தெரு நாய்கள் தொல்லை
தெருக்களில் பெருகும் நாய்களை தடுக்க ,குறிப்பிட்ட இடைவெளிகளில் ஊசி போட்டு, கொல்லும் வழக்கம் இருந்து, நாய்கள் கட்டுபடுத்தப்பட்டன. விலங்கு நல ஆர்வலர்கள் நீதிமன்றத்தின் மூலம் நாய்களை கொல்லுவதற்கு தடை பெற்றுவிட்டனர். இதனால் தெரு நாய்களை கொல்லாமல் அவற்றை பிடித்து கருத்தடை செய்து விட்டு செல்லும் நடைமுறை வந்தது. ஆனால் நீதிமன்ற தடையை காரணம் காட்டி, மொத்தத்தில் நாய்கள் பெருக்கத்தை தடை செய்யும், எந்த பணியையும் உள்ளாட்சி நிர்வாகம் செய்யவில்லை.
கடந்த 6 ஆண்டுகளில் இராஜபாளையம் தாலுகா முழுவதும் பல்வேறு பகுதகளில் பராமரிப்பற்ற தெருநாய்கள் பெருகி, நோய் தொற்று பாதிப்பு ,விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. காலையில் நடைபயிற்சி செல்வோர், பள்ளி மாணவர்கள், புதிய ஆட்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் நன்மை கருதி இப்பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
0
Leave a Reply