25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பொதுப்பணி துறையும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் கரை பலவீனமான கண்மாய்கள், சேதம் அடைந்த மடைகள் குறித்து ஆய்வு செய்து பருவமழை தீவிரமடைவதற்கு முன் சரி செய்து, நிரந்தர தீர்வு காண வேண்டும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொதுப்பணி துறையும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் கரை பலவீனமான கண்மாய்கள், சேதம் அடைந்த மடைகள் குறித்து ஆய்வு செய்து பருவமழை தீவிரமடைவதற்கு முன் சரி செய்து, நிரந்தர தீர்வு காண வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய்கள் 342, ஊராட்சி ஒன்றிய கண்மாய்கள் 712 உள்ளன. சில மாதங்களுக்க முன் பெய்த கோடை மழையில் பெரும்பான்மையான கண்மாய்களுக்கு தண்ணீர் வந்துள்ளது. ஆனால் கண்மாய்க்கு தண்ணீர் வந்தும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. ஏனெனில் பெரும்பான்மையான கண்மாய்களில் கரைபலவீனமாக உள்ளதாலும், மடைகள் சேதம் அடைந்து இருப்பதாலும் தண்ணீர் தேங்காமல் வீணாக வெளியேறி விடுகின்றது.

விருதுநகர்மாவட்டத்தில்சிவகாசி, இராஜபாளையம்,விருதுநகர்  ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சூழி, காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், சோளம், மிளகாய், பாசி, வாழை, கரும்பு, கத்தரி, பருத்தி, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர்

ஒரு சில கண்மாய்களின் கரைகள் உடைந்து தண்ணீர் விவசாய நிலத்திற்குள் பாய்வதால் பயிர்களும் அழிந்து விடுகின்றது. கண்மாய்களில் கரைகள் உடையும்போதும், மடைகள் சேதம் அடையும் போது அதிகாரிகளால் தற்காலிகமாக சரி செய்யப்படுகிறதே தவிர நிரந்தரமாக சரி செய்யப்படுவதில்லை.

கரை பலவீனமான கண்மாய்கள், சேதம் அடைந்த மடைகள் குறித்து ஆய்வு செய்துபருவமழை தீவிரமடைவதற்கு முன், பொதுப்பணி துறையும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் உடனடியாக சரி செய்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News