ஒரே சமயத்தில் தொடங்கிய விவசாய பணிகளால் ஆட்கள் பற்றாக்குறை
இராஜபாளையம் சுற்றியுள்ள கலங்காபேரி, புதூர், அய்யனாபுரம், சத்திரப்பட்டி, பேயம்பட்டி, கீழராஜகுலராமன், சுந்தர்ராஜபுரம், நத்தம்பட்டி, புனல்வேலி, மீனாட்சிபுரம் பகுதிகளில் கோடை மழையை அடுத்து வெங்காய விவசாயத்தில் பரவலாக விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.கண்மாயை ஒட்டி நெல் விவசாயம், மற்றும் நீர் இருப்பை பொறத்து மிளகாய், வெங்காயம், மக்காச்சோளம் உள்ளிட்ட நீர் குறைவாக தேவைப்படும் பயிர் சாகபடி செய்வது வழக்கம்.
2 வாரங்களுக்கு முன் தொடர்ந்த கோடை மழையின் காரணமாக இதற்கான ஆயத்த பணிகளான உழவு பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் ஒரே சமயத்தில் தொடங்கிய விவசாய பணிகளால் ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்தது.வேலை ஆட்களுக்கான கூலி அதிகரித்தாலும், பற்றாக்குறை என்பது தொடர்ந்து வருகிறது. வேளாண் துறை அதிகாரிகள் மாற்ற தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply