றவையும்- உடலுக்கு நுண்ணிய அளவில் தேவையான கனிமங்களான மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்றவையும் அடங்கும். இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நீரின் டிடிஎஸ் அளவு லிட்டருக்கு500 மில்லிகிராம் அல்லது பிபிஎம் என்ற அளவுக்குள் இருப்பது பருகுவதற்கு உகந்ததாகும். உலக சுகாதார நிறுவனம் இந்தத் தரத்தை டிடிஎஸ் அளவுகள் ஒரு லிட்டருக்கு300 மில்லிகிராம் அல்லது பிபிஎம் என்ற அளவுக்குள் வைக்கக் கூறுகிறது.இந்த பிபிஎம் அளவு குறைந்தபட்சம்50 மில்லிகிராம் அளவாவது பருகும் நீரில் இருக்க வேண்டும் என்ற நிர்ணயத்தையும் உலக சுகாதார நிறுவனம் வகுத்திருக்கிறது. விளைவாக கிட்டத்தட்ட எந்த கனிமங்களும் இல்லாத நீர் நமக்குக் கிடைக்கிறது. இந்த நீரில் உப்பு அறவே இருக்காது என்பதால் பருகுவதற்கு நல்ல சுவையில் இருக்கும்.மைக்ரோபயாலஜிகள் ஃபிட்னஸ் எனப்படும் நுண்ணியிரிகளிடத்தில் இருந்துமுழு சுத்தமாகஇருக்கிறதா? ஆம்... இல்லை என்றுஇருபதில்கள் தரலாம். எதிர்திசை சவ்வூடுபரவல், கார்பன்வடிகட்டிகள், புறஊதாக்கதிர்கள் பாய்ச்சுதல்,ஓசோன் வாயுவில்புகச்செய்வது, மூலம்நாம் அருந்தும்வாட்டர் கேன்நீர் சுத்தம்செய்யப்படுவதால் அதில்பாக்டீரியாக்களோ வைரஸ்களோமற்றும் அவற்றின்முட்டைகளோ நுண்வடிவங்களோ முற்றிலுமாகஅழிக்கப்படுகின்றன.
. பிறந்ததுமுதல்குழந்தைகள்பெரும்பாலும்தனதுதாயின்அரவணைப்பிலேயேதான்தூங்கிப் பழக்கப்பட்டிருக்கும். ஆனாலும், எந்தவயது வரை குழந்தையை தங்களது அரவணைப்பில் தூங்க வைக்க வேண்டும் என்ற சந்தேகம் பெற்றோர்கள் பலருக்கும் இருக்கிறது.பொதுவாக, ஏழுவயது வரை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்களோடு தூங்க வைக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர். ஏழு வயது வரை அவர்கள் மனதளவில் குழந்தைதான். எனவே, இருட்டைக்கண்டு பயப்படுவது, அழுவது போன்றவை நிகழாமல் இருக்க பெற்றவர்களுடன் தூங்குவதே சரியானது. அவர்களுக்குஅந்த வயது வரை தாயின் அணைப்பு நிச்சயம் தேவை. குழந்தைதானாகவே எப்பொழுது தனிமையை விரும்புகிறதோ அந்த நாள் வரை குழந்தையுடன் நாம் சேர்ந்து தூங்குவதில் தவறில்லை. வயதாகஆக உனக்கென்று ஒரு அறை அவசியம் என்பதை நிதானமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்து அவர்களை இரவு தனி அறையில் தூங்கப் பழக்கலாம்.குழந்தைகளுக்குஉடம்பு சரியில்லை என்றால், தனியாக தூங்கும்போதுபயம் உண்டாகலாம் அல்லது அடிக்கடி விழிப்புணர்வுவந்தாலோ அந்த சமயத்தில்குழந்தைகளை தனியாக படுக்க விடாமல் தாயின் அணைப்பில் வைத்திருப்பதுநல்லது.ஏழு முதல் எட்டு வயதுக்குப் பிறகு குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்கலாம். அதையும்எடுத்த உடனே, ‘உனக்குஇவ்வளவு வயசு ஆயிடுத்து. இனிநீ தனி ரூம்லதான் தூங்கணும்’ என்றுசொன்னால் பயப்படுவார்கள். எனவே, தனிஅறையில் அவர்களுக்கென ஸ்பெஷலாக படுக்கை ஏற்பாடு செய்து கொடுத்து,‘இதுஇனி உன் ரூம், உனக்கேஉனக்கானது, இதனை நீதான் அழகாக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்’ எனகூறினால் அவர்கள் அங்கு தூங்குவதை விரும்புவார்கள்.ஒரு சில குழந்தைகள் ஸ்பெஷலாக அறையை கொடுத்தாலும் இருளைக் கண்டு பயந்து, பெற்றோர்இல்லாமல் தூங்க மாட்டார்கள். எனவே, தனியாகதூங்க விரும்பாத குழந்தைகளை தாத்தா, பாட்டிஎன்று பெரியவர்கள் யாரேனும் வீட்டில் இருந்தால் அவர்களுடன் தூங்க வைக்கலாம்.அதேபோல், அவர்கள் தூங்கச் செல்வதற்கு முன் டிவி, மொபைல் ஃபோன்களை பயன்படுத்த ஊக்குவிக்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் தூக்கம் வரும் வரை புத்தகங்கள் படிக்க பழக்கலாம் அல்லது நல்ல இசையை கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். இப்படிச் செய்ய ஆரம்பித்தால் குழந்தைகள் பயமின்றி தாமாகவே தனி அறையில் தூங்கி விடுவார்கள்
திருப்பூர் மாவட்டம் படியூர் கிராமத்தில் உள்ள Rose Gardenல் வாழும் இஸ்லாமியர்கள் அங்கு உள்ள இந்து மக்கள் கோவில் கட்டுவதற்கு 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சில மாதங்களுக்கு முன் தானமாக வழங்கினார்கள். தற்போது கட்டி முடிக்க பெற்ற கோவிலின் குடமுழுக்கு விழாவில் அன்னதானம் வழங்க 30,000 ரூபாய் நன்கொடை வழங்கியதோடு, 'சீர் வரிசை'யும் கொடுத்து ஆச்சிரிய படுத்தி உள்ளனர். பக்தர் மகுடேஸ்வரன் இதுதொடர்பாக கூறுகையில், “விநாயகர் கோவில் வேண்டுமென்று இந்துக்களாகிய நாங்கள் கேட்டபோது, அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையில், அங்குள்ள முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று சென்ட் நிலத்தை இஸ்லாமியர்கள் வழங்கினர். உடனே அவர்கள், ‘எம்மதமும் சம்மதம்; நாம் அனைவரும் ஒருவரே’ என்று மூன்று செண்ட் இடம் வழங்கி மேலும் அன்னதானத்திற்கு பணம் வழங்கி இந்த ஆலய திருப்பணிகளைச் செய்து கும்பாபிஷேகத்தை நடத்தினோம்” என தெரிவித்தார்.
தென்காசி அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் குற்றாலத்தை 'தமிழ்நாட்டின் புதையல்' என்றே கூறலாம். உலகின் வேறு எந்த மலை சார்ந்த ஊருக்கும் இல்லாத பெருமை குற்றாலத்திற்கு உண்டு. புராண, இலக்கிய காலங்களில் குற்றாலத்தை பிதுர் கண்டம் தீர்த்த புரம், சிவத்துரோகம் தீர்த்த புரம், வசந்தப்பேரூர், முதுகங்கை வந்தபுரம், செண்பகாரணிய சேத்ரம், நன்னகரம், வேடன் வலஞ்செய்த புரம், யானை பூசித்த புரம், சிவ முகுந்த பிரம புரம், திரிகூடபுரம், முனிக்கு உருகும் பேரூர் என்றெல்லாம் சிறப்பித்து அழைத் துள்ளனர்..குற்றாலத்தில் எங்கும் குறுகிய ஆலமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் குறுகிய + ஆலம் = குற்றாலம் என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தென் மேற்கு பருவமழை காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக கடக்கும் குளிர்ந்த காற்றே பொதிகை மலையின் தடுப்பால் சாரல் மழையாகப் பொழிந்து குற்றாலம் அருவிகளாக தண்ணீர் பொங்கிப் பாய்கிறது. தேனருவி, செண்பகாதேவி அருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்டவை குற்றாலத்திற்கு சிறப்பு சேர்ப்பவை. குற்றால அருவிகளில் குளித்தால் மனநலன், தோல் நோய், ரத்த அழுத்தம் சார்ந்த பாதிப்புகள் குறைவதாக காலம் காலமாக நம்பிக்கை உள்ளது. குற்றால அருவி நீர்,மலையின் மேல் ஓடி வரும்போது பல ஆயிரக்கணக்கான மூலிகைகளை தழுவியும் மலையில் இருக்கும் கனிமங்களுடன் கலந்தும் வருவதால் பல்வேறு நோய்களை தீர்க்கும் மூலிகை நீராக மாறி விடுவதாக கூறப்படுகிறது. குற்றால மலைகளில் 2 ஆயிரம் வகையான மூலிகை தாவரங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மா, பலா, மலை வாழை, மங்குஸ்தான், சீத்தா, கொய்யா, நெல்லி, சப்போட்டா உள்பட ஏராளமான பழமரங்களும், மலை பாறைகளில் கிடைக்கும் தேனும் தனித்துவமான ருசி கொண்டவை.
1972 முதல் தற்போது வரை சுமார்1518 கிலோ தங்கத் துகள்கள் மவுண்ட்ஏர்பஸ்(MountErebus) எரிமலையில் இருந்து தூசி வடிவில் வளிமண்டலத்தை அடைந்துள்ளன.எரிமலைக்கு அடியில் தங்கச் சுரங்கம் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள்கருதுகின்றனர். அண்டார்டிகாவில் உள்ள மவுண்ட் ஏர்பஸ்(MountErebus) தினமும்80 கிராம்தங்கத்தைகக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.அதாவது, தினமும்கிட்டத்தட்ட $6,000 மதிப்புள்ள தங்கம் இந்தத் எரிமலையிலிருந்து வெளியேறுகிறது.இதுவரை 1500 கிலோவிற்கு மேல் கக்கியதாக கணிப்பு621 மைல் தொலைவில் அமைந்திருந்தாலும், எரேபஸின்12,448 அடி உயரம் காரணமாக தங்க தூசி தொலைதூர பகுதிகளை அடைகிறது.Erebus மலையானது ஒரு மெல்லிய மேலோட்டத்தின் மேல் அமர்ந்திருப்பதாக நாசா விவரிக்கிறது, இதனால் உருகிய பாறைகள் பூமியின் உட்புறத்தில் இருந்து எளிதாக உயரும்..எரிமலை தொடர்ந்து வாயு மற்றும் நீராவியை வெளியிடுகிறது, எப்போதாவது ஸ்ட்ரோம்போலியன் வெடிப்புகளில் பாறைகளை வெளியேற்றுகிறது.
வேலைப்பளு, அலைச்சல், பொருளாதார வசதியின்மைஉட்பட பல்வேறு காரணங்களால் இன்று மன அழுத்தம் பலருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவயதி னரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது, தோட்டதுக்கு தண்ணீர் விடுவது, வீட்டு விலங்குகள் , பறவை களுடன் நேரம் செலவிடுவது போன்றவை மன அழுத்தத்தை குறைக்கும். நேர்மையான சிந்தனை உள்ள நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டும் செய்தல், முக்கிய மான பணிகளை முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல் போன்றவையும் பயனளிக்கும். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள் ளுவதால், மன அழுத்தம் வராமல் தவிர்க்க இயலும்.
ஒரு ராணுவ வீரருக்கு கிடைக்கும் மிக பெரிய பெருமை, இறுதியில் தன் தாய் மண்ணில் மரியாதையோடு உறங்கி போவது. ஆனால் கார்கில் போரில் இறந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் உடலை அடையாள அட்டை உள்ளிட்ட பல ஆவணங்களை காட்டியும், இந்தியாவில் விட்டு சென்றது பாகிஸ்தான் அரசு.அதே வேளையில் போரில் இறந்த அவர்களுக்கு Salat al-Janazah வாசித்து Meccaவை நோக்கி தலையை வைத்து, பாகிஸ்தான் கொடி போர்த்தி, இறுதிச் சடங்குகளை செய்தது இந்திய ராணுவம். அவர்களின் இந்த மனிதநேயம் தான் இன்றும் உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிர செய்கிறது.
நோர்வே நாட்டில் நடைபெற்று முடிந்த 'செஸ் 2024' தொடரில் உலகின் முதல் வீரரான கார்ல்சனை அவரது சொந்த நாட்டில் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு அடையாளமாய் திகழும் மாஸ்டர் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகத்தையே அதிரவிட்டார் .செஸ் விளையாட்டில் சாதனை புரிந்து வருகின்றனர். செஸ் சேம்பியன் பிரக்ஞானந்தா இவரது சகோதரி வைஷாலி இவர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஐசிஐசிஐவங்கியானது ஐஎம்பிஎஸ் சேவைக்கானசேவை கட்டணத்தில்(IMPSServiceCharge) திருத்தம் செய்துள்ளது.இதன்கீழ் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஐஎம்பிஎஸ் சேவையைபயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ரூ.15 வரை கட்டணம்செலுத்த வேண்டும். முன்னரேகுறிப்பிட்டபடி இந்த மாற்றம்மே1,2024 முதல் அமலுக்கு வரும்ஐஎம்பிஎஸ்சேவைக்கான ரூ.15 கட்டணம்என்பது.. ஐசிஐசிஐ வங்கி வழியாக நடக்கும்அனைத்து வகையான பணப்பரிமாற்றத்திற்கும்பொருந்தாது. மாறாக ரூ.25,000- ரூ.5 லட்சம் வரையிலானதொகையை.. ஐஎம்பிஎஸ் சேவை வழியாக பரிமாற்றம்செய்யும் போது மட்டுமேவசூலிக்கப்படும்.இந்த கட்டணம் ஒவ்வொருமுறையும் ரூ.25,000- ரூ.5 லட்சம்வரையிலான தொகை அனுப்பும்போதும்வசூலிக்கப்படும்.நீங்கள்ரூ.1,000- ரூ.25,000க்குள் என்கிற வரம்பிற்குள்ஐசிஐசிஐ ஐஎம்பிஎஸ் சேவை வழியாக பணப்பரிமாற்றம்செய்தால் ரூ.5 கட்டணம்வசூலிக்கப்படும்.இதுவும் ஒவ்வொரு முறையும்பணப்பரிமாற்றம் செய்யும் போதும்வசூலிக்கப்படும். ரூ.1,000 என்கிற வரம்பிற்குள்ஐசிஐசிஐ ஐஎம்பிஎஸ் சேவை வழியாக பணப்பரிமாற்றம்செய்தால் ரூ.2.50 கட்டணம்வசூலிக்கப்படும். இந்த கட்டணமும் கூட, நீங்கள் ஒவ்வொரு முறையும்ரூ,.1000 வரை பணப்பரிமாற்றம்செய்யும் போதும் வசூலிக்கப்படும்.ஐஎம்பிஎஸ் சேவைக்கான சேவை கட்டணத்தில் மட்டுமின்றிஐசிஐசிஐ வங்கியானது ஹோம் பிரான்ச் பணப்பரிமாற்றம், நான்-ஹோம் பிரான்ச்பணப்பரிமாற்றம், டெபிட் கார்டுகளுக்கானவருடாந்திர கட்டணம் தொடங்கிலாக்கர் வாடகை வரையிலாக.. பல வகையான சேவை கட்டணங்களில் மாற்றங்களைகொண்டுவந்துள்ளது.இவைகள் எல்லாமே மே1 முதல் .ஹோம் பிரான்ச்பணப் பரிமாற்றம் (Home Branch Cash Transaction): மாதத்திற்குமுதல் 3 இலவச பணப் பரிமாற்றங்கள் கிடைக்கும். நான் ஹோம் பிரான்ச்பணப் பரிமாற்றம்(NonHomeBranchCashTransaction): ஒரு நாளைக்கு ரூ.25,000வரையிலான பணப் பரிமாற்றங்களுக்குரூ.5 மற்றும் ரூ.25,000க்கு மேலான பணப் பரிமாற்றங்கள் ரூ.150 சேவைகட்டணம் செலுத்த வேண்டும்.மூன்றாம் தரப்பு பணப் பரிவர்த்தனைகளை (Third Party Cash Transaction) பொறுத்தவரைஒரு பரிவர்த்தனைக்கு ரூ.150 சேவைகட்டணமும் செலுத்த வேண்டும்; இதற்கான பரிவர்த்தனை வரம்புரூ.25,000ஆகும்.இது தவித்து டெபிட்கார்டுகளுக்கான வருடாந்திர கட்டணமானதுவழக்கமான இடங்களுக்கு ரூ.200, கிராமின் இருப்பிடங்களுக்குரூ.99 என்றும், டிடி (DD,) பிஓ கேன்சலேஷன் (PO Cancellation), டூப்ளிகேட் (Duplicate), ரீவேலிடேஷன்(Revalidation) போன்ற சேவைகளுக்குஒரு நிகழ்வுக்கு ரூ.100 என்றும். புகைப்படம்மற்றும் கையொப்பம் சான்றளிப்புக்குஒரு விண்ணப்பம் / கடிதத்திற்கு ரூ.100 என்றும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும். லாக்கர் வாடகையை (Locke Rent) பொறுத்தவரை, லாக்கரின் அளவு(LockerSize) மற்றும்நீங்கள் எந்த வங்கியில்உள்ள லாக்கர் சேவையைபயன்படுத்த விரும்புகிறீர்களோ.. அந்த வங்கியின்இருப்பிடத்தின்(BankLocation) அடிப்படையில்வருடாந்திர லாக்கர் வாடகைகள்மாறுபடும்படிஐசிஐசிஐவங்கி தனது லாக்கர்வாடகைக்கான சேவை கட்டணங்களையும்திருத்தி உள்ளது.
விசாகப்பட்டினம் எஃகு, பெட்ரோலியம்மற்றும் தகவல் தொழில்நுட்பம்போன்ற பல்வேறு துறைகளுக்கானதொழில்துறை மையமாக கருதப்படுகிறது.இது மொத்தGDPUSD48.5 பில்லியன் மற்றும்இந்தியப் பொருளாதாரத்தை0.44% பங்களிப்புடன் ஆதரிக்கிறது. கடலோரப் பகுதி என்பதால், ராம கிருஷ்ணா கடற்கரைமற்றும் ருஷிகொண்டா கடற்கரைபோன்ற பல பிரபலமானகடற்கரைகளை இந்த நகரம் கொண்டுள்ளது.