25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 30, 2024

உலகின் மிகவும் புத்திசாலி  காகம் New Caledonian crows

 மனிதர்கள் தன் வாழ்வில் ஒவ்வொரு வேலைகளுக்கும் கருவிகளை பயன்படுத்துவார்கள். அதேபோல் ஒரு காகம் தனது உணவை எடுப்பதிலிருந்து அனைத்திற்கும் கருவிகளையே பயன்படுத்தும் இந்த New Caledonian  காகம் . அப்போது யார் அந்த கருவிகளைச் செய்து கொடுப்பார்கள் என்ற சந்தேகம் வருகிறதா.இந்த வகையான காகங்கள் தெற்கு பசிபிக் தீவில் தான் பூர்விகமாக வாழ்ந்து வருகின்றன. இந்தக் காகங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு, தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்துத் தப்பிப்பதற்கு, உணவு கண்டுப்பிடிப்பதற்கு என அனைத்திற்குமே அதற்கான கருவிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன.ஆராய்ச்சியாளர்கள் இந்தக் காகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து சில தகவல்களைக் கூறினார்கள். ஒருமுறை காடுகளில் கண்டறியப்பட்ட இந்த இனத்தின் காகம் ஒன்று, இரையை எடுக்கும் காட்சியை நேரடியாகப் பார்த்திருக்கிறார்கள்.அந்தக் காகம் ஒரு சிறிய மரத்தின் பொந்தில் புழு இருப்பதைப் பார்த்திருக்கிறது. அதனை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக வெகுநேரம் மூக்கினால் எடுக்க முயற்சி செய்து வந்தது. ஆனால் புழு சிக்காமல் தப்பித்துக்கொண்டே இருந்தது. இதனால் பொறுமை இழந்த காகம் பறந்து சென்று ஒரு மெலிதான குச்சியை எடுத்து வந்து புழுவை எடுக்க முயற்சித்தது. அதுவும் அந்தப் புழுவின் மூக்கில் சரியாக விட்டு எடுக்க முயற்சித்தது. அப்படி முயற்சிக்கையில் மற்றொரு சிக்கலும் வந்தது. குச்சி நீளமாக இருந்ததால் அதனை கையாளத் தடுமாறியது. பிறகு அதனை மடக்கி, புழுவின் மூக்குப் பகுதியில் விட்டு அழகாக வெளியில் எடுத்து அந்தப் புழுவை சாப்பிட்டது.எப்படி இந்தப் புழுவை எடுப்பதற்கு ஒரு கருவியை வளைத்து நெளித்து பயன்படுத்தியதோ, அதேபோல்தான் மற்ற அனைத்திற்கும் தானே குச்சிகள் போன்ற இயற்கை பொருட்களால் அதுவே கருவிகளை செய்யும். இதனை பெற்றோர்களோ இல்லை மற்றவர்களோ யாருமே அதற்கு சொல்லித்தர மாட்டார்கள். அதுவே தன் சுய புத்தியினாலும் அனுபவத்தினாலும் மட்டுமே கருவிகளைச் செய்யும்.மற்ற பறவைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தப் பறவைக்குத்தான் உடலளவுடன் ஒப்பிடுகையில் பெரிய மூளை உள்ளது. அதேபோல் அதிக அளவு குரல் ஒலிகளைக் கொண்டதும் இந்தப் பறவைத்தான். காகங்களுக்குள் தொடர்புக்கொள்கையில் இவை பல விதமான குரல்களைப் பயன்படுத்துகின்றன.இந்த New Caledonian காகம்தான் மிகவும் புத்திசாலியான காகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

May 30, 2024

2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க மோதிரம் இஸ்ரேலில் கண்டுபிடிப்பு

இஸ்ரேலின் ஜெருசேலம் பகுதியில் 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க மோதிரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மோதிரத்தை வைத்து ஜெருசேலமில் உள்ள பண்டைய கால மக்கள் செழிப்புடன் வாழ்ந்ததைக் கண்டறிந்துள்ளனர்.டேவிட் தொல்பொருள் ஆராய்ச்சி பூங்கா என்ற தளத்தில் 2300 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது Hellenistic period காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு சிறுமியின் மோதிரத்தை கண்டுபிடித்துள்ளனர். Hellenistic period என்பது மத்திய கிழக்குப் பகுதியில் கிமு 323 அலெக்ஸாண்டர் தி கிரேட் இறந்ததற்கு முன்னும், ரோம் எகிப்தை கைப்பற்றுவதற்கு முன்னும் (கிலியோப்பட்ரா 7 இறந்ததற்கும் முன்) இருந்த காலகட்டமாகும். இப்போது கண்டுபிடிக்கப்பட்ட மோதிரமும் Hellenistic ஸ்டைலில்தான் உள்ளது. ஆனால், சில ஆராய்ச்சியாளர்கள் Hellenistic காலகட்டத்தில் கிழக்கு மெடிட்டேர்ரியனுடைய ஸ்டைலும் பரவலாக இருந்ததாக கூறுகிறார்கள்.இதுகுறித்து அந்த மோதிரத்தைக் கண்டுபிடித்த Tehiya Gangate என்ற தொல்லியல் ஆராய்ச்சியாளர் கூறியதாவது, “நான் வேலை செய்துக்கொண்டிருக்கும்போது, எதோ மினுமினுப்பது போல் உணர்ந்தேன். சட்டென்று அந்த இடத்தைப் பார்க்கையில் பச்சை நிற கல்லுடன் இருந்தத் தங்க மோதிரத்தைக் கண்டேன். பிறகு நான் ஒரு மோதிரத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று கத்தியதும், சுற்றியிருந்த அனைவரும் கூடிவிட்டார்கள்.எப்போதும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிட்டாது. இது மிகவும் எனக்கு உணர்வுப்பூர்வமான ஒன்று. ஏனெனில், பண்டைய கால தங்க மோதிரத்தைக் கண்டெடுக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அந்த கனவு நினைவாகியுள்ளது. ஒரு வாரம் முன்னர்தான் மகப்பேறு விடுப்பிலிருந்து பணிக்குத் திரும்பினேன்.” என்றார்.ஜெருசேலம் என்பது மிகவும் சிறிய பகுதியாகும். ஆனால், அங்குதான் ஏகப்பட்ட கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இப்போதுள்ள டேவிட் தொல்லியல் ஆராய்ச்சி மையமானது, முன் ஓர் காலத்தில்  டேவிட் என்ற அரசர் உருவாக்கிய நகரமாகும். மேலும் இந்த டேவிட் நகரம் ஜெருசேலத்தின் தெற்கு பகுதியில், மிகப்பழமையான ஜெருசேலம் என்றழைக்கப்படும் இடத்தில் உள்ளது.இந்த டேவிட் பார்க் பகுதியில் Hezekiah's சுரங்கப்பாதையை Hezekiah என்ற மன்னரே உருவாக்கினார். இன்னும் ஏராளமான ஆராய்ச்சித் தளங்கள் ஜெருசேலம் பகுதியில் உள்ளன. அந்தப் பகுதிகளை சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து சுற்றிப்பார்க்கின்றனர். மேலும் இந்த மோதிரத்தை ஜெருசேலத்தில் ஒரு கண்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும்  கூறப்பட்டுள்ளது.

May 30, 2024

இந்தியாவிலேயே அதிக இறைச்சி உட்கொள்ளும் மாநிலம் நாகாலாந்து

 இந்தியாவில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. மீன், இறைச்சிகள் போன்றவற்றை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம் .இந்தியாவில் சுமார்  85 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவை விரும்பி உண்கின்றனர் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எந்த மாநிலத்தில் அதிகம் அசைவம் சாப்பிடும் மக்கள் உள்ளனர்.  அந்த ஆய்வின்படி இந்தியாவிலேயே அதிக இறைச்சி உட்கொள்ளும் மாநிலம் நாகாலாந்து. இந்த மாநிலத்தில் 99.8 சதவீதம் பேர் அசைவம் உட்கொள்கிறார்கள்.   இந்த பட்டியலில் மேற்கு வங்கம் 2வது இடத்தில் உள்ளது. இங்கு 99.3 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுகிறார்கள். கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு அசைவ உணவு சாப்பிடுபவர்களும் அதிக அளவில் உள்ளனர். கேரளாவில் 99.1 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுகிறார்கள்.  அதிக அசைவ நுகர்வோர் பட்டியலில் நமது தெலுங்கு மாநிலமான ஆந்திரா நான்காவது இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 98.25 சதவீதம் பேர் இறைச்சி சாப்பிடுகின்றனர்.  தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. இங்கு 97.65 சதவீதம் பேர் அசைவத்தை விரும்பி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 7ஆவது இடத்தில் ஒடிசா மாநிலம் உள்ளது.சுமார் 97.35 சதவீத மக்கள் இந்த மாநிலத்தில் அசைவத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.  

May 29, 2024

உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத ஒரே நாடு வாடிகன் சிட்டி

இன்று உலகில் பல மதங்கள், நம்பிக்கைகளை பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சிலர் தங்களை மத நம்பிகை அற்றவர்களாக கூறிக்கொண்டும் வாழ்கின்றனர்ஒரு நாடு என்று இருந்தால் அதில் பல தரப்பு மக்கள் வாழ்கின்றனர்.இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள் முஸ்லீ.ம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். உலகின் கணிசமாக முஸ்லீம்கள் வாழும் இடம் மத்திய கிழக்கு ஆசியா.இவர்களின் புனித தலமான மெக்கா இருக்கும் சவுதி அரேபியாதொடங்கிஓமன், குவைத், ஐக்கிய அரபுஅமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈராக், ஈரான்எனபலநாடுகளில்இஸ்லாமியர்கள்பெரும்பான்மையாகவசிக்கின்றனர்.உலகின்பெரும்பாலானநாடுகளில்இஸ்லாமியர்கள்பரவிவாழும்நிலையில், ஒரு இஸ்லாமியர்கள் கூட வாழாத நாடு ஒன்று உலகில் உள்ளது.அது தான் உலகிலேயே மிகச் சிறிய நடான வாடிகன் சிட்டி. ஐரோப்பிய நாடான வாட்டிகன் சிட்டி உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமாகக் கருதப்படுகிறது.இங்கு தான் அவர்களின் மத குருவான போப் ஆண்டவர் வசித்து ஆட்சி செய்கிறார்.உலகின் மிக அழகான சிறிய புகழ்பெற்ற நாடான வாட்டிகன் சிட்டியில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லைஇது இத்தாலியின் ரோம் பகுதிக்குள் அமைந்துள்ளது. இந்த நாட்டிற்கு சொந்த ராணுவமும் கூட இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு வாட்டிகன் நகரத்தைப் பாதுகாக்க சுவிஸ் மிஷனரிகள் போப்களால் நியமிக்கப்பட்டனர்.அன்றில் இருந்து இத்தாலிய ராணுவ உதவியுடன் சுவிஸ் காவலர்கள் தான் வாட்டிகன் சிட்டியை பாதுகாக்கின்றனர்.2019 புள்ளி விவரப்படி இந்நாட்டின் மக்கள் தொகை 453 மட்டுமே. அத்துடன் சிலர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை 372 ஆகும்.

May 29, 2024

நீளமான விமானம்

உலகின் நீளமான விமானம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் கலிபோர்னியாவில் நடந்தது. இதை உருவாக்கியவர் கூகுளின் இணை நிறுவனர் செர்ஜி பிரின். இதன் நீளம்400 அடி. இது'போயிங்'747 விமானத்தை விட இரு மடங்கு நீளமானது. இதில் பயன்படுத்தப்படும்10 லட்சம் கன அடி ஹீலியம்(இது போல13 ஏர் பேக் உள்ளது),12 எலக்ட்ரிக் மோட்டார், விமானம் செங்குத்தாக புறப்படுவதற்கு உதவுகிறது. மணிக்கு125 கி.மீ., வேகத்தில் பறக்கும். இதை பயணிகள், சரக்கு, அவசர கால மீட்பு என பல வழிகளிலும் பயன்படுத்தலாம்.

May 29, 2024

ஆவின் நிறுவனம் பனை பொருட்கள் விற்பனையிலும் களமிறங்க உள்ளது

ஆவின் நிறுவனம் பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து, பனை பொருட்கள் விற்பனையிலும், களமிறங்க உள்ளது.தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி, இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் உள்ளிட்ட, 230க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது.பனை பொருட்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பனை வெல்லம், நாட்டு சர்க்கரை, பனங்கருப்பட்டி, சுக்கு காபி பவுடர், பனங்கருப்பட்டி சுக்கு மிட்டாய் மட்டுமின்றி, தேன் விற்பனையிலும் களமிறங்க, ஆவின் நிர்வாகம் தயாராகி வருகிறது.இதுகுறித்து ஆவின் ஏஜன்ட் ஒருவர் கூறியதாவது:பனை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. எனவே, பனை பொருட்கள் விற்பனையில் இறங்கினால், பெரிய அளவில் விளம்பரம் கிடைக்கும்; அரசிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்று ஆவின் நிறுவனம் கருதுகிறது.பனை பொருட்கள் விற்பனையில், ஆவின் கவனம் செலுத்துவது நல்லது தான். அதே நேரம், அவை நிர்வாக நலன், விவசாயிகள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.பால் மற்றும் பால் பொருட்கள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பிரச்னையை திசை திருப்பும் முயற்சியாக அமைந்து விடக்கூடாது,இவ்வாறு அவர் கூறினார்.

May 29, 2024

பேச்சைக் குறை

பேச்சைக் குறைத்தால் நம்முடைய கவனம் சிதறாமல் ஒரு முகத்தன்மையுடன் இருக்கும். பிறரின் அனுபவம் மற்றும் அறிவை எளிதில் பெறலாம். இது சிக்கல்களில் இருந்து நம்மைத் தப்பிக்க வைக்க உதவும். நாம் பொறுமையாகக் கேட்பதால், உறவு சிக்கல்கள் வராது.  குறைவாகப் பேசி, அதிகம் கேட்பதன்மூலம் நினைவாற்றல் அதிகரிக்கும்.பிறர் பேசுவதைக் காது கொடுத்து கேட்காவிட்டால், நாம் என்ன பேசினாலும் காதுகொடுத்து கேட்கமாட்டார்கள் என்னும் அவப்பெயர் வந்துவிடும்.

May 28, 2024

வெயில் நேரத்தில் குழந்தையை ஏ.சி.,யில் வைத்திருக்கலாமா?

கோடை வெப்பத்தால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறது . நம் உடலில் ரத்தம், திசு, செல்கள் என்ற எல்லாவற்றிலும் 65 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுவே பிறந்த குழந்தையின் உடலில் அதிகபட்சம்85 சதவீதம் வரை நீர்ச்சத்து இருக்கும். ஒரு வயது வரைக்கும்70 சதவீதம் வரை இருக்கும்.நீர்ச்சத்தின் அளவு அதிகமாக இருந்தால், உஷ்ணத்தால் வெளியேறும் திரவத்தின் அளவும் அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட வயது வரை, தாங்களாகவே சென்று தண்ணீர் குடிக்கவோ, தாகத்தை உணரவோ குழந்தைகளுக்குத் தெரியாது. அதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்.நம்மைவிட கோடையின் பாதிப்பு குழந்தைகளிடம் தான் முதலில் தெரிய ஆரம்பிக்கும்.வழக்கம் போல சிறுநீர் போவதில்லை. திட உணவு சாப்பிடுவதில்லை, குழந்தையின் கை, கால் முக்கியமாக நெற்றி, தலை, மார்பு பகுதியில் சிவந்த தடிப்புகள், காரணமே இல்லாத அழுகை.உஷ்ணம் அதிகரிக்கும் போது, செரிமான சக்தி குறைவாக இருக்கும். திரவ உணவுகளையே அதிகம் விரும்புவோம். குழந்தைகளும் அப்படித்தான். இதை பெற்றோர் புரிந்து கொண்டு இளநீர், மோர், பழச்சாறு, அடிக்கடி தரலாம். கம்மங் கூழ், தயிர் சாதம் தரலாம்.சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வழக்கத்தைவிட குறைவாக சிறுநீர் கழிக்கிறதா என்று கவனிக்க வேண்டும். பச்சிளங் குழந்தை குறைந்த பட்சம்3 மணி நேரத்திற்கு ஒரு முறை, ஒரு வயதிற்கு மேல் ஒரு நாளில் ஐந்தாறு முறை சிறுநீர் கழிக்கிறார்களா என்பதை கவனமாகப் பார்க்க வேண்டும்.எவ்வளவு அதிகமாக உஷ்ணம் இருந்தாலும் குழந்தையை ஏ.சி.,யில் வைத்திருக்கக் கூடாது என்ற தவறான எண்ணம் பரவலாக உள்ளது. வெறும் துணியில் குழந்தையை சுற்றி வைக்கும் வழக்கமும் உள்ளது. உஷ்ணத்தின் தன்மையை நாம் எப்படி உணர்கிறோமோ அதைவிட இரு மடங்கு அதிகமாக குழந்தைகள் உணர்வர். ஏ.சி.யில், வைத்திருப்பது தவறில்லை. காற்றோட்டமான இடத்தில் குழந்தையை வைத்திருப்பது, பருத்தி துணிகளை அணிவிப்பது, ஒரு வயதிற்கு கீழ் இருந்தால், ஈரத் துணியால் உடம்பைத் துடைப்பது உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவும்.அதிக உஷ்ணம் காரணமாக காய்ச்சல் வரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், சில குழந்தைகள் துாங்கவே முடியாமல் சிரமப்படுவார்கள். அதீத உஷ்ணத்தால், மூக்கில் உள்ள ரத்த நாளங்கள் வெடித்து ரத்தக் கசிவு ஏற்படலாம்.இது குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான விஷயம். மூக்கு நுனியை அழுத்திப் பிடித்து தலையை மேல் நோக்கி வைத்து, ஐஸ் ஒத்தடம்தரலாம்.சில நிமிடங்களில் ரத்தக் கசிவு நிற்காவிட்டால், டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். இது தவிர, பசி குறைவது, வாந்தி, குடலின் இயக்கம் அதிகரிப்பதால் வயிற்றுப் போக்கு உஷ்ணத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.இது மாதிரி நேரங்களில் மருந்துகள் தருவதை விட, உடம்பின் உஷ்ணத்தைக் குறைப்பது தான் முக்கியம்.திட உணவுகள் சாப்பிடாவிட்டால் குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு வந்துவிடாதா என்பதும் பலரின் சந்தேகம். ஒரே நாளில் ஊட்டச்சத்து குறைபாடு வராது. அத்துடன் திரவ உணவுகளிலும் அவசியமான நுண்ணுாட்டச் சத்துகள் உள்ளன.

