25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சிறந்த சமூக சேவைக்காக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்ற திருமதி ச.உமாதேவி என்பவரை,  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் நேரில் அழைத்து, பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறந்த சமூக சேவைக்காக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்ற திருமதி ச.உமாதேவி என்பவரை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து, பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் (15.08.2024) அன்று  சுதந்திர தின விழாவில், சிறந்த சமூக சேவைக்காக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்ற திருமதி ச.உமாதேவி என்பவரை,  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் அழைத்து, பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம் சேத்தூரை சேர்ந்தவர் திருமதி உமாதேவி என்பவர், இராஜபாளையம் சுற்றி உள்ள பகுதிகளில் 26 முறை ரத்ததான முகாம் நடத்தியதற்காகவும், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியிலும், கிராமப்புற பொது மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும்,  கிராமப்புற குழந்தைகளை  பள்ளியில் சேர்த்து, அவர்களுடைய கல்வி தடைப்படாமல் கிடைப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், நெகிழி பையை ஒழித்து மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிப்பதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும்,  சாலையோரத்தில் ஆதரவற்று இருக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்ததற்காகவும் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளுக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்றுள்ளார்.இந்நிகழ்வின் போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமார மணிமாறன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News