சாலை ஓரத்தில் விவசாய கழிவுகள்
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் கரும்பு, நெல், வாழை, போன்ற பயர்களில் நீர்வாய்ப்பு குறைவான பகுதிகளில் மானாவாரி பயிர்களான எள், உளுந்து, கம்பு போன்ற எண்ணெய வித்துக்களை விளைவிக்கின்றனர்.போதிய களம் இன்றி விவசாய பயிர்களைப் பிரித்து எடுப்பதற்காக கிராம சாலைகள், ரோட்டோர சாலைகளில் காயவைக்கின்றனர். பணி முடிந்தவுடன் விளை பொருட்களை மட்டும் எடுத்துவிட்டு கழிவுகளை ரோட்டோரம் குவித்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதால் கேட்பாரற்று கிடக்கும் இதன்மீது சிலர் தீ வைத்து இருக்கின்றனர்.விவசாய கழிவுகளை மாற்று பயன்பாட்டிற்கான முயற்சியில் வேளாண் துறைகள் ஈடுபடுவதோடு, புதிய களம் ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் சமூக ஆர்வலர்கள் இயற்கையால் பாதுகாத்து வளர்க்கப்பட்ட மரங்கள் தீயில் கருகி வீணாகிறது. வனத்துறை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply