தூத்சாகர் அருவி என்ற ‘பாற்கடல்
தூத்சாகர் அருவி கோவாவில் சாங்கியும் மாவட்டத்தில் உள்ள பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது. இந்த அருவி கோவாவின் தலைநகரான பனாஜியிலிருந்து60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழும் அருவி நான்கு அடுக்கு நீர்வீழ்ச்சியாக விழுவது காண்போரை மெய்மறக்க வைக்கக்கூடிய அழகை உடையதாகும்.‘பாற்கடல்’ என்று அழைக்கப்படும் தூத்சாகர் அருவியானது மண்டோவி ஆற்றிலிருந்து உருவாகிறது. இந்தியாவிலுள்ள உயரமான அருவிகளுள் தூத்சாகரும் ஒன்றாகும்.
இந்த அருவி310 மீட்டர் உயரமும்30 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இது இந்தியாவில்5ஆவது உயரமான அருவியாக உள்ளது. உலகில் உயர்ந்த அருவிகளின் பட்டியலில்227ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மழைக்காலங்களில் இந்த அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் அருவியின் அடிவாரத்தில் குளிக்கலாம்.தூத்சாகர் அருவியை சுற்றுலாப்பயணிகள் வருடம் முழுவதும் சுற்றிப்பார்க்க செல்லலாம். மழைக் காலங்களில் மட்டும் இந்த அருவி முடப்பட்டிருக்கும். அருவியில் நீர்பெருக்கு அதிகமாக இருக்கும் என்பதே காரணமாகும்.
சாலைவழியாக நேராக தூத்சாகர் அருவியை அடைய முடியாது. கொல்லத்திலிருந்து தூத்சாகர் அருவிக்கு ஜீப் சபாரி மூலமாக பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயம் வழியாகவே செல்ல முடியும். இவ்வழியே செல்லும் இரண்டு ரயில்கள் இங்கே நிறுத்தப்படுகிறது. அமராவதி எக்ஸ்பிரஸில் இருந்து அருவியை காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழியாக ரயில் கடந்து செல்லும்போது,அருவியை காண சில வினாடிகளே கிடைக்குமென்றாலும், அருவியின் பிரம்மாண்டம் நம்மை அதிசயிக்க வைக்கிறது.
0
Leave a Reply