25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மரவள்ளிக்கிழங்கு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மரவள்ளிக்கிழங்கு

மலைப்பாங்கான இடங்களில் மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் விளையும் மருத்துவ பயன்கள் கொண்ட கிழங்கு வகைகளில் மரவள்ளிக்கிழங்கும் ஒன்றாகும். வேர்களில் உருவாகும் இந்த அற்புத கிழங்கில் கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகிறது.மலச்சிக்கல், குடல் வலி, குடல்புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது."இரத்தசிவப்பணுக்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது எலும்புகளின் நெகிழ்வு தன்மையை உறுதி செய்கிறது.மரவள்ளிக் கிழங்கு சாற்றை தினமும் இரண்டு வேளை பருகுவதால், வருங்காலத்தில் தலைவலி ஏற்படாமல் தடுக்கிறது. மரவள்ளிக் கிழங்கை நாம் தினமும் சாப்பிடுவதால், உடலுக்கு தினசரி தேவையான 'வைட்டமின்கள்' மற்றும் 'மினரல்கள்' எளிதில் கிடைக்கின்றன. இவை நமது கண் பார்வையை மேம்படச் செய்கின்றன.  

மரவள்ளிக் கிழங்கின் இலைகளை கொதிக்க வைத்து, கஷாயம் தயாரித்து பருகி வந்தால் நமக்கு ஏற்படும் லேசான காய்ச்சல் பறந்துபோகும். உடலில் ஏற்படும் காயங்களுக்கு மரவள்ளிக் கிழங்கு இலையில் உள்ள பசையை பிழிந்து எடுத்து, காயங்கள் மேல் பூசுவதால், சிறந்த நிவாரணம் கிடைக்கும். மரவள்ளி கிழங்கின் இலைகளை நறுக்கி, சாலட் மற்றும் இதர இறைச்சி உணவுகளில் சேர்த்துக்கொண்டால் கூடுதல் சுவையைத் தரும்.பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் மரவள்ளி கிழங்கை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு நல்ல பலனைத் தரும். மேலும், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இவற்றில் அதிகமாகவே உள்ளன. மரவள்ளிக் கிழங்கை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்துக்கொள்வதன் மூலம், நமது உடல் எடையை படிப்படியாக குறைக்கலாம். 

இவற்றில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. இது குடலில் இருந்து வெளிப்படும் எல்லா நச்சுகளையும் உறிஞ்சி, செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது. மேலும், உடலில் ஏற்படும் அழற்சியையும் குறைக்கவும், இரைப்பை பிரச்னைகளில் இருந்தும் காக்கிறது.ஒற்றை தலைவலி மற்றும் சாதாரண தலைவலிக்கு மரவள்ளிக் கிழங்கு மற்றும் அதன் இலைகள் பயன்படுகின்றன. இவற்றை அப்படியே உண்ணலாம் அல்லது கழுவி, அரைத்து சாறு எடுத்தும் பருகலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News