25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 04, 2026

பல்வேறு அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கள ஆய்வு மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் / வேடசந்தூர் தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காந்திராஜன் அவர்கள் தலைமையில் மதிப்பீட்டுக் குழு(2024-2026) நாளை(22.10.2024) விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை), பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை), நெடுஞ்சாலைகள் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை), சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் (உள்.மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை), நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அறநிலையங்கள் துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை), வனம் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை), இயற்கை வளங்கள் துறை ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்ய உள்ளது.  பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவானது நாளை 04.02.2026 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் மானிய கோரிக்கைகள் மற்றும் மேற்படி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட உள்ளது.

Feb 03, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (02.02.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். பின்னர், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் விருதுநகர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமானது, 2024-2025 ஆம் நிதியாண்டில் சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய 116 உறுப்பினர்களுக்கு புரவு தள்ளுபடித்தொகை ரூ.18.85 இலட்சம் வழங்கிட அனுமதித்து முதற்கட்டமாக ரூ.12.57 இலட்சம் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய நபர்களுக்குமொத்தம் ரூ.6.28 இலட்சம் புரவு தள்ளுபடித்தொகை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காசோலைகள் வழங்கி தொடங்கி வைத்தார்.  இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.கு.மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, துணைப்பதிவாளர்(பால்வளம்) திரு.கி.சம்பத், முதன்மைக்கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 31, 2026

7 கண்மாய் மற்றும் 1 கண்மாய் வரத்துக் கால்வாய்  புனரமைத்தல் பணிகளை  அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

 விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், ஆனைக்குளம் கிராமத்தில்( 30.01.2026) நீர்வளத்துறை குண்டாறு வடிநிலக் கோட்டம், மதுரை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் உள்ள வக்கணாங்குண்டு, முஷ்டக்குறிச்சி, மானூர், மறையூர், வீரக்குடி, மேலப்பருத்தியூர், நாலூர்  கண்மாய்கள் மற்றும்  ஆனைக்குளம் கண்மாய் வரத்துக்கால்வாய் ஆகியவை ரூ.9.50 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணிகளை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு நீர் வளத்தைப் பெருக்குவதற்காக பல்வேறுத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வானம்பார்த்த பூமியான நமது பகுதியில் அடிப்படையான பணியாக விவசாயம் இருக்கிறது. மண்ணையும், மழையையும், நம்பி இருக்கக்கூடிய இந்தபகுதியில் பாசனத்திட்டங்களை பெருக்கக்கூடிய நலத்திட்டங்கள் தேவை என்பதை உணர்ந்து தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.         விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் உள்ள வக்கணாங்குண்டு, முஷ்டக்குறிச்சி, மானூர், மறையூர், வீரக்குடி, மேலப்பருத்தியூர், நாலூர் கண்மாய்கள் மற்றும் ஆனைக்குளம் கண்மாய் வரத்துக்கால்வாய் நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாததால் கண்மாய்களில் உள்ள மடைகள், கலுங்குகள் மற்றும் கரைகள் சேதமடைந்த காரணத்தினால்  மேற்கண்ட கண்மாய்களை புனரமைக்க விவசாய பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, புனரமைக்கும் பணிக்கான அரசாணை மற்றும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, இன்று பணிகள் துவக்கப்பட்டுள்ளது. வக்கணாங்குண்டு, முஷ்டக்குறிச்சி, மானூர், மறையூர், வீரக்குடி, மேலப்பருத்தியூர், நாலூர் மற்றும் ஆனைக்குளம் கண்மாய்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலமாக 1620 ஹெக்டேர் (4000 ஏக்கர்) பாசன விளை நிலங்கள் பயன்பெறும்.மேலும், கண்மாய்களில் முழுகொள்ளளவிற்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு, கண்மாய்களை சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயரவும். கோடைகாலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை தீர்வதுடன், இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன் கால்நடைகளின் தண்ணீர் தேவைகளும் பூர்த்தியடையும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், நீர்வளத்துறை பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர்கள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பாசன விவசாயிகள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 31, 2026

