பூமியின் நாட்களோடு ஒப்பிடும் போது, மற்ற கிரகங்களின் ஒரு ஆண்டு (சூரியனைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம்) எவ்வளவு தெரியுமா?கிரகம் பூமியின் கணக்கில் ஒரு ஆண்டுபுதன் (Mercury ) - 88 நாட்கள்.வெள்ளி (Venus) - 225 நாட்கள்.செவ்வாய் (Mars)- 687 நாட்கள்.வியாழன் (Jupiter)- 12 ஆண்டுகள்.சனி (Saturn) - 29 ஆண்டுகள்.யுரேனஸ் (Uranus) - 84 ஆண்டுகள்.நெப்டியூன் (Neptune)- 164 ஆண்டுகள்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில், ஹரியானா மாநிலத்தின் ஜின்ட்–சோனிபட் வழித்தடத்தில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் கண்டது.மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில், ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மூலம் மின்சாரம் உருவாக்கி இயங்குகிறது. டீசல் அல்லது மேல்மின் கம்பிகள் தேவையில்லாத இந்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2050-ம் ஆண்டின் உலகை எதிர்கொள்ள, குழந்தைகளுக்கு சொத்துகளை விட வாழ்க்கைத் திறன்களை வழங்குவது முக்கியம் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.சிந்திக்கும் திறன் – AI பதில்களை வழங்கலாம்; ஆனால் சரியான கேள்விகளை எழுப்பும் திறன் குழந்தைகளிடம் இருக்க வேண்டும்.பண மேலாண்மை பழக்கம் – சம்பாதிப்பதை விட சேமித்து வளர்க்கும் திறன் அவசியம். நற்குணமும் கருணையும் – அறிவுடன் மனிதநேயமும் இணைந்தால்தான் முழுமையான வளர்ச்சி. உடல் மற்றும் மன ஆரோக்கியம் – எதிர்காலத்தில் மிகப் பெரிய செல்வமாக இருக்கும்.குடும்பத்தின் மதிப்பு – உலகம் மாறினாலும் குடும்பம் தரும் பாதுகாப்பும் ஆதரவும் ஈடு இணையற்றவை. "பொருளாதாரச் செல்வத்தை விட, வாழ்க்கைத் திறன்களே குழந்தைகளுக்கான சிறந்த பரிசு" என்ற கருத்தே இதன் முக்கியச் செய்தியாகும்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஜெய்னம் ஜெயின், செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கி துபாயின் இளம் CEO-வாக கவனம் ஈர்த்துள்ளார். உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் 141-வது மாடியில் தனி அலுவலகம் அமைத்து தொழில் உலகில் சாதனை படைத்து வருகிறார்.
வங்கி வேலையைத் துறந்து விவசாயத்திற்கு மாற்றம்.பெங்களூருவில் உள்ள முன்னணி வங்கிகளில் (ICICI, Axis, HDFC ) 8 ஆண்டுகள் கார்ப்பரேட் வங்கி அதிகாரியாகப் பணியாற்றிய அமித் கிஷன் (33), ரசாயனம் கலந்த உணவுகளால் ஏற்படும் புற்றுநோய் போன்ற பாதிப்புகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.தரமான உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில், 2016-ல் தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு, பாரம்பரிய விவசாயத்தை நோக்கித் திரும்பினார்.'ஹெப்பீவு ஃபார்ம்ஸ்' வளர்ச்சிதொடக்கத்தில் 15 ஏக்கரில் சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட இந்த விவசாயம், தற்போது 650 ஏக்கர்பரப்பளவில் ஆண்டுக்கு ரூ. 21 கோடி வருவாய் ஈட்டும் சாம்ராஜ்யமாக வளர்ந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு முதல் இவரது சகோதரர் அஷ்ரித் என்பவரும் இவருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.தனித்துவமான இயற்கை விவசாய முறைகள்பூஜ்ஜிய-செலவு (Zero-budget) விவசாயம்: பண்ணையில் ரசாயன உரங்களோ, டிராக்டர்களோ பயன்படுத்தப்படுவதில்லை. நாட்டு மாட்டுச் சாணம், கோமியம் மற்றும் நிலத்தை உழ காளைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.கால்நடைச் சூழல் அமைப்பு: கிர், சாஹிவால் போன்ற இனங்களைச் சேர்ந்த 700 உள்நாட்டு மாடுகள் மற்றும் எருமைகள் மூலம் பால் உற்பத்தி, உயிரி எரிவாயு (biogas) மற்றும் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.