போக்குவரத்தை பாதித்த தொடர்மழை
தொடர் மழையில் மலையடிப்பட்டி சஞ்சீவிமலை பகுதியில் இருந்து ரயில்வே தண்டவாளத்திற்கு கீழே வரும் மழைநீர் பாதிப்பால் பாலத் தடுப்பு சுவர், ரோட்டின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்துள்ளது.
இராஜபாளையம் நகர் நடுவே செல்லும் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றுப் பாதையாக தஞ்சை மார்க்கெட் பகுதியில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வழியாக செல்லும் டி.பி.மில்ஸ் ரோடு இருந்து வந்தது. ரயில்வே மேம்பால பணிகளுக்காக முடங்கி இருந்த இந்த ரோடு தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் சென்ட்ரல் பேங்க் அருகே தரைப்பால ரோடு மழையால் ஒரு பகுதி உபயோகிக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு விட்டது. தடையற்ற போக்குவரத்திற்காக பாலத்தை மீண்டும் பலப்படுத்தி அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply