சுகாதார கேடு ஏற்படுத்தி வரும், ரோட்டில் வெளியேறும் கழிவுநீர்.
ராஜபாளையம் அம்பள புலி பஜார் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மெயின் ரோடு சாக்கடை அடைப்பு காரணமாக கடந்து செல்ல வழியின்றி, தேசிய - நெடுஞ்சாலை சாந்தி - தியேட்டர் எதிரே பஸ் - ஸ்டாப், பி.எஸ்.கேபார்க், - குடியிருப்புகள், வணிக கடைகள் அமைந்துள்ள பகுதியில், ரோட்டோரம் வழிந்து தேங்கி நிற்கிறது .
ஓட்டல்கள், மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் முன்பு கழிவுகள் தேங்கி ,நெடுஞ்சாலையில் கடந்து செல்லும், வாகனங்கள், பாதசாரிகள் கழிவு நீரில் பயணிப்பதுடன், வாகனங்கள் செல்லும்போது சாக்கடை மேலே சிதறி பாதிப்பு சுகாதார கேடு ஏற்படுத்தி வருகிறது . நகராட்சி இதை கவனிக்குமா? தேசிய வடிகால் அமைக்கும் பணியை முறைப்படுத்தி கழிவு நீர் தேங்காதவாறு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply