25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 27, 2024

போலந்து மக்களால் கொண்டாடப்படும் இந்தியாவின் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் மகாராஜா

இந்தியாவை சேர்ந்த பல அரசர்கள் தங்கள் படைபலத்தால் கடல் தாண்டி பல நாடுகளில் தங்கள் வெற்றிக் கொடியை நாட்டினர். இந்தியாவின் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் மகாராஜா, இரண்டாம் உலகப் போரின் சவாலான காலங்களில், பல நாடுகள் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்கத் தயாராக இல்லாதபோது, சுமார் 1,000 போலந்து குழந்தைகளைக் காப்பாற்றி போலந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.சோவியத் யூனியன் மீதான ஜெர்மனியின் படையெடுப்பால் அரசியல் நிலப்பரப்பு மாறியதால், பல போலந்து மக்கள் சோவியத் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளர் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். சூழ்நிலைகள் மாறியபோது, சில போலந்து அகதிகள் சோவியத் யூனியனை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். போலந்து நாட்டின்சுதந்திரத்தின் 100 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் ஜாம்நகரில் 'தலைமுறைகள் முதல் தலைமுறைகள்' என்ற பெயரில் நிகழ்வு நடைபெற்றது. இந்த சந்தர்ப்பம் இந்தியாவிற்கும் போலந்திற்கும் இடையிலான நீடித்த பிணைப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது, இது நெருக்கடி சமயத்தில் உருவாக்கப்பட்டது மற்றும் பல தலைமுறைகளாக நீடித்தது. இந்த இணைப்புக்கு காரணமாக இருந்தவர் மகாராஜா திக்விஜய்சின்ஹ்ஜி ரஞ்சித்சிங்ஜி ஜடேஜா. ராஜ்புத் பரம்பரையின் வாரிசு ஆவார். செப்டம்பர் 18, 1895 அன்று, பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில், குஜராத்தின் சதோதர் என்ற விசித்திரமான நகரத்தில் பிறந்தார். பிரபல கிரிக்கெட் வீரர் கே.எஸ்.யின் மருமகன். ரஞ்சித்சிங்ஜி, சௌராஷ்டிரா, ராஜ்கோட்டில் உள்ள ராஜ்குமார் கல்லூரியில் அவரது ஆரம்பக் கல்வியைப் பெற்றார், இது அவரது புகழ்பெற்ற வாழ்க்கை பயணத்திற்கு அடித்தளம் அமைத்தது. அவரது கல்வி முயற்சிகள் அவரை மால்வர்ன் கல்லூரி மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரிக்கு அழைத்துச் சென்றன.இராணுவ வாழ்க்கை 1919 ஆம் ஆண்டில், திக்விஜய்சிங்ஜி தனது இராணுவ வாழ்க்கையைத் தொடங்கினார், பிரிட்டிஷ் இராணுவத்தில் இரண்டாவது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார். 125 வது நேப்பியர் ரைபிள்ஸ் மற்றும் எகிப்திய பயணப் படையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் அவரது வீரமும் அர்ப்பணிப்பும் அவரது முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. 1921 இல் லெப்டினன்ட்டாக குறிப்பிடத்தக்க பதவி உயர்வு மற்றும் 1929 இல் கேப்டன் பதவி உட்பட பதவி உயர்வுகள் தொடர்ந்தன. 1931 இல் அவர் ஓய்வு பெற்ற போதிலும், இந்திய இராணுவத்துடனான அவரது தொடர்பு நீடித்தது, 1947 இல் மதிப்பிற்குரிய லெப்டினன்ட்-ஜெனரலாக கெளரவ பதவி உயர்வு வழங்கப்பட்டது.போலந்து அகதிகளுக்கு அடைக்கலம் இரண்டாம் உலகப் போரின்போது போலந்து அகதிகளின் கஷ்டத்திற்கு அவர் இரக்கத்துடன் உதவியதில் சர் திக்விஜய்சின்ஹ்ஜியின் மிக ஆழமான மனிதாபிமானம் வெளிப்பட்டது. 1942 ஆம் ஆண்டில், அவர் ஜாம்நகர்-பாலச்சடியில் போலந்து குழந்தைகள் முகாமை நிறுவினார், சோவியத் ஒன்றியத்தின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்தார். இந்த முகாம் இந்த சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக அமைந்தது, போரின் அழிவுகளிலிருந்து அவர்களுக்கு அடைக்கலம் அளித்தது மற்றும் இருளுக்கு மத்தியில் நம்பிக்கையின் ஒளியை வழங்கியது. அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி, மஹாராஜா தனது ராஜ்ஜியத்தில் போலந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை சேர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல், தனது ராஜ்ஜியத்தில் ரோசி துறைமுகத்தில் ஒரு மினி போலந்தையும் உருவாக்கினார். ஆரம்பத்தில், மகாராஜா குழந்தைகளை கூடாரங்களில் தங்க வைத்தார், ஆனால் பின்னர் அவர் தனது சொந்த அரண்மனையிலிருந்து 25 கிமீ தொலைவில் அவர்களுக்காக ஒரு அரண்மனையை கட்டினார்.அவர் போலந்து அகதிகளை தனது சொந்த குடும்பம் போல் கவனித்து, சுமார் ஒன்பது ஆண்டுகள் அங்கேயே வைத்து பாதுகாத்தார். மகாராஜாவின் உதவியைப் பெற்ற போலந்து அகதியான விஸ்லாவ் ஸ்டிபுலாவின் கூறும்போது, மகாராஜா அனைவரின் உணவையும் சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். ஒருமுறை, மஹாராஜா ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தபோது, ​​போலந்து அகதிகளின் உணவு விருப்பங்கள் தெரியாததால், அவர் தனது பாணிக்கு ஏற்ப உணவை வழங்குவதற்காக கோவாவிலிருந்து ஏழு சமையல்காரர்களை வரவழைத்தார். போலந்து அகதிகள் மீது மகாராஜாவின் கருணையும் பெருந்தன்மையும் மறந்து விடவில்லை. அவர் போலந்து மக்களின் பார்வையில் ஒரு ஹீரோவானார், மேலும் போலந்தில் உள்ள பல திட்டங்கள் மற்றும் சாலைகள் மன்னர் திக்விஜய்யின் நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெயரிடப்பட்டுள்ளன. வரலாற்றின் இருண்ட காலகட்டங்களில் அவரது இரக்கமான செயல், மற்றவர்களிடம் அவரது மனிதநேயத்திற்கும் கருணைக்கும் சான்றாகும்.

May 25, 2024

'சாய் சுட்டா பார்' அனுபவ் துபே. 27 வயதே ஆன இளம் தொழிலதிபராக வளம் வருகிறார் 

பள்ளிப் பருவத்தில் எதிர்காலத்தில் என்ன ஆவது என்ற கனவுகள் இருக்கும். கல்லூரி காலத்தில் அப்படியே அது ஒரு படி மேலே சென்று சில மாற்றங்களை பெரும். ஆனால், என்ன மாற்றங்கள் நடைபெற்றாலும் கனவு காண்பது மட்டும் என்றும் நிற்காது. அப்படி தான் இவருக்கும் தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற இவரின் கனவு, வயது வெறும் எண் மட்டும் தான் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்தியுள்ளது.20 வயதில்"நான் தொழில் தொடங்க உள்ளேன்” என்று கூறினான், சுற்றி இருப்பவர்களின் பார்வைக் கண்டிப்பாகக் கேலியாகத் தான் இருக்கும். இவரைப் பற்றித் தெரிந்தவர்கள் இனி அப்படி நினைக்க மாட்டார்கள். ஏனென்றால்,20 வயதில் சில லட்சம் வைத்து தொழில் தொடங்கிய அவர் இன்று150 கோடி மதிப்பு மிக்க தொழிலுக்குஅதிபராகஉயர்ந்துள்ளார்.2016 ஆம் ஆண்டு ஒரு டீ கடையைத் தொடங்கி இன்று195 மேற்பட்ட நகரங்களில் மிகப் பெரிய அளவில் கிளைகள் கொண்டுள்ள"சாய் சுட்டா பார்" டீ கடையில் நிறுவனர் இவர்  தான்.1996 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் ரேவா மாவட்டத்தில் பிறந்தவர் அனுபவ் துபே.B.CC படிப்பை முடித்த இவரை, அவரின் அப்பா IAS அதிகாரியாகப் பார்க்க விரும்பியுள்ளார். அதற்காக டெல்லியில் பயிற்சி எடுத்துத் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். மேலும் CA போன் போட்டி தேர்வுகளையும் எழுதி தோல்வி அடைந்துள்ளார். அலுவலக வேலைப்பார்ப்பதை விடத் தொழில் தொடங்குவதே சிறந்தது என்று  தொழில் தொடங்க முயற்சிகளை எடுத்துள்ளார். B.Com படித்த ஆனந்த நாயக் என்றவருடன் இணைந்து வெறும் 3 லட்சம் முதலீட்டில் ஒரு டீ கடை தொடங்கியுள்ளார். இதர டீ கடைகளுடன் ஒப்பிடுகையில் அவர்களின் கடை வித்தியாசப்பட மண் குவளையில் டீ வழங்கி வந்துள்ளனர். மேலும், கடையில் புகைப்பிடிப்பதை தடை செய்துள்ளனர். முதல் கடையே பெண்கள் விடுதிக்கு அருகில்  அமைந்ததினால், அவர்களின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின்எண்ணிக்கை  அதிகரித்துக்கொண்டே சென்றது.முதல் கடைக்கு மேசை, நாற்காலி போன்ற பொருட்களை நண்பர்கள் உதவியுடன் பெரும்பாலும் உபயோகித்த பொருட்களையே வாங்கியுள்ளனர். பெயர்ப் பலகையை கூட'சாய் சுட்டா பார்' என கையில் எழுதி வைத்துள்ளனர். முதற்கட்டத்தில் நிதி அடிப்படையில் கஷ்டங்கள்  இருப்பினும் விடாப்பிடியாக அவர்கள் பின்பற்றிய முறை பல்வேறு பகுதிகளிலிருந்து  வாடிக்கையாளர்களைக் கொடுத்தது.தொடர்ந்து, மண் குவளையில் சுமார்20 டீ வகைகளை அறிமுகம் செய்துள்ளனர். இந்த கடின உழைப்பும், விடாமுயற்சியும் சேர்ந்து தொழிலைப் பெருக்குவதற்கு உத ள்ளது சுகாதாரமான சூழலில் மண் குவளையில்20 வகை டீ என்பது தற்போதைய சக இளைஞர்களின் இடையே பிரபலமடையத் தொடங்கி விட்டது.தொடங்கிய சில வருடங்களிலேயே அடுத்தடுத்து165 கடைகளை195 மேற்பட்ட நகரங்களில் தொடங்கிவிட்டனர். இந்தியா மட்டுமின்றி துபாய் மற்றும் ஓபன் நாடுகளிலும் இவர்களின்'சாய்'சுட்டா பார்' டீ கடைகள் உள்ளது. தற்போது இந்தியாவிலேயே மண் குவளையில் டீவழங்கும் முதன்மையான டீ கடைFranchise தொழிலாக'சாய் சுட்டா பார்' மாறியுள்ளது.'சாய் சுட்டா பார்' கடைகளில் பயன்படுத்தப்படும் மண் குவளைகள் உள்ளூர் குயவர்களிடம் வாங்கப்படுகிறது. இதனால், சுமார்250 குயவர்கள் குடும்பங்கள் நலன் அடைக்கின்றனர்இந்த வருடத்தில் இவர்கள் நிறுவனத்தில் வருவாய் மட்டும் சுமார்150 கோடியாக உள்ளது. டீ மீது உள்ள. அலாதி விருப்பத்தனால், அதனையே தொழிலாகத் தொடங்கி தனித்திறமையால்27 வயதில் சுமார்150 கோடி மதிப்பு மிக்க நிறுவனத்தை உருவாக்கிய அனுபவ் துபே-வின் வெற்றி பாராட்டத்தக்கது.

May 25, 2024

கொஞ்சம் கொஞ்சமாக டாலர் மதிப்பு சரியும் அபாயம்

 சீனாவும் ரஷ்யாவும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் தெரிவித்துள்ளார். டாலரை புறக்கணிக்க கடந்த 10 வருடங்களாக இந்த இரண்டு நாடுகள் எடுத்து வந்த நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.பொருளாதார உறவுகளில் கிட்டத்தட்ட டாலர் இல்லாத பரிவர்த்தனைகளையே நாங்கள் மேற்கொள்கிறோம், என்று அவர் கூறியுள்ளார்.ஏற்கனவே பிரிக்ஸ் நாடுகள் தனியாக ஒரு பணத்தை உருவாக்க உள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம். இவர்களின் கடந்த கூட்டத்தில் தனியாக பணத்தை உருவாக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பிரிக்ஸ் நாடுகள் எல்லாம் இனி பிரிக்ஸ் குழுவின் புதிய கரன்சியை பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டியது எண்ணெய் வள நாடுகள் இப்போது டாலரை பயன்படுத்துகின்றன. பிரிக்ஸ் கரன்சி குழுவில் அவை சேருவதால் அவையும் டாலரை துறந்துவிட்டு பிரிக்ஸ் கரன்சிக்கு மாறும். இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும். இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வாங்கப்படும்.இப்படிப்பட்ட நிலையில்தான் சீனாவும் ரஷ்யாவும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் தெரிவித்துள்ளார்.மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஷ்யா வர்த்தகத்திற்காக சீனாவை அதிகம் நம்பியிருப்பதால், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகமும் இந்த ஆண்டு விரிவடைந்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த பரிவர்த்தனைகள் 200 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக மிஷுஸ்டின் கூறினார். இதற்கிடையில், ரஷ்யா-அமெரிக்க வர்த்தகம் சமீபத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது. 2022 இல் உக்ரைன் மீதான அதன் முழு அளவிலான படையெடுப்பிற்காக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மாஸ்கோவை உலக நிதிய அமைப்பிலிருந்து வெளியேற்றியது. இதனால் சீனா- ரஷ்யா இடையே வருத்தம் அதிகம் ஆனது. இதனால் சீனாவின் யுவான் பயன்பாடு இதில் அதிகம் ஆனது. அதோடு யுவானை சர்வதேசமயமாக்கும் முயற்சியில் பெய்ஜிங் சில வெற்றிகளைப் பெற்றுள்ளது. உலகளாவிய பயன்பாட்டில் யுவான் பங்கு ஜனவரியில் 1.9% இலிருந்து அக்டோபரில் 3.6% ஆக உயர்ந்தது.முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்து உள்ளன. இந்த கூட்டமைப்பில் பாகிஸ்தானை சேர்க்க சீனா அழுத்தம் கொடுத்தது. முக்கியமாக டாலர் பயன்படுத்தும் நாடுகள் , அமெரிக்காவை சார்ந்து வாழும் நாடுகள் இதனால் கடுமையாக பின்னடைவை சந்திக்க நேரிடும். கொஞ்சம் கொஞ்சமாக டாலர் மதிப்பும் இதனால் சரியும் அபாயம் ஏற்படலாம் 

May 25, 2024

கண்களுக்குத் தெரியாமல் ஓடும் விசித்திர ‘கல் நதி’

 நதி என்றால் நிறைய தண்ணீர் ஓடும். நடுவில் அழகான மணல் திட்டுகள் இருக்கும். ஆனால், தண்ணீரும் ஓடாத, மணல் திட்டும் காணாத ஒரு விசித்திர நதி ரஷ்யாவில் உள்ளது.  தண்ணீர் ஓடுவதன் தடயமே இந்த நதியில் தெரிவதில்லை. அப்படியென்றால் அந்த ஆற்றில் தண்ணீர் இல்லை என்றுதானே அர்த்தம்.‘மழைக்காலங்களிலாவதுதெரியுமா என்றுதானே நினைக்கிறீர்கள்?’ அப்படியும் இல்லை. இந்த ஆற்றில் பாறைகள் மட்டுமே காணப்படுகின்றன. குறைந்தபட்சம் ஒரு கிளாஸ் தண்ணீரை கூட இந்த ஆற்றில் இருந்து எடுக்க முடியாது. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கற்கள், பெரிய பாறைகள்தான் உள்ளன. அதனால்தான் இது,‘ஸ்டோன் ரிவர்’ அல்லது ‘ஸ்டோன் ரன்’ என்று அழைக்கப்படுகிறதுஇந்த ஆற்றில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவு வரை பெரிய பெரிய பாறைகள் மட்டுமே தெரிகின்றன. இதை யாரோ நேர்த்தியாக அடுக்கி வைத்தது போல் காணப்படுகிறது. அதேசமயம், இந்த ஆற்றில் உள்ள கற்கள் ஒவ்வொன்றும்10 டன் எடை கொண்டவையாக உள்ளன. இந்தப் பாறை நதியை சுற்றிலும் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடு உள்ளது. இந்தக் காட்டில் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.‘கல்நதி’ என்று அழைக்கப்படும் இது, ரஷ்யாவின் யூரல்ஸ் பகுதியில் உள்ள டாகானி மலைகளில் உருவாகி சில நூறு கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கிறது. பாறைகள் நிரம்பிய அந்த6 கிலோ மீட்டர் தொலைவில் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு அகலங்களை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சில இடங்களில்200 மீட்டர் அகலமும் சில இடங்களில்700 மீட்டர் அகலம் காணப்படுகிறது. அதனால் அந்த6 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றின் தண்ணீரே கண்களில் படுவதில்லை.‘தண்ணீர்இல்லை என்றால் அதை எப்படி நதி என்று சொல்வது?’ என்ற கேள்வி எழலாம். இங்கு அந்தப் பெரிய பாறைகளுக்கு அடியில் தண்ணீர் ஓடுகிறது என்பதுதான் விசேஷம். அருகில் சென்று உற்றுப் பார்த்தால்தான் தண்ணீர் ஓடுவது தெரியும். இந்த ஆற்றில் உள்ள மற்றொரு விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த நதியின் நீர் பாறைகளுக்கு மேல் எப்போதும் தென்பட்டதேயில்லை. அதாவது, அந்த ஆற்று நீர் பாறைகளை தாண்டி மேலே வருவதில்லை.இந்தப் பாறை நதி இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் கற்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விஞ்ஞானிகளின் கணிப்பின்படி அப்போது டாகானி மலைகள் முற்றிலும் பனியால் மூடப்பட்டிருந்தன. அந்த மலைகள்15 ஆயிரம் அடிக்கும் மேல் உயரமாக இருந்துள்ளது. பனியின் கனத்தால் கற்கள் துண்டு துண்டாக உடைந்து நாளடைவில் பனி உருகத் தொடங்கி, கற்கள் அனைத்தும் மலையை விட்டு வெளியேறின.தண்ணீர் ஓட்டத்தின் வேகத்தால் அவை அனைத்தும் சறுக்கி ஆற்றில் குவிந்துள்ளன. இந்த ஆற்றில் உள்ள பாறைகளில் சிலிக்கான் மற்றும் இரும்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால்தான் அவை பளபளப்பாக தெரிகின்றன. தொலைவில் இருந்து பார்த்தால் ஆற்றில் கற்கள் ஓடுவதைப் போல் உணரலாம். ஆனால், உண்மையில் கற்கள் அசையாமல் நிலையாக நிற்கின்றன. ஆனால் தண்ணீர் அதன் கீழே இருந்து பாய்வது விசேஷம்.

May 25, 2024

இந்தியாவின்மிகவும் ஏழ்மையான மாநிலம்  பீகார்

வறுமையை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது. ஐநா மதிப்பீட்டின்படி, 2005-2006 மற்றும்2019,2021க்கு இடையில், இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை சுமார்41.5 கோடி குறைந்துள்ளது. இதனை வரலாற்று மாற்றம் என்று ஐநா சபை கூறியுள்ளது. இது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம்(UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாடு(OPHI) ஆகியவற்றால் வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவின் மாநிலங்கங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களின் வருமை நிலைMPI மூலம் கணக்கெடுக்கப்படுகிறது. அதன்படிவறுமை ஒழிப்பில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக பீகார் உள்ளது. அடுத்து ஜார்கண்ட், அதனை தொடர்ந்து உத்தர பிரதேசம்மற்றும் மத்திய பிரதேசம் உள்ளது. இவற்றுக்கு அடுத்த இடத்தை மேகாலயா பிடித்துள்ளது. இந்நிலையில்51.9% வறுமை விகிதத்துடன் இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலமாக பீகார் உள்ளது. மேலும் உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்கள்3 மற்றும்4 வது இடங்களை பிடித்துள்ளன. இந்நிலையில் கோவாவில் வறுமை வேகமாக குறைந்து வருவதாகவும் அதே போல ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் வறுமை குறைந்து வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலே கேரளாவில் தான் வறுமை குறைவாக உள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில்0.71% மக்கள் மட்டுமே வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இதேபோல கோவாவில்3.76%, சிக்கிமில்3.82%, தமிழ்நாட்டில்4.89% மற்றும் பஞ்சாபில்5.59% வறுமை நிலவுகிறது. நிதி ஆயோக்கின் அறிக்கையின் படி இந்தியாவின் வறுமை மிகுந்த மாநிலமாக பீகார் உள்ளது. குறிப்பாக தாய்மார்களின் ஆரோக்கியம், கல்வி, உணவு, மின்சாரம் என எல்லாவற்றிலும் பின்தங்கியுள்ளது.

May 25, 2024

இண்டிகோ விமானத்தில் பொழுதுபோக்கு சேவை. விமான பயணிகளை குஷிப்படுத்த அறிமுகம்

டெல்லி- கோவா இடையிலான விமான சேவையில், விமானத்தில் பயணிகளுக்காக இன்ஃபிளைட் பொழுதுபோக்கு சேவையின் சோதனையை நடத்தப்போவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.இண்டிகோ நிறுவனம் தனது ஆப்மூலம் இந்தப் பொழுதுபோக்கு சேவையை சோதனை செய்ய உள்ளது. மே1 ஆம் தேதியிலிருந்து முதன்முறையாக அதன் வாடிக்கையாளர்களுக்காக இந்த பொழுதுபோக்கை இண்டிகோ விமான நிறுவனம் அளிக்கிறது.மூன்று மாதம் நடைபெறும் இந்த பரிசோதனையின்போது பயணிகள் இண்டிகோ ஆப்பின் மூலம் கன்டன்ட்களை கண்டு களிக்கலாம். விமானம் உச்சபட்ச உயரத்தை அடைந்தவுடன் இந்த சேவை தொடங்கும். இதன்மூலம் விமானத்தின் எலக்ட்ரானிக்ஸ் இன்டர்பேஸ் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். பயணிகள் தங்களது சொந்த ஹெட்போன்கள் மூலம் கன்டன்ட்களை கேட்கலாம். இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தால் பயணிகளின் பயணம் இனிதாக அமைய முழு அளவில் பொழுதுபோக்கு சேவையை அளிக்கும். 350 விமானங்கள் தினமும்2000 சேவைகளுடன் இண்டிகோ தனது வாடிக்கையாளர்கள் பயணம் திருப்திகரமாக இருக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.டெல்லி- கோவா தடத்தில் அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவை இண்டிகோ நெட்வொர்க்கின் பரந்த சேவையை மேம்படுத்தும் எனக் கூறப்படுகிறது.. விமானநிலைய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கம், விமானப் பயணத்துக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது.விமானப் பயணம் பற்றிய அரசின் பார்வை மாறியுள்ளது. பணக்காரர்களுக்கே ஆன சேவை என்ற மனப்போக்கு மாறிவிட்டது. நாட்டின் இன்ப்ராஸ்ட்ரக்சரின் முக்கிய அங்கமாக இப்போது விமானப் போக்குவரத்து பார்க்கப்படுகிறது. இதனால் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 

May 25, 2024

வெள்ளை கோடுகள் வானில் ஜெட்கள் பறக்கும்போது வருவது ஏன் ?

 குழந்தைகளுக்கு பூமியில் இருந்து வானில் பறக்கும் விமானத்தை பார்க்கும்போது பெரியளவில் மகிழ்ச்சி ஏற்படும்.வானத்தில் சில விமானங்கள் செல்லும்போது அதன் பின் வெள்ளை நிறத்தில் தோன்றும் புகைப்படலம் எப்படி உருவாகிறது? நம்மை ஜெட் விமானம் கடந்து சென்றது என்பதை எளிதாக வெள்ளை புகை போன்ற கோடுகளை வெளிபடுத்தும். இந்த வெள்ளை நிற புகைக்கோடுகளை நாம் இவ்வளவு நாள் விமானத்தில் இருந்து வெளிவரும் புகை என்று நினைத்துகொண்டு இருக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை. விமானத்தில் இருந்து புகை வெளியாவது கிடையாது. ஜெட் போன்ற அதிவேக இன்ஜின் கொண்ட விமானங்களில் இருந்து நீராவி வெளியேற்றப்படுகிறது.அப்படி நடுவானில் வெளியாகும் நீராவிகள் குளிர்ந்த காற்றுடன் கலந்து பனிதுளிகளாக உருவாகிறது. இந்த பனிதுளிகளை தான் நாம் இவ்வளவு நாள் புகை என்று நினைத்துகொண்டு இருக்கிறோம். பூமியில் இருந்து பல்லாயிரம் அடி உயரத்தில் குளிர்ந்த சூழல் நிலவும். அதிவேகமாக செல்லும் ஜெட் விமானங்கள் சூடான நீராவியை வெளியேற்றும்போது, காற்றில் உள்ள குளிர்ச்சியால் உறைந்து போகிறது. இந்த உறைபனி சிறிது நேரம் அப்படியே காற்றில் நின்றுவிடுகிறது. இதுவே, கீழிலிருந்து பார்க்க விமானத்தில் இருந்து வெளியாகும் புகைப்போல் காட்சியளிக்ககிறது. குளிர்ச்சியான சூழல் இல்லாதபோது இதுபோன்ற வெள்ளை பனிதுளிக்கள் ஏற்படாது..நடுவானில் வெளியாகும் நீராவிகள் குளிர்ந்த காற்றுடன் கலந்து பனிதுளிகளாக உருவாகிறது.

May 24, 2024

இந்தியர்கள் அதிகமாக வாழும் நாடுகள்

 இந்தியர்கள் வேலை நிமித்தம் காரணமாக வெளிநாட்டில் தங்க வேண்டியுள்ளது. சிலர் படிப்பு அல்லது பிற தேவைகளுக்காக வெளிநாடுகளில் தங்குகிறார்கள். ஆனால், பல்வேறு அண்டை நாடுகளில் இந்தியர்களின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகபுள்ளிவிவரங்கள்தெரிவிக்கின்றன.இந்தியாவிற்குவெளியேஅதிகஎண்ணிக்கையிலானஇந்தியர்கள்மொரிஷியஸ், பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்கின்றனர்.இந்த நாடுகளில், இந்தியர்கள் மக்கள் தொகையில் நல்ல சதவீதத்தைக் கொண்டுள்ளனர். இந்த நாடுகளில் பெரும்பாலானவை ‘மினி இந்தியா’வைக் கொண்டுள்ளன என்றும் சொல்லலாம்.மொரீஷியஸ்: மொரீஷியஸில் 70% இந்தியர்கள் என்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கும். அந்த வகையில், இந்த நாடு இந்தியர்களுக்கு கலாசார சொர்க்கம். எல்லா இந்திய உணவுகளும் கிட்டத்தட்ட நம் நாட்டைப் போலவே கிடைக்கும்.பிரிட்டன்: இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே உள்ள ஆழமான கலாச்சார உறவுகளை புறக்கணிக்க முடியாது. உணவகங்கள் மற்றும் கடைகள் போன்ற எண்ணற்ற இந்திய நிறுவனங்கள் இந்த நாட்டில் எங்கும் காணப்படுகின்றன. இந்த கலாச்சார பன்முகத்தன்மை ஒற்றுமை உணர்வை உருவாக்குவது மட்டுமல்லாமல், தொலைதூர நாடுகளில் உள்ள இந்தியர்களை சொந்த நாட்டில் இருப்பதுபோல் உணரவும் செய்கிறது. இங்கு மொத்தம் 1.8 சதவீத இந்தியர்கள் வசிக்கின்றனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நீங்கள் எங்கு சென்றாலும், இங்கு ஏராளமான இந்தியர்கள் வசிப்பதால்,. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த மக்கள் தொகையில் 42 சதவீதம் பேர் இந்தியர்களாம்.சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10% முதல் 13% வரை இந்தியர்கள் உள்ளனர்.கனடா: கனடா நல்ல வேலை வாய்ப்புகளை கொண்ட நாடு. உயர் வாழ்க்கை முறை மற்றும் இலவச சுகாதாரம் போன்ற பல கூடுதல் நன்மைகள் இந்த நாட்டை இந்தியர்களை வசிப்பிடமாக ஈர்க்கின்றன.வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தரவுகளின்படி, 1,78,410 பேர் NRI இந்தியர்கள், 15,10,645 பேர் இந்திய வம்சாவளி குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு இந்தியர்களின் மக்கள் தொகை சுமார் 16,89,055 ஆகும்.ஓமன்: ஓமானின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 20% இந்தியர்கள். 2023-க்குள் இந்த நாடு கிட்டத்தட்ட 9 லட்சம் இந்தியர்களின் தாயகமாக மாறிவிட்டது. ஓமானின் துடிப்பான கலாச்சார வாழ்வில் இந்திய இருப்பு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.சிங்கப்பூர்: 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் இந்தியர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூர் ‘லிட்டில் இந்தியா’ என்று அழைக்கப்படும் ஒரு பகுதி உள்ளது, இது இந்திய கலாச்சாரத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா: 2.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட, இரண்டாவது பெரிய இந்திய புலம்பெயர்ந்தோர் தாயகமாக அமெரிக்கா இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்த நாட்டை வேலை செய்யும் இடமாகவும், வணிக முயற்சிகளுக்கான ஊடகமாகவும் மட்டும் பார்க்காமல், வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் பார்க்கின்றனராம்.

May 24, 2024

கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரி

உயிரினங்களில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் தவிர நுண்ணுயிரிகளும் உள்ளன. இதில் பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ், புரோட்டோசோவா உள்ளன. இவை வெறும் கண்ணுக்கு தெரியாது. டெலஸ்கோப் உதவியுடனே பார்க்க முடியும். இதில் மனிதர்களுக்கு நோயை பரப்பும் பல நுண்ணுயிரிகள் இருந்தாலும், சில மருந்து, உணவு தயாரிப்புக்கு பயன்படுகின்றன. உணவுப் பொருட்களைச் சூடாக்கினால் தீமை செய்யும் பாக்டீரியா என்ற நுண்ணுயிர் அழியும் என்பதை, உறுதிப்படுத்தியவர் பிரான்ஸ் விஞ்ஞானி லூயி பாஸ்டர். இதற்கு 'பாஸ்கரிசேஷன்' என பெயர்

May 24, 2024

சவுதி அரேபியாவில் 256 கி.மீ. தூரம்... உலகின் மிக நீளமான நேரான நெடுஞ்சாலை

சவுதி அரேபியாவில் ஹராத் முதல் அல் பத்தா வரை 256 கி.மீ. தூரத்திற்கு ரப் அல்-காலி பாலைவனத்தின் வழியாக வளைவே இல்லாத நேரான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 256 கி.மீ. தூரத்தில் எங்குமே வளைவுகளோ அல்லது ஏற்ற இறக்கங்களோ இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை, உலகின் மிகவும் நீண்ட நேரான நெடுஞ்சாலை என்ற பெயரை பெற்றுள்ளது.மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவை இணைக்கும் 146 கி.மீ. நீளமுள்ள ஐர் நெடுஞ்சாலை உலகின் மிகவும் நேரான சாலை என்று பெயர் பெற்றிருந்தது. இதை விஞ்சி உலகின் மிகவும் நீளமான நேரான நெடுஞ்சாலை என்ற பெயரை சவுதி அரேபியாவில் இருக்கும் 256 கி.மீ. நீள சாலை பெற்றுள்ளது.முதலில் அரேபிய மன்னருக்காக தனிப்பட்ட முறையில் ஒரு சிறிய சாலை அமைக்கப்பட்ட நிலையில், பின்னர் பொதுமக்களின் பயணத்திற்காக, உலகின் மிகப்பெரிய மணல் பாலைவனத்தின் வழியாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை இருப்பு வைத்திருக்கும் ஹராத் நகரில் இருந்து, ஐக்கிய அரபு நாடுகளின் எல்லைக்கு அருகில் உள்ள அல் ஃபத்தா வரை இந்த நெடுஞ்சாலை நீண்டு கிடக்கிறது.256 கி.மீ. தூரத்தில் எங்குமே வளைவுகளோ அல்லது ஏற்ற இறக்கங்களோஇல்லாமல்அமைக்கப்பட்டுள்ளஇந்தநெடுஞ்சாலை, உலகின் மிகவும் நேரான நீண்ட சாலை என்ற பெயரை பெற்றிருப்பதோடு, ஓட்டுநர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தை கொடுப்பதாக, சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.256 கி.மீ. தூரமுள்ள இந்த சாலையை வெறும் 2 மணி நேரத்தில் கடக்கலாம் என்றாலும், விபத்துகள் சாதாரணமானவை என்பதால் கவனமுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தல்களை தொடர்ந்து சவுதி அரேபியா அரசு வழங்கி வருகிறது.

1 2 ... 23 24 25 26 27 28 29 ... 47 48

AD's



More News