அறுபது வயதடைந்த அனைவரும் 60ம் கல்யாணம் கட்டாயம் நடத்த வேண்டுமா?.
நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றும் சேர்த்து வருவது, அறுபதாவது வயதில் வரும் பிறந்த நாளில் தான்.மறுமுறை இதே போல சேர்ந்து வருவது நூற்று இருபதாவது வயதில் தான். அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்காது. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறுபது வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள் ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும். அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். இதனை"ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி' என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பாக்கியம் ஒரு சிலருக்கு கிடைக்காமலே கூட போய் விடுகிறது. இருப்பவர்கள் இதை செய்து கொள்வது நல்லது தானே.
0
Leave a Reply