செவ்வாய் கிரகத்தில் (Mars) நீர் பனி (Water ice) இருப்பதை நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை (MSA) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. செவ்வாயின் வடக்கே உள்ள சமவெளிப் பகுதியில் அமைந்துள்ள 82 கிலோமீட்டர் அகலமுள்ள 'கொரோலெவ்' (Korolev) பள்ளத்தில் இந்தப் பிரம்மாண்டமான பனி அடுக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் திகைப்பூட்டும் புகைப்படத்தை இ.எஸ்.ஏ-வின் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' (Mars Express) விண்கலம் எடுத்துள்ளது. இந்தக் கொரோலெவ் பள்ளத்தின் மையப்பகுதியில் சுமார் 1.8 கிலோமீட்டர் தடிமன் கொண்ட பனி அடுக்கு ஆண்டு முழுவதும் உறைந்த நிலையிலேயே காணப்படுகிறது
டெல்லி நொய்டாவைச் சேர்ந்த 14 வயது மாணவன் தக்ஷ் மாலிக், விண்வெளியில் புதிய விண்கல் (Asteroid) ஒன்றைக் கண்டுபிடித்து உலகளவில் சாதனை படைத்துள்ளார். இந்த அரிய சாதனையை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.6-வது இந்தியர்: விண்கற்களைக் கண்டுபிடித்த இந்திய மாணவர்களின் வரிசையில் தக்ஷ் மாலிக் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.தற்காலிகப் பெயர்: இந்தக் கல்லிற்கு தற்போது '2023 OG40' என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது.பெயர் வைக்கும் உரிமை: இந்த விண்கல் குறித்து நாசா இன்னும் 4-5 ஆண்டுகள் ஆய்வு செய்யும். அதன் பிறகு, தக்ஷ் மாலிக் விரும்பும் பெயரை இதற்குச் சூட்டலாம்.மாணவனின் விருப்பம்: "இதை கண்டுபிடித்த போது நாசாவில் பணியாற்றியது போல் இருந்தது. இதற்கு 'Destroyer of the World' அல்லது 'Countdown' என பெயர் வைக்க யோசித்து வருகிறேன்" என்று தக்ஷ் மாலிக் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.உலகமே பாராட்டும் இந்த 14 வயது இந்திய இளம் சாதனையாளரைப் பகிர்வோம், கொண்டாடுவோம்!
என்ன நடக்கிறது?: ஒரே காலண்டர் மாதத்தில் வரும் இரண்டாவது முழு பௌர்ணமி நிலவை 'புளூ மூன்' என்பார்கள். (இது நீல நிறத்தில் இருக்காது).எப்போது?: நடப்பு மே மாதத்தின் முதல் பௌர்ணமி மே 2-ல் முடிந்த நிலையில், 2-வது பௌர்ணமியான 'புளூ மூன்' மே 31, 2026 அன்று வானில் தோன்றுகிறது.சிறப்பு: இது 19 ஆண்டுகளுக்கு 7 முறை மட்டுமே நடக்கும் ஒரு அரிய நிகழ்வு.அடுத்தடுத்த தேதிகள்: இதற்குப் பிறகு டிசம்பர் 31, 2028 மற்றும் செப்டம்பர் 30, 2031 ஆகிய தேதிகளில் புளூ மூன் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. நம்ம அரசு, நம்ம கையில்: தமிழக அரசின் அதிரடி வாட்ஸ்அப் சேவை! முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.இனி இ-சேவை மையங்களுக்கு அலைந்து திரியத் தேவையில்லை. பொதுமக்கள் நேரடியாகச் சேவைகளைப் பெறும் வகையில், 'நம்ம அரசு நம்ம கையில்' என்ற புதிய வாட்ஸ்அப் வசதியைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.எண்ணிக்கை: 20 துறைகளின் கீழ் வரும் 66 சேவைகளை இதன் மூலம் மிக எளிதாகப் பெறலாம்.கிடைக்கும் சான்றிதழ்கள்: வருவாய், பிறப்பு, இறப்பு, சாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் உள்ளிட்டவை.7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு 'வணக்கம்' அல்லது 'HI' என்று மெசேஜ் அனுப்பவும்.தமிழில் சேவைகளைப் பெற 'T' என்றும், ஆங்கிலத்தில் பெற 'E' என்றும் பதிவிடவும்.அதன் பின் தேவையான துறையைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.2. முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் (CM HEALTH CARD)தமிழ்நாடு மக்களின் நலனுக்காக ஒரு குடும்பத்திற்கு ₹5,00,000 வரை இலவச சிகிச்சை வழங்கும் திட்டம். "மக்களின் நலனே என் இலட்சியம்".திட்டத்தின் முக்கிய நன்மைகள்:அரசு மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை.குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் முழுமையான மருத்துவப் பாதுகாப்பு.அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் இதில் அடங்கும்.பணம் செலவில்லாமல் தரமான சிகிச்சை பெறலாம்.பதிவு செய்யத் தேவையான ஆவணங்கள்:குடும்ப அட்டை (Ration Card)வருமானச் சான்று (Income Certificate)மொபைல் எண்அடையாள ஆவணம் (ஆதார் அட்டை)குறிப்பு: இப்போதே பதிவு செய்து உங்கள் குடும்பத்தின் மருத்துவ நலனைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
அமெரிக்காவுடனான போர் நிறுத்த உடன்படிக்கையின் இடைக்காலத்தில், ஈரான் தனது ராணுவ பலத்தை ரகசியமாக அதிகரித்துள்ளதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன. 'சில்க் ரோடு' (Silk Road) ரயில் பாதை வழியாக சீனாவிலிருந்துஆயிரக்கணக்கான FPV (First Person View) வகை ட்ரோன்களை ஈரான் இறக்குமதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நவீன ட்ரோன்கள், ஒருவேளை அமெரிக்கா ஈரான் மீது தரைவழித் தாக்குதலை (Ground Operation) நடத்தினால், அதை எதிர்கொள்ள மிகக் கடுமையான தடையாகவும், அதிக உயிர்ச்சேதத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதமாகவும் அமையும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒரு காலத்தில் அமெரிக்க விசா பெறுவதற்கே மிகுந்த சிரமப்பட்ட சென்னையைச் சேர்ந்த 'SPACE ZONE INDIA' நிறுவனர் டாக்டர் ஆனந்த் மேகலிங்கம், இன்று தனது விடாமுயற்சியால் NASA-வின் உயர்தர விண்வெளி தொழில்நுட்பப் பயிற்சிக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார். ஒரு மாத கால இந்த எலைட் பயிற்சியில் கலந்துகொள்ளும் அவர், தமிழகத்தின் அடையாளமாகவும் இந்திய விண்வெளித் துறையின் எழுச்சியாகவும் உலக அரங்கில் ஜொலிக்கிறார். அன்று அமெரிக்க விசா மறுப்பு. இன்று NASA அழைப்பு.
‘வம்சத்தை ஆண்கள் அல்ல, பெண்கள்தான் கடத்துகிறார்கள்!’ - பல நூற்றாண்டுகளாக மகன்கள்தான் வம்சாவளியைத் தொடர்கிறார்கள் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. ஆனால், மனித இனத்தின் மிகப்பழமையான மரபணுத் தொடரான 'மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ' (Mitochondrial DNA) தாயிடமிருந்து மட்டுமே குழந்தைகளுக்குக் கடத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, மகள்களால் மட்டுமே இதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.
நாம் அன்றாடம் வாங்கும் பிரீமியம் ரக கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களிலேயே இவ்வளவு பெரிய மோசடியா? வெளிநாடுகளில் காலாவதியான பிஸ்கட்கள் மற்றும் உணவுப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, இந்தியாவில் புதிய பேக்கிங் செய்து, காலாவதி தேதியை மாற்றி விற்பனை செய்த கும்பலை டெல்லி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சுமார் ₹4.3 கோடி மதிப்பிலான 43,000 கிலோ பொருட்களைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறை, இந்த மோசடி நீண்ட காலமாக நடைபெற்று வந்ததாகத் தெரிவித்துள்ளது. பிரபலமான பிராண்டுகள் என்றாலும், நீங்கள் வாங்கும் எந்தவொரு பேக் செய்யப்பட்ட உணவுப் பொருளின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை முறையாகச் சரிபார்க்காமல் வாங்காதீர்கள்.
தமிழகத்தில் முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்வு. கார், ஜீப்களுக்கு ரூ.55லிருந்து ரூ.80 ஆகவும், இலகு ரக வாகனங்களுக்கு ரூ.85லிருந்து ரூ.130 ஆகவும், லாரி, பேருந்துகளுக்கு ரூ.185லிருந்து ரூ.275 ஆகவும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொற்று பாதிப்பால் இதுவரை சுமார் 513 பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 131 பேர் உயிரிழ்ந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இது 'பண்டிபுக்யோ' (Bundibagyo) எனும் அரிதான வகை வைரஸ் என்பதால், இதைக் கட்டுப்படுத்த தற்போது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருந்துகளோ இல்லை என்பது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO இந்த நிலையை *சர்வதேச பொது சுகாதார அவசரநிலை" (Public Health Emergency of International Concern) என்று அறிவித்துள்ளது