25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


மக்களின் எதிர்பார்ப்பு

Nov 22, 2024

ஹிந்துக்களின் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்திற்கு ராஜபாளையம் வழியில் நேரடி ரயில்,ராஜபாளையம், தென்காசி, புனலூர், கொல்லம் வழியே திருவனந்தபுரத்திற்கு இரவு நேர ரயிலை இயக்க வேண்டும்.

விருதுநகர்மாவட்டம்இராஜபாளையம்வழியே, சென்னை, திருச்சி, மதுரை, கொல்லம், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாருர், மயிலாடுதுறைக்கு நேரடி ரயில் வசதி உள்ளது.பெங்களுரு, கோவை, திருவனந்தபுரம், பாநி, பொள்ளாச்சி, சேலம், பகுதிகளுக்கு அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஹிந்துக்களின் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்திற்கு அனைத்து பகுதிகளில் இருந்து ரயில்கள் உள்ளன. ஆனால் ராஜபாளையம் வழியில் நேரடி ரயில் இல்லை.ராமேஸ்வரம் கோயில், கோதண்டராமர் கோயில், அரிச்சல் முனை கடல், பாம்பன் பாலம், கடல் தீவுகள், கடல் படகு சுற்றுலா என அங்குபலஇடங்கள்உள்ளன.எனவேராமேஸ்வரம்திருவனந்தபுரம், இடையேராமநாதபுரம், விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, புனலூர், கொல்லம் வழியே திருவனந்தபுரத்திற்கு இரவு நேர ரயிலை இயக்க வேண்டும் என விருதுநகர் தென்காசி, மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர். 

Nov 21, 2024

இராஜபாளையம் கண்மாய்களில் ஆகாய தாமரைகள்.

இராஜபாளையம் சுற்றியுள்ள புளியங்குளம், பிரண்டைகுளம், கடம்பன்குளம், பெரியாதி குளம், கொண்டனேரி கண்மாய், சத்திரப்பட்டி வாகைகுளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களும் நகரில் உள்ள ஊருணிகளும்,  ஆகாய தாமரை பாதிப்பில் சிக்கி உள்ளன.இராஜபாளையம் மலையொட்டிய பகுதிகளில் இருந்து உருவாகும் நீர் சுற்றுப்பகுதி கண்மாய்கள் முதல் மழைக்கு நீர் இருப்பை பெற்று விடும். நகர்பகுதி ஒட்டி உள்ளதால் கண்மாய்களில் குடியிருப்புகளிள் கழிவு நீர் என்று கலந்து விடுகிறது. இதனால் கழிவு நீரில் வேகமாக வளரும் ஆகாய தாமரை செழித்து வளர்வதுடன் நீர்படிப்பு பகுதிகளை ஆக்கிரமித்த வளர்ந்து விடுகிறது.இதன் காரணமாக தண்ணீர் வரும்போது பாசத்திற்கான கொள்ளளவு குறைந்து பாதிப்பு ஏற்படுத்துவதுடன் நீர்வற்றும் காலங்களில் மடைகள் வழியே பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற வழி இன்றி அடைப்பு ஏற்படுத்துகிறது. விவசாயிகளுக்கு சிக்கலை எற்படுத்தி வரும் ஆகாயத்தாமரையை நிரந்தரமாக அகற்றும் வழிமுறையை மேற்கொள்ள வேண்டி விவசாய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Nov 20, 2024

தொடர் விபத்துக்கு உள்ளாகி வரும் சத்திரப்பட்டி ரோடு

ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அடுத்த சத்திரப்பட்டி ரோட்டில் இருந்து கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் அதிகம். தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் செல்லும் இப்பகுதியின்  போக்குவரத்து  நெரிசல் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் இந்த ரோட்டை அகலப் படுத்தியதுடன் வாகனங்கள் முந்துவதை தவிர்க்க மேம்பாலம் அடுத்த பகுதியில் இருந்து பொன்னகரம் நுழைவு பகுதி வரை சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.இந்நிலையில்  சாலையில் ஏற்பட்டுள்ள  பள்ளங்கள், ஆக்கிரமிப்பு, சென்டர் மீடியன் பகுதிகளில் வாகன ஒட்டிகள்  காணும் விதமான ரிப்லக்டர் இல்லாதது, மரக்கிளைகள் ரோடு வரை படர்ந்து வாகனங்கள் ஒதுங்க முடியாது, ,  சென்டர் மீடியன் அருகே மணல் குவிந்துள்ளது போன்ற பல சிக்கல்களால் இப்பகுதி வாகன ஒட்டிகள் தொடர் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நெடுஞ்சாலை துறையினர் முறையாக பராமரிப்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். நெடுஞ்சாலை துறையினர் கவனிப்பார்களா? இப் பகுதி  மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

Nov 19, 2024

பஸ் வசதி இன்றி தென்றல் நகரில் ராஜபாளையம் மக்கள் தவிப்பு

ராஜபாளையம் தாலுகா அலுவலகம் அடுத்த செண்பகத்தோப்பு ரோட்டில் 15க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.நகர் பகுதியில் இருந்து 3 கி.மீ., தொலைவில்  அமைந்துள்ள இங்கிருந்து பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலைகள் வியாபார நிறுவனங்களுக்கு செல்ல முறையான அரசு பஸ் போக்குவரத்து, மினிபஸ்  போன்ற வாகன வசதி இன்றி தவிக்கின்றனர். அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் நகர், ராம் நகர், இந்திரா நகர், பச்சை காலனி, சக்தி நகர், சாஸ்திரி நகர், பேங்கர்ஸ் காலனி, தென்றல் நகர், சமத்துவபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல ஆட்டோக்கள் மட்டுமே ஒரே வழி. ஆட்டோக்களில் அவசரத்திற்கு வந்து செல்ல ரூ.200 வரை கட்டணம் ஆகிறதுவசதி வேண்டி தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து  மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

Nov 17, 2024

செயல்பாட்டிற்கு  வராத அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம்.

 ராஜபாளையத்தில், அமைக்கப்பட்டு வரும் 864 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் துவங்கி 4 ஆண்டுகள் கடந்தும் ஒப்படைப்பு பணிகள் முடியாதது, குறித்து  ஏக்கத்தில் உள்ளனர். வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 3 மாடிகளுடன் 15 பிளாக்குகளாக மொத்தம் 864 தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு முடிவு செய்து நிதி ஒதுக்கப்பட்டது.ராஜபாளையம் செண்பகத்தோப்பு ரோட்டில் இடம் தேர்வு செய்து கடந்த 2020 மே மாதம். பூமி பூஜை நடந்து.  கட்டுமானப்பணி கொரோனாவால் தாமதமானது. பின் கட்டட பணி முடிந்தும்  மின் இணைப்பு வழங்காதது, பூங்கா அமைப்பதில் தாமதம், தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் முடிவு பெறாதது என பல்வேறு காரணங்களால் தாமதமாகி கட்டட பணிகளுக்கு அடுத்து பயனாளிகள் தேர்வு, ஒப்படைப்பு என தாமதம் தொடர்கிறது. பல கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் விரைந்து ஒப்படைக்க வேண்டும். கடந்த ஆண்டு பிப். மாதம் பணிகள் முடிந்தும் தற்போது வரை தாமதிப்பது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர் .

Nov 12, 2024

சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி,

திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே உள்ள வெங்காயப்பேட்டைக்கு கோவை, திருப்பூர், நாமக்கல், தேனி, தாராபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பெரிய, சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. தினமும் 400 டன்னிற்கு அதிகமாக சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. இதன் உற்பத்தி தற்போது திண்டுக்கல் மட்டுமல்லாமல் பிற் மாவட்டங்கள், வெளிமாநிலங்களிலும் அதிகமாக உள்ளது. இதனால் 2 நாட்களாக திண்டுக்கல் வெங்காயப்பேட்டைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை குறைந்து கிலோ ரூ.20க்குவிற்பனையானது.தற்போது மழைக்காலம் என்பதால் அவைகள் நனையாமல் இருக்க குடோன்களில் பாதுகாக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவற்றை விற்க முடியாத மொத்த வியாபாரிகள் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்துநீடித்தால்இன்னும்இதன்விலைகுறையவாய்ப்புள்ளதாகவியாபாரிகள்தெரிவித்தனர்.உற்பத்திவிவசாயிகள்கவலையடைந்துள்ளனர்.

Nov 11, 2024

சாலை ஓரம்  நிறுத்தப்படும் பஸ்களால் விபத்து அபாயம்.

ராஜபாளையம் நகர்பகுதியில் செல்லும் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகம். கர் ஏற்கனவே நீண்ட வருடங் களாக ஆக்கிரமிப்பு அகற்றாமலும், சாலையோர மின் கம்பங்களை ஓரமாக நகற்றி வைக்காமலும் ரோட்டின் அகலம் குறைந்துள்ளது.இந்நிலையில் பஞ்சு மார்க்கெட் அடுத்த வளைவு பகுதியில் அரசு, தனியார் பஸ்கள் நெடுஞ்சாலை ஓரத்தையே, வரிசையாக டிப்போவாக மாற்றி வைத்துள்ளனர். இதனால் விபத்துகள் நிகழ்கின்றன. பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து கிராமப் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் டிரிப் முடிந்து மீண்டும் இயக்குவதற்கு நிறுத்த இடமின்றி இவ்வாறு செய்கின்றனர்.இதனால் வெளியூரிலிருந்து புதிதாக வரும் லாரிகள், சுற்றுலா பஸ் கள், கனரக வாகனங்கள் வளைவில் முந்தும்போது விபத்துகளை சந்திக்க நேர்கின்றன. பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடியும் வரை விபத்துகளை தடுக்கும் வகையில் பஸ்களை மாற்று இடத்தில் நிறுத்த வேண்டும் என மக்கள்  எதிர்பார்க்கின்றனர்.

Nov 08, 2024

ராஜபாளையம் ரயில்வே சுரங்கப் பாதையை மண் போட்டு மூடப்பட்டதால் மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.

 ராஜபாளையத்தில் ரயில்வே தண்டவாளத்தை இலகு ரக வாகனங்கள்  கடக்க சுரங்கப்பாதை ரூ.3 கோடி மதிப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. ரயில்வே சார்பில் பணிகள் தொடங்கி கான்கிரீட் பிளாக்குகள் தண்டவாளம் கீழ்ப் பகுதியில் புதைக்கப்பட்டு சுரங்கப் பாதைக்கான கார்டர்கள் , பொருத்தப்பட்டு ரயில்வே தரப்பில் தற்போது பணிகள் முடிந்த நிலையில், நகர் பகுதி இணைக்கும்  அணுகு சாலை பணிக்கு ஒத்துழைப்பு இல்லை."தொடர்ந்து ஏற்பட்ட  தாமதமும் மழைநீர் தேங்குவதால் சுரங்கப்  பாதையின் நிலைத்தன்மை பாதுகாக்க வேண்டி மண் போட்டு மீண்டும் மூடி விட்டனர்., அரசு துறையினர் இடையே பிரச்னையால் ஏற்பட்டுள்ள ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்  பாதையை மண் போட்டு  மூடப்பட்டதால் விரக்தியடைந்துள்ளனர்.

Nov 05, 2024

இளைஞர்கள் மது அருந்தி விட்டு பாட்டில்களை ஆற்று ஓரங்களில் போட்டு உடைப்பதும், தோப்புகளில்  திறந்தவெளி மது கூடங்களாக மாற்றும் அவலம்

மலையை ஒட்டி அய்யனார் கோயில், சேத்துார், தேவதானம் பகுதிகளில் மழைக்காலங்களில் ஆற்று நீர் வரத்து உள்ளது.இவற்றில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தவிர பல  கி.மீ., தொலைவு உள்ள ஆற்றுப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல்  பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை சேர்த்து வருகின்றனர்.  இளைஞர்கள் மது அருந்தி விட்டு பாட்டில்களை ஆற்று ஓரங்களில் போட்டு உடைப்பதும், தோப்புகளில்  திறந்தவெளி மது கூடங்களாக மாற்றும் அவலம் நடந்து வருகிறது.  மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசி விட்டு செல்வதால் யானைகள், மான்கள்உள்ளிட்ட வனவிலங்குகளின் கால்கள் சேதமாகி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.செயல்படாமல் உள்ள செக்போஸ்டை கண்காணித்து நடைமுறைக்கு கொண்டு வரவும், வருவாய்த்துறை போலீசார்  இணைந்து நடவடிக்கை எடுக்கவும், பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Oct 30, 2024

தீபாவளியா ஐய்யய்யோ ?

கங்கா ஸ்நாநம் ஆச்சா ? லோக்கல் டேப் தண்ணிதான்!தீபத்திருநாளில் நரகாசுரனை வதைத்து நியாயத்தை நிலை நிறுத்தியதால் அனைவரும் கொண்டாடுகிறோம். ஆனால் தீபாவளி நாள் தான் வருகிறது, என்று எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள். தெரியுமா ? கேஸ் டெலிவரி செய்பவர்கள், குறவன், முனிசிபல் கிளீனர்கள், வண்ணான் இப்படிப் பலர் நரகாசுரன் வடிவில் வந்து தீபாவளிக்கு காசு கேட்டால்,தீபாவளி யாருக்குத்தான் பிடிக்கும் ?ஏதோ போனஸ் வாங்கி புதுத் துணி எடுத்து பட்டாசு வாங்கி  உறவினர்களுக்கெல்லாம் பலகாரம் கொடுத்து தீபாவளிக்காக பலகாரம் செய்து விட்டு, வேலை செய்பவர்களுக்கெல்லாம் பணம் கொடுத்து, ஆபர் சேல் கண்டு ஏமாந்து, இப்படிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் யாருக்குத்தான் தீபாவளி பிடிக்கும் ?வாங்கபவர்களுக்கோ, கொடுப்பவர்களுக்கோ தெரியலையே ! 

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's