25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 13, 2024

Coffee With Collector” என்ற 78-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (12.07.2024) அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. இன்டர்நேஷனல் பள்ளியிலிருந்து  11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 45 பள்ளி மாணவர்களுடனான ‘Coffee With Collector” என்ற 78-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 78-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களிடம் அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.அரசுப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, விவசாயக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி,  உள்ளிட்ட அரசு கல்லூரியில் உயர்கல்வி பயில்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாகவும், எனவே இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

Jul 13, 2024

“தலை சிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு” - என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் தேசபந்து மைதானத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், “தலை சிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்கள் துவக்கி வைக்க உள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் மூலம் மூன்றாண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, மூன்றாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், பணிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், மூன்றாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி 15.07.2024 அன்று  தொடங்கப்பட்டு,   10  நாட்கள் நடைபெறவுள்ளது.இந்த புகைப்பட கண்காட்சியில்,  தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முத்தான திட்டங்களான,  நான் முதல்வன்  திட்டம், ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம், மீண்டும் மஞ்சப்பை, நம்ம ஊரு சூப்பரு, 48 மணி நேரம் நம்மை காக்கும் இன்னுயிர் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம்  தேடி கல்வி திட்டம், பசுமை தமிழகம், நம்ம School,  TNGCC,  ஆடுகளம், தமிழ்ப் பரப்புரைக் கழகம், எண்ணும் எழுத்தும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான இ.மதி திட்டம், Startup TN,  கல்லூரி கனவு, நம் பள்ளி நம் பெருமை, வானவில் மன்றம், அயலக தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை, Tamilnadu Climate Change  Mission, கலைத் திருவிழா- 2022-2023, மக்களுடன் முதல்வர், உலக முதலீட்டார் மாநாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் புகைப்படங்கள் இடம்பெற உள்ளன.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் கலந்து கொண்ட அரசு விழாக்கள், தொடங்கி வைத்த அரசு நலத்திட்டங்கள், திட்டப்பணிகள், விருதுநகர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களான Coffee with Collector, விரு கேர், கரிசல் இலக்கியம், திருக்குறள் முற்றோதல், கற்றது ஒழுகு, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியில் இடம்பெற உள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மூன்றாண்டு  சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை கண்டுகளித்து அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 12, 2024

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சி

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (11.07.2024) தருமபுரி பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, 12,500 கிராம ஊராட்சிகளில், 2500 முகாம்களின் மூலம் 15 அரசுத்துறைகளின் வாயிலாக 44 சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில், இன்று (11.07.2024) அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாளையம்பட்டி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு வருவாய் மற்றும்  பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு,  அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இம்முகாமில்,  41 பயனாளிகளுக்கு ரூ.28,00,000/- மதிப்பிலான சாலை விபத்து நிவாரணத்தொகையினையும், 11 பயனாளிகளுக்கு ரூ.2,77,590/- மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களையும், 83 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், 12 பயனாளிகளுக்கு உழவர் அட்டையினையும், 6 பயனாளிகளுக்கு வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி ஆணைகளையும், 25 பயனாளிகளுக்கு ரூ.27,00,000/- மதிப்பில் ஆதி திராவிடர் நத்தம் இணையவழி பட்டாக்களையும் என மொத்தம் 178  பயனாளிகளுக்கு ரூ.57,77,590/-மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

