ஜப்பான் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய சிந்து.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் சூப்பர் 750 ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில், இந்தியாவின் பி.வி. சிந்துவை எதிர்கொள்ள இருந்த ஜப்பான் வீராங்கனை நோஜோமி ஒகுஹரா காயம் காரணமாக விலகினார். இதனால் சிந்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த சீசனில் மூன்றாவது முறையாக அரையிறுதியில் விளையாடும் அவர், இன்று உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யூஃபெயை சந்திக்கிறார். இருவரும் இதுவரை 14 முறை மோதியதில், சென் யூஃபெய் 8 முறையும், சிந்து 6 முறையும் வென்றுள்ளனர்.
0
Leave a Reply