25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பிரண்டைகுளம் கண்மாய் நீர்த்தேக்க பகுதியில் ஆகாயதாமரை ஆக்கிரமிப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரண்டைகுளம் கண்மாய் நீர்த்தேக்க பகுதியில் ஆகாயதாமரை ஆக்கிரமிப்பு

இராஜபாளையம் முடங்கியாறு ரோட்டில் தாலுகா அலுவலகம் அருகே பிரண்டைகுளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் தற்போதைய மழையால் நீர்வரத்து காணப்பட்டு நிரம்பும் நிலையை எட்டி உள்ளது. ஆனால் நீரின் முழு பரப்பளவிலும் தெரியாத அளவிற்கு ஆகாயத்தாமரைச் செடிகள் வளர்ந்து போர்வை போல் மூடியுள்ளது.

இதனால் நீரில் வாழும் மீன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் தடுத்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் நீரின் தரம் மாற்றமடைந்து பாதிப்பதாக தெரிவிக்கின்றனர்.

தற்போது நெல் பயிரிட்டு, கோடையில் தண்ணீர் வரத்து உள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளோம். இருப்பினும் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாய தாமரை நீரை வேகமாக ஆவி ஆக்குவதுடன் துர்நாற்றம் ஏற்படும் விதமாக மாற்றி விடுகிறது. இதில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள் நீரில் மூழ்கும் போது அழுகி துர்நாற்றம் வீசுகிறது. நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்காண்மாயில் தாமரைச் செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News