25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 21, 2026

தமிழ்நாடு அரசு TN GOVT Helpin

தமிழக அரசின் இந்த புதிய வாட்ஸ்அப் எண் மூலம்,மக்கள் தங்கள் பகுதிப் பிரச்சனைகளை ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்!உங்கள் பிரச்சனை உங்கள் தீர்வு அரசின் பொறுப்பில் - +91 7845252525.எப்படிப் புகார் அளிப்பது?இந்த எண்ணை  உங்கள் தொலைபேசியில் சேமிக்கவும்.வாட்ஸ்அப் மூலம் வணக்கம்" என்று செய்தி அனுப்பவும்.உங்கள் பகுதிப்  பிரச்சனையை விளக்கி புகைப்படம்/ வீடியோ /ஆவணங்கள் உடன் அனுப்பவும்.உங்கள் புகார் பதிவு செய்யப்படும் தொடர்புடைய துறை நடவடிக்கை எடுத்து உங்களுக்கு தகவல் தரும்.புகார்கள் அளிக்கக்கூடியவை -சாலை /பாதை சேதம்.குடிநீர்  பிரச்சனை .கழிவு நீர் / வடிகால் பிரச்சனை. மின்விளக்கு பழுது. குப்பை அகற்றல் பிரச்சனை.மற்றும் பல.....உங்கள் பிரச்சனை சொல்லுங்கள்... தீர்வை நாங்கள் கொண்டு வருகிறோம்!

Jul 20, 2026

C.M.விஜய் புதிய எச்சரிக்கை .

"அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றது நிரூபிக்கப்பட்டால், அவர்களின் சொத்தில் 50 சதவீதம் அரசுடமையாக்கப்படும். அதற்கான உறுதியான ஆதாரங்களை வழங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். காவல்துறையினர் லஞ்ச வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டால், அவர்களின் முழு சொத்தும் பறிமுதல் செய்யப்படும். நாட்டில் நேர்மையை நிலைநிறுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்" என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். (குறிப்பு: இது அவர் முன்வைத்த அரசியல் வாக்குறுதி/கருத்து; தற்போதைய சட்டம் அல்ல.)

Jul 20, 2026

சோனம் வாங்சுக் – சமூக மாற்றத்திற்காக போராடும் புதுமையாளர்.

லடாக்கைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான சோனம் வாங்சுக், உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலம் மட்டுமல்லாமல் பல புதுமையான முயற்சிகளாலும் உலகளவில் கவனம் பெற்றவர்.பனிப்பாறைகளைப் போல செயல்படும் 'ஐஸ் ஸ்டூபா' தொழில்நுட்பத்தை உருவாக்கினார்.சூரிய ஆற்றலில் இயங்கும் ராணுவ கூடாரங்களை வடிவமைத்தார்.நீர் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பல திட்டங்களை செயல்படுத்தினார்.நடைமுறை அனுபவத்தை மையமாகக் கொண்ட கல்வி முறையை ஊக்குவித்தார்.காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.சமூக சேவைக்காக 2018ஆம் ஆண்டு ரமோன் மக்சேசே விருது பெற்றார்.

Jul 20, 2026

இந்திய மாணவர்களின் புதுமைக்கு சர்வதேச அங்கீகாரம்.

16 வயதுடைய இந்திய மாணவர்கள் அரியானா அகர்வால், விவான் சாவ்சாரியா, அவ்யானா மேத்தா ஆகியோர் உருவாக்கிய"Plas-Stick" தொழில்நுட்பம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.புளியங்கொட்டையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், காந்தத்தின் உதவியுடன் நீரில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை அகற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் சிறப்பம்சங்கள்:சுற்றுச்சூழலுக்கு உகந்தது. குறைந்த செலவில் பயன்படுத்தலாம். மின்சாரம் தேவையில்லை. கிராமப்புற குடிநீர் சுத்திகரிப்புக்கு பயன்படும் வாய்ப்பு உள்ளது. இந்த கண்டுபிடிப்புக்காக இம்மாணவர்கள் The Earth Prize 2026 Global Winner விருதை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்

Jul 20, 2026

ரயில் பயணிகளுக்கு புதிய டிக்கெட் நடைமுறை.

ரயில்வே பொதுப்பிரிவு பயணிகளுக்காக புதிய டிஜிட்டல் டிக்கெட் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. RailOne மொபைல் செயலி மூலம் பெறப்படும் டிக்கெட்டை செயலியிலேயே காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முக்கிய தகவல்கள்:டிக்கெட்டின் ஸ்கிரீன்ஷாட், PDF நகல் அல்லது வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட பிரதிகள் செல்லுபடியாகாது. பயணத்தின் போது RailOne செயலியில் உள்ள அசல் டிக்கெட்டை மட்டுமே காட்ட வேண்டும்.விதிமுறைகளை மீறினால் ரூ.250 வரை அபராதம் விதிக்கப்படலாம்

Jul 18, 2026

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் மோடி.

ஹரியானாவின் ஜிந்த்–சோனிபட் இடையே இயக்கப்படும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில், தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை நோக்கிய முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Jul 18, 2026

இந்தியாவின் முதல் AI ஒருங்கிணைந்த பல்கலைக்கழக வளாகம் திறப்பு.

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகமான VELS திருவான்மியூர் வளாகத்தை ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார். விழாவில் UAE கூட்டாட்சி தேசிய மன்ற உறுப்பினர் அகமது மிர் ஹாஷிம் கூரி, VISTAS நிறுவனர்-வேந்தர் டாக்டர் இஷாரி கே. கணேஷ், துணைத் தலைவர் டாக்டர் பிரீதா கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.AI வகுப்பறைகள், தொழில் இணைப்பு ஆய்வகங்கள், டிஜிட்டல் கற்றல் வசதிகள் மற்றும் உலகத் தர மாணவர் உள்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகம், எதிர்காலத் திறன்களை வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. UAE-யில் விமானப் பயிற்சிப் பள்ளி அமைக்க VISTAS–Aspin Holding–MH Cockpit இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், AI, ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவு துறைகளில் ஜோஹோவுடன் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. Intel Unnati, TCS iON, Microsoft, Oracle Academy ஆகியவற்றுடன் இணைந்த சிறப்பு மையங்களும் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீதர் வேம்பு, உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தி, VELS உடன் இணைந்து செயல்பட ஜோஹோ ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

Jul 18, 2026

திருச்சியில் அமெரிக்க நிறுவனத்தின் மெகா விரிவாக்கம்!

திருச்சிராப்பள்ளிநவல்பட்டுஎல்காட் SEZ வளாகத்தில்செயல்படும்அமெரிக்காவின் QuinteFinancialTechnologies நிறுவனத்தின் GCC விரிவாக்கத் திட்டத்திற்கு MEPZ ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் அலுவலக பரப்பளவு 3,600 சதுர அடியில் இருந்து 20,650 சதுர அடியாக விரிவடையவுள்ளதுடன், 400-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும், ஆண்டு ஏற்றுமதி மதிப்பு ₹120 கோடியை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jul 18, 2026

TOP AI TOOLS YOU SHOULD KNOW ABOUT.

1. ChatGPT.com - solves anything 2. Claude.ai - conversational assistant 3. Perplexity.ai - research with sources 4. Mid Journey.com - generate breathtaking art 5. Leonardo.ai - hyper-realistic images 6. Runwayml.com - Al video editing 7. Replit.com - write and run code 8. Cursor.so - Al coding IDE 9. Blackbox.ai - Al for developers 10. Tabnine.com - coding autocomplete 11. Manus.im - build apps with text 12. Canva.com - design anything with Al 13. Gamma.app - Al-powered presentations 14. Tome.app - instant slide decks 15. MagicSlides.app - auto-build slides 16. SlidesAl.io - text to presentations . 17. Synthesia.io - Al video presenters 18. HeyGen.com - avatars that talk

Jul 18, 2026

200 இன்ச் திரை அனுபவம்... குறைந்த விலையில் ப்ரொஜெக்டர்.

பெரிய திரையில் திரைப்படங்களை ரசிக்க விரும்புபவர்களுக்காக, ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 65 ப்ரொஜெக்டர் ரூ.10,499 விலையில் கிடைக்கிறது. 4K சப்போர்ட், 8,500 லூமன்ஸ் பிரகாசம் மற்றும் 200 இன்ச் வரை திரை அளவை வழங்கும் இந்த ப்ரொஜெக்டரில் Android OS, HDMI, USB, Bluetooth 5.1, Dual-Band Wi-Fi, சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள் மற்றும் 50,000 மணி நேர LED லேம்ப் வசதியும் இடம்பெற்றுள்ளது.

1 2 ... 20 21 22 23 24 25 26 ... 136 137

AD's



More News