விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(20.02.2026) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. 3137 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.43 கோடி 87 இலட்சம் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம்) அவர்களால் தெரிவிக்கப்பட்டது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சுமார் ரூ.245 கோடி பயிர் கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், பயிர்கடன் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது என இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) அவர்களால் தெரிவிக்கப்பட்டது.தென்னை, மா மரங்களுக்கு பயிர் காப்பீடு மற்றும் நிவாரணத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய கோரிக்கை வைத்தனர்.விருதுநகர் மாவட்டத்தில் அதிக அளவு உலர்களங்கள் தேவைப்படுகிறது எனவும், சிறப்பு நிதி ஒதுக்கி உலர்களம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.மம்சாபுரம் கிராமத்திற்கு நிரந்தர நூலக கட்டிடம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.சம்பா வத்தல் மற்றும் பஞ்சவர்ண மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மக்காகச்சோள உற்பத்தி அதிகரித்துள்ளதால் விவசாயிகள் நல்ல விலை கிடைக்காமல் அதிக அளவு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.கண்மாயில் கொட்டப்படும் கழிவுகளையும் மற்றும் சீமைக்கருவேல மரங்களையும் அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை, செயற்பொறியாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறும், நீர் நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ.,) திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், இணைப்பதிவாளர்(கூட்டுறவு சங்கங்கள்) திரு.செந்தில்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா உட்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி- 21 ஐ முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (20.02.2026) உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.அதன்படி, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத் தாய்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(20.02.2026) காரியாபட்டி வட்டம், சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் ரூ.6 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்களிடம், ப்ரைஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் திருமதி சினேகலதா பொன்னையா அவர்கள் வழங்கினார்.அதன்படி, காரியாபட்டி வட்டம், சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் மல்லாங்கிணர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களான காரியாபட்டி, கல்குறிச்சி, முடுக்கன்குளம், முஷ்டகுறிச்சி ஆகிய கிராமங்களில் செயல்படும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அதற்குட்பட்ட 20 துணை சுகாதார நிலையங்களின் பயன்பாட்டிற்கு IFT- Machine for Physiotherapy, Multi Para Monitor, Pulse Oximeter, Digital Thermometer, Digital Weight Machine Adult, Digital weight Machine Paediatric, Air conditioner for Labour room, Crash cart, Water Heater, Height Machine, Glugo Meter, Stretcher with side rails, Suction apparatus single channel, Ro machine, Patient sitting stool, Magna vision Lamp, Suction apparatus (single Channel), Nebulizer, Multipara monitor, Wheel chair, Fridge, Ambu Bag (Adult), Dressing Trolley, Examination couch உள்ளிட்ட மொத்தம் ரூ.6 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிகழ்வில் துணை இயக்குநர்;(சுகாதாரப்பணிகள்) திருமதி மரு.யசோதாமணி(விருதுநகர்), எஸ்.பி.எம் அறக்கட்டளை நிறுவனர் திரு.எம்.அழகர்சாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ிருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(20.02.2026) இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015, பிரிவு 4-ன்படி, இளைஞர் நீதிக்குழுமத்தில் முன்னிலைப்படுத்தப்படும் சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடும்போது அவர்கள் சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் என கருதப்படுகின்றனர். இதுபோன்ற நிலையில் உள்ள குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, குடும்ப மற்றும் பொருளாதார நிலை, எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இளஞ்சிறார்கள் தங்களின் தவறுகளை திருத்திக் கொண்டு நல்வழியில் ஈடுபடவேண்டும்.பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்ப்பதற்கும், படிக்க வைப்பதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள். பெற்றோர்களின் கஷ்டங்களையும், தங்களின் எதிர்கால வாழ்வினையும் உணர்ந்து குழந்தைகள் அனைவரும் செயல்பட வேண்டும். அனைத்து குழந்தைகளும் நல்லமுறையில் உயர்கல்வி வரை பயில புதுமைப்பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன், அன்புக்கரங்கள் நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.இத்திட்டங்களை தங்கள் வாழ்க்கைக்கான ஏணிப்படிகளாக பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லவேண்டும். இளஞ்சிறார்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. தொழில் திறன் உள்ள இளஞ்சிறார்கள் சுயதொழில் செய்ய முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து கடனுதவி பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சார்பு நீதிபதி திரு.P.பாலமுருகன், விருதுநகர் இளைஞர் நீதிக்குழுமம் முதன்மை நடுவர் திருமதி P.S.A.நிஷாந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மரு.க.பிரதௌஸ் பாத்திமா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, நன்னடத்தை அலுவலர் திரு,பால் இக்னேசியஸ் சேவியர்ராஜ், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் (18.02.2026) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S , அவர்கள் துவக்கி வைத்தார்.பின்னர், மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டில் நடைபெற இருக்கும் நுழைவுத் தேர்வு வாய்ப்புகள், தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள் மற்றும் தேர்வுக்கு பயிற்சி செய்யும் விதம் பற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.இ.ஆ.ப., அவர்கள் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார்.பள்ளி படிப்பை முடித்த அனைத்து மாணவர்களும் உயர் கல்வியை படிக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நன்றாக படித்து அவர்களுடைய குடும்பங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழக அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும், குடும்ப சூழ்நிலை, உடல்நிலை உள்ளிட்ட காரணங்களால் தேர்ச்சி பெற முடியாமலும், தனித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்களுக்கும் தமிழக அரசு உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கி வருகிறதுஇந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் படிக்க விருப்பமுள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் எந்த சூழ்நிலையிலும் படிப்பை தொடர முடியாமல் இருக்கக்கூடாது என்பது தான்.இந்த நிகழ்ச்சியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இன்றளவும் உயர் கல்வி சேராத மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த படிப்புகள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தொழிற்நுட்ப கல்வி இடங்களுக்கு நேரடி சேர்க்கையும், வேலைவாய்ப்புகள் சார்ந்த வழிகாட்டல்களும் வழங்கப்படுகிறது.மேலும் கல்லூரிகளில் உள்ள பல்வேறு வகையான படிப்புகள் மற்றும் இடங்கள் குறித்தும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கவும், கல்விக் கடன் வழங்குதல் குறித்தும் பல்வேறு துறைகள் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் முயற்சியை கைவிடக்கூடாது. தோல்வி என்பது நிரந்தர தோல்வி அல்ல. தோல்வி அடுத்த கட்டத்திற்கு போவதற்கான ஒரு பாடம் மட்டுமே. நம் வாழ்க்கையில் எந்த நிலைமையிலும் கூட விடா முயற்சி செய்தால்; முன்னேறி விடலாம். தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் மாதந்தோறும் ரூ.1000/-, கல்விக்கடன், உதவித்தொகைகள் போன்ற நிறைய அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அரசு மாணவர்களுக்காக செயல்படுத்துகிறது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக படித்து வாழ்வில் நீங்களும்உயரவேண்டும்,உங்களுடையகுடும்பத்தைநன்றாகபார்த்துக்கொள்ளவேண்டும்.உங்கள்வீட்டிற்கும்,ஊருக்கும்,நாட்டிற்கும்நல்லபெயரைஎடுத்துதரவேண்டும்எனதெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்நான்கு ஒன்றியங்களில் இருந்து 11 ஆம் வகுப்பு பயிலும் சுமார் 511- க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (19.02.2026) மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நபார்டு வங்கி வருடந்தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தின் 2026-27 ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட ஆவணத்தை நபார்ட் வெளியிட்டுள்ளது. அதன்படி முன்னுரிமைத் துறை கடனளிப்பின் கீழ் மாவட்டத்தில் வழங்கக்கூடிய மொத்த கடன் திறன் ரூ.22,681.31 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.விவசாயத் துறைக்கு ரூ.11,576.97 கோடி கடன் திறன் கணிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயக் கடன் ரூ.10,062.91 கோடி, விவசாய உட்கட்டமைப்பு ரூ.601.53 கோடி மற்றும் இணைச் செயல்பாடுகள் (உணவு & வேளாண் செயலாக்கம் உள்ளிட்டவை) ரூ.912.54 கோடி அடங்கும். பயிர் கடன், விவசாய இயந்திரமயமாக்கல், நீர்வள மேம்பாடு, தோட்டக்கலை, மாடு/கோழி/ஆடு வளர்ப்பு, மீன்வளம் போன்ற துறைகள் இதில் அடங்கும்.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.9,418.48 கோடி கடன் திறன் கணிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறைகளுக்கான நீண்டகால கடன் மற்றும் வேலை மூலதனத் தேவைகள் இதில் அடங்கும்.மற்ற முன்னுரிமைத் துறைகளான ஏற்றுமதி கடன் ரூ.77.25 கோடி, கல்வி ரூ.193.65 கோடி, வீடமைப்பு ரூ.279.32 கோடி, சமூக உட்கட்டமைப்பு ரூ.104.44 கோடி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ரூ.112.73 கோடி மற்றும் பிற துறைகள் ரூ.918.48 கோடி ஆகியவை அடங்கும்.மாவட்ட அளவிலான கடன் திட்டமிடலுக்கான முக்கிய ஆவணம் இதுவாகும். விவசாய உட்கட்டமைப்பு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கான கடனளிப்பை வங்கிகள் அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார். நபார்ட் மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமதி அனுஷா எலிசபெத் அவர்கள் துறை வாரியான கடன் திறனை விளக்கி, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs - Farmer Producer Organizations) மற்றும் மதிப்பூட்டல் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட நபார்டு வங்கியின் துணை பொது மேலாளர் திருமதி அனுசுயா எலிசபெத், நபார்டு மாவட்ட மேலாளர் திரு.ராஜா சுரேஷ்வரன், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வன், வங்கி மேலாளர்கள், அனைத்து வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் (19.02.2026) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 வரைவு வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி வாக்காளர் குறியீடு உள்ள வாக்காளர்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர்பணியாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2026-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026ல் படிவம்- 6, 7, 8 ஆகியவற்றை, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆய்வு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் (TN Rights) மூலம் கள ஆய்வு செய்து எடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கவும், அவர்களை அடையாளப்படுத்தி வாக்குச்சாவடியில் தேவையான அணுகல் வசதிகள் ஏற்பாடு செய்யவும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில், 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி வாக்காளர் குறியீடு உள்ள வாக்காளர்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ உதவி ஆணையர் கலால் திரு.ரமேஷ், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் திரு.பாலமுருகன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (19.02.2026) மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பு மூலம் உண்டு உறைவிடப் பயிற்சி பெற்று, அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) முதல்நிலை தேர்வில் தகுதி பெற்ற 11 அரசுப்பள்ளி மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, இரண்டாம் நிலை தேர்வுக்கு பயிற்சி செய்து தயார்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையிலும், சிறந்த மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்கள் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, இந்திய அளவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் (B.E / B.Tech) சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு(JEE) தயார்படுத்தும் வகையில் 79 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்கள் உண்டு உறை விட பயிற்சி அளிக்கப்பட்டது.அந்த வகையில் கடந்த மாதம் நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான(JEE) முதல்நிலை தேர்வில் 11 அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று, இரண்டாம் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.அந்த வகையில், இரண்டாம் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள 11 மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, இரண்டாம் நிலை தேர்வுக்கு பயிற்சி செய்து தயார்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.மேலும், அடுத்த நிலை தேர்வுக்கான பயிற்சி புத்தகங்கள் மற்றும் கையேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.அரசுப்பள்ளியில் பயிலும் எங்களுக்கும், இந்திய அளவிலான தலைசிறந்த கல்லூரிகளில் பயில்வதற்கான வாய்ப்புகள் குறித்தும், அதற்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகளையும் வழங்கும் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட நிலை உயர் அலுவலர்கள், கல்வித்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (18.02.2026) வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 பணிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், I A S ., அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர்பணியாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2026-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் பணிகள் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், I A S., அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026ல்' படிவம்- 6, 7, 8 ஆகியவற்றை, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்த விதம், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகள், வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் குறியீடு குறித்து கேட்டறிந்தார்.மேலும், அதிகபட்சமாக பெயர் சேர்க்கப்பட்ட, நீக்கம் செய்யப்பட்ட ஓட்டுச் சாவடிகள், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் புகைப்படங்களின் தரம், வாக்காளர் அடையாள அட்டை விநியோகம், இளம் வாக்காளர்களின் பெயர் சேர்ப்பு மற்றும் பொதுமக்களின் குறைதீர்க்கும் உதவி மையம் பற்றியும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும் வாக்காளர் பதிவு அலுவர்களுக்கு தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 குறித்து வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர் மண்டலத்தில் நடப்பு கே.எம்.எஸ் 2025-2026 சம்பா பருவத்தில் விவசாயிகளின் நலன் கருதி, இதுவரை 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2545/- மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500/-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.17.02.2026 வரை 19,405 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 2508 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.39,48,13,414/-ஐ (ரூபாய் முப்பத்தி ஒன்பது கோடியே நாற்பத்தி எட்டு இலட்சத்து பதிமூன்றாயிரத்து நானூற்றி பதிநான்கு மட்டும்) வரவு வைக்கப்பட்டுள்ளது.இந்நேர்வில், விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டதை கள ஆய்வில் உறுதி செய்த பின்னரே விவசாயிகளுக்கு முறையாக 10(1) சிட்டா மற்றும் அடங்கல்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்பட வேண்டும் என்றும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும், வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அல்லாத நபர்களிடமிருந்து போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், மேற்படி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் கொள்முதல் நிலைய பருவகால பணியாளர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டம் மற்றும் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்களின் விநியோகம் பராமரிக்கும் சட்டம் 1955-ன் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ,, அவர்கள் தெரிவித்துள்ளார்.