25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
"குறிஞ்சிச் செல்வர்" டாக்டர்.கொ.மா.கோதண்டம்அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி . >> நான்கு வழிச் சாலை ரயில்வே ஸ்டீல் ஆர்க் பிரிட்ஜ் பணிகள் வேகம் . >> இரு மாதங்களாக கடும் வெயில் பாதிப்பினால் வற்றும் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்: >> ஆக்கிரமிப்புகளை அகற்ற ,புது பஸ் ஸ்டாண்ட் ரோடு விரிவாக்கத்திற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ். >> ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை. >> ராஜபாளையத்தில் மக்காச்சோளம் பயிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி .. >> பள்ளி ஆண்டு விழா , முத்தமிழ் மன்ற விழா. >> விநாயகர் சதுர்த்தி பூஜை >> நெடுஞ்சாலை துறை சார்பில் சங்கரன் கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையி லான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு. >> இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம். >>


திணை அல்வா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திணை அல்வா.

தேவையான பொருட்கள்-

திணைஅரிசி மாவு - 200 கிராம்,வெல்லம் - 200 கிராம்,

ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி,

சுக்குத்தூள் - 2 சிட்டிகை,

முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம்,

நெய் - 100 கிராம்.

செய்முறை-

திணைஅரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.

சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும்.கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும்.இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.

அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.இப்போது சூப்பரான சத்தான திணைஅல்வா ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News