25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Sep 28, 2024

பூமியை சுற்ற உள்ள இரண்டாவது நிலவு

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா பூமிக்கு அருகே சுற்றி வரும் விண்கல், வால் நட்சத்திரம் உடபட 34725 வான் பொருட்களை கண்காணித்து, அதன் சுற்றுப்பாதை பூமிக்கு அருகில் வரும் காலம், உள்ளிட்டவற்றை வெளியீடுகிறது. 2024 ப.டி.5 என்ற விண்கல்லை 2024 ஆகஸ்ட் 7-ல் கண்டறிந்தது. இதன் விட்டம் 37 அடி இது அர்ஜீனா விண்கல் குடும்பத்தை சேர்ந்தது. பூமி தன் அருகே சுற்றி வரும் விண்கற்கள், சிறுகோள் உள்ளிட்டவற்றை ஈர்த்து, அதை தற்காலிகமாக தன் சிறிய நிலவாக மாற்றுவது அறிவியல் வழக்கம்.அதன்படி 2024 பி.டி.25 விண்கல் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு,  செப்டம்பர் 29 TO, நவம்பர் 25 வரை 34 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் மணிக்கு 3540 கிலோ மீட்டர் வேகத்தில், பூமியின் இரண்டாவது நிலவாக சுற்றி வரும். பின் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி, அர்ஜுனா விண்கல் குடும்ப சுற்றுப் பாதைக்கு சென்று விடும். இதன் அளவு மிகவும் சிறியது. என்பதால் பூமியில் இருந்து பார்த்தால் தெரியாது.

Sep 27, 2024

நான்கு ஆண்டு காலமாகவீட்டில் இருந்துபணிபுரிந்து, அலுவலகத்துக்குவந்து பணியாற்ற85% ஊழியர்களின் மனநிலைசவால் மிக்கதாகஇருக்கிறது

பல்வேறு தொழில்நுட்பநிறுவனங்களும் ஊழியர்களைமேலாண்மை செய்வதில்பெரும் சவால்களைஎதிர்கொண்டிருக்கின்றன. நான்குஆண்டு காலமாகவீட்டில் இருந்துபணிபுரிந்து வந்தவர்களைஅலுவலகத்துக்கு வந்துபணியாற்ற செய்யவேண்டும், அலுவலகத்தில்அவர்கள் நெகிழ்வுத் தன்மையுடன் பணியாற்றும் சூழலை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்டபல சவால்கள் இருக்கின்றன.தற்போது பல்வேறுதுறைகளிலும் செயற்கைநுண்ணறிவு வேகமாககால் பதித்துவருகிறது. குறிப்பாகதொழில்நுட்பத் துறைகளில்செயற்கை நுண்ணறிவின்ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. இந்தநிலையில் மைக்ரோசாப்ட்தலைமை செயல்அதிகாரியான சத்யநாதெல்லா மைக்ரோசாப்ட்உள்ளிட்ட பலநிறுவனங்கள் மிகப்பெரியஉற்பத்தி திறன்முரண்பாட்டை(productivityparadox) எதிர்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். பெரும்பாலானமேலாளர்கள், ஊழியர்கள்தங்களுடைய வேலையைகுறைத்து வருவதாககூறுகிறார்களாம். அதேசமயம் ஊழியர்களிடம்கேட்கும்போது தாங்கள்நீண்ட நேரம்அலுவலகத்திற்காக வேலைசெய்து சோர்வடைவதாகதெரிவிக்கிறார்களாம். லிங்குடின்தளத்தின் துணைநிறுவனர் ரீட்ஹாஃப்மனுடன் சத்யநாதெல்லா நடத்தியகலந்துரையாடலில் இந்ததகவலை வெளியிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் போதுரீட் ஹாஃப்மன்கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பணியிடங்களில் நெகிழ்வுத்தன்மை எப்படிஇருக்கிறது? வீட்டில்இருந்து பணிபுரியும் ஊழியர்களைமீண்டும் பணியிடங்களுக்கு கொண்டு வருவது எவ்வளவுசவால் மிக்கதாகஇருக்கிறதுஎன்றகேள்வியைஎழுப்பினார்.அதற்கு பதில்அளித்த மைக்ரோசாப்ட்தலைமை செயல்அதிகாரியான சத்யநாதெல்லா"ஊழியர்களின் செயல்திறன் தொடர்பானதரவுகளை நாம்விரிவாக ஆய்வுசெய்தோம். அதில்மைக்ரோசாப்ட் உள்ளிட்டபல்வேறு நிறுவனங்களிலும் தற்போது உற்பத்தி திறன்முரண்பாடு இருக்கிறது. கிட்டதட்ட85% மேலாளர்கள்தங்களுக்கு கீழ்பணிபுரியக்கூடிய ஊழியர்கள்தங்களுடைய வேலையைகுறைந்து விட்டதாகதெரிவிக்கின்றனர்.ஆனால்85% ஊழியர்கள்தங்கள் நிறுவனத்திற்காக கடினமாக உழைப்பதாகவும் இதனால்தாங்கள் விரைவிலேயேசோர்வடைவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த உற்பத்தி திறன்முரண்பாடு மைக்ரோசாஃப்ட்உள்ளிட்ட பல்வேறுநிறுவனங்களுக்கும் பெரியபிரச்சினையாக இருக்கிறது" என கூறுகிறார். மேலும் இந்தபிரச்சனையை தீர்க்கவேண்டும் எனில்நிறுவன தலைவர்கள்இலக்குகளை எவ்வாறுஇணைப்பது என்பதைகண்டுபிடிக்க வேண்டும்என கூறியுள்ளார். அதாவது தலைவர்களாக நீங்கள்பார்க்க விரும்பும்முடிவு என்னஎன்பதை ஊழியர்களுக்குதெளிவுபடுத்துவது எப்படிஎன்பதை நாம்கற்றுக் கொள்ளவேண்டும் எனசத்ய நாதெல்லாகூறியுள்ளார். இவற்றைஎல்லாம் அடிப்படையாககொண்டு தான்ஊழியர்களுக்கான விதிமுறைகளைஉருவாக்க வேண்டும்என்றும் அவர்கூறியுள்ளார்.

Sep 26, 2024

இந்தியாவின் மிகப்பெரிய வணிகநிறுவனங்கள் டிவிடெண்ட்கள் மற்றும்பங்குகளின் மூலம் ஈட்டிய வருமான பட்டியல்

பிசினஸ் ஸ்டாண்டர்ட்அறிக்கையின்படி, இந்தியாவின்மிகப்பெரிய வணிகநிறுவனமான டாடாகுழுமத்தின் ஹோல்டிங்நிறுவனமான டாடாசன்ஸ், லாபத்தைப்பொறுத்த வரையில்கேள்விக்கு இடமில்லாத ராஜாவாகத் திகழ்கிறது. டாடா சன்ஸ் டிவிடெண்ட்கள் மற்றும்பங்குகளின் மூலம்ரூ.36,500 கோடி வருமானம்ஈட்டியுள்ளது, இதுஇந்த நிதியாண்டில் 7.5 சதவீதம் ஆகும். இது 2022 முதல் 2023-ஆம்ஆண்டில் ஈட்டப்பட்டவருவாயை விட 7.5 சதவீதம் அதிகமாகும்.இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, நந்தன்நிலேகனி, எஸ்.கோபாலகிருஷ்ணன், தினேஷ்கே மற்றும்எஸ்டி ஷிபுலால்ஆகியோர் 100 சதவீதம்வருவாய் அதிகரித்துரூ.3,745.3 கோடியுடன் பட்டியலில்முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.விப்ரோவின் அசிம்பிரேம்ஜி டிவிடெண்டுகள்மற்றும் பங்குகளைவாங்குவதன் மூலம்ரூ.9,100 கோடி வருமானம்ஈட்டி பட்டியலில் இரண்டாவது இடத்தில்உள்ளார்.HCL உரிமையாளர் ஷிவ்நாடாரின் குடும்பம்அதிகம் சம்பாதித்தபட்டியலில் மூன்றாவதுஇடத்தில் உள்ளது,சுமார் ரூ.8,600 கோடிக்கு மேல்குடும்ப வருமானம்ஈட்டியுள்ளது. இதுகடந்த ஆண்டைவிட 8.3 சதவீதம்அதிகம். நான்காவதுஇடத்தில், வேதாந்தாவின்அனில் அகர்வால்உள்ளார். இவர்இந்த நிதியாண்டில்சுமார் ரூ. 6,799 கோடி சம்பாதித்துள்ளார். 2022 முதல்2023ஆம்ஆண்டு வருவாயில்இருந்து73.8 சதவீதம்பெரும் சரிவைச்சந்தித்துள்ளது. இதனால்அவர் பட்டியலில்இரண்டாவது இடத்தில்இருந்து நான்காவதுஇடத்திற்கு மாறியுள்ளார்.

Sep 26, 2024

'கடற்கன்னி' புலா சவுத்ரி

'கடற்கன்னி' புலா சவுத்ரி ஐந்து கண்டங்களின் ஏழு கடல்களையும் நீந்தி, சாதனை செய்த முதல் ஆசியப்   பெண். 7 பெருங்கடல்களை நீந்திக் கடந்த பாரதத் தாயின் சாதனை மகளை பாராட்டுவோம். 

Sep 25, 2024

2023 முதல் 2024-ஆம்நிதியாண்டில் அதிகம்சம்பாதித்த கோடீஸ்வரர்களின் பட்டியலில் அசிம்பிரேம்ஜி 27-வதுஇடத்தில இருந்து 25-வது இடத்திற்குஉயர்ந்து இரண்டாவதுஇடத்தைப் பிடித்து. ஐடி துறையில்புது சாதனை

2023 முதல்2024ஆம்நிதியாண்டில் இவருடையவருவாய்2200 சதவீதம்அதிகரித்துள்ளது. இதனால்அதிக வருமானம்ஈட்டிய நபர்களின்பட்டியலில்2வதுஇடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் பணக்காரபில்லியனர்களைப் பற்றிபேசும்போது அவர்களில்முகேஷ் அம்பானி, கவுதம் அதானிமற்றும் ரத்தன்டாடா ஆகியோரின்பெயர்கள் தான்நம் நினைவுக்குவருவது. சமீபத்தில்விப்ரோ நிறுவனத்தின்நிறுவனர் அசிம்பிரேம்ஜியும் இவர்களின்பட்டியலில் சேர்ந்துள்ளார்பிசினஸ் ஸ்டாண்டர்ட்அறிக்கையின்படி, அசிம்பிரேம்ஜி டிவிடெண்டுகள்மற்றும் பங்குகளைவாங்குவதன் மூலம்சுமார் ரூ.9,100 கோடி சம்பாதித்துள்ளார். இவருடையஆண்டு வருமானம்ரூ.400 கோடிடிவிடெண்டுகள் மற்றும்பங்குகள் மூலம்சம்பாதித்த வருவாய்அவருடைய ஆண்டுவருமானத்தை விட 22 மடங்கு அதிகமாகும். இந்த அபரிமிதமானஅதிகரிப்பின் காரணமாக, 2023 முதல் 2024-ஆம்நிதியாண்டில் அதிகம்சம்பாதித்த கோடீஸ்வரர்களின் பட்டியலில் பிரேம்ஜி27வதுஇடத்தில இருந்து25வது இடத்திற்குஉயர்ந்து இரண்டாவதுஇடத்தைப் பிடித்துள்ளார். தற்போது, ​​அசிம் பிரேம்ஜியின்நிகர மதிப்புரூ. 1,200 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Sep 24, 2024

Jio Brain, Jio AI cloud - புதிய ஏஐ சேவைஅறிமுகப்படுத்திய முகேஷ்அம்பானி..

இந்தியாவின் மிகப்பெரியவர்த்தக சாம்ராஜ்ஜியமானரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 47வது வருடாந்திர பொதுகூட்டம் நடந்தது. இதில் பேசியரிலையன்ஸ் நிறுவனதலைவர் முகேஷ்அம்பானி,'ஜியோபிரைன்' என்றுஅழைக்கப்படும் முழுAI லைப்சைக்கிள் உள்ளடக்கியடூல்ஸ் மற்றும்தளங்களின் தொகுப்பைஉருவாக்கி வருகிறதுஎன்று தெரிவித்தார்.இதோடு முகேஷ்அம்பானி ஜியோAI கிளவுட்டை அறிமுகப்படுத்தினார், இந்ததீபாவளி முதல்ஜியோ பயனர்கள்புகைப்படங்கள் மற்றும்வீடியோக்களுக்கு100 ஜிபிஇலவச கிளவுட்சேமிப்பு தளத்தைக்கொடுப்பதாக அறிவித்தார்.உலகம் முழுவதும்ஏஐ சேவைகள்பெரிய அளவில்வளர்ச்சி அடைந்துவரும் வேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ம் ஏஐ சேவைக்குள்ளநுழைந்துள்ளது பாராட்டத்தக்கது. இந்த ஜியோ பிரைன்சேவை மக்கள்மத்தியிலும், நிறுவனங்கள்மத்தியிலும் எத்தகையதாக்கம் ஏற்படுத்தும்என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மேலும்ரிலையன்ஸ் தலைவர்முகேஷ் அம்பானிஜியோ பிரைன்திட்டத்தை அறிவித்ததைத்தொடர்ந்து, குஜராத்தில்உள்ள ஜாம்நகரில்நிறுவனத்தின் கிரீன்எனர்ஜியில் இயங்கும்கிகாவாட் அளவிலானAI ரெடி டேட்டாசென்டரை அமைக்கப்படும்என்று கூறினார்."நாடு முழுவதிலும்உள்ள ரிலையன்ஸ்க்கு சொந்தமானஇடத்தில்AI கட்டமைப்புவசதிகளை உருவாக்கவும்திட்டமிட்டுள்ளோம். இதுஇந்தியாவில் வளர்ந்துவரும் தேவையைபூர்த்தி செய்வதுமட்டும் அல்லாமல்அதன் பயன்பாட்டைமலிவு விலையில்வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துவிரிவுபடுத்துவோம்" என்று கூறினார்முகேஷ் அம்பானி.ஜியோ பிரைன் என்றால் என்ன? ஜியோ பிரைன், ஜியோ நிறுவனத்தின் அனைத்து சேவைகளிலும்AI பயன்பாட்டை வேகமாகக் கொண்டு வர எங்களுக்கு உதவுகிறது. இத்தகைய ஏஐ சேவைகள் மூலம் நிறுவனத்தில் டேட்டா அடிப்படையில் வேகமான முடிவுகள், துல்லியமான கணிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்."இந்த ஜியோ பிரையன் சேவயை ஜியோ நிறுவனத்தில் மட்டும் பயன்படுத்தாமல் ரிலையன்ஸின் மற்ற நிறுவனங்களிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். ரிலையன்ஸ் வழியாக ஜியோ பிரைனை முழு திறன் வாய்ந்த ஏஐ தளமாக மெருகேற்றிய பின்பு, நாங்கள் மற்ற நிறுவனங்களுக்கும் வழங்கக்கூடிய சக்திவாய்ந்தAI சேவை தளமாக அறிமுகம் செய்வோம் என நான் நம்புகிறேன்" என்று முகேஷ் அம்பானி கூறினார்.முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்(JPL) இல்67.03% பங்குகளை வைத்துள்ளது. இது ரிலையன்ஸின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சொத்துக்களைக் கொண்டுள்ளது.

Sep 24, 2024

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பென் ரியா சிங்கா முதலிடம் பெற்று, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா என்ற பட்டத்தை பெற்றார்.

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 என்ற அழகி போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 22 nd september  ரில் ,51 பேர் பங்கேற்ற நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பென் ரியா சிங்கா முதலிடம் பெற்று, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா என்ற பட்டத்தை பெற்றார்.மிக குறைந்த வயதில் இப்பட்டத்தை பெற்ற ரியா சிங்கா சாதனை படைத்து உள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா மகுடம் சூட்டினார்.நம் நாட்டின் சார்பில் வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இவர் பங்கேற்க உள்ளார்.

Sep 23, 2024

தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் .

மனித வாழ்க்கைக்கு பணம் மிக அவசியம். மனிதர்களாகிய நாம் அனைவரும் பணத்தை சம்பாதித்து எதிர்கால தேவைகளுக்காக சேமித்து வைக்கிறோம். பாதுகாப்பான வழியில் நல்ல வருமானத்தை அளிக்கும் பல திட்டங்கள் உள்ளன. இவற்றில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் மிக பிரபலமாக உள்ளன. தபால் அலுவலக திட்டங்கள் முதலீட்டுக்கு சிறந்த வழியாக கருதப்படுகின்றன. தபால் அலுவலகம் (Post Office) பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்குகிறது. அனைத்து திட்டங்களும் அதிகப்படியான நன்மைகளை அளிப்பதால், முதலீட்டாளர்களுக்கு எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்ற குழப்பமே எற்படுவதுண்டு. அந்த அளவிற்கு இந்த திட்டங்களில் அதிக நன்மைகள் உள்ளன. முதலீட்டாளர்களுக்கு மிக அதிக அளவில் நன்மைகளை அள்ளித்தரும் 6 முக்கிய தபால் நிலைய திட்டங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். அட்டகாசமான நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் 6 தபால் நிலைய திட்டங்கள்.ஒவ்வொரு காலாண்டிலும் தபால் அலுவலகத் திட்டத்தின் வட்டி விகிதங்கள் மாறும். நடப்பு நிதியாண்டான 2024-25ன் இரண்டாம் காலாண்டிற்கான, அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான வட்டி விகிதங்கள் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டுள்ளன.அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வட்டி விகிதங்கள் பற்றிய தகவல்கள் செப்டம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும். அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த வட்டி விகிதங்கள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். எந்த திட்டத்தில் அதிக வட்டி கிடைக்கும் என்ற தகவல், உங்களுக்கு ஏற்ற திட்டத்தை தேர்ந்தெடுப்பதில் உதவியாக இருக்கும். தபால் அலுவலகத்தில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. - நிலையான வைப்பு- மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்- மாதாந்திர வருமான வைப்பு- தொடர் வைப்பு- தேசிய சேமிப்புச் சான்றிதழ்- சுகன்யா சம்ரித்தி யோஜனா- மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் - கிசான் விகாஸ் பத்ராபோன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.அஞ்சல் அலுவலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்டத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரை 7.7% வட்டி கிடைக்கும். இந்தத் திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்து கூட்டு வட்டியை வழங்குகிறது. அதாவது வட்டிக்கு வட்டி கிடைக்கும்

Sep 23, 2024

ரூ.17,000 தள்ளுபடி அறிவித்த முகேஷ் அம்பானி ஐபோன் ஆப்பிள் போனுக்கு..

செப்டம்பர் 9-ஆம் தேதி "இட்ஸ் குளோடைம்" (It's Glotime) என்ற நிகழ்ச்சியில் ஆப்பிளின் சமீபத்திய மாடலான "iPhone 16" சீரிஸ் வெளியாக உள்ளது. இந்த புதிய மாடலுக்கு பல எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில் முகேஷ் அம்பானி ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயத்தைச் செய்துள்ளார். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரனான முகேஷ் அம்பானி புதிய ஐபோன் சீரிஸ்க்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும்போது ஐபோன்15 ப்ரோ மேக்ஸ் மீது முன்னெப்போதும் இல்லாத அளவில் தள்ளுபடியை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அம்பானியின் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர், "iPhone 15 Pro Max" விலையைக் குறைத்துள்ளது. முதலில் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த மாடல் ரூ. 1,54,000 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ. 1,37,000 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.இந்த ரூ.17,000 தள்ளுபடி, ஆப்பிளின் சமீபத்திய வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் வந்துள்ளது. இந்த சலுகையோடு மட்டுமில்லாமல் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக ரூ.5000 ரூபாய் தள்ளுபடி பெறலாம். அதேபோலAU பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள்6000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இந்த சலுகைகளின் மூலம்17,000 தள்ளுபடியுடன்"iPhone15ProMax" மாடலின் மொத்த சேமிப்பு ரூ.22,000 முதல் ரூ.23,000 ரூபாய் வரை இருக்கும். ஆப்பிளின் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனான"iPhone15ProMax" மாடல் ஸ்ட்ராங்கான டைட்டானியம் பாடியை கொண்டுள்ளது.6.7in சூப்பர் ரெட்டினாXDR டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதியையும் கொண்டுள்ளது. இதனால் தண்ணீரில் விழுந்தாலும் போனுக்கு எந்த சேதமும் ஏற்படாது. அத்தகைய உயர்தர மாடலில் விலை குறைப்பு தற்போது iphone பிரியர்களுக்கு வசதியான ஒன்றாக மாறியுள்ளது.இந்த தள்ளுபடி, அம்பானியின் வணிக உத்தியா அல்லது புதியiPhone வெளியீட்டிற்கு முன் தனது தயாரிப்புகளை விற்கும் முயற்சியா என்பது குறித்த கேள்வி எழுகிறது. ஆனாலும் ரிலையன்ஸ் ஸ்டோர்களில் வழங்கப்படும் இந்த தள்ளுபடி மற்றும் குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது கிடைக்கக்கூடிய தள்ளுபடி அனைத்தும் சேர்த்து பார்க்கும் போது தோராயமாக 23,000 ரூபாய் வரை "iPhone 15 Pro Max" போன்களில் சேமிக்க முடியும்.

Sep 21, 2024

இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் 21 வயது இளைஞர்கள்!

இந்தியாவில் பணக்காரர்கள் என்றால் நமக்கெல்லாம் உடனே நினைவுக்கு வருபவர்கள் அம்பானி மற்றும் அதானி தான். இவர்களைத் தவிர்த்து சில தொழில்துறை நிறுவனர்களும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார்கள்‌. ஆனால் 21 வயது மற்றும் 22 வயது நிரம்பிய இரண்டு இளைஞர்கள் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அவ்வகையில், இந்த வருடம் இரண்டு இளைஞர்கள் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருப்பது இன்றைய இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் அறிக்கைப்படி கவுதம் அதானி இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தையும், முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கில் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மருந்து மாத்திரைகள் கூட எளிதாக கிடைத்து விட்டது. ஆனால், மளிகை சாமான்கள் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. இதனை மனதில் வைத்து2021 ஆம் ஆண்டில் மும்பையில் உதயமானது தான் ஜெப்டோ(Zepto) எனும் விரைவு வணிக செயலி. இதன் நிறுவனர் பெங்களூரைச் சேர்ந்த21 வயதே ஆன இளைஞர் கைவல்யா வோரா, தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்தச் செயலியின் பங்குதாரர்22 வயதான இளைஞர் ஆதித் பலிச்சா தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களாக இருந்து, பாதியில் படிப்பை கைவிட்டவர்கள்.கொரோனா காலத்தில் வீட்டிற்கே மளிகை பொருள்களை கொண்டு சேர்க்கும் தேவை அதிகமாக இருந்தது. ஏற்கனவே அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஜியோ மார்ட் உள்ளிட்ட முன்னணி ஆன்லைன் செயலிகள் இருந்தாலும், இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அசுர வளர்ச்சியை அடைந்தது ஜெப்டோ நிறுவனம்.'கான்டாக்ட்லெஸ் டெலிவரி' தான் இந்தச் செயலியின் அடிப்படை நோக்கம். இதற்கு ஏற்றாற் போல் ஜெப்டோ நிறுவனத்தை உருவாக்கி, மளிகைப் பொருள்களை வீட்டிற்கே கொண்டு போய் சேர்த்தனர் இந்த இரண்டு இளைஞர்கள்.மூன்றே ஆண்டுகளில் இந்தியா முழுக்க அசுர வளர்ச்சியை அடைந்ததன் விளைவாக பல கோடி லாபத்தை ஈட்டியுள்ளது ஜெப்டோ நிறுவனம். இதன் காரணமாகத் தான் இளைஞர்கள் இருவரும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் கைவல்யா வோராவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.3,600 கோடி, பங்குதாரர் ஆதித் பலிச்சாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.4,300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளன. இளைய கோடீஸ்வரர் பட்டியலில் இவர்கள் இருவரும் முதலிரண்டு இடங்களைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.தொழில் முனைவோருக்கான ஆர்வமும், புதிய யுக்தியும் இருந்தால்எதையும் சாதிக்கலாம் என்பதற்குஉதாரணமாக இந்த இரண்டு இளைஞர்கள் திகழ்கின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 46 47

AD's



More News