25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 04, 2024

ஆண்டாள் பிறந்த ஊருக்கு ‌ ஶ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயர் எப்படி வந்தது ?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளஒவ்வொரு ஊரும்தனக்கென தனிச்சிறப்பும்பெருமையும் கொண்டது.அந்த வகையில் கோதைபிறந்த ஊர்கோவிந்தன் வாழும்என்ற பெருமைக்குரியஊர் தான்ஶ்ரீவில்லிபுத்தூர்.தமிழ்நாட்டின்அரசு முத்திரையாகஉள்ள கோபுரம்இங்குள்ள வடபத்ரசாயி கோவிலின்ராஜ கோபுரம்தான். தமிழ்நாடுஅரசு முத்திரை,பால் கோவாஎன்ற சிறப்புகளைகொண்ட ஶ்ரீவில்லிபுத்தூர்பல்வேறு வரலாற்றுசிறப்புகளை கொண்டது.பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகஇருந்த ஶ்ரீவில்லிபுத்தூர்,பிற்காலத்தில் வந்தநாயக்க மன்னர்கள்ஆட்சிக்காலத்தில் நாயக்கமன்னரின் நேரடிஆட்சியின் கீழ்இருந்தது. குறிப்பாகதிருமலை நாயக்கர்ஆட்சி செய்தபோது ஆண்டாள்கோவிலுக்கு அடிக்கடிசென்று வந்தார்.ஶ்ரீவில்லிபுத்தூர் என்றபெயர் எப்படிவந்தது என்பதுபற்றி ஒருபுராண கதைபரவலாக பேசப்படுகிறது.பல நூற்றாண்டுகளுக்குமுன்னர்ஶ்ரீவில்லிபுத்தூர் பகுதிமுழுவதும் வனப்பகுதியாகஇருந்தது.அதன்அருகில்உள்ள நிலப்பரப்பைமல்லி என்றராணி ஆட்சிசெய்து வந்தார்.அவருக்குவில்லிமற்றும் கண்டன்என இருமகன்கள் இருந்தனர்.ஒரு நாள்வில்லிமற்றும்கண்டன் இருவரும்காட்டிற்கு வேட்டைக்குசென்ற போது,கண்டனைபுலிதாக்கிகண்டன்இறந்து விடதனது சகோதரனுக்குஎன்னநடந்ததுஎனதெரியாமல்வில்லி காடுமுழுவதும் சுற்றிதிரிந்து களைத்துபோய்காட்டிலேயேவில்லிதூங்கிவிட்டார்அப்போதுஅவரது கனவில்பெருமாள்தோன்றி கண்டனுக்குஎன்னநடந்ததுஎன்பதை விளக்கிஇந்த வசனத்தைதிருத்திஅமைத்துபுதியஊரைஉருவாக்கசொன்னார்.அதன்பின்னர் வில்லியும்வனத்தை அழித்துபுதிய ஊரைஉருவாக்கினார். அந்தஊர்தான்ஶ்ரீவில்லிபுத்தூர்வில்லிஉருவாக்கியதன்காரணமாகமுதலில்வில்லிப்புத்தூர்என்று வழங்கப்பட்டஇந்த ஊர்பின்னாளில் திருமகளாகிஆண்டாள் நாச்சியார்பிறந்த காரணமாகமுன்ஶ்ரீ"என்றஅடைமொழிபெற்றுஶ்ரீவில்லிபுத்தூர்என அழைக்கப்பட்டது.ஶ்ரீ என்பதுவடமொழி சொல்என்பதால் அதற்குநிகரான தமிழ்சொல்லான திருஎன்ற வார்த்தைசேர்க்கப்பட்டு அரசுகோப்புகளில் திருவில்லிபுத்தூர்என குறிப்பிடப்பட்டுவருகிறது

Jun 03, 2024

டொராணோவின் அறிவிற்கு விருந்தாகும் 2 அருங்காட்சியகங்கள்

எந்த நாடு சென்றாலும் முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று அருங்காட்சியகங்கள். அந்த நாட்டைப் பற்றிய விவரங்களுடன்,அறிவியல், கலை, கலாச்சாரம்என்றுபலவற்றையும்இவைபோதிக்கின்றன.கனடாவின், நிதிபொருளாதாரத்தின்தலைநகரம் என்று கூறப்படும் டொராணோவில் உள்ள இரண்டு அருங்காட்சியகங்கள் ராயல் ஒன்டாரியோ ம்யூசியம் ,  உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் பற்றிய விவரங்கள் அறிய விரும்புவர்களுக்கு இந்த ம்யூசியம் சிறந்த இடம். விலங்குகள், பறவைகள், பூமி அளிக்கின்ற கனிமங்கள் பற்றி தனித்தனியாக காட்சிக் கூடங்கள். டைனாசர் பற்றிய சிறப்பு கண்காட்சி, அந்த காலகட்டத்தில் பூமியில் இருந்த டைனாசர் வகைகளை எடுத்துரைக்கிறது.சைனாவைப் பற்றிய காட்சிக் கூடம் மிகவும் பெரியது. சைனாவின் டெர்ர கோட்டா பொம்மைகள், அவர்களின் கலாச்சாரம், கட்டிடக் கலை, பண்டைய சைனாவைப் பற்றிய விவரங்கள், புத்த மதத்தின் வரலாறு, புத்தர், அவருடைய சீடர்கள் சிலைகள், ஆகியவை உள்ளன.கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலக நாடுகள் முகக்கவசம் அணிவதை வலியுறுத்தின. உலகில் எல்லா நாடுகளிலிருந்தும் மக்கள் உபயோகித்த முகக்கவச மாதிரிகளைக் காட்சிப் பொருளாக வைத்திருக்கிறார்கள். கொடுமையான நோயிலிருந்து காத்துக் கொள்ள அணிந்து கொண்ட முகக் கவசங்களிலும் பல நாடுகள் கலை நயத்தைப் புகுத்தி உள்ளது ரசிக்கத்தக்கதாக இருந்தது. இந்தியாவிலிருந்து வண்ன மயமான முகக்கவசம் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருந்தது.கொரியா, ரோம், ஆப்ரிக்கா, கிரேக்கம், சைப்ரஸ், எகிப்து ஐரோப்பா என்று பல நாடுகளின் பண்டைய நாகரிகம் பற்றி கண்காட்சிக் கூடங்கள் உள்ளன. இந்தியாவின் பண்டைய நாகரிகம் பற்றிய விவரங்கள் எதுவுமில்லை.  பொதுவாக பொருட்காட்சிகளில் பார்வையாளர் வசதிக்கு உணவு விடுதிகள் இருக்கும். வெளியிலிருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களை அனுமதிக்க மாட்டார்கள். இந்த அருங்காட்சியகத்தில் பெரிய சிற்றுண்டி சாலையில்லை. பார்வையாளர்கள், வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவை உண்பதற்கு வசதியாக இருக்கைகள் அமைத்துள்ளார்கள்.இந்தப் பொருட்காட்சியை முழுவதும் சுற்றிப் பார்ப்பதற்கு குறைந்தது இரண்டு நாட்களாவது வேண்டும்.ஒன்டாரியோ சயன்ஸ் சென்டர்விஞ்ஞான விரும்பிகளுக்கு முக்கியமானது இந்த அருங்காட்சியகம். நுழைந்தவுடன் மக்களைக் கவரும் விதமாக நிலையான மின்சாரம் என்று சொல்லப்படுகிற ஸ்டாடிக் எலக்டிரிசிடி உடலில் பாயும் போது என்ன நடக்கிறது என்பதை விளக்கும் விதமாக உபகரணம்வைத்துள்ளார்கள்.அந்தஉபகரணத்திலிருந்துஉடலில்சிறுமணித்துளிகள்நிலையானமின்சாரம்செலுத்தப்படும்போது, தலையிலுள்ள ரோமங்கள் குத்திட்டு நிற்கின்றன. எதிரிலுள்ள பெரிய கண்ணாடியில் நாம் இதைப் பார்க்கலாம். இதைப் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன.சூரியன், சந்திரன், பூமி மற்றும் சூரிய மண்டலத்தின் கோள்களைப் பற்றி அறிய விண்வெளி மையம், மனித உடல் மற்றும் அதன் உபாதைகளைப் பற்றி அறிந்து கொள்ள உயிரியல் மையம், சிறுவர்களுக்கென்று தனிக் கூடம் என்று பலவகைகள் உள்ளன. சிறுவர்களுக்கான இடத்தில் எல்லாப் பொருட்களையும் அவர்கள் கையிலெடுத்து விளையாடி உணரும் வண்ணம் வடிவமைத்துள்ளார்கள்.ஒரு மனிதனுடைய நம்பிக்கை, அதன் சார்பாக ஏற்படும் எண்ணங்கள் விஞ்ஞான ஆராய்ச்சியை எந்த அளவு பாதிக்கின்றன என்பதை வலியுறுத்தும் விளக்கங்கள் உள்ளன. காட்சிப் பொருட்களைப் புரிந்து கொள்ள ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்சு மொழியில் விளக்கங்கள் வைத்துள்ளார்கள். பல காட்சிப் பொருட்களுக்கு விசையை அழுத்திக் கணிணி மூலம் விவரங்கள் அறியலாம்.உடல் நலம் பேணுவதற்கான வழிமுறைகள், நடனமாடுவதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றைப் பற்றி விளக்கங்கள் உள்ளன. பரதநாட்டிய விளக்கப் படம் வைத்து, உடலின் எந்த பகுதிகளுக்கு இந்த வகையான நடனம் வலிமை சேர்க்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.இந்த அருங்காட்சியகத்தில் மிகப் பெரிய ஐமாக்ஸ் தியேட்டர் உள்ளது. கீழிருந்து மேற்கூரையின் பாதி பாகம் அளவு திரை, நாற்பத்துநான்கு ஒலிபெருக்கிகளின் மூலம் எல்லாத் திசைகளிலிருந்தும் ஒலி என்று இந்த அரங்கில் படம் பார்ப்பது ஒரு புதிய அனுபவம். அறிவியல், விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட குறும் படங்கள் இங்கு திரையிடப்படுகின்றன. நிச்சயமாகப் பார்க்க வேண்டிய அருங்காட்சியகம்.

Jun 03, 2024

ஏசியும், சீலிங் ஃபேனும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால் 

ஏசி ஓடும்போது சீலிங் ஃபேன்களை பயன்படுத்தக்கூடாது என்று சிலர் சொல்வார்கள். ஏனெனில் சீலிங் ஃபேன்கள் அனல் காற்றை கீழேதள்ளும்.ஆனால் சீலிங் ஃபேனை ஏசியுடன் பயன்படுத்தும்போது ஃபேன் அறையில் உள்ள காற்றையே தள்ளுகிறது.இது அறையில் உள்ளவர்களை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் ஆக்குகிறது.ஒரு சீலிங் ஃபேன் அறையின் ஒவ்வொரு மூலையிலும் குளிர்ந்த காற்றைப் பரப்புகிறதுஅத்தகைய சூழ்நிலையில் ஏசி அதிகம் வேலை செய்ய வேண்டியதில்லை.ஆனால் அறையிலிருந்து குளிர்ந்த காற்று வெளியேறாமல் இருக்க அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் கவனமாக மூடவும்.உண்மையில், ஏசியுடன் சேர்த்து ஃபேனையும் பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிக்க முடியும்.இதற்கு, ஏசியில் வெப்பநிலை 24 முதல் 26 வரை அமைக்கப்பட வேண்டும் மற்றும் மின்விசிறியை குறைந்தபட்ச வேகத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அறை விரைவில் குளிர்ச்சியடையும்.அதே நேரத்தில் ஒரு விசிறி அறை முழுவதும் காற்றை பரப்புகிறது. இது அறையை விரைவாக குளிர்விக்கும். தற்போதைய செலவும் குறையும்.உதாரணமாக, 6 மணி நேரம் ஏசி பயன்படுத்தினால் 12 யூனிட் செலவாகும். ஆனால் ஏசியுடன் மின்விசிறியும் பொருத்தினால் 6 யூனிட் மட்டுமே செலவாகும்.இதன் மூலம் ஏசி பயன்படுத்துவதற்கான மின்சார செலவு மிச்சமாகும். 

Jun 01, 2024

இந்திய விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா அம்பானியின் மருமகள்களை விட பணக்காரர்.

பிரபலமான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாமுகேஷ் அம்பானியின் மருமகள்கள் ஷ்லோகா மேத்தா மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்  விட பணக்கார பெண்மணியாக  விளங்குகிறார்.டென்னிஸ் ஜாம்பவானான சானியா மிர்சா, இந்தியாவில் கொண்டாடப்படும்பிரபலமானடென்னிஸ்விளையாட்டுவீரர்மட்டுமல்லாமல்,பத்ம பூஷண் விருது மற்றும் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முன்னாள் உலகின்Νο.1 வீரர் என்ற சாதனை ஆகியவை சானியாவின் சொத்து மதிப்பை உயர்த்தியுள்ளன.அவரது சொத்து மதிப்பு சுமார்$26 மில்லியன்(ரூபாய்216 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இவரதுவருமானம்பல்வேறுவழிகளில்இருந்துவருகிறது.போட்டிகளில் வென்ற பரிசுத்தொகை, ஆண்டுதோறும் ரூபாய்25 கோடி மதிப்பிலான லாபகரமான பிராண்ட் ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் சானியா மிர்சா வருமானம் பெறுகிறார்.அத்துடன் சொந்தமாக டென்னிஸ் அகாடமி ஒன்றையும் சானியா மிர்சா நடத்தி வருகிறார். அவரது வியாபார முயற்சிகள் அனைத்தும் அவரது செல்வத்தை அதிகரிக்கின்றன.தற்போது அவரது சொத்துமதிப்புசுமார்ரூ.216 கோடியாகும்.ஷ்லோகா மேத்தா(ShlokaMehta)வைர வியாபாரி ரசல் மேத்தாவின் மகள்.செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர். முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின்(Akash Ambani) ஸ்டைலான மனைவியான ஷ்லோகா மேத்தாவின்(Shloka Mehta ) சொத்து மதிப்பு $18 மில்லியன் (சுமார் ரூபாய் 120 கோடி) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. EncoreHealthcareர் நிறுவனத்தை இணைந்து நிறுவிய விரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள்ராதிகாமெர்ச்சன்ட்(RadhikaMerchant).இவர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானியை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.இவர் சுமார் ரூபாய் 10 கோடி மதிப்புடைய சொத்துக்களை கொண்டு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Jun 01, 2024

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியர்கள் இல்லாமல் செயல்படவே முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் செயல்பட்டு வரக்கூடிய பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பதவியில் இருப்பவர்கள் இந்தியர்கள். கூகுளின் சுந்தர் பிச்சையில் தொடங்கி மைக்ரோசாப்டின் சத்ய நாதெல்லா, ஐபிஎம்-மின் அரவிந்த் கிருஷ்ணா , ஸ்டார்பக்ஸின் லட்சுமண் நரசிம்மன் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில்(Sillicon Valley) உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பொறுப்பு மட்டும் இன்றி அங்கே வேலை செய்து வருபவர்களிலும் பலர் இந்தியாவை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அண்மையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சிலிக்கான் வேலியின் மத்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஹர்பிர் கே பாட்டியா, அமெரிக்க தொழில்நுட்ப துறை என்பது இந்தியர்கள் இல்லாமல் செயல்படவே முடியாது எனக் கூறியுள்ளார். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்களின் ஆதிக்கமும் இந்தியர்களின் பங்களிப்பும் மிகப்பெரியது என சுட்டிக்காட்டும் அவர், சிலிக்கான் வேலியில் பல்வேறு புதுமைகளுக்கு காரணமானவர்களாக இந்தியர்கள் இருக்கின்றனர் என்றார். ஒரு காலகட்டத்தில் சிலிக்கான் வேலியில் உள்ள தலைமை செயல் நிர்வாக அதிகாரிகள் அல்லது நிறுவனர்களில் 40% பேர் இந்தியாவை சேர்ந்தவர்களாகவே இருந்துள்ளனர், இது மிக முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.கூகுள், யூடியூப், கூகுள் பவுண்டேஷன், மைக்ரோசாப்ட் என பல்வேறு நிறுவனங்களுக்கும் இந்தியர்களே தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள் என சுட்டிக்காட்டுகிறார். இந்தியர்களின் கடின உழைப்பு மற்றும் உற்பத்தி திறன் ஆகியவை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் அவர்களை தலைமை பதவிக்கு கொண்டு சேர்க்கிறது என்றும் கூறியுள்ளார்.மேலும் ஒரு பிரச்சனையை சமாளிப்பதற்காக இந்தியர்கள் கையாளும் வழிமுறைகள் குறிப்பாக எளிதில் தீர்வு காணும் குணம் ஆகியவை தலைமை பொறுப்புவரை அவர்களை கொண்டு சேர்க்கிறது என்றார். அண்மையில் கூட அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, பார்ச்சூன் 500 நிறுவனங்களின் 10 தலைமை செயல் அதிகாரிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் படித்த இந்தியர்களாக உள்ளனர். நீங்கள் இந்தியராக இருந்தால் அமெரிக்க நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரியாக முடியாது என்பது பழைய நகைச்சுவை. இப்போதைய நகைச்சுவை என்னவென்றால், நீங்கள் இந்தியராக இல்லையென்றால் அமெரிக்காவில் தலைமைச் செயல் அதிகாரியாக முடியாது என தெரிவித்தார்உலகளவில் தற்போது எலக்ட்ரானிக்ஸ் கருவிகளில் பயன்படுத்தப்படும் சிப்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. தைவான் நாடு தான் உலகிற்கு தேவையான சிப்களில் பெரும்பாலானவற்றை உற்பத்தி செய்து வருகிறது.இந்நிலையில் இந்தியாவும் தற்போது சிப் அல்லது செமி கண்டக்டர்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. தைவான் நிறுவனங்களின் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் சிப் தயாரிக்கும் ஆலைகளை நிறுவி வருகின்றன. இந்நிலையில் சிப் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட மைக்ரான் (Micron)என்ற நிறுவனம் மெமரி சிப்புகளை உற்பத்தி செய்து உலகெங்கிலும் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் மிகப்பெரிய அளவு முதலீட்டினை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது . ஏற்கனவே இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் ஹைதராபாத்தில் உள்ளது. இந்த நிறுவனம் தற்போது குஜராத் மாநிலம் சனாதில் ஆலையை நிறுவ இருக்கிறது.உலகம் முழுவதும் தங்கள் அலுவலகங்கள் செயல்பட்டு வருவதாக கூறியுள்ள மைக்ரா நிறுவனத்தின் மூத்த துணை தலைவரான நாகா சந்திரசேகரன், ஜப்பான், தைவான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.ஐரோப்பாவிலும் தங்களுக்கு அலுவலகங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.இந்த துறையில் தங்களது போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலான நாடுகளில் அலுவலகத்தை நிறுவி செயல்பட்டு வரக்கூடிய ஒரு நிறுவனமாக மைக்ரான் இருக்கிறது என்றும் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்ய இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது ஹைதராபாத்தில் செயல்பட்டு வரக்கூடிய மைக்ரான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் 3500 பேர் பணி புரிகின்றனர். ஆனால் இது வெறும் தொடக்கம்தான் என்றும் குஜராத்தில் தங்களது உற்பத்தி ஆலை விரைவில் பிரம்மாண்டமான அளவில் நிறுவப்பட இருப்பதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது. முதல்கட்டமாக சிப்புகளை பொருத்துவது, சோதனை செய்வது, பேக் செய்வது ஆகிய பணிகள் இந்த ஆலையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சியில் இந்தியாவை ஒரு முக்கிய பங்காக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள சந்திரசேகரன் , இந்த துறையில் நல்ல வளர்ச்சி பெற கூடிய நாடாக இந்தியாவை காண்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மைக்ரான் நிறுவனத்தில் சுமார் 44,000 பேர் பணி புரிகின்றனர், இவர்களில் 4,000 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

Jun 01, 2024

அமெரிக்காவின் மதிப்புமிக்க 100 பெண் தொழில் முனைவோர்கள் பட்டியலில் 50ஆவது இடத்தை பிடித்தார் நேஹா நர்க்கெடே.

கைநிறைய சம்பளத்துடன் அமெரிக்காவில் வேலை. இதனை யாரேனும் கைவிடுவார்களா, நிச்சயம் மாட்டார்கள். ஆனால் அமெரிக்க வேலையை கைவிட்டு , 78,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண். நேஹா நர்க்கெடே இவரது வெற்றி கதை தொழில்முனைவோர் குறிப்பாக பெண்களுக்கு மிக சிறந்த ஒரு முன் உதாரணமாக இருக்கும். இந்தியாவில் புனேவில் பிறந்து வளர்ந்த நேஹா, இளநிலை கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பை தொடர்வதற்காக அமெரிக்காவுக்கு சென்றார்.அங்கே ஜார்ஜியா டெக் கல்லூரியில் கணினி அறிவியல் முதுகலை பட்டம் பெற்றார். படித்து முடித்த கையோடு மென்பொருள் பொறியாளராக தன்னுடைய வேலையை தொடங்கினார். அமெரிக்காவில் ஒராக்கள் (Oracle), லிங்குடின் (LinkedIn)போன்ற மிகப்பெரிய நிறுவனங்களில் இவர் பணியாற்றினார். கை நிறைய சம்பளம், நல்ல வேலை என்று அத்துடன் செட்டிலாகி விடாமல் தான் ஒரு தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற உத்வேகத்தில் வேலையை கைவிட்டார். இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கினார். கன்ஃபிளூயண்ட் (Confluent) என்ற இந்த நிறுவனம் தரவுகளை மேலாண்மை செய்யும் நிறுவனமாகும்.இந்த நிறுவனத்தில் நேஹா தற்போது 6% பங்குகளை வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தின் மதிப்பு 78,000 கோடி ரூபாய் ஆகும். நேஹாவின் நிகர சொத்து மதிப்பு 520 மில்லியன் டாலர்கள் ஆகும். ஒரு நிறுவனத்துடன் நேஹா நிறுத்திவிடவில்லை.ஆஸ்கைலர் என்ற மோசடிகளை கண்டறிய கூடிய ஒரு நிறுவனத்தை தொடங்கினார். தற்போது ஆஸ்கைலர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நேஹா செயல்பட்டு வருகிறார். தன்னுடைய வெற்றிக்கு தந்தையே காரணம் எனக் கூறும் அவர். பெண்கள் பாரம்பரிய கட்டமைப்புகளை உடைத்து வெளியே வந்து தொழில் துறையில் சாதிக்க வேண்டும் எனக் கூறுகிறார். சிறுவயதில் தான் கிரண் பேடி, இந்திரா நூயி மற்றும் இந்திரா காந்தி போன்றவர்களின் புத்தகங்களை படித்தபோது வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும் அதுவே தற்போது மிகப்பெரிய ஒரு தொழில் முனைவோராக தன்னை நிலை நிறுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.நேஹா கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்காவின் மதிப்புமிக்க 100 பெண் தொழில் முனைவோர்கள் பட்டியலில் 50ஆவது இடத்தை பிடித்தார். தற்போது அமெரிக்காவில் இருக்கக்கூடிய பணக்கார பெண்கள் பட்டியலிலும் இவர் பிரதான இடத்தில் இருக்கிறார். 37 வயதாகக் கூடிய நேஹா ஹாரன் இந்தியா வெளியிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற பெண் தொழில் முனைவோர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

Jun 01, 2024

இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்ட நட்சத்திரப் பழம்

நட்சத்திரப் பழம் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர்,  இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது. குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஹவாய், புளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று.10 கிராம் நட்சத்திர பழத்தில் கார்போ ஹைட்ரேட்ஸ் - 6.73 கிராம், சர்க்கரை - 3.98 கிராம்,கொழுப்பு - 0.33 கிராம், புரோட்டீன் - 1.04 கிராம், போலேட் -12 கிராம், வைட்டமின் சி- 34.4 கிராம், பாஸ் பரஸ் - 12 மி.லி. கிராம், பொட்டாசியம் - 133 மி.லி.கிராம்,துத்தநாகம்- 12 மி.லி.கிராம் உள்ளது. 

May 31, 2024

மூத்த குடிமக்களுக்கான முதலீடு திட்டம்

நாடு முழுவதும்60 வயதுக்குமேற்பட்டவர்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள்அறிவித்துவருகிறது. அந்தவகையில்தபால்நிலையத்தில்,60 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு அதிக வட்டிவழங்கும்வகையில் “மூத்தகுடிமக்கள்சேமிப்புதிட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000,அதிகபட்சமாகரூ.30லட்சம்வரைமுதலீடுசெய்யலாம்.5 ஆண்டுமுதிர்வுகாலம்கொண்டஇத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு,காலாண்டுஅடிப்படையில்8.2 சதவீதம்வட்டிவழங்கப்படுகிறது. அதன்படி ரூ.30 லட்சம்முதலீடுசெய்தால்ரூ.12,30,000 வட்டிஎனரூ.42,30,000 முதிர்வுத்தொகையைப்பெறலாம்எனகூறப்படுகிறது.

May 31, 2024

நீளமான மணல் குகை

உலகின் நீளமான மணற்கல் குகை மேகாலயாவின் கிழக்கு காஷி மலை மாவட்டத்தில் மவ்சின்ராம் பகுதியில் உள்ளது. இக்குகையின் பெயர் கெரம் புரி.'கெரம்' என்றால் குகை என அர்த்தம்.இதன் நீளம்24.50 கி.மீ. இது எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட மூன்று மடங்கு அதிகம். இது2016ல் கண்டுபிடிக்கப் பட்டது. இக்குகைக்குள் வெப்பநிலை16-17 டிகிரி செல்ஸ்சியசாக இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து4025 அடி உயரத்தில் இக்குகை அமைந்துள்ளது. மேகாலயாவில் 1650 குகைகள் உள்ளன. 2வது  நீளமான குகை வெனிசுலாவில் உள்ளது.

May 31, 2024

எஸ்.பி.ஐ-யின் திட்டம் ரூ.5 லட்சம் முதலீடு, ரூ.10.51 லட்சம் ரிட்டன்

அனைத்து இடங்களிலும் வெவ்வேறு காலகட்டங்களுக்கு வங்கி அல்லது தபால் அலுவலகத்திலும் ஃபிக்ஸட் டெபாசிிட்(FD) செய்யலாம். வட்டி விகிதங்களும் காலத்திற்கு ஏற்ப மாறுபடும்.sbifixeddeposit | நிலையான வைப்புத்தொகை(FD) என்பது உத்தரவாத ரிட்டன் திட்டமாகும். இதில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகக் கருதி பணத்தை முதலீடு செய்கிறார்கள்.எல்லா இடங்களிலும் வெவ்வேறு காலகட்டங்களுக்கு வங்கி அல்லது தபால் அலுவலகத்திலும் ஃபிக்ஸட் டெபாசிிட் (FD) செய்யலாம். வட்டி விகிதங்களும் காலத்திற்கு ஏற்ப மாறுபடும்.எஸ்பிஐ எஃப்டி வட்டி விகிதங்கள் 7 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை - 3.00%180 நாள்கள் முதல் 210 நாள்கள் வரை - 5.25%211 நாள்களுக்கு மேல் ஆனால் 1 வருடத்திற்கும் குறைவானது - 5.75%1 வருடத்திற்கு மேல் ஆனால் 2 வருடங்களுக்கும் குறைவானது - 6.80%2 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 3 ஆண்டுகளுக்கு குறைவாக - 7.00%3 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 5 ஆண்டுகளுக்கு குறைவாக - 6.50%5 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரை - 6.50%400 நாள்கள் அமிர்த கலாஷ் வைப்புத் திட்டம் - 7.10%நீங்கள் எஸ்பிஐ எஃப்.டி.யில் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்ய விரும்பினால்,1,2,3,5 மற்றும10 ஆண்டுகளில் உங்கள் தொகை எவ்வளவு அதிகரிக்கும் என்பதை எஸ்பிஐ (SBI) எஃப்.டி  கால்குலேட்டரின் படி தெரிந்துகொள்ளுங்கள்-5.75% FD மீது 1 வருடம் வரை வட்டி - ரூ 5,29,3766.80% வட்டியுடன் FD 2 ஆண்டுகள் வரை - ரூ 5,72,1877.00% வட்டியுடன் FD 3 ஆண்டுகள் வரை - ரூ 6,15,7206.50% வட்டியுடன் 5 ஆண்டுகள் வரை FD இல் - ரூ 6,90,21010 ஆண்டுகள் வரை FD மீது 6.50% வட்டியுடன் - ரூ 9,52,779மூத்தக் குடிமக்கள்6.25% வட்டியுடன் 1 வருடம் வரை - ரூ 5,31,9902 வருடங்கள் வரை FD மீது 7.30% வட்டி - ரூ 5,77,8377.50% வட்டியுடன் 3 ஆண்டுகள் வரை - ரூ 6,24,8587.00% எஃப்.டி மீது 5 ஆண்டுகள் வரை - ரூ 7,07,38910 ஆண்டுகள் வரை எஃப்.டி மீது 7.50% வட்டி - ரூ 10,51,175

1 2 ... 21 22 23 24 25 26 27 ... 47 48

AD's



More News