25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மூத்த குடிமக்களுக்கான சளி, இருமல் தீர்க்கும் சித்த மருத்துவ முறைகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூத்த குடிமக்களுக்கான சளி, இருமல் தீர்க்கும் சித்த மருத்துவ முறைகள்.

முதுமையில் ஏற்படும் இருமல், சளி, தொண்டைக் கரகரப்பு மற்றும் எரிச்சலைக் குணப்படுத்த எளிய வீட்டு வைத்திய முறைகள்:

  • துளசி இலை: காலையில் வெறும் வயிற்றில் இரண்டு துளசி இலைகளை மென்று சாப்பிட்டு,  வெந்நீர் குடிக்க வேண்டும். இதில் உள்ள Eugenolஎன்ற வேதிப்பொருள் தொண்டைக்கட்டைச் சரிசெய்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
  • தூதுவளை & முசுமுசுக்கை:தூதுவளைக் கீரையை வாரம் இருமுறை துவையலாகச் சாப்பிட நெஞ்சுச்சளி குறையும். முசுமுசுக்கை இலை சாற்றை தோசை அல்லது சப்பாத்தி மாவில் கலந்து சாப்பிட்டாலும் கோழை குறையும்.
  • கற்பூரவள்ளி: கற்பூரவள்ளி இலையை அனலில் வாட்டிப் பிழிந்த சாற்றுடன் (ஒரு டீஸ்பூன்),  தேன் கலந்து காலையில் குடித்தால் இருமல் மற்றும் சளி குணமாகும்.
  • தும்பைப் பூ: 4-10 தும்பைப் பூக்கள் மற்றும் 2-6 மிளகை நல்லெண்ணெயில் வறுத்து, அரைத்து, வெல்லத்துடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு மற்றும் கமறல் உடனே நீங்கும்.

வெற்றிலை & மிளகு: இரண்டு இளம் வெற்றிலைக்குள் 2-6 மிளகு வைத்து மடித்து மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடிக்க வேண்டும். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்புத் திறன் (Anti-bacterial) கபத்தைச் சேர்க்காமல் தடுக்கும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News