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்-2026 முன்னிட்டு தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்-2026 முன்னிட்டு நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள்  (30.01.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார்.இப்பேரணியில் விருதுநகர் அரசு செவிலியர் கல்லூரி மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்டு தேசபந்து மைதானத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகம் வரை தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு  பதாதைகளுடன் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக, அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னாரது படத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மேலும், ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.முன்னதாக, தொழுநோயால் பாதிக்கப்பட்டு முற்றிலும் நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jan 31, 2026

மாவட்ட அளவிலான ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (30.01.2026) மாவட்ட அளவிலான ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS.,  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள்ஃ குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 18 முன்னோடி மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டது.மேலும் இக்கூட்டத்தில் 7 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ரா.ஆனந்தி, மாவட்டக் கருவூல அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 31, 2026

தீண்டாமை ஒழிப்பு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை அரசு அலுவலர்கள், மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (30.01.2026) தீண்டாமை ஒழிப்பு தினத்தையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை அரசு அலுவலர்கள், மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.அதன்படி, தீண்டாமை ஒழிப்பு தினத்தையொட்டி, இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய சுதந்திர வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன் என்ற தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் திரு,அரவிந்தன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன்,  உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jan 31, 2026

'இது நம்ம ஆட்டம் 2026' - முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (30.01.2026) 'இது நம்ம ஆட்டம் 2026' - முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாவின் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,  I A S., அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்-மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தினைச் சார்ந்த அனைத்து  வட்டங்களிலும் (11 வட்டங்கள்) ஊராட்சி ஒன்றிய அளவில் வட்டார அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.தற்போது மாவட்ட அளவிலான  விளையாட்டுப்போட்டிகள் 30.01.2026 மற்றும் 31.01.2026 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது. இவற்றில் இன்று 30.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று கபாடி(ஆண்கள்), கேரம்(ஆண்கள் மற்றும் பெண்கள்), கையுந்துபந்து(ஆண்கள்),  கயிறு இழுத்தல்(ஆண்கள் மற்றும் பெண்கள்), மட்டைப்பந்து(ஆண்கள்) போன்ற விளையாட்டுப்போட்டிகளில் வட்டார அளவில் முதலிடம் பிடித்தவர்களுக்கும்,  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வட்டார அளவிலான தடகள விளையாட்டுப்போட்டிகள்(100 மீ மற்றும் குண்டு எறிதல்) மாவட்ட விளையாட்டரங்கம், விருதுநகரில் வைத்து நடைபெற்றது.மேலும் இன்று 30.01.2026 அன்று மாவட்ட அளவிலான நேரடி விளையாட்டுப்போட்டிகளான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓவியப்போட்டி, கோலப்போட்டி (பெண்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளவிளையாட்டுப்போட்டிகள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய விளையாட்டுப்போட்டிகள் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.தொடர்ந்து, 31.01.2026 (சனிக்கிழமை) அன்று கபாடி(பெண்கள்), கையுந்துபந்து (பெண்கள்) மற்றும் எறிபந்து (பெண்கள்) போன்ற விளையாட்டுப்போட்டிகளில் வட்டார அளவில் முதலிடம் பிடித்தவர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம், விருதுநகரில் வைத்து நடைபெற உள்ளது.மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.6,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.4,000/- பரிசுத்தொகையும், மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000/- பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.அதன்படி, மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (30.01.2026) 'இது நம்ம ஆட்டம் 2026' - முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாவின் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் திரு,அரவிந்தன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன்,  உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jan 31, 2026

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில், (30.01.2026) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை இணைந்து, போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில், போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தொடங்கி வைத்தார்.பின்னர், அரசு அலுவலர்கள், விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டினார்கள்.இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) திரு.ரமேஷ், விருதுநகர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.யோகேஷ்குமார், விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.மாணிக்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.செல்வராஜ், அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் திரு.நாகராஜன், மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி அமராவதி, விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி கல்லூரி முதல்வர் திருமதி சாரதி, சிவகாசி கோட்ட கலால் அலுவலர் திரு.பாஸ்கரன், அருப்புக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் திரு.ராமசுந்தர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jan 31, 2026

அருப்புக்கோட்டை - மேற்கு புறவழிச்சாலையினை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் பெரியபுளியம்பட்டியில் (30.01.2026) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2022-2023 கீழ் ரூ.154.99 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அருப்புக்கோட்டை - மேற்கு புறவழிச்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில்  அருப்புக்கோட்டை - மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் ரூ.154.99 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.அருப்புக்கோட்டை நகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகள் பள்ளிக்கு போவதாக இருந்தாலும், வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மிகுந்த சிரமமாக இருக்கிறது என்பது அருப்புக்கோட்டை பகுதி மக்களினுடைய பல ஆண்டு கால கோரிக்கையாக இருந்தது.எனவே, அருப்புக்கோட்டை புறவழிசாலைப்; பணியை முடிப்போம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு, அந்த வாக்குறுதியின் படி இன்றைக்கு நம்முடைய அருப்புக்கோட்டை மேற்கு பகுதியில் இந்த சுற்றுவழிச் சாலை பணிகளை முடித்து ஒரு பகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலை திட்டங்கள், திருநெல்வேலி கோட்டத்தின் மூலம் அருப்புக்கோட்டை நகருக்கு மேற்கு புறவழிச்சாலை அமைத்து மேம்பாடு செய்யும் மற்றும் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டப்பணிக்கு ரூ.119.50 கோடி மற்றும் நிலஎடுப்பு பணிக்கு ரூ.35.40 கோடி என மொத்தம் ரூ.154.99 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த பணியின் மொத்த நீளமான 9.905 கி.மீ. இதில் இரயில்வே மேம்பாலப் பணிகள் தவிர்த்து அனைத்து பணிகளும் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகளும் ஓரிரு மாதங்களில் முடிவடையும்.விருதுநகர் - அருப்புகோட்டை செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரவுண்டானாவில் இருந்து தேசியநெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரவுண்டாண வரை உள்ள 5.1 கி.மீ நீளமுள்ள பகுதியானது போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.இந்த சாலை 10 மீ அகலமும் இரு பக்கமும் கடின புருவங்களுடன் கூடிய இருவழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விருதுநகரில் இருந்து திருச்சுழி, நரிக்குடி, பார்த்திபனூர், இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் செல்வதற்கு மாநில நெடுஞ்சாலை 42 (திருவில்லிபுத்தூர் -சிவகாசி - விருதுநகர்- அருப்புக்கோட்டை -திருச்சுழி நரிக்குடி பார்த்திபனூர் சாலை) வழியாக நெருக்கடி மிகுந்த அருப்புக்கோட்டை நகரை கடந்து செல்ல வேண்டியுள்ளது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தற்போது அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையால் அருப்புக்கோட்டை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. விருதுநகரில் இருந்து வரும் வாகனங்கள், கனரக வாகனங்கள் அருப்புக்கோட்டை நகருக்குள் செல்லாமல் மதுரை, தூத்துக்குடி மற்றும் இராமேஸ்வரம் போன்ற நகரங்களுக்கு எளிதாக செல்லும் படி அமைக்கப்பட்டுள்ளது.இது நம்முடைய அருப்புக்கோட்டை பகுதியினுடைய  போக்குவரத்தில் ஒரு முக்கியமான ஒன்றாகும். இந்த சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து, நிதிகளை ஒதுக்கி தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களுக்கும் இந்த தொகுதியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை பொறியாளர்கள், உதவிபொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 31, 2026

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ,தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(29.01.2026) வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் - 2026  பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், I A S., அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளராக  தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர்  அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.அதன்படி,  வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் 28.01.2026 அன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காகவும், பதிவுகளில் மாற்றங்கள் கோரியும் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது விண்ணப்பங்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (29.01.2026) வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர்  அவர்கள் தலைமையில் நடைபெற்ற  ஆய்வுக் கூட்டத்தில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்களை விடுதலின்றி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், தகுதியுள்ள எந்தவொரு நபரும் விடுபடக் கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும், உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்யவும் வாக்காளர் பதிவு அலுவலர்களைக் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஆனந்தி, வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 2 ... 34 35 36 37 38 39 40 ... 138 139

AD's



More News