16 வயதுடைய இந்திய மாணவர்கள் அரியானா அகர்வால், விவான் சாவ்சாரியா, அவ்யானா மேத்தா ஆகியோர் உருவாக்கிய"Plas-Stick" தொழில்நுட்பம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.புளியங்கொட்டையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், காந்தத்தின் உதவியுடன் நீரில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை அகற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் சிறப்பம்சங்கள்:சுற்றுச்சூழலுக்கு உகந்தது. குறைந்த செலவில் பயன்படுத்தலாம். மின்சாரம் தேவையில்லை. கிராமப்புற குடிநீர் சுத்திகரிப்புக்கு பயன்படும் வாய்ப்பு உள்ளது. இந்த கண்டுபிடிப்புக்காக இம்மாணவர்கள் The Earth Prize 2026 Global Winner விருதை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்
ரயில்வே பொதுப்பிரிவு பயணிகளுக்காக புதிய டிஜிட்டல் டிக்கெட் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. RailOne மொபைல் செயலி மூலம் பெறப்படும் டிக்கெட்டை செயலியிலேயே காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முக்கிய தகவல்கள்:டிக்கெட்டின் ஸ்கிரீன்ஷாட், PDF நகல் அல்லது வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட பிரதிகள் செல்லுபடியாகாது. பயணத்தின் போது RailOne செயலியில் உள்ள அசல் டிக்கெட்டை மட்டுமே காட்ட வேண்டும்.விதிமுறைகளை மீறினால் ரூ.250 வரை அபராதம் விதிக்கப்படலாம்
ஹரியானாவின் ஜிந்த்–சோனிபட் இடையே இயக்கப்படும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில், தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை நோக்கிய முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகமான VELS திருவான்மியூர் வளாகத்தை ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார். விழாவில் UAE கூட்டாட்சி தேசிய மன்ற உறுப்பினர் அகமது மிர் ஹாஷிம் கூரி, VISTAS நிறுவனர்-வேந்தர் டாக்டர் இஷாரி கே. கணேஷ், துணைத் தலைவர் டாக்டர் பிரீதா கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.AI வகுப்பறைகள், தொழில் இணைப்பு ஆய்வகங்கள், டிஜிட்டல் கற்றல் வசதிகள் மற்றும் உலகத் தர மாணவர் உள்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகம், எதிர்காலத் திறன்களை வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. UAE-யில் விமானப் பயிற்சிப் பள்ளி அமைக்க VISTAS–Aspin Holding–MH Cockpit இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், AI, ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவு துறைகளில் ஜோஹோவுடன் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. Intel Unnati, TCS iON, Microsoft, Oracle Academy ஆகியவற்றுடன் இணைந்த சிறப்பு மையங்களும் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீதர் வேம்பு, உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தி, VELS உடன் இணைந்து செயல்பட ஜோஹோ ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.
திருச்சிராப்பள்ளிநவல்பட்டுஎல்காட் SEZ வளாகத்தில்செயல்படும்அமெரிக்காவின் QuinteFinancialTechnologies நிறுவனத்தின் GCC விரிவாக்கத் திட்டத்திற்கு MEPZ ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் அலுவலக பரப்பளவு 3,600 சதுர அடியில் இருந்து 20,650 சதுர அடியாக விரிவடையவுள்ளதுடன், 400-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும், ஆண்டு ஏற்றுமதி மதிப்பு ₹120 கோடியை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. ChatGPT.com - solves anything 2. Claude.ai - conversational assistant 3. Perplexity.ai - research with sources 4. Mid Journey.com - generate breathtaking art 5. Leonardo.ai - hyper-realistic images 6. Runwayml.com - Al video editing 7. Replit.com - write and run code 8. Cursor.so - Al coding IDE 9. Blackbox.ai - Al for developers 10. Tabnine.com - coding autocomplete 11. Manus.im - build apps with text 12. Canva.com - design anything with Al 13. Gamma.app - Al-powered presentations 14. Tome.app - instant slide decks 15. MagicSlides.app - auto-build slides 16. SlidesAl.io - text to presentations . 17. Synthesia.io - Al video presenters 18. HeyGen.com - avatars that talk
பெரிய திரையில் திரைப்படங்களை ரசிக்க விரும்புபவர்களுக்காக, ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 65 ப்ரொஜெக்டர் ரூ.10,499 விலையில் கிடைக்கிறது. 4K சப்போர்ட், 8,500 லூமன்ஸ் பிரகாசம் மற்றும் 200 இன்ச் வரை திரை அளவை வழங்கும் இந்த ப்ரொஜெக்டரில் Android OS, HDMI, USB, Bluetooth 5.1, Dual-Band Wi-Fi, சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள் மற்றும் 50,000 மணி நேர LED லேம்ப் வசதியும் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் புதிய வரலாறு படைத்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம்-1 ராக்கெட், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 'மிஷன் ஆகமன்' (Mission Aagaman) எனப் பெயரிடப்பட்ட இந்தப் பயணம், இந்தியாவில் தனியார் நிறுவனம் உருவாக்கிய முதல் சுற்றுப்பாதை (Orbital) ராக்கெட் ஏவுதலாக புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.22 மீட்டர் உயரம் கொண்ட விக்ரம்-1, பல்வேறு தொழில்நுட்ப மற்றும் வணிகப் பயன்சுமைகளை (Payloads) வெற்றிகரமாக குறைந்த உயரப் பூமி சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) நிலைநிறுத்தியது. இந்த வெற்றியின் மூலம், தனியார் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் சுற்றுப்பாதையை எட்டிய உலகின் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.இந்த வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஸ்கைரூட் நிறுவனத்தின் நிறுவனர் பவன் குமார் சந்தனா மற்றும் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான நிகழ்வாக இந்த வெற்றி கருதப்படுகிறது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் பள்ளி பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு.1939-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில், பல நிறங்களில் சோதனை நடத்தப்பட்டபோது, மஞ்சள் நிறம் தொலைவிலிருந்தே எளிதாகக் கண்களில் படுவதும், மூடுபனி, மழை, அதிகாலை மற்றும் மாலை நேரங்களிலும் தெளிவாகத் தெரிவதும் உறுதி செய்யப்பட்டது.மேலும், மஞ்சள் பின்னணியில் கருப்பு எழுத்துகள் மிகத் தெளிவாகப் படிக்கப்படுவதால் பள்ளி பெயர் மற்றும் பேருந்து எண்களையும் எளிதில் அடையாளம் காண முடிகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பள்ளி பேருந்துகளுக்கான பொதுவான நிறமாக மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.
கிரேக்கத்தின் பெலோபொன்னீஸ் பகுதியில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான போசைடன் கடவுளுக்கான கோயில் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வின் மூலம், பழங்கால துறைமுக நகரமான சாமிகோஸில் புதைந்திருந்த இந்த கோயில் வெளிச்சத்துக்கு வந்தது. பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் கோயில் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.