குடிநீருக்கு மழையை எதிர்பார்க்கும் இராஜபாளையம் நகராட்சி
இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பெரிய அளவில் மழை பெய்யாததால் நீர் மட்டம் 12 அடியாக குறைந்து விட்டது. ஏற்கனவே வாரம் ஒரு முறை குடிநீர் சப்ளை நடைபெறுவதுடன், தாமிர பரணி கூட்டு குடிநீர் திட்ட சப்ளையை வைத்து சமாளித்து வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில், தாமிரபரணி குடிநீர் சப்ளை இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தற்போது 12 அடி இருப்பு உள்ளது. மலையில் ஒருமுறை பெரியமழை பெய்தாலும் சப்ளைக்கான தண்ணீர் வரத்து தேவையான அளவு கிடைத்து விடும், மீதி தேவைக்கு கூட்டுக் குடிநீரை வைத்து சமாளிக்க முடியும். கோடை மழையை இராஜபாளையம் நகராட்சியும், மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply