25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 23, 2024

வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணித்திறன் ஆய்வுக்கூட்டம்

இக்கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் திரு.கு.லோகநாதன் அவர்களுக்கு முதல் பரிசும், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் திரு.மு.வடிவேல் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், இராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் திரு.இரா.ஜெயப்பாண்டி அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர் (ச.பா.தி)களில் திருச்சுழி முன்னாள் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திரு.பொ. சிவக்குமார் அவர்களுக்கு முதல் பரிசும், சாத்தூர் முன்னாள் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திருமதி நா.சீதாலெட்சுமி அவர்களுக்கு இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர்(ச.பா.தி) திருமதி வீ.கிருஷ்ணவேணி அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் விருதுநகர் மண்டல துணை வட்டாட்சியர் திரு.டி.இராதாகிருஷ்ணன்  அவர்களுக்கு முதல்பரிசும், சாத்தூர் முன்னாள் மண்டல துணை வட்டாட்சியர் திரு.பூ.ராஜாமணி அவர்களுக்கு இரண்டாம் பரிசும், திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் திரு.க.ராஜாராம் பாண்டியன் அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் திரு.மாரிமுத்து அவர்களுக்கு முதல் பரிசும், வத்திராயிருப்பு வட்டத்துணை ஆய்வாளர் திருமதி செல்வி அவர்களுக்கு இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை வட்டத்துணை ஆய்வாளர் திரு.விஜயக்குமார் அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் நில அளவர் திரு.சோலைராஜ் அவர்களுக்கு முதல் பரிசும், சாத்தூர் வட்டம் நில அளவர்  திருமதி கற்பகம் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், திருச்சுழி வட்டம் சார் ஆய்வாளர் திரு.காசிராமன் அவர்களுக்கு மூன்றாம் பரிசினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் வழங்கினார்.

Jul 23, 2024

Coffee With Collector” என்ற 84-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (22.07.2024) மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் பயிலும் 50 பள்ளி மாணவர்களுடனான "‘Coffee With Collector”    என்ற 84-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 84-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது, இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் ஒரு தனித்திறன் இருக்கும். அந்த திறமையை கண்டறிந்து தங்களை மெருகேற்றி கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் உங்களால் முடியாது, சாதிக்க முடியாது என்று யார் என்ன சொன்னாலும், நீங்கள் அதை நம்பி விடாமல், உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். மேலும், நீங்கள் உங்களுக்கென்று தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். நிறைய திறமைகள் உதாரணமாக, எழுத்து, வாசிப்பு, பேச்சு திறமை, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட உங்களுக்கு விருப்பமான மொழிகளை தேர்ந்தெடுத்து அதில் புலமை பெற வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், இது உங்களை முழுமைபடுத்தும் என்றும், இந்த திறமைகளை கொண்டு பல நபர்களுக்கு உதவ முடியும் என்றும் கூறினார். உங்கள் படிப்பு சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும்.இதைவிட மிக முக்கியாமானது, நீங்கள் நன்றாக படித்து, ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு, எப்பொழுதும் உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து, உங்களை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இது உங்களுடைய வேலையில் நன்றாக பார்பதற்கும், முன்னேறுவதற்கும் உதவியாக இருக்கும். அடுத்து வாழ்க்கையில் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

Jul 23, 2024

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 16.07.2024 முதல் 31.07.2024 வரை விண்ணப்பிக்கலாம்

2024-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர் / திருச்சுழி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission)  16.07.2024 முதல் 31.07.2024 வரை நடைபெறுகிறது.ஏற்கனவே விண்ணப்பித்து ஒதுக்கீடு கிடைக்கப்பெறாதாவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவ/ மாணவிகள், அரசு நிர்ணயித்துள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவுகளான1. Fitter                 2. Industrial Robotics and Digital manufacturing Technician3. Turner                 4. Fire Technology and Industrial Safety Management5. Machinist    6. Refrigeration and Air Conditioning Technician7. Wireman      8. Interior Design and Decoration9. Welder    10. Motor Mechanic Vehicle11. Surveyor        12. Mechanic Electric Vehicle  13. Advanced CNC Mechanic Technician ஆகிய பயிற்சிகளுக்கு  தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை அணுகி நேரடி சேர்க்கை மூலம் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கொள்ளலாம்.பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக்கருவிகள், காலணி, பஸ் பாஸ் வழங்கப்படும். மேலும் மாதந்திர உதவித்தொகை ரூ.750/- மேலும் அரசு பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும்.  மேலும், பயிற்சி முடித்தபின், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 23, 2024

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 24.07.2024 அன்று காரியாபட்டி, இராஜபாளையம் மற்றும் சிவகாசி வட்டாரங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ”கள ஆய்வில் முதலமைச்சர் “ என்ற முன்னெடுப்பின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண  அறிவுறுத்தி வருகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்படி முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் நிருவாகத்தில் மற்றுமொரு மைல் கல்லாக ”மக்களுடன் முதல்வர்” திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்”  முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதற்காக, 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது, 24.07.2024 அன்று காரியாபட்டி, இராஜபாளையம் மற்றும் சிவகாசி வட்டாரங்களில் கீழ்க்கண்ட ஊராட்சிகளில் நடைபெற உள்ளது.காரியாபட்டி வட்டாரத்தில் எஸ்.கல்லுப்பட்டியில், பாம்பாட்டி, எஸ்.கல்லுப்பட்டி, காரியாபட்டி, மாந்தோப்பு,வக்கனாங்குண்டு ஆகிய ஊராட்சிகளுக்கும்,இராஜபாளையம்  வட்டாரத்தில் சமுசிகாபுரத்தில் ,  சமுசிகாபுரம் ஊராட்சிக்கும், சிவகாசி வட்டாரத்தில்  வெள்ளூரில் , வெள்ளூர், காளையார்குறிச்சி, வடமலைபுரம் காரிசேரி, மேலமாத்தூர், ஆனைக்குட்டம்  ஆகிய ஊராட்சிகளுக்கும் மக்களுடன் முதல்வர் முகாம் 24.07.2024 அன்று நடைபெற உள்ளது. மேலும், இணைய வழி விண்ணப்ப முறை (Department Online Portal) எனில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை இணைய வழியில் பதிவேற்றம் செய்திட . அனைத்து முகாம்களிலும் இ சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும். அங்கு மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு 50 சதவீத கட்டணம் மட்டுமே பெறப்படும்.                        மேலும், இதுகுறித்த விபரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ பிரிவு, தொலைபேசி எண் 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 23, 2024

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 23.07.2024  முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jul 23, 2024

கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அரசாணை (நிலை) எண்.71, பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டேடார் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள்:20.12.2016-ன் படி கீழ்க்கண்ட தகுதிகளின்படி கிறித்துவ தேவாலயம் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள கட்டடத்த்pன் வயதிற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.1. 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1.00 இலட்சம்2. 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2.00 இலட்சம்3. 20 வருடங்களுக்கு மேலிருப்பின் ரு.3.00 இலட்சம்தற்போது இத்திட்டத்தின் கீழ் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தி அரச ஆணையிட்டுள்ளது.கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்க்பட்டுள்ள பணிகள் விவரம்:1) தேவாலயங்களில் பீடம் கட்டுதல் ( Construction of Pedestal in Churches)2) கழிவறை வசதி அமைத்தல் (Construction of Toilet facilities )3) குடிநீர் வசதிகள் உருவாக்குதல் (Creation of Drinking Water facilities)தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்க உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம்:1. 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1.00 இலட்சத்திலிருந்து 2.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.2. 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2.00 இலட்சத்திலிருந்து 4.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.3. 20 வருடங்களுக்கு மேலிருப்பின் ரூ.3.00 இலட்சத்திலிருந்து 6.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.    

Jul 22, 2024

"கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்"; கீழ் சிறப்பு மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் (20.07.2024) பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்;.ராமச்சந்திரன் அவர்கள் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.பின்னர், 10 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், 5 பயனாளிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தையும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தையும், குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த 3 தாய்மார்களுக்கு ஊக்கப்பரிசினையும்   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்தில் மிக முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி வருகிறார்கள்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களை ஆரோக்கியமாக வைக்க வேண்டும். நோய் வரும் முன்னே மக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், டாக்டர்.கலைஞர் அவர்கள் கொண்டு வந்த இந்த வருமுன் காப்போம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள். இந்த திட்டத்தின் மூலம் மருத்துவர்கள், செவிலியர் என அனைத்து மருத்துவப்பணியாளர்களும் உங்கள் இருப்பிடத்தை தேடி வந்துள்ளார்கள். இதை நீங்கள் சரியாக பயன்படுத்தும் பட்சத்தில், உங்களுக்கு நேரம் மற்றும் பணம் மிச்சமாகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வைத்து, எங்களுக்கு மக்கள் பணியாற்ற வாய்ப்பு தந்த தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட பணிகளையும் செய்து முடிப்போம் என தெரிவித்தார்.மேலும், இந்த முகாமில், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நலம் மருத்தும், குழந்தைகள் நல மருத்தும், குடல் மருத்துவம், இயன்முறை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம், எழும்பு மூட்டு மருத்துவம்,  இருதய நோய் மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், சித்த மருத்துவம், நரம்பியல் மருத்துவம், முதியோர் நல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ சேவைகளையும்,இரத்த முழு பரிசோதனை, இரத்த உறைதலை கண்டறிதல், இரத்த வகை கண்டறிதல், இரத்த சர்க்கரை அளவு கண்டறிதல், இரத்த கொழுப்பு அளவு, யூரியா அளவு, கிரியாட்டினின் அளவு, இரத்த தகவல் மற்றும் மலேரியா டைபாய்டு காய்ச்சல், எச்.ஐ.வி, சளி மாதிரி பரிசோதனை, பால்வினை நோய், சர்க்கரை நோய், எலக்ட்ரோ கார்டியோகிராம்  பரிசோதனை செய்தல்  உள்ளிட்ட சிறப்பு மருத்துவ பரிசோதனைகளும் வழங்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.மேலும், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், 2021 முதல் மாவட்டத்தில்  ஒவ்வொரு ஆண்டும் தலா 37 முகாம்கள் நடத்தப்பட்டு, 2021 -2022- ஆம் ஆண்டில், 24,313 பயனாளிகளும், 2022-2023 - ஆம் ஆண்டில், 39,017 பயனாளிகளும், 2023-2024 - ஆம் ஆண்டில் 38,654  பயனாளிகளும் பயனடைந்துள்ளனர். 2024 - 2025 ஆம் ஆண்டில்,  37 முகாம்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 3 முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 2430 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.பின்னர், செம்பட்டி கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற திட்டங்களை  தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

Jul 22, 2024

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் செம்பட்டியில் பகுதி நேர நியாய விலை கடையினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், செம்பட்டியில்  (20.07.2024)  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பில் புதிய பகுதி நேர நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில் சுமார்  6,10,845 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6,00,248 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.மேலும் மாவட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் செம்பட்டி  பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று,  இன்று புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.இக்கடையின் மூலம் 697 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.வள்ளிக்கண்ணு, அருப்புக்கோட்டை வட்டாட்சியர் திரு.செந்தில்வேல், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.சசிகலா பொன்ராஜ்,  உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 22, 2024

“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியின் 83-வது அமர்வு சிறப்பு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (20.07.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள்   தலைமையில் Visual Communication & Creative Thinking  துறைகளில் ஆர்வம் கொண்ட 100 பள்ளி,கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட  சிறப்பு Coffee with Collector 83-வது  கலந்துரையாடல் நிகழ்ச்சியில் யூ- டியூப் பிரபலங்கள் திரு.கோபி மற்றும் திரு.சுதாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி 07.01.2022 அன்று தொடங்கப்பட்டு, மொத்தம் 82 கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.மேலும் இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்கள்,  அரசு உயர் அலுவலர்கள், பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, தங்களின் துறை மற்றும் பணிகள்  சார்ந்த வாய்ப்புகள், படிப்புகள் மற்றும் அதற்கான திறமைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி ஊக்கப்படுத்தி, அவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகின்றனர்.அதன்படி, இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் யூ- டியூப் பிரபலங்கள் திரு.கோபி மற்றும் திரு.சுதாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, இந்த துறைகளில் உள்ள வாய்ப்புகள், அதற்கான படிப்புகள், தொழில்நுட்பங்கள் குறித்தும், என்னென்ன திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட மாணவ, மாணவிகளின் எண்ணற்ற கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.மேலும்,  தனித்திறமையை வளர்த்துக் கொண்டு, வாய்ப்புகளை பயன்படுத்தி தனிப்பட்ட திறன் படைப்பாற்றல் மூலம்  பிரபலமான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இந்தத் துறை மட்டுமல்லாமல் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த எந்த துறையிலும் சாதிக்க முடியும். அதற்காக தங்களது இலக்கை நீங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். அதனையே குறிக்கோளாக கொண்டு, இலக்கை அடைவதற்கான வழிகளை அறிந்து கொண்டு தொடர் முயற்சி மூலமும், தோல்விகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டும், தொடர் தோல்விகளினால் தொய்வு அடையாமல் ஒழுக்கத்துடன் தங்களது பணியை மேற்கொள்ளும் போது அந்த துறையில் நாம் சாதிக்க முடியும். இது ஒவ்வொருவராலும் முடியும். மாணவர்களுக்கு இந்த துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.நமது வெற்றிக்கு தேவையான விஷயங்களை  ஆர்வத்துடன் கவன சிதறல் இல்லாமல், தொடர்ந்து விடாம முயற்சியுடன் கடினமாக  உழைத்தால் வெற்றி பெறலாம். மேலும் ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யூ- டியூப் பிரபலங்களுக்கு “விரு” என்ற சாம்பல் நிற அணிலின் உருவமைப்பிலான நினைவு பரிசினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு,  இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும்,  எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களும் தெளிவான விடை கொடுத்ததாகவும்,  இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

Jul 20, 2024

விருதுநகர் சூலக்கரை மேடு சாய் மஹாலில்நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில்நேரில் சென்றுபொதுமக்களிடம் கோரிக்கைமனுக்களை  பெற்றுக்கொண்டு, குறைகளை கேட்டறிந்தனர்.

விருதுநகர் சூலக்கரை மேடு சாய் மஹாலில்  (19.07.2024) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரு.இரா.ஆனந்தகுமார்,  I A S., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் ஆகியோர் முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கைமனுக்களை  பெற்றுக்கொண்டு, குறைகளை கேட்டறிந்தனர்.

1 2 ... 30 31 32 33 34 35 36 ... 69 70

AD's



More News