சூரிய ஆற்றல்: சோலார் மின்சாரப் பயன்பாட்டின் மூலம் பண்ணையின் மாதாந்திர மின் கட்டணம் ₹3 லட்சத்திலிருந்து ₹40,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.உற்பத்தி மற்றும் சந்தை மதிப்புஇப்பண்ணையில் காய்கறிகள், பருப்பு வகைகள், தென்னை உட்பட40 வகையான பாரம்பரியப் பயிர்கள் விளைய வைக்கப்படுகின்றன.தினமும் 6 டன் காய்கறிகள் விற்பனை மற்றும் 1,500 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.பெங்களூரு விற்பனை நிலையங்கள் மற்றும் இணையதளம் மூலம் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கப்பட்டுள்ளது.3,000 கிராமப்புறப் பெண்களுக்கு வாழ்வாதாரம்இம்முயற்சி 18 கிராமங்களைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட கிராமப்புறப் பெண்களுக்கு வேலைவாய்ப்பளித்து பொருளாதார ரீதியாக அதிகாரமளித்துள்ளது.பெண்களுக்குத் தினமும் பால் வழங்கப்பட்டு, பாரம்பரிய 'பிலோனா நெய்' (Bilona ghee), பனீர் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.நகரத்து மாசடைந்த கார்ப்பரேட் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, கிராமப்புறத்தில் நிம்மதியான வாழ்க்கையை வாழும் அமித் கிஷன், பாரம்பரிய விவசாயத்தின் மூலமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கிராமப்புறப் பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
பாரசிட்டமால் மற்றும் டிசைக்ளோமைன் கலந்த சில வலி நிவாரணிகள் உள்ளிட்ட 16 முக்கிய கூட்டு மருந்துகளை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இது மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்ற தீவிரமான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
பல்லாங்குழி: இருக்கும் இடத்தில் எடுத்து, இல்லாத இடத்தில் கொடுக்கும் குணம் வளர...பரமபதம்: ஏற்றம்,இறக்கம் இரண்டும் இருப்பதே வாழ்க்கை என்பதை உணர்த்த...கில்லி: கூட்டல்,பெருக்கல் கணக்கைக் களிப்புடன் மகிழ்ந்து கற்க...தாயம்: வெட்டி வெளியே எறிந்தாலும் மீண்டும் முயன்று தொடங்கி முன்னேற...சதுரங்கம்: இதர வழி இல்லாதபோதும், இறுதிவரை போராடும் உறுதி மனம் பெற...நொண்டி: சமமாக இல்லாதபோதும், சாதிக்கத் தூண்டும் சக்தியைப் பெற...கண்ணாமூச்சி: ஒளிந்து இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான பொறுமையையும், தானே ஒளிந்து மகிழ்ந்து இருக்கும் பெருமையையும் பெற...
விலங்குகளின் மொழி மற்றும் சமிக்ஞைகளை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டறிந்து வருகிறார்கள். எலிகள், டால்பின்கள், குரங்குகள், பறவைகள், திமிங்கலங்கள் மற்றும் மீன்கள் போன்ற பல விலங்குகளின் தொடர்பு முறைகளை AI மூலம் டிகோட் (decode) செய்யலாம் என்று CNN செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
உலகின் மிகவும் உழைப்பாளி உயிரினங்களில் ஒன்றாக எறும்புகள் கருதப்படுகின்றன. ஆய்வுகளின்படி, 12 மணி நேரத்தில் அவை மொத்தம் சுமார் 8 நிமிடங்கள் மட்டுமே ஓய்வெடுக்கின்றன. நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இயங்கி, தங்கள் கூட்டத்திற்காக இடைவிடாமல் உழைக்கும் எறும்புகள், விடாமுயற்சிக்கும் ஒற்றுமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
இன்று நாம் 10 அடிப்படையிலான (Decimal) எண் முறையை பயன்படுத்தினாலும், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சுமேரியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் 60 அடிப்படையிலான (Sexagesimal) எண் முறையைப் பயன்படுத்தினர். அவர்கள் உருவாக்கிய காலக் கணக்கீட்டு முறையின் அடிப்படையில்தான் ஒரு மணி நேரம் 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடம் 60 விநாடிகளாகவும் இன்று உலகம் முழுவதும் கணக்கிடப்படுகிறது.