மூத்த குடிமக்களுக்கான சளி, இருமல் தீர்க்கும் சித்த மருத்துவ முறைகள்.
முதுமையில் ஏற்படும் இருமல், சளி, தொண்டைக் கரகரப்பு மற்றும் எரிச்சலைக் குணப்படுத்த எளிய வீட்டு வைத்திய முறைகள்:
- துளசி இலை: காலையில் வெறும் வயிற்றில் இரண்டு துளசி இலைகளை மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடிக்க வேண்டும். இதில் உள்ள Eugenolஎன்ற வேதிப்பொருள் தொண்டைக்கட்டைச் சரிசெய்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
- தூதுவளை & முசுமுசுக்கை:தூதுவளைக் கீரையை வாரம் இருமுறை துவையலாகச் சாப்பிட நெஞ்சுச்சளி குறையும். முசுமுசுக்கை இலை சாற்றை தோசை அல்லது சப்பாத்தி மாவில் கலந்து சாப்பிட்டாலும் கோழை குறையும்.
- கற்பூரவள்ளி: கற்பூரவள்ளி இலையை அனலில் வாட்டிப் பிழிந்த சாற்றுடன் (ஒரு டீஸ்பூன்), தேன் கலந்து காலையில் குடித்தால் இருமல் மற்றும் சளி குணமாகும்.
- தும்பைப் பூ: 4-10 தும்பைப் பூக்கள் மற்றும் 2-6 மிளகை நல்லெண்ணெயில் வறுத்து, அரைத்து, வெல்லத்துடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு மற்றும் கமறல் உடனே நீங்கும்.
வெற்றிலை & மிளகு: இரண்டு இளம் வெற்றிலைக்குள் 2-6 மிளகு வைத்து மடித்து மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடிக்க வேண்டும். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்புத் திறன் (Anti-bacterial) கபத்தைச் சேர்க்காமல் தடுக்கும்
0
Leave a Reply