May 28, 2024

கழுகுகளின் பார்வைத்திறன்

மனிதர்களைவிட கழுகுகள் மற்றும் பிற பறவைகளுக்கு பார்வைத் திறன் 5 மடங்கு அதிகம். கழுகுகளின் பார்வைத்திறன் பற்றி மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஹோடோஸ் என்ற ஆராய்ச்சியாளர் 1970-ம் ஆண்டிலிருந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.கழுகின் கண்களில் ரெட்டினாவைச் சுற்றி கோட்டிங் போட்டது போல உள்ள கோன்களே அதன் துல்லியமான கண்பார்வைக்கு காரணம்.அதன் நடுவிலுள்ள ஒளியை உள் வாங்கும் அமைப்பு, டெலிபோட்டோ லென்ஸ் போல செயல்பட்டு பார்வையிலுள்ள அனைத்தையும் கண்ணாடி போல துல்லியமாக காட்டுகிறது. பறவைகள் நம்மைவிட துல்லியமாக நிறங்களை அடையாளம் காணுவதோடு அகச் சிவப்பு கதிர்களையும் காணும் திறன் கொண்டவை.வேவ்பிரண்ட் சென்சார் மூலம் வில்லியம் குழு, கண்களின் குறை பாட்டை நீக்கி கழுகு போல பார்வைத் துல்லியம் கிடைக்க முயற்சித்து வருகின்றனர்.

May 27, 2024

கோடையில் பால் விரைவில் கெட்டு போகாமல் இருக்க

கோடை காலத்தில் கடுமையான சூரிய ஒளி தாக்கத்தால், உணவுகள் சீக்கிரமே கெட்டு போய்விடும். அதுமட்டுமின்றி காலை நன்கு சூடாக்கினாலும் கூட அது விரைவில் கெட்டுப் போய்விடும்.கோடையில் பால் கெட்டுப் போகாமல் இருக்க, முதலில் பாலை நன்கு சூடாக்கிய பின் முழுமையாக ஆறவிடவும். அது ஆறியதும், கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி  ஃப்ரிட்ஜில் வைக்கவும். இப்படி செய்வதால் பால் கெட்டுப் போகாது.கோடையில் பாலை சேமிக்க பிளாஸ்டிக் கேன்களை பயன்படுத்தலாம். இதற்கு பாலை சூடாக்கி, அதை ஆறவிட்டு பிறகு பிளாஸ்டிக் கேனில் சேமித்து வைக்கவும். இவ்வாறு செய்வதால் பால் கெட்டுப் போகாமல் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை நன்றாக இருக்கும்.பால் கெட்டுபோகாமல் சேமிக்க  எஃகு பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். பாலை சேமிப்பதற்கு முன், கொள்கலன் நன்கு கழுவப்பட்டதா.. இல்லையா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இதில் பாலை சேமித்து வைத்தால் பாலின் சுவை மாறாது.உங்கள் வீட்டில் பிரிட்ஜ் இல்லை என்றால், பாலை ஒரு நாளைக்கு நான்கு முறை சூடாக்க வேண்டும். மேலும் பால் கொதிக்கும் போது தீயை குறைக்கவும். பால் கொதித்த உடனேயே மூடி வைக்காதீர்கள். மேலும், பாத்திரத்தின் விளிம்பு வரை பால் நிரப்பாதீர்கள்..பாக்கெட் பாலை கடையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்த உடனே பால் காய்ச்ச கூடாது. தண்ணீர் போடுங்கள். பிறகு இரும்பு பாத்திரத்தில் காய்ச்ச வேண்டும்.

1 2 ... 22 23 24 25 26 27 28 ... 47 48

AD's



More News