விருதுநகர் மாவட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி (08.04.2026) நடைபெற்றது.கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்தப் பேரணியில் ஏராளமான அரசுப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.விழிப்புணர்வு செயல்பாடுகள்:முழக்கங்கள்: "எனது வாக்கு - எனது உரிமை", "விலை மதிப்பற்றது நமது வாக்கு", "நூறு சதவீதம் வாக்களிப்போம் - ஜனநாயகத்தை வலிமைப்படுத்துவோம்" போன்ற விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றனர்..விழிப்புணர்வு பதாகைகள்:வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கும் வண்ணமயமான பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.துண்டுப் பிரசுரங்கள்:பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, தேர்தல் நாளன்று அனைவரும் வாக்குச்சாவடிக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் FL-1/ FL_2/ FL_3/FL_3A/ FL-3AA, FL_4A/மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 21.04.2026 முதல் 23.04.2026 (செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வரையிலும் மற்றும் 04.05.2026 (திங்கள் கிழமை ) அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் தற்காலிகமாக முடுவதற்கு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப. அவர்கள் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளர்.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் FL-1/ FL_2/ FL_3/FL_3A/ FL-3AA, FL_4A/மற்றும் FL-11 ஆகிய மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981 நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடகக் கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மரு. என்.ஓ.சுகபுத்ரா, I A S ,. அவர்கள் தலைமையில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் (08.04.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.தேர்தல் பணிகளை முறையாகக் கண்காணிக்கவும், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் தொலைபேசி வழியாகப் பெறப்படும் புகார்கள் மற்றும் சி-விஜில் (cVIGIL) செயலி மூலம் பெறப்படும் தகவல்கள் பதிவு செய்யப்படுவதைப் பார்வையாளர்கள் கேட்டறிந்தனர்.மேலும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் தேர்தல் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகங்களைக் கண்காணிக்கும் ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (MCMC) பணிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின் போது பின்வரும் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்:தேர்தல் பொதுப் பார்வையாளர்கள்:திரு. உதயன் மிஷ்ரா,I A S.(இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்)திரு. அரவிந்த் மீனா, I A S.(சாத்தூர் மற்றும் சிவகாசி)திரு. நவநீத் குமார், I A S.,(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை)திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S., (திருச்சுழி)தேர்தல் செலவினப் பார்வையாளர்கள்:திரு. சுக்செயின் சிங், இ.வ.ப. (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்)திரு. அனில்குமார், இ.வ.ப. (சாத்தூர் மற்றும் சிவகாசி)திரு. நாயன்ஜோதி நாத், இ.வ.ப. (விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை)திரு. வாக்மரே ஜெய், இ.வ.ப.(திருச்சுழி)இந்த ஆய்வின் போது, தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி வெளிப்படையான முறையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்குப் பார்வையாளர்கள் அறிவுறுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், தேர்தல் தொடர்பான அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, (07.04.2026) 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி (தனி) செண்பகத் தோப்பு மலைவாழ் பகுதியில் வசிக்கும் வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கையெழுத்து இயக்கம்:"எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இதில் அரசு அலுவலர்கள் மற்றும் செண்பகதோப்பு மலைவாழ் மக்கள் திரளாகக் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். அதனைத் தொடர்ந்து, நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தொடர்ந்து, ”100 சதவீதம் முழுமையாக வாக்களிப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந்நிகழ்வில் மாவட்ட கனிம வளம் துணை ஆட்சியர் அவர்கள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் (ஆதிந) அவர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், ஜஸ்டிஸ் பகவத் காலனி செண்பகதோப்பு மலைவாழ் மக்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தி நேர்மையான தேர்தலை எதிர்கொள்ளவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இளம் வாக்காளர்களின் எழுச்சிமிகு விழிப்புணர்வு இதன் ஒரு பகுதியாக, (07.04.2026) 205-சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட AAA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பாக கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்பான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்: உறுதிமொழி ஏற்பு: "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வண்ணமயமான ரங்கோலி விழிப்புணர்வு: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவியர் அனைவரும் ஒருங்கிணைந்து பல்வேறு வண்ண மலர்களை பயன்படுத்தி ரங்கோலி மூலம் '100% VOTE' என்ற வடிவத்தை உருவாக்கி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர். தோட்டக்கலைத்துறையின் பங்களிப்பு: மாவட்ட தேர்தல் அலுவலரின் நேரடி மேற்பார்வையில், இக்கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை இச்சிறப்பு நிகழ்வினை ஒருங்கிணைத்தது. முக்கியப் பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்தார். மேலும், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி சுபவாசுகி அவர்கள், அரசு அலுவலர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியர்கள் இந்தப் பெரும் ஜனநாயகத் திருவிழாவிற்கான விழிப்புணர்வுப் பணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில், அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விருதுநகர் மற்றும் சிவகாசி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் திரு. இரா. இரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வாக்களிக்க ஏதுவாக விடுமுறை: விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்துத் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணியிடங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், தேர்தல் நாளன்று தங்குதடையின்றி வாக்களிக்க ஏதுவாக, 23.04.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தல்: அனைத்துத் தொழிற்சாலை உரிமையாளர்களும், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.புகார் தெரிவிக்கக் கட்டுப்பாட்டு அறை: தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் குறித்துப் புகார் தெரிவிக்க விரும்புவோர், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட கட்டுப்பாட்டு அறை எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: தொலைபேசி எண்கள்: 04562-294067, 04562-294068, 04562-294069 கட்டணமில்லாத் தொலைபேசி எண் (Toll Free): 1800 425 2166 ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தொழிலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமையாகும் என இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் மேற்கண்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக, அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விருதுநகர் மற்றும் சிவகாசி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் திரு. இரா. இரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: விடுமுறை:விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணியிடங்களில் புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.தங்களது சொந்த மாநிலங்களில் வாக்குரிமை பெற்றுள்ள இத்தொழிலாளர்கள், தேர்தல் நடைபெறும் நாளான 09.04.2026 அன்று தடையின்றி வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.சம்பந்தப்பட்ட மாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை அந்தந்தத் தொழிற்சாலை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, விடுமுறை அளிக்கத் தவறும் அல்லது மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிக்கத் தொடர்பு எண்கள்: தேர்தல் நாளன்று வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் குறித்துப் புகார் தெரிவிக்க விரும்புவோர், மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்: திரு. இரா. இரவிச்சந்திரன் – 94435 52902 திரு. பி. இராஜ்குமார் – 93447 45064 ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தொழிலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது அந்தந்த நிறுவனங்களின் சட்டப்பூர்வக் கடமையாகும் என இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள் மற்றும் வேட்புமனு தாக்கல் நடைமுறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S,. அவர்கள் (04.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்: இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வேட்புமனு தாக்கல் மையத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அங்கு வேட்பாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் 100 மீட்டர் எல்லைக்குள் வாகனக் கட்டுப்பாடு குறித்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டுமென அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.வேட்புமனு தாக்கல் குறித்த முக்கியத் தகவல்கள்:மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த 30.03.2026 (திங்கட்கிழமை) அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:வேட்புமனு தாக்கல்:வரும் 06.04.2026 (திங்கட்கிழமை) மாலை 3 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம்.நேரம்: வேலை நாட்களில் காலை 11:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை மட்டுமே மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.விடுமுறை நாட்கள்:பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்), 01.04.2026 (புதன்), 03.04.2026 (வெள்ளி) மற்றும் 05.04.2026 (ஞாயிறு) ஆகிய நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது.இறுதி நாள்:வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 ஆகும்.அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்:தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை எவ்விதத் தொய்வுமின்றிப் பின்பற்ற வேண்டும் என்றும், வேட்புமனு தாக்கலின் போது தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்கவும், போதிய காவல்துறை பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.இந்நிகழ்வின் போது, இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வட்டாட்சியர் மற்றும் தேர்தல் பிரிவு அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விருதுநகர் நகராட்சிப் பகுதியில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளைத் தேர்தல் அலுவலர்கள் அதிரடியாக அகற்றினர்.விருதுநகர் தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள அருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தேர்தல் விதிமுறைகளை மீறி மூன்று விளம்பரப் பலகைகள் (Flex Banners) வைக்கப்பட்டிருப்பதாக 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதித் தேர்தல் மேற்பார்வையாளர் திரு. நவ்நீத்குமார், I A S., அவர்களுக்குப் புகார் வரப்பெற்றது. அப்புகாரின் அடிப்படையில், தேர்தல் மேற்பார்வையாளரின் நேரடி அறிவுறுத்தலின்படி, குறிப்பிட்ட அந்த மூன்று விளம்பரப் பலகைகளும் உடனடியாக அகற்றப்பட்டன.தேர்தல் மேற்பார்வையாளர் எச்சரிக்கை: இது குறித்துத் தேர்தல் மேற்பார்வையாளர் திரு. நவ்நீத்குமார், I A S, அவர்கள் தெரிவிக்கையில்: "அரசியல் தொடர்பான விளம்பரப் பலகைகள் அல்லது பதாதைகளை உரிய அனுமதி பெறாமல் வைப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி குற்றமாகும். விதிமுறைகளை மீறிச் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என தெரிவித்தார்.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை 100% நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் SVEEP (Systematic Voters' Education and Electoral Participation) திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஒன்று வீதம், அதிநவீன LED திரைகளுடன் கூடிய 7 மின்னணு விழிப்புணர்வு வாகனங்களின் சேவையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S.,அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த வாகனங்கள் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) மற்றும் ராஜபாளையம் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும். மின்னணு திரை மூலம் தகவல்கள்: வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள LED திரைகள் மூலம் வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கம், சரியான முறையில் வாக்களிக்கும் முறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலிகளான cVIGIL, 1950 உதவி எண் குறித்த குறும்படங்கள் மற்றும் விழிப்புணர்வு பாடல்கள் ஒளிபரப்பப்படும்.சின்னம் 'விரு': விழிப்புணர்வு விளம்பரங்களில் 'விரு' (Viru) என்ற அணில் உருவம் கொண்ட சின்னம் வாக்காளர்களைக் கவரும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மாவட்டத்தின் தனித்துவமான அடையாளமாக முன்னிறுத்தப்பட்டுள்ளது.*வாக்குப்பதிவு நாள் - ஏப்ரல் 23: வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், "எங்கள் வாக்கு - எங்கள் குரல்" (Our Vote - Our Voice) என்ற முழக்கத்தோடு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே இந்த வாகனப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிகழ்வின் போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், "ஜனநாயகத் திருவிழாவில் ஒவ்வொரு வாக்காளரின் பங்கேற்பும் மிக முக்கியமானது. எவ்வித ஆசை வார்த்தைகளுக்கும் இடமளிக்காமல், நேர்மையான முறையில் வாக்களித்து 100% வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்ட விருதுநகர் மாவட்ட மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.