ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, பயணிகள் மாற்று பாதையில் ரயில்கள் இயக்குவதால், மதுரை செல்ல பயணிகள் தவிப்பு.!
மதுரை கோட்டத்தில் ரயில்களை 130 கி. மீ., வேகத்தில் இயக்குவதற்காக தண்டவாள சீர மைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கூடல் நகர், சமயநல்லுார், சோழவந்தான் பிரிவில் தினமும் நான்கு நேரம் பராமரிப்பு நடைபெறுகிறது. இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தினசரி ரயிலான செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றப்பட்டு விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. பல மாதங்களாக இது போன்ற அறிவிப்பினால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, பயணிகள் மதுரை செல்வதற்கு விருதுநகர் இறங்கிபஸ்களில் பயணிக்கின்றனர். இத்துடன் குருவாயூர் சென்னை ரயிலும் மாற்றுபாதையில் இயக்கப்படுகிறது. பணிகள் முடிவடையும் வரை ராஜபாளையம் வழியாக செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு கூடுதலாக புதிய ரயில் இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0
Leave a Reply