25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 18, 2024

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட  பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் (17.07.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, இராஜபாளை ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.22.50 இலட்சம் மதிப்பில் ஆதிதிராவிடர் மக்களுக்கான மயானம் கட்டடம், தகன கொட்டகை, காத்திருப்புக் கூடம், சுற்றுச்சுவர், சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும்,அதனை தொடர்ந்து, மேலப்பாட்டகரிசல்குளம் கிராமத்தில்  திருவள்ளுவர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதையும்,மேலப்பாட்டகரிசல் குளம் கிராமத்தில்  ரூ.3.95 கோடி மதிப்பில்  புதிய ஊராட்சி ஒன்றிய  அலுவலகம்  கட்டப்பட்டு வருவதையும்,மேலும், நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.3இலட்சம் மதிப்பில் மிதிவண்டி நிறுத்த கூடம் அமைக்கப்பட்டு வருவதையும்,நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.31.46 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.மேலும்,  இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சோழபுரம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் சுமார் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் ஜமீன் கொல்லன் கொண்டான் கிராமத்தில் உள்ள  ஜமீன் அரண்மனைக்குச்  சென்று அரண்மனையின் கட்டிட வடிவமைப்பு குறித்துப் பார்வையிட்டு,  ஜமீன்தாரின் வாரிசுதாரர்களிடம் கலந்துரையாடினார்.அதனைத் தொடர்ந்து ஜமீன் கொல்லன் கொண்டான் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் அரசன் அல்லது தலைவன் அரியாசனத்தில் ஆடை ஆபரணங்களுடன் அமர்ந்திருந்ததை வெளிப்படுத்தும் விதமாக உள்ள சுமார்  17 ஆம் நூற்றாண்டு நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கல் சிற்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

Jul 17, 2024

விருதுநகர் மண்டலத்தில் 29 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 29 பேருந்துகளின் சேவையினை   மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்,  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் ஆகியோர் இன்று (16.07.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.   தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகின்றது. விருதுநகர் மண்டலத்தில் 9 பணிமனைகளில் உள்ள மொத்தம் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை 449 மற்றும் வறையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 418 ஆகும். இக்கழகத்தில் உள்ள மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2449 ஆகும். இக்கழகம் சாதாரணப் பேருந்து, விரைவுப்பேருந்து மற்றும் குளிர்சாதனப் பேருந்துகளை இயக்கி வருகின்றது. மேலும் நாளொன்றுக்கு நிர்ணிக்கப்பட்ட இயக்க தூரம் 1.95 லட்சம் கி.மீட்டர் ஆகும். இதனால் மாத்திற்கு 60.45 .இலட்சம் கி.மீட்டர் இயக்கம் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 3.50 இலட்சம் பயணிகளும் மாதம் ஒன்றுக்கு 104.80 இலட்சம் பயணிகளும் பயன்படும் வகையில் வழித்தட சேவைகள் இப்போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது..தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 07.05.2021 அன்று மகளிருக்காக விடியல் பயணத்திட்டம் நகரப்பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்ட இயக்கப்பகுதிகளில் மகளிர் தினந்தோறும் சுமார் 1.35 இலட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இதன் மூலம் மாதம் ஒன்றிற்கு மகளிருக்கு சுமார் 1000 ரூபாய் வரை சேமிப்பு ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படுகிறது. 500 நபர்களுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராமங்களுக்கும் இக்கழகம் பேருந்து சேவையினை தொடர்ந்து செய்து வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் இயங்கி வரும் விருதுநகர் மண்டலத்திற்கு  போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களால் 04.03.2024 அன்று 10 புதிய பேருந்துகளும், படிப்படியாக 26 புதிய பேருந்துகளும் என மொத்தம் 36 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இன்று 16.07.2024 தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் விருதுநகர் மண்டலம் சார்பில் 25 புறநகர் பேருந்துகள், 4 நகர் பேருந்துகள் என மொத்தம் 29 புதிய பேருந்துகள் ரூ.12.18 கோடி மதிப்பீட்டில் இயக்கப்படுகிறது.அருப்புக்கோட்டை கிளைக்கு 5 பேருந்துகளும், சிவகாசி கிளைக்கு  8 பேருந்துகளும், இராஜபாளையம் கிளைக்கு 9 பேருந்துகளும், விருதுநகர் கிளைக்கு 2  பேருந்துகளும், காரியாபட்டி கிளைக்கு 1 பேருந்தும், சாத்தூர் கிளைக்கு 2 பேருந்துகளும், திருவில்லிபுத்தூர் கிளைக்கு 2 பேருந்துகளும் என மொத்தம் விருதுநகர் மண்டலத்திற்கு  29  புதிய  பேருந்துகள் இன்று இயக்கி வைக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு அரசு போக்குவரத்து கழகத்தை மாற்றியமைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.  பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை இருக்கும் போது, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நமது போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய விகிதம் சீரமைக்கப்பட்டுள்ளது.தற்போது, நல்ல நிலையில் போக்குவரத்துக் கழகம்  இயங்குவதற்கு  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில், எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தான் காரணம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மாநில அரசிடம் இத்தனை பேருந்துகள் கிடையாது .நம்முடைய மாநில அரசிடம் தான் சுமார் 20,000 பேருந்துகள் இருக்கின்றன. எல்லா கிராமங்களுக்கும் பேருந்து வசதிகள் இருக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அதேபோல் நேரம் முறைப்படி இயங்குகின்ற பேருந்துகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது .இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகளைப் பெற்று இருக்க கூடிய போக்குவரத்து கழகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான  அரசு மென்மேலும் மேம்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார்.

Jul 17, 2024

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கஞ்சநாயக்கன்பட்டி ரேணுகாதேவி திருமண மண்டபத்தில்  (16.07.2024) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில்,வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இம்முகாமில்,  ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம், 32 பயனாளிக்கு ரூ.1,92,000/- மதிப்பிலான  இணையவழி பட்டாக்களையும், ஒரு பயனாளிக்கு இலவச தையல் இயந்திரத்தையும், 4 பயனாளிகளுக்கு ரூ.1,98,205/- மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 2 பயனாளிகளுக்கு வண்டல்மண் மற்றும் களிமண் எடுப்பதற்கான ஆணைகளையும், 6 பயனாளிகளுக்கு ரூ.5,00,000/- மதிப்பிலான சாலை விபத்து நிவாரணத்தொகையினையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்,  11 பயனாளிகளுக்கு உழவர் அட்டையினையும்,  6 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும், வேளாண்மைத்துறை மூலமாக 2 பயனாளிக்கு சிறுதானிய நுண்ணூட்டங்களையும், தோட்டக்கலைத்துறை மூலமாக ஒரு பயனாளிக்கும் பழக்கன்றுகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 6 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4,90,000/- மதிப்பிலான கடனுதவிகளையும் என மொத்தம் 71 பயனாளிகளுக்கு ரூ.13.80 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இம்முகாமில் கஞ்சநாயக்கன்பட்டி, ஆத்திப்பட்டி, செம்பட்டி மற்றும் புலியூரான் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு உங்கள் அரசு.  உங்கள் அரசாங்கமாக இருப்பதன் காரணத்தினால் அமைச்சர் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், 14 துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களும் உங்களைத் தேடி வந்திருக்கிறார்கள். பொதுமக்களிடையே குறைகளை கேட்டு, மனுவாக பெற்று செல்வது மட்டுமல்லாமல், அவற்றை உடனே கணினியில் பதிவு செய்து, அந்தந்த துறைக்கு அனுப்பப்பட்டு, அந்தத் துறையில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை எடுக்கிறார்கள். நீங்கள் கொடுக்கும் தகுதியான அனைத்து மனுவிற்கும் முறையான தீர்வுகள் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுத்துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு இந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது.கடந்த முறை அருப்புக்கோட்டை பாலையம்பட்டியில் நடைபெற்ற முகாமில் சுமார் 800 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் பெறப்பட்ட 1.60 கோடி விண்ணப்பங்களில் மாதந்தோறும் சுமார் 1.15 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000- வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் விண்ணப்பித்தவர்களில் தகுதியான 1.48 இலட்சம் பயனாளிகளுக்கும் ரூ.1000- வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் தகுதியான நபர்கள் விடுபட்டிருந்தாலும் அவர்களுக்கும் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு விடியல் பயணம் மூலம் பெண்கள் இலவசமாக செல்லக்கூடிய ஒவ்வொரு பயணத்திற்கும் போக்குவரத்துக் கழகத்திற்கு கட்டணம் செலுத்தி வருகிறது. கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தின் மூலம் சுமார் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற அனைத்து தரப்பு மக்களுக்கு தேவையான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார்.மக்களுடன் முதல்வர் என்பது மக்களிடம் நேரடியாக சென்று அவர்களிடம் மனுக்கள் வாங்கக்கூடிய மிக முக்கியமான திட்டம். கடந்த  வாரத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டு, அதற்கு அடுத்தபடியாக நமது மாவட்டத்தில்  அமைச்சர் பெருமக்கள் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளிலும் பொதுமக்களிடம் நேரடியாக சென்று மனுக்களை பெறக்கூடிய இந்த திட்டம் இன்று அருப்புக்கோட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெறுகிறது.பொதுமக்கள் மின்சாரம், பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டி இருக்கிறது.நமது மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரம் மற்றும் 11 ஒன்றியங்களில் இருந்து   மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் , மக்கள் தொடர்பு திட்ட முகாம், இணையவழி மனுக்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்டவைகள் மூலமாகவும் அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரிடம் நேரடியாகவும் ஏறத்தாழ வருடத்திற்கு 90,000 மனுக்கள் பெறப்படுகின்றன.இதில் பெரும்பாலான மனுக்கள் பொதுமக்கள் நேரடியாக சென்று மனுக்கள் அளிக்க வேண்டி இருக்கிறது. இவற்றை மாற்றி பொதுமக்களிடம் அனைத்து அரசு அலுவலர்களும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று அதற்கான தீர்வை வழங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மனுக்கள் பெறுவதோடு மட்டுமல்லாமல் அதனை கணினியில் பதிவு செய்து அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தரப்படும் தீர்வுகள் திருப்திகரமாக இல்லாதபட்சத்தில் மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்புகளும் இதில் உள்ளது.இப்படிப்பட்ட மிக முக்கியமான திட்டத்தின் மூலமாக நமது மாவட்டத்தில் அமைச்சர் பெருமக்கள் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர்ச்சியாக நான்கு அல்லது ஐந்து  கிராமங்கள் இணைந்து ஒரு மையமான இடத்தில் இந்த முகாம் நடத்தப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. நமது மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிகமாக இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆகிய  இரண்டு துறைகளின் மூலமாக புதிதாக நிலங்களை எடுத்தும், பட்டாக்களை இலவசமாக வழங்கி இருக்கின்றோம். தற்போதும் கூட 2000 பட்டாக்கள் புதிதாக வழங்குவதற்கு  அமைச்சர் பெருமக்கள் அவர்களால் அறிவுறுத்தப்பட்டு, அதற்குரிய பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும், கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் கிராமப்புறத்தில் உள்ள வீடுகளை சீரமைத்தல், புதிதாக கட்டுதல் பணிகளை செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முகாமின் மூலமாக வழங்கக்கூடிய மனுக்களுக்கு மிக விரைவாக தீர்வு காணப்படும் என்றும் அரசு அலுவலர்கள் அதை மிகுந்த கவனத்தோடு பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.

Jul 17, 2024

‘Coffee With Collector” என்ற 80-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (16.07.2024) பேரநாயக்கன்பட்டி ஹயகிரிவாஸ் இன்டர்நேஷனல் பள்ளியிலிருந்து  11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான  ‘Coffee With Collector”   என்ற 80-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 80-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனர்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அனைத்து நுழைவு தேர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எந்த படிப்பு சேரவேண்டும் என்பதை முடிவு செய்து விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். மருத்துவ படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் நுழைவு தேர்வை மனதில் வைத்து படிக்க வேண்டும். மேலும் நீட் தேர்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் மதிப்பெண்களை வழங்குகிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண் கழிக்கப்படுகிறது. இதனை  மாணவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.அரசுப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, விவசாயக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி,  உள்ளிட்ட அரசு கல்லூரியில் உயர்கல்வி பயில்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாகவும், எனவே இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Jul 17, 2024

மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (16.07.2024) மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சென்னை ஒய்வூதிய இயக்குநரக, இணை இயக்குநர் திரு.சி.கமலநாதன் அவர்களின் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள்/குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 38 முன்னோடி மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டு உரிய பதிலும், தீர்வும் காணப்பட்டது.மேலும், இன்று ஓய்வூதியதாரர்களிடமிருந்து பெறப்பட்ட 20  மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், முதுநிலை கண்காணிப்பாளர் (சென்னை) திரு.ம.கோபாலகிருஷ்ணன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Jul 17, 2024

சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக இந்த மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. அதன்படி படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக19.07.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம் சாத்தூர், மேட்டமலையில் அமைந்துள்ள அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN, SENTERSOFT IT SOLUTIONS, COGENT  PVT LTD, DEVENDRAN PLASTICS,  UNIQUE INFO PVT LTD, ALPHA TECH PVT LTD, TVS SUNDARAM BRAKE LINES போன்ற 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு; I.T.I.டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலை நாடுநர்கள் 19.07.2024 அன்று வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து விட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.                 தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலகபதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S,., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 16, 2024

தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விரிவாக்கம்

மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,  I  A S, அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடங்கி வைத்தார்.பெருந்தலைவர் காமராசரின் காட்டிய நல்வழியில், முத்தமிழிஞர் கலைஞர் அவர்களும், தற்போதுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், இந்த அரசாங்கத்தை நடத்தி கொண்டு, மிகச் சிறப்பாக, அனைவரும் பாராட்டக்கூடிய ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான இன்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராம, நகர்புறபகுதிகளில் உள்ள குழந்தைகள் பள்ளிகள் தூரமாக இருப்பதாலும், சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் காலை உணவு சாப்பிடுவதில்லை என்பதை, கருத்தில் கொண்டும், அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும், ஊட்டசத்து குறைபாட்டை போக்குவதற்காகவும் இந்திய நாட்டிலேயே முன்னோடி திட்டமான அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்”-னை கடந்த 15.09.2022 அன்று முதற்கட்டமாக தொடங்கி வைத்தார்கள்.இரண்டாம் கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் 25.08.2023 அன்று துவக்கப்பட்டுள்ளது.மேலும், மூன்றாம் கட்டமாக இன்று அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்; அவர்கள் 15.07.2024 அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள  3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.அதனடிப்படையில்,  இத்திட்டம் விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி வட்டாரத்தில் 69 அரசு துவக்கப்பள்ளிகளில் பயிலும் முதல்கட்டமாக 3486 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலும், இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் உள்ள 659 அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 35,000 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதுஇன்று மூன்றாம் கட்டமாக,  மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 255 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 14,677 மாணவ, மாணவியர்கள் காலை உணவு பெற்று பயனடைய உள்ளனர்.இத்திட்டத்தின் மூலம், பள்ளிகளில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று அரிசி ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை அன்று ரவா கிச்சடி மற்றும் காய்கறி சாம்பார், புதன்கிழமை அன்று வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அன்று கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை அன்று சேமியா கிச்சடி மற்றும் காய்கறி சாம்பார் போன்ற உணவு வகைகள் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் 1022 பள்ளிகளில் 45583 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 1564 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களால் சுவையாகவும், தரமாகவும் சமையல் செய்து வழங்கப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 16, 2024

திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் கல்லூரணி எஸ்.பி.கே.தொடக்கப்பள்ளியில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் எஸ்.பி.கே.தொடக்கப்பள்ளியில்,  (15.07.2024)  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடங்கி வைத்தார்..தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராம, நகர்புறபகுதிகளில் உள்ள குழந்தைகள் பள்ளிகள் தூரமாக இருப்பதாலும், சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் காலை உணவு சாப்பிடுவதில்லை என்பதை, கருத்தில் கொண்டும், அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும், ஊட்டசத்து குறைபாட்டை போக்குவதற்காகவும் இந்திய நாட்டிலேயே முன்னோடி திட்டமான அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்”-னை கடந்த 15.09.2022 அன்று முதற்கட்டமாக தொடங்கி வைத்தார்கள்.இரண்டாம் கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் 25.08.2023 அன்று துவக்கப்பட்டுள்ளது.மேலும், மூன்றாம் கட்டமாக இன்று அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர்; அவர்கள் 15.07.2024 அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள  3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.இன்றைக்கு  மகத்தான உன்னதமான திட்டமாக அறியப்பட்டிருக்கக்கூடிய    முதலமைச்சர் அவர்களின் காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், இன்றைக்கு விரிவாக்கக்கூடிய  நிகழ்வினை  முதலைமைச்சர் அவர்கள் இன்று துவங்கி வைத்திருக்கிறார்கள்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் எஸ்.பி.கே.தொடக்கப்பள்ளியில் மட்டும் 159 குழந்தைகள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இத்திட்டத்தின் கீழ் பயடைவார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக காரியாபட்டி வட்டாரத்தில் 69 அரசு துவக்கப்பள்ளிகளில் பயிலும் 3486 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலும், இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் உள்ள 659 அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 35,000 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இன்று மூன்றாம் கட்டமாக,  மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 23 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1658 மாணவ, மாணவியர்களும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 28 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1469 மாணவ, மாணவியர்களும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 8 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 326 மாணவ, மாணவியர்களும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 24 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1191 மாணவ, மாணவியர்களும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 11 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 513 மாணவ, மாணவியர்களும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 45 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த  3732 மாணவ, மாணவியர்களும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 995 மாணவ, மாணவியர்களும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 16 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1171 மாணவ, மாணவியர்களும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 17 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2252 மாணவ, மாணவியர்களும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 40 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2324 மாணவ, மாணவியர்களும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 23 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1006 மாணவ, மாணவியர்களும் என ஆக மொத்தம் 255 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 16,637 மாணவ, மாணவியர்கள் காலை உணவு பெற்று பயனடைய உள்ளனர்.

Jul 16, 2024

பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அன்னாரது 122-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாடு அரசு செய்தித்துறையின் சார்பில், தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்துகின்ற வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று அரசின் சார்பில் ஆண்டுதோறும்  மாலை அணிவித்து, மரியாதை  செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினமான ஜுலை 15-ஆம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது  திருவுருவச் சிலைக்கு இன்று  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்,  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்,  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலைக்கும், நினைவு இல்லத்தில் உள்ள அன்னாரது சிலைக்கும்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,.I A S., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Jul 16, 2024

தலை சிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு” - என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் தேசபந்து மைதானத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், “தலை சிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு” என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் ஆகியோர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்கள் (15.07.2024) துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் மூன்றாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், பணிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், மூன்றாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி 15.07.2024 அன்று  தொடங்கப்பட்டு,  10  நாட்கள் நடைபெறவுள்ளது.இந்த புகைப்பட கண்காட்சியில்,  தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முத்தான திட்டங்களான,  நான் முதல்வன்  திட்டம், ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம், மீண்டும் மஞ்சப்பை, நம்ம ஊரு சூப்பரு, 48 மணி நேரம் நம்மை காக்கும் இன்னுயிர் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம்  தேடி கல்வி திட்டம், பசுமை தமிழகம், நம்ம School,  TNGCC, ஆடுகளம், தமிழ்ப் பரப்புரைக் கழகம், எண்ணும் எழுத்தும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான இ.மதி திட்டம், Startup TN,  கல்லூரி கனவு, நம் பள்ளி நம் பெருமை, வானவில் மன்றம், அயலக தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை, Tamilnadu Climate Change  Mission,  கலைத் திருவிழா- 2022-2023, மக்களுடன் முதல்வர், உலக முதலீட்டார் மாநாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.மேலும், விருதுநகர் மாவட்டத்தில்  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் கலந்து கொண்ட அரசு விழாக்கள், தொடங்கி வைத்த அரசு நலத்திட்டங்கள், திட்டப்பணிகள், விருதுநகர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களான  Coffee with Collector,  விரு கேர், கரிசல் இலக்கியம், திருக்குறள் முற்றோதல், கற்றது ஒழுகு, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.எனவே, பொதுமக்கள் அனைவரும் மூன்றாண்டு  சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை கண்டுகளித்து அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டுமென அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பெ.ரா.வெற்றிவேந்தன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திரு.வா.பெ.வினோத், விருதுநகர் வட்டாட்சியர் திருமதி மகேஷ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 32 33 34 35 36 37 38 ... 69 70

AD's



More News