25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 16, 2024

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காசநோய் கருத்தரங்கு

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (15.07.2024) காசநோய் கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்திய அரசின் புள்ளி விவரப்படி லட்சத்திற்கு 200 நபர்கள் காசநோயால் (வுரடிநசஉரடழளளை ) பாதிப்படைகின்றனர். நமது மாவட்டத்தில் சுமார் 2100 நபர்கள் தற்போது காசநோய்க்கான சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். வட்டார அளவில் பொதுமக்களுக்கு இது சம்பந்தமான விழிப்புணர்வினை ஏற்படுத்தி, விடுபட்ட நபர்களை தகுந்த பரிசோதனை மூலம் கண்டறிந்து தகுந்த சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம், தொழில்துறை நடவடிக்கைகள், வாகன பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், காற்று மாசுபாடு ஏற்பட்டு, பொது மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அதை திறம்பட கையாளுவதற்கு இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.நமது மாவட்டத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கும் இது போன்ற கருத்தரங்குகள் தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கும் மற்றும் செவிலியர்களுக்கும் நடத்தப்பட வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கருத்தரங்கில் இணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.பாபுஜி,  முதல்வர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மரு.சீதாலெட்சுமி, மாவட்ட சுகாதார அலுவலர் (விருதுநகர்) மரு.யசோதாமணி, சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கலுசிவலிங்கம், துணை இயக்குநர் (குடும்பநலம்) மரு.விமலா, துணை இயக்குநர் (காசம்), துணை இயக்குநர் (தொழுநோய்) மற்றும் மருத்துவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Jul 16, 2024

பட்டம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஹட்சன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ், கட்டப்பட்ட கூடைப்பந்தாட்ட மைதானம்

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பட்டம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஹட்சன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ், ரூ.15 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடைப்பந்தாட்ட மைதானத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள்  (15.07.2024) திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் சமூகத்தின் மீதான தொழில் நிறுவனங்களின் பொறுப்பு நிதியினை (CSR Fund) கொண்டு பள்ளிகள், உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குதல், கற்றல் மற்றும் கற்பித்தலில் திறனை மேம்படுத்துதல், பள்ளி சுவர்களில் சிந்தனையினை தூண்டும் வகையில் சித்திர விளக்கப் படங்கள் வரைதல் (BaLA Painting), அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்துதல், நீர்நிலைகளை புனரமைத்தல், அரசு மருத்துவ மனைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் வாழ்வாதார மேம்பாடு செய்தல் போன்ற வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் இன்று பட்டம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி, திருத்தங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப்பள்ளி 3 இடங்களில் தலா ரூ.15 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.45 இலட்சம் மதிப்பில் சமூக பொறுப்பு நிதியின் கீழ், கட்டப்பட்ட கூடைப்பந்தாட்ட மைதானங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மைதானத்திற்கும் 3 அரசு பள்ளிகள் வீதம் மொத்தம் 9 பள்ளிகளை தேர்ந்தெடுத்து, பள்ளிக்கு ஒரு கூடை பந்தாட்ட அணி உருவாக்கப்படும். அந்த அணியில் உள்ள மாணவர்கள் தினமும் காலை, மாலையில் பயிற்சி செய்து கூடைப்பந்தாட்டப் போட்டிக்கு தயார் செய்யப்படுவார்கள். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.வெற்றியாளர் என்பது விளையாட்டில் கலந்து கொண்டு பரிசு பெறுபவர்கள் மட்டுமல்ல. அதில் கலந்து கொண்டு சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்துபவரும் வெற்றியாளர் தான். எனவே, அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த மையதானத்தை பயன்படுத்திக் கொண்டு, பயிற்சி செய்து சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பள்ளியை சேர்ந்த 96 மாணவர்களுக்கு மூடுகாலனி (ஷ_ஸ்) மற்றும் ஒரு அணிக்கு 6 பந்துகள் வீதம் மொத்தம் 54 பந்துகள் என ரூ.1.35 மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 16, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S.,அவர்கள் தலைமையில்  (15.07.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில் இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரருக்கு உடனடி தீர்வாக பிற்படுத்தப்டோர் நலத்துறை சார்பில் ரூ.12,500 மதிப்புள்ள தையல் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வெடி விபத்தில் உயிரிழந்த 7 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.21 இலட்சம் மதிப்பிலும், பாம்புகடியால் உயிரிழந்த 2 நபர்களின் வாரிசுதார்களுக்கு மொத்தம் ரூ.2 இலட்சம் மதிப்பிலும்,மல்லாங்கிணர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் நியாயவிலைக்கடையில்; விற்பனையாளராக பணிபுரிந்து கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் மதிப்பிலும் என ஆக மொத்தம் 10 நபர்களுக்கு ரூ.48 இலட்சம் மதிப்பிலான நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.அ,மர்நாத், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நலத்துறை அலுவலர் திருமதி .இ.கார்த்திகேயனி கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் திரு.பா.செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா,  அரசு அலுவலர்கள் மற்றும்  பொதுமக்கள் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.

Jul 16, 2024

"Coffee With Collector” என்ற 79-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (15.07.2024) ஷத்திரிய வித்யாலயா நூற்றாண்டு சி.பி.எஸ்.இ. பள்ளியிலிருந்து  11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector”  என்ற 79-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S ,அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 79-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Jul 16, 2024

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவியின் பெயர்:  மூத்த ஆலோசகர் (Senior Counseller)காலிப் பணியிடம்: 1தகுதிகள்:1. முதுநிலை சமூகப்பணி (சமூகவியல்/உளவியல்) பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.2. மகளிருக்கான வன்கொடுமை எதிர்த்து இயங்கும் அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் அல்லது அதே அமைப்பிற்குள் அல்லது வெளியே ஆலோசனை வழங்கியதில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் தேவை.3. 24/7 சுழற்சி முறையில் பணிபுரிய சம்மதிக்கும் நபர்கள்; மட்டுமே விண்ணப்பிக்கலாம்.4. விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.பதவியின் பெயர்: வழக்கு பணியாளர் (Case Worker)காலிப் பணியிடம்:  2தகுதிகள்:1. இளநிலை /முதுநிலை சமூகப்பணி (சமூகவியல்/உளவியல்) பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.2. மகளிருக்கான வன்கொடுமை எதிர்த்து இயங்கும் அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் அல்லது  அதே அமைப்பிற்குள் அல்லது வெளியே ஆலோசனை வழங்கியதில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் தேவை.3. 24/7 சுழற்சி முறையில் பணிபுரிய சம்மதிக்கும் நபர்கள்; மட்டுமே விண்ணப்பிக்கலாம்.4. விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.  23.07.2024 -க்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரிமாவட்ட சமூகநல அலுவலர்மாவட்ட சமூகநல அலுவலகம்மாவட்ட ஆட்சியர் வளாகம்,விருதுநகர் மாவட்டம்.

Jul 15, 2024

தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை

 தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் (13.07.2024) விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்தபோது மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், I A S., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

Jul 15, 2024

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பயிற்சி வகுப்பில் சேருவதற்காக நடைபெற்ற நுழைவுத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

விருதுநகர் சஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசு பணியிடங்களான ரயில்வே மற்றும் வங்கி பணியிடங்களுக்கு  விண்ணப்பித்தவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பயிற்சி வகுப்பில் சேருவதற்காக நடைபெற்ற நுழைவுத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (14.07.2024) நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மத்திய அரசு பணியிடங்களான ரயில்வே மற்றும் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நடைபெறும்பயிற்சிவகுப்பில் சேருவதற்கானநுழைவுத்தேர்வுகள்நடைபெற்றது.மத்திய அரசால் நடத்தப்படும் இரயில்வே தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவிலான தேர்வர்களை பங்கு பெறச்செய்யும் நோக்கத்தில் இத்தேர்வு அரசுத்தேர்வு இயக்கத்தால் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் மேற்படி தேர்வுக்கான நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் வங்கிப் பணிகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விருதுநகர் கே.வி.சாலா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்த 180 தேர்வர்களில் 103 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.ரயில்வே பணியிடங்களுக்கு  விண்ணப்பித்தவர்களுக்கு விருதுநகர் சஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹஜி பி.எஸ்.எம்  மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்த 468 தேர்வர்களி்ல் 263 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.அதன்படி தேர்வு நடைபெற்ற  மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Jul 15, 2024

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,  அவர்கள் (13.07.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கடாசலபுரம் ஊராட்சியில் உள்ள குடியிருப்பு வாரியத்தில் ரூ.1 இலட்சம் மதிப்பில் விளையாட்டு மையம் அமைக்கப்பட்டு வருவதையும், சத்திரப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பில் குளம் தூர்வரப்பட்டு வரும் பணிகளையும், சின்ன கொல்லப்பட்டி ஊராட்சி தெர்க்கூர்  கிராமத்தில்உள்ளஅரசுமேல்நிலைப்பள்ளியில்ரூ.3இலட்சம்மதிப்பில்மிதிவண்டிநிறுத்தும்கூடம்அமைக்கப்பட்டுள்ளதையும்,போத்திரெட்டியாபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.39 இலட்சம் மதிப்பில் குளம் தூர்வரப்பட்டு வரும் பணிகளையும், நபார்டு நிதியின் கீழ் ரூ.2.51 கோடி மதிப்பில் உப்பு ஓடையில் பாலம் அமைக்கப்பட்டு வருவதையும், நென்மேனி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ்  ரூ.1.81 கோடி மதிப்பில் நென்மேனி- வன்னிமடை சாலையில் பாலம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 15, 2024

விருதுநகர் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் (குரூப் -1) க்கான முதல்நிலை போட்டித் தேர்வு வரும்  மையத்தை ஆய்வு

விருதுநகர் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில்  (13. 07.2024) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் (ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி -1 (குரூப் -1) க்கான முதல்நிலை போட்டித் தேர்வு வரும்  மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன்,  I A S ,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Jul 13, 2024

மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் மேளா

விருதுநகர் மாவட்ட ஆட்சியர்அலுவலகக்கூட்டரங்கில்(12.07.2024)மாற்றுத்திறனாளிகள்நலஅலுவலகம்மூலம்மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் மேளா மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த கடன் மேளாவில் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு சுய தொழில் புரிவதற்காக 83 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.இக்கடன் வங்கி கடன் மேளாவில் 26 பயனாளிகளுக்கு தலா ரூ.6120/- வீதம் ரூ.1,59,120/- மதிப்பிலான மோட்டார் பொருந்திய தையல் இயந்திரத்தினையும், 120 பயனாளிகளுக்கு தலா ரூ.13,800/- வீதம் ரூ.16,56,000/- மதிப்பிலான திறன் பேசி (Smart Phone) களையும்  என மொத்தம் 146 பயனாளிகளுக்கு ரூ.18,15,120/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், வங்கி கடன் மேளாவில் கடன் வேண்டி விண்ணப்பம் செய்த 4 மாற்றுத்திறனாளுக்கு உடனடி தீர்வாக ரூ.2.70 இலட்சம் மதிப்பில் சுய தொழில் தொடங்குவதற்கு, வங்கி கடன்களுக்கான ஆணைகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.ஜெயபிரகாஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 33 34 35 36 37 38 39 ... 69 70

AD's



More News