Jul 12, 2024

சங்க இலக்கிய கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஸ்ரீ எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் (11.07.2024) மாவட்ட நிர்வகாம் மற்றும் சாத்தூர் ஸ்ரீ எஸ் இராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி தமிழ்த்துறை சார்பில் சங்க இலக்கிய கருத்தரங்கம், செவ்வியில் இலக்கியங்களின் சிறப்பு(சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள்) என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இன்றைய சூழலில் மாணவர்களுக்கு, குறிப்பாக ஆய்வு மாணவர்களுக்கு சங்க இலக்கியம் குறித்தும், திருக்குறள் குறித்தும் இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தி, அதன் மூலமாக இந்த இரண்டு இலக்கிய செல்வங்கள் தமிழ் சமூகத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் இலக்கியங்களாக எப்படி இருக்கின்றன என்பது குறித்து எடுத்துச் சொல்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.தமிழ் இலக்கிய மாணவர்கள் சங்க கால இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், நீதி நூல்கள் கால இலக்கியங்கள் குறித்து பாடத்திட்டத்தில் பயில்கிறீர்கள். எப்பொழுதுமே ஒரு அறிவியல் படிக்கும்போது, அறிவியலினுடைய தத்துவங்கள் தாண்டி, அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம்.எனவே எந்த ஒன்றுக்கும் அதனுடைய தத்துவங்கள், அடிப்படைகள், அதனுடைய இலக்கணங்களை புரிந்து கொள்ளும் அதே நேரத்தில், அது எப்படி தனிமனிதனுக்கும் இந்த சமூகத்திற்கும் பயன்படுகிறது என்ற கேள்விகளில் தான் அந்த துறையினுடைய வளர்ச்சி இருப்பதாக நான் கருதுகிறேன். அது அறிவியலாக இருக்கட்டும் அல்லது மனுடவியலாக இருக்கட்டும் இது போன்ற இலக்கிய மாணவர்கள் இந்த கேள்வியை நீங்கள் தொடர்ச்சியாக எழுப்ப வேண்டும்.நாம் படிக்கிறோம் என்றால் அதனுடைய பயன், அதன் மூலம் நீங்கள் அந்த பயனை எப்படி பெற்று கொள்கிறார்கள். அதன் மூலமாக இந்த சமூகத்திற்கு ஏதேனும் பயன் இருக்கிறதா என்ற இரண்டு கருதுகோலையும் வைத்து சங்க இலக்கியத்தையும், திருக்குறளையும் நீங்கள் பார்த்து வரவேண்டும்.மிகச் சிறந்த தமிழினுடைய ஆய்வறிஞர் ஒளவை துரைசாமி பிள்ளை அவர்கள் தொல்காப்பியத்திற்கும், சங்க இலக்கியத்திற்கும், திருக்குறளுக்கும் இடையே இருக்கக்கூடிய பதங்கள், கிளவிகள், வார்த்தைகளினுடைய மாறுபாடுகள் குறித்து மிக தீவிரமாக ஆராய்ச்சியை மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சியில் தொல்காப்பியத்திற்கு பிறகு வரக்கூடிய இலக்கியங்களில் சங்க இலக்கியமும், திருக்குறளும் ஒவ்வொன்றும் காலத்தால் சற்று முன்னும் பின்னும் எப்படி வந்தன. சங்க இலக்கியத்தின் உடைய பெரும்பாலான கருத்துக்கள் திருக்குறளில் எப்படி சொல்லப்படுகிறது. திருக்குறளினுடைய மிக முக்கியமான உரிமைகள் சங்க இலக்கியங்களில் எவ்வாறு எடுத்து கையாளப்படுகின்றன என்பது குறித்து தீவிரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.அதற்குப் பிறகு வந்த நீதி இலக்கியங்களும், நீதி நூல் கால இலக்கியங்களும், காப்பிய கால இலக்கியங்களிலும், பக்தி இலக்கிய கால படைப்புகளில்  கூட சங்க இலக்கியத்தினுடைய கூறுகளை காண முடியும்.குறிப்பாக காப்பிய காலத்தை எடுத்துக் கொண்டால், கம்பராமாயணத்தின் உடைய மிக முக்கியமான கருத்துக்கள் சங்க இலக்கியத்திலிருந்தும், அதற்கு பிந்தைய நீதி நூல் கால இலக்கியங்களில் இருந்தும் மிக நேர்த்தியாக, அதுவும் குறிப்பாக திருக்குறளினுடைய வார்த்தைகளை இரண்டு மூன்று பதங்களை நேரடியாக பயன்படுத்தக்கூடிய அளவிற்கு அதனுடைய செல்வாக்கு பின்னாளில் உலகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராக போற்றத்தக்க கம்பனின் உடைய பாடல்களில் அது இருக்கிறது. இதன் மூலம் முந்தைய இரண்டு இலக்கியங்களும் எத்தகைய வழிகாட்டுதல்களை அவர்களுக்கு வழங்கி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.இந்த இரண்டு இலக்கியங்களில் இருந்தும் ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் என்ன பயன் இருக்கிறது. நாம்; படித்ததை தாண்டி அதனுடைய பயன்பாடு ஏதேனும் இருக்கின்றதா என்ற கருத்துக்களில் எடுத்துப் பார்க்கின்றபோது, மிக முக்கியமாக ஒரு மனிதனை இந்த வாழ்வியலுக்கு தயார்படுத்தக்கூடிய பணியை இலக்கியங்கள் செய்ய வேண்டும்.மனிதன் எப்போதுமே இன்பம் துன்பம் என்ற இரண்டு நிலைகளில் அவனுடைய வாழ்வினை நடத்திக் கொண்டிருக்கின்றான். வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும். இதை நாம் ஒருபோதும் தவிர்க்க முடியாது. இதில் மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் இன்பத்தை கொண்டாடுவதற்கும் பல்வேறு வாய்ப்புகளை அவன் உருவாக்கிக் கொள்கின்றான். ஒரு மகிழ்ச்சி வருகிறது என்றால் அதனை தனி மனிதனாக கொண்டாடுவதற்கும் குடும்பமாக கொண்டாடுவதற்கும் சமூகத்தோடு இணைந்து கொண்டாடுவதற்கும் பல்வேறு வாய்ப்புகளை அவன் உருவாக்கிக் கொள்கின்றான்.ஆனால் துன்பத்தை அவன் எதிர்கொள்கின்ற போது தான் மிக முக்கியமாக அவன் நுட்பமாக செயலாற்ற வேண்டி இருக்கிறது. தனி மனிதனுடைய துன்பத்தை அவன் எப்படி எதிர்கொள்வது, தனி மனிதன் துன்பத்தை அனுபவிக்கின்ற போது சமூகம் அவனுக்கு எப்படி உறுதுணையாக இருக்கின்றது. இந்த சமூகமே ஒரு துன்பத்தை அனுபவிக்கின்ற போது, எப்படி அதை கடக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் நம்முடைய இலக்கியங்கள் இன்பத்திற்கு வழிகாட்டுவதை விட துன்பத்திற்கு தான் அதிகமாக வழி காட்டுகிறது.இன்று இருக்கக்கூடிய நிகழ்கால வாழ்வியலில் அரசியல், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் இந்த நான்கும் தான் இன்றைய உலகில் மிக முக்கியமான புவி அரசியலை தீர்மானிக்கிறது அல்லது புவி அரசியலுனுடைய மாற்றங்கள் இந்த நான்கினுள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சங்க இலக்கியத்தில் அடுத்து வரக்கூடிய சமூகத்திற்கு வழிகாட்டும் கருத்துக்களும் இருக்கின்றன.தமிழ் சமூகத்தினுடைய 2000 ஆண்டுகால வரலாற்றை எடுத்து பார்த்தோம் என்றால், தமிழ் சமூகத்தில் ஏற்பட்ட பல பண்பாட்டு மாற்றங்கள், பல சமூக சிக்கல்கள், பல ஆதிக்கம் செலுத்தக்கூடிய சூழல்கள் என எல்லாவற்றையும் கல்வியின் மூலமாகத்தான் தமிழ் சமூகம் எதிர்கொண்டு வந்திருக்கின்றது.தனி மனிதனுடைய வாழ்க்கையை எதிர்கொள்வதற்கும், அதனுடைய சிக்கலில் இருந்து நாம் கவனமாக கையாளுவதற்கும், உதவியை செய்வதற்கும், உதவியை பெறுவதற்கும் உள்ள பண்புகளை பற்றியும், சங்க இலக்கியம் தனிமனித வாழ்வியலுக்கும் சமூக வாழ்வுகளுக்கும் மிக முக்கியமான கருத்துகளை தொடர்ச்சியாக பேசுகிறது.இந்த நிகழ்ச்சி எதற்காக நடத்துகிறோம் என்றால் 2000 ஆண்டுகால மரபில் சொல்லப்பட்ட செய்திகள் இன்றளவும் அதனுடைய பொருத்தப்பாடு இருக்கிறது. அதற்கான தேவை இருக்கிறது. 21-ஆம் நூற்றாண்டில் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் நுகர்வு கலாச்சாரத்தில் மானுட சமூகம் பூட்டப்பட்டு மிக வேகமாக சென்று கொண்டிருக்கின்றது. எனவே இந்த நுகர்வு கலாச்சாரத்தில் இது போன்ற விழுமியங்களுக்கு எந்த சிக்கல்களும் வந்து விடக்கூடாது என்பதை நினைவூட்டுவதற்காக தான், உங்களின் மூலமாக இன்னும் ஒரு 2000 நபர்களை சென்று சேர்வதற்காக தான் இந்த கருத்தரங்கு. சங்க இலக்கியமும் திருக்குறளும் உலகின் ஆகச்சிறந்த இலக்கியங்களில் ஒன்று. உலகில்; இலக்கியங்களில் சொல்லப்படக்கூடிய கருத்துக்கள் எந்த சமூகத்திலிருந்து பிறந்து இருக்கின்றதோ அந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டிய செய்திகளை சங்க இலக்கியம், திருக்குறளை விட வேறு ஒரு இலக்கியம் சொல்லி இருக்க முடியாது. அப்படிப்பட்ட இலக்கியத்தை தொடர்ச்சியாக படியுங்கள். புரிந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இலக்கியம் சொல்லக்கூடிய வாழ்வியலோடு வாழுங்கள் என தெரிவித்தார்.இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம் இணை இயக்குனர் முனைவர் சங்கர சரவணன் அவர்கள் “சங்கத்தின் தங்கம் குரல்”; என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கவிதா அவர்கள் வரவேற்புரையும், கல்லூரி முதல்வர் முனைவர் ராஜகுரு அவர்கள் வாழ்த்துரையும், ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராமநாதன் அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் கரிசல் இலக்கிய கழக செயலாளர் மரு.த.அறம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 12, 2024

கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்மை பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம், கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  (11.07.2024) புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்மை பூங்காவினை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள் திறந்து வைத்தார்.கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி, வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் பங்களிப்போடு, உள்கட்டமைப்பு முன்னேற்ற பணிகள், மருத்துவ வசதிகள் மேம்படுத்துதல், அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், நோயாளிகளின் தங்கும் இடம், மருத்துவமனையின் சூழல் மற்றும் வளாகத்தை பசுமையாக பராமரித்தல் போன்ற பணிகள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக இன்று வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்போடு அமைக்கப்பட்ட தாய்மை பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்;.இங்கு சிகிச்சை  பெற வரும் நோயாளிகளுக்கும், மகப்பேறு அடையும்  தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த சுகாதார நிலையத்தில் உள்ள தாய்மை பூங்காவானது ஒரு அழகான சூழ்நிலையில் நல்ல மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.பின்னர், கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மகப்பேறு பிரிவில் மகப்பேறு பெற்று சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களுக்கு குழந்தை பெற்றதும் தனது குழந்தையுடன் இருக்கும் முதல் புகைப்படத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், கன்னிச்சேரி புதூர் வட்டார மருத்துவ அலுவலர்   மரு.பி. ஆரோக்கிய ரூபன் ராஜ், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Jul 12, 2024

ஆமத்தூர் AAA கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான திருக்குறள் கற்ப்பித்தல் பயிலரங்கம் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம்,ஆமத்தூர் AAA கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான திருக்குறள் கற்ப்பித்தல் பயிலரங்கம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கருத்தரங்கில், திருக்குறளின் 1330 குறள்களையும் ஒப்புவித்தல் செய்த 7 அரசு பள்ளி மாணவியர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசாக  வழங்கினார்.இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்பது திருக்குறளை ஆர்வத்தோடு மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் என்னென்ன இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, மாணவர்களுக்கு எளிய வடிவில் கற்க வைப்பது.இன்றைய சூழ்நிலையில் திருக்குறளை கற்பிப்பதற்கு, யூ-டியூப் வாயிலாகவும், இணையம், சங்கீதத்தின் வழியாகவும், திருக்குறள் சார்ந்த ஓவியங்கள் மூலமாகவும், வினாடி வினா மூலமாகவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 1330 திருக்குறளையும் கற்பிப்பதற்கு தமிழ் இணைய வழி கழகம் உள்ளது. அதில் 1330 குறளுக்கும்  ஓவிய விளக்கமும், நாட்காட்டியும்  உள்ளன.திருக்குறளை நாம் ஒரு வாழ்வியலாக மாற்ற வேண்டும். ஏனென்றால்  இன்றைக்கு இருக்கக்கூடிய நுகர்வு கலாச்சாரம் கூடுதலாக வர வர  நம்முடைய தேவைகள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயல்பாகவே நம்முடைய விழுமியங்கள் குறைய ஆரம்பிக்கும் என சமூக பொருளாதார விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்திருக்குறளில் நன்றாக வாசிக்கக்கூடிய, நினைவாற்றல் இருக்கக்கூடிய, கல்வியில் சிறந்து விளங்க கூடிய மாணவர்களை தேர்வு செய்து அவர்களை நீங்கள் ஊக்குவிக்கும் பொழுது ஒவ்வொரு வருடமும் திருக்குறளை கற்கும்; மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த முடியும்.திருக்குறளை மாணவர்கள் அவர்கள் மனம் உவர்ந்து கற்பதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன என்பதனை ஆசிரியர்கள் அறிந்து கொண்டு, திருக்குறளை எளிய முறையில் அதாவது,  திருக்குறளை சீர்படுத்துவது என்பதும், அதனை அடி பிறழாமல் எழுதுவது என்பதும் மாணவர்களுக்கு கடினமான ஒன்றாக  உள்ளது. அதனையும் தாண்டி திருக்குறளை கற்பிப்பது மிக மிக முக்கியம.; இப்படிப்பட்ட ஒரு முன்னெடுப்பு ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு மாணவனையாவது ஓராண்டிற்குள் 360 திருக்குறளை மனப்பாடம் செய்ய வைத்து  குரல் மாணவனாக  உருவாக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் மூலமாக வழங்கப்படும்  25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை பெற வைக்க வேண்டும்.இவ்வாறு திருக்குறள் மீது ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இருந்தால் எதிர்கால தமிழ்நாட்டிற்கும் எதிர்காலகுழந்தைகள்நலத்திற்கும்,எதிர்காலதமிழ்சமூகநலத்திற்கும்உறுதுணையாகஅமையும்எனமாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்.தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அரசு பள்ளி தமிழ் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 12, 2024

வெடி விபத்தில் மரணமடைந்த வாரிசு தாரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து காசோலை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  (11.07.2024) சிவகாசி வட்டம் காளையார்குறிச்சி கிராமத்தில் இயங்கி சுப்ரிம் பயர் ஒர்கஸ் பட்டாசு தொழிற்சாலையில்  09.07.2024- அன்று நடந்த வெடி விபத்தில் மரணமடைந்த சிவகாசி வட்டம் வெள்ளூர்கிராமத்தை சேர்ந்த திரு. மாரியப்பன் த/பெ. பெ.பெருமாள் மற்றும் சிவகாசி வட்டம், சிதம்பராபுரம் ஊராட்சி, வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த  திரு .முத்து முருகன் த/பெ பெருமாள்  ஆகியோரின் வாரிசு தாரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ .3,00,000/-க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், I A S, அவர்கள் வழங்கினார்.

Jul 12, 2024

தருமபுரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் "மக்களுடன்  முதல்வர்” திட்டத்தினை தொடங்கி வைத்த நிகழ்வினை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் மின்னனு திரைவாகனத்தில்  நேரடி ஒளிபரப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் "மக்களுடன்  முதல்வர்” திட்டத்தினை  (11.07.2024) தொடங்கி வைத்த நிகழ்வினை விருதுநகர் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் மின்னனு திரைவாகனத்தில்  நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

Jul 12, 2024

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்க விழா

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை வர்த்தக மையத்தில் (07.01.2024) நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்க விழாவில் கலந்து கொண்டு விழாப்பேருரை ஆற்றிய நிகழ்வு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேரலையில் ஒளிப்பரப்பட்டு வருவதை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பார்வையிட்டார்.

Jul 11, 2024

இராஜபாளையம் வட்டம், சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், சொக்கநாதன்புத்தூர்  கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. ராணி ஸ்ரீகுமார் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில்  (10.07.2024) நடைபெற்றது.இம்முகாமில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம், 84 பயனாளிகளுக்கு ரூ.51,04,420/- மதிப்பில் இணையவழியில் பட்டாக்களையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம்,  308 பயனாளிகளுக்கு ரூ.3,13,36,455/- மதிப்பில் இணையவழியில்; பட்டாக்களையும், 61 பயனாளிகளுக்கு ரூ.37,32,520/- மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 36 பயனாளிகளுக்கு பட்;டா மாறுதல் ஆணைகளையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு ரூ.62,500/- மதிப்பில், உழவர் பாதுகாப்பு இறப்பு நிவாரண நிதிகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.27,30,000/- மதிப்பில் வங்கி கடன், சமூக முதலீட்டு நிதி, நலிவுற்றோர் நிதியினையும், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் (பயறு) திட்டத்தின் கீழ், 4 பயனாளிகளுக்கு ரூ.4,930/- மதிப்பில்; பண்ணைக்கருவிகள் மற்றும் உளுந்து விதைகளையும் என மொத்தம் 501 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும்; அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்;முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைசார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.ஏழை எளிய கிராமப்புற மக்கள் தமக்கான சந்தேகங்களை போக்கிக் கொண்டு, அறிவியல் பூர்வமாக தெரிந்து கொண்டு பயன்பெறுவதே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதின் நோக்கம். தமிழ்நாடு அரசு மூலம் ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மானாவாரி பகுதிகளில் விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளுக்கு சாகுபடி செய்வதற்கு விதைகள், உபகரணங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காலம் காலமாக செய்து வரக்கூடிய விவசாய முறைகளை தாண்டி சிறுதானிய உற்பத்தி அதிகமாக செய்வதன் மூலமாக அதிக வருமானம் பெறலாம். எதிர்காலத்தில் சிறுதானிய பொருட்களின் சந்தை வாய்ப்புகள் நிறைய உள்ளன.கிராமப்புறங்களில் இன்றளவும் கூட பெண்கள் 12 வகுப்பு முடித்தாலே போதும் என்ற  மனநிலை உள்ளது. இதனை மாற்றி அனைவரும் பெண்களுக்கான உயர்கல்வியை உறுதிசெய்ய  வேண்டும். இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். பெண்களின் உயர்கல்விக்காக புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக புதுமைப்பெண்  என்ற திட்டம் மூலம் 6-லிருந்து 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக நமது பகுதிகளில் கல்லூரி படிப்பை அதிகப்படுத்த வேண்டும்.இதுபோன்று அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு,  பயன்பெற வேண்டுமெனவும், மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

1 2 ... 34 35 36 37 38 39 40 ... 69 70

AD